தன்னை காக்க அவள் செய்த செயல் ,எந்த பெண்ணும் செய்ய துணியாத ஒன்று ஆயிற்றே ...நினைவே அவன் கண்களை பொங்க செய்தது என்றால் மிகையல்ல .
மாலை வரை மீண்டும் அவள் அவன் கண்களுக்கு படவேயில்லை ...வீரர்களை பார்வை இடுவது ,போரிட்ட இடத்தில் இறந்து போனவர்களை புதைப்பது ,ஒற்றர்களுடன் ஆலோசிப்பது ,அவள் தந்தைக்கு தகவல் அனுப்புவது ,அந்த குடில்களிடம் அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வது ,அருகில் உள்ள மற்ற மலைக்குடிகளுக்கு தகவல் அனுப்பி அங்கு விரோதிகள் யாராவது ஒளிந்து இருக்கிறார்களா என்று தகவல் அறிவது என்று பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள் அவன் பைங்கிளி .
அதுவரை அழகன் ஆதித்யனுக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள ,அங்கு இரவூ பூஜை முடிந்த பிறகு ,களைத்து திரும்பி வந்தாள் நித்திலவல்லி .அவள் வந்தது மெல்ல தலையசைப்புடன் விலகினான் அழகன் அவர்களுக்கு தேவையான தனிமை கொடுத்து .
"என்ன தேவி ...நாட்டின் அரசி ஆகும் முன்னரே உங்களை பார்க்க காத்து இருக்க வேண்டியதாய் இருக்கிறது ...இன்னும் அரசி ஆகி விட்டால் ஒட்டுமொத்த பாரதத்தையும் வெல்லும் வரை ஓய மாட்டாய் போல் இருக்கிறதே ...."என்றான் ஆதித்யன் அவளை நோக்கி தன் கைகளை நீட்டி .
அவன் கரங்களுக்குள் தன் கரம் பாந்தமாய் பொருந்துவதை கண்டு புன்னகைத்து அவன் அருகே அவனை ஒட்டி அந்த மேடையில் அமர்ந்தவள் ,"இந்த அரசனுக்கு ஏற்ற அரசியாய் இல்லை என்றால் எப்படி ...அரசன் எவ்வழியோ இந்த அரசியும் அவ்வழி ..."என்றாள் .
சற்று நேரம் எதையும் பேசாமல் இருவரும் ,ஒருவரின் அருகே இருப்பதை ஆழ்ந்து அனுபவித்தவாறு எதிரே தெரிந்த பால் நிலாவை ரசித்து கொண்டு இருந்தனர் .
அங்கு புள்ளி மான் ஒன்றின் குட்டி தாவி குதித்து வர ,அதை கண்ட நித்திலவல்லி அதன் அருகே சென்று அதை அணைத்து அதன் முகத்துடன் தன் முகத்தை வைத்து இழைக்க ஆரம்பித்தாள் .
அதை கண்டவாறு சிரித்து கொண்டு அவள் அருகே வந்த ஆதித்யன் ,"இந்த புள்ளி மானாய் நான் பிறந்து இருக்க கூடாதா என்று ஏக்கமாய் இருக்கிறது தேவி ."என்றான் அவள் இடையில் கை கொடுத்து எழுப்பி தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு .
"நீங்கள் இந்த புள்ளிமானாய் பிறந்து இருந்தால் உங்களை தோட்டத்தில் தான் வளர்த்து இருக்க முடியும் ...என்னுடனே எவ்வாறு தக்க வைத்து கொள்வது ...மானுக்கு கிடைத்தவற்றை விட உங்களுக்கு உங்களுக்கு தானே நான் முழு உரிமை ."என்றாள் நித்திலா அவன் மார்பினில் தலை சாய்த்து .
அந்த அமைதி ,சுகம் அணைப்பு காலம் முழுதும் கிடைக்க கூடாதா என்று இருவரின் மனமும் எண்ணாமல் இல்லை .
கண் விழித்த நொடி முதலாய் அவன் மனதை போட்டு அரித்து எடுத்து கொண்டு இருந்த கேள்வியை அந்த கணம் கேட்டான் ஆதித்யன் .
"என்ன காரியம் செய்து விட்டாய் தேவி ....புவனம் அறிய உன் கரம் பற்ற பற்றி ,இவள் என்னுடையவள் என்று அனைவரும் அறிய உன்னை இந்த தரணிக்கே ராணி ஆக்கிய பின் முழுதாய் உன்னுடன் கலக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ...ஆனால் என்னை காக்க இன்று நீ உன்னையே எனக்கு கொடுத்தது ......."என்று கலங்கிய ஆதித்யனின் இதழை கைகளால் மூடினாள் நித்திலா .
"அன்பரே!என்னை அடைந்தது என் துணைவர் தான் ....என் பதி என்னில் கலந்தது எப்படி தவறாகும்?என் தலைவருக்கு தான் என்னை கொடுத்தேன் ..."என்றவள் தன் இடை கச்சையில் மறைத்து இருந்த குறுவாள் ஒன்றை எடுத்து அவன் முன் நீட்ட அதை உற்று பார்த்தவன் கண்கள் வியப்பில் விரிந்தன .
"இது என் குறுவாள் ....ஆயிற்றே ....இது எப்படி தேவி உன்னிடம் ?"என்றான் திகைப்புடன் .
"அன்பரே இன்னும் என்னை உங்களுக்கு நினைவிற்கு வரவில்லையா ....இந்த குறுவாள் கொண்டு தானே தாங்கள் என் உயிரை சில வருடங்கள் முன் காத்தது ?"என்றாள் நித்திலா .
மாலை வரை மீண்டும் அவள் அவன் கண்களுக்கு படவேயில்லை ...வீரர்களை பார்வை இடுவது ,போரிட்ட இடத்தில் இறந்து போனவர்களை புதைப்பது ,ஒற்றர்களுடன் ஆலோசிப்பது ,அவள் தந்தைக்கு தகவல் அனுப்புவது ,அந்த குடில்களிடம் அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வது ,அருகில் உள்ள மற்ற மலைக்குடிகளுக்கு தகவல் அனுப்பி அங்கு விரோதிகள் யாராவது ஒளிந்து இருக்கிறார்களா என்று தகவல் அறிவது என்று பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள் அவன் பைங்கிளி .
அதுவரை அழகன் ஆதித்யனுக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள ,அங்கு இரவூ பூஜை முடிந்த பிறகு ,களைத்து திரும்பி வந்தாள் நித்திலவல்லி .அவள் வந்தது மெல்ல தலையசைப்புடன் விலகினான் அழகன் அவர்களுக்கு தேவையான தனிமை கொடுத்து .
"என்ன தேவி ...நாட்டின் அரசி ஆகும் முன்னரே உங்களை பார்க்க காத்து இருக்க வேண்டியதாய் இருக்கிறது ...இன்னும் அரசி ஆகி விட்டால் ஒட்டுமொத்த பாரதத்தையும் வெல்லும் வரை ஓய மாட்டாய் போல் இருக்கிறதே ...."என்றான் ஆதித்யன் அவளை நோக்கி தன் கைகளை நீட்டி .
அவன் கரங்களுக்குள் தன் கரம் பாந்தமாய் பொருந்துவதை கண்டு புன்னகைத்து அவன் அருகே அவனை ஒட்டி அந்த மேடையில் அமர்ந்தவள் ,"இந்த அரசனுக்கு ஏற்ற அரசியாய் இல்லை என்றால் எப்படி ...அரசன் எவ்வழியோ இந்த அரசியும் அவ்வழி ..."என்றாள் .
சற்று நேரம் எதையும் பேசாமல் இருவரும் ,ஒருவரின் அருகே இருப்பதை ஆழ்ந்து அனுபவித்தவாறு எதிரே தெரிந்த பால் நிலாவை ரசித்து கொண்டு இருந்தனர் .
அங்கு புள்ளி மான் ஒன்றின் குட்டி தாவி குதித்து வர ,அதை கண்ட நித்திலவல்லி அதன் அருகே சென்று அதை அணைத்து அதன் முகத்துடன் தன் முகத்தை வைத்து இழைக்க ஆரம்பித்தாள் .
அதை கண்டவாறு சிரித்து கொண்டு அவள் அருகே வந்த ஆதித்யன் ,"இந்த புள்ளி மானாய் நான் பிறந்து இருக்க கூடாதா என்று ஏக்கமாய் இருக்கிறது தேவி ."என்றான் அவள் இடையில் கை கொடுத்து எழுப்பி தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு .
"நீங்கள் இந்த புள்ளிமானாய் பிறந்து இருந்தால் உங்களை தோட்டத்தில் தான் வளர்த்து இருக்க முடியும் ...என்னுடனே எவ்வாறு தக்க வைத்து கொள்வது ...மானுக்கு கிடைத்தவற்றை விட உங்களுக்கு உங்களுக்கு தானே நான் முழு உரிமை ."என்றாள் நித்திலா அவன் மார்பினில் தலை சாய்த்து .
அந்த அமைதி ,சுகம் அணைப்பு காலம் முழுதும் கிடைக்க கூடாதா என்று இருவரின் மனமும் எண்ணாமல் இல்லை .
கண் விழித்த நொடி முதலாய் அவன் மனதை போட்டு அரித்து எடுத்து கொண்டு இருந்த கேள்வியை அந்த கணம் கேட்டான் ஆதித்யன் .
"என்ன காரியம் செய்து விட்டாய் தேவி ....புவனம் அறிய உன் கரம் பற்ற பற்றி ,இவள் என்னுடையவள் என்று அனைவரும் அறிய உன்னை இந்த தரணிக்கே ராணி ஆக்கிய பின் முழுதாய் உன்னுடன் கலக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ...ஆனால் என்னை காக்க இன்று நீ உன்னையே எனக்கு கொடுத்தது ......."என்று கலங்கிய ஆதித்யனின் இதழை கைகளால் மூடினாள் நித்திலா .
"அன்பரே!என்னை அடைந்தது என் துணைவர் தான் ....என் பதி என்னில் கலந்தது எப்படி தவறாகும்?என் தலைவருக்கு தான் என்னை கொடுத்தேன் ..."என்றவள் தன் இடை கச்சையில் மறைத்து இருந்த குறுவாள் ஒன்றை எடுத்து அவன் முன் நீட்ட அதை உற்று பார்த்தவன் கண்கள் வியப்பில் விரிந்தன .
"இது என் குறுவாள் ....ஆயிற்றே ....இது எப்படி தேவி உன்னிடம் ?"என்றான் திகைப்புடன் .
"அன்பரே இன்னும் என்னை உங்களுக்கு நினைவிற்கு வரவில்லையா ....இந்த குறுவாள் கொண்டு தானே தாங்கள் என் உயிரை சில வருடங்கள் முன் காத்தது ?"என்றாள் நித்திலா .
Attachments
-
32.7 KB Views: 0
-
46.3 KB Views: 0
-
43.4 KB Views: 0
-
35.1 KB Views: 0