நன்றி சகோதரி...உங்களது பதிவும்,பதிலும் மிக அருமை சகோதரரே?? இப்படி ஒரு தூய தமிழில் ஒரு பதிவு வருவது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது ????தங்களினn சேவை தொடர வாழ்த்துக்கள் ????
நன்றி சகோ...அருமையான முயற்சி.... ப்ரூப் ரீடிங் செய்யும்பொழுது எப்பொழுதும் வல்லினம் மிகுமா என்று உச்சரித்துப் பார்த்தே வல்லினம் சேர்ப்பேன். அவ்வாறே தாங்களும் கூறுவது மிக்க மகிழ்ச்சி...
உங்களது எழுத்துநடை வாசிக்கவே அவ்வளவு அழகாக உள்ளது....தொடர்க உங்களது பணி.நன்றி சகோதரி...
மாசில்லாத் தென்றல், பிசிறில்லாத இசை, கள்ளமில்லாத குழந்தை போல தூய தமிழும் ஆகச் சிறந்த இனியது...
எனவேதான் நான் இயன்றவரை அதைக் கையாள முயல்கிறேன்!
வாசிக்கும் அனைவரும் எழுத்தாளரும்தான்! தனியாக எழுதினால்தான் எழுத்தாளர் என்று இல்லை!
இது வெறும் புகழ்ச்சி அல்ல, எழுத்தாளர்கள் கதையை எழுதுகையில் எவ்வாறெல்லாம் புதுமையாக எழுதலாம் என்று சிந்தித்து எழுதுவர், அவர் அப்படி முயல்வதன் ஆணிவேரே அவர்கள் எழுதுவதை வாசிப்பவர் சரியாகப் புரிந்துகொள்வர் என்ற நம்பிக்கையில்தான்.
‘அவள் உரத்துக் கூறிவிட்டு விறுவிறுவெனத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்’ என்று எழுதினால் ‘அவள் கோவமாக இருக்கிறாள்’ என்று நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களே? அங்குக் கதையின் சொல்லப்படாத (சில வேளைகளில், சொல்ல இயலாத) பகுதிகளை நீங்கள் எழுதுகிறீர்கள்தானே?
எப்படி ஒரு நல்ல மாணவனே நல்ல ஆசிரியனாக இயலுமோ, அப்படித்தான் ஒரு நல்ல வாசகனே ஒரு நல்ல எழுத்தாளன் ஆக இயலும்...
கற்பனை பீடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு நான் எழுதி எழுதி கீழே போடுகிறேன் நீங்கள் படித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகவே இயலாது...
உங்களைப் போல ஈஸ் அக்கா கேட்க அண்ணா கூறிய பதில் இது @Shaniff kaaஅதென்னது எழுத்தாளர்களுக்கு மட்டும் அழைப்பு....இது செல்லாது செல்லாது....எங்களையும் உங்களது வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.