வாசிக்கும் அனைவரும் எழுத்தாளரும்தான்! தனியாக எழுதினால்தான் எழுத்தாளர் என்று இல்லை!அருமை & எளிமையான விளக்கம் சகோ,
(எழுத்தாளர்கள் அல்லாதவர்களும் வாசிக்கிறோம்)
இது வெறும் புகழ்ச்சி அல்ல, எழுத்தாளர்கள் கதையை எழுதுகையில் எவ்வாறெல்லாம் புதுமையாக எழுதலாம் என்று சிந்தித்து எழுதுவர், அவர் அப்படி முயல்வதன் ஆணிவேரே அவர்கள் எழுதுவதை வாசிப்பவர் சரியாகப் புரிந்துகொள்வர் என்ற நம்பிக்கையில்தான்.
‘அவள் உரத்துக் கூறிவிட்டு விறுவிறுவெனத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்’ என்று எழுதினால் ‘அவள் கோவமாக இருக்கிறாள்’ என்று நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களே? அங்குக் கதையின் சொல்லப்படாத (சில வேளைகளில், சொல்ல இயலாத) பகுதிகளை நீங்கள் எழுதுகிறீர்கள்தானே?
எப்படி ஒரு நல்ல மாணவனே நல்ல ஆசிரியனாக இயலுமோ, அப்படித்தான் ஒரு நல்ல வாசகனே ஒரு நல்ல எழுத்தாளன் ஆக இயலும்...
கற்பனை பீடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு நான் எழுதி எழுதி கீழே போடுகிறேன் நீங்கள் படித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகவே இயலாது...