தங்க மாளிகையின் வெளிப்புறம் மழையும் ,வெள்ளமும் அதிகரித்து கொண்டு இருக்க ,ஆதித்யன் ,தேவ நாராயணர் ,நித்திலவல்லி ,முத்தழகன் நால்வரும் அந்த மாளிகையின் நிர்மாணிப்பின் பிரம்மாண்டத்தை பற்றி விவாதித்து கொண்டு ,ஒவ்வொரு இடமாய் உலா வந்து கொண்டு இருந்தனர் .
"அயன்மீர் ...உங்கள் திறமைக்கு அளவே இல்லை ....கண் கோடி வேண்டும் இந்த அரண்மனையை காண ,வர்ணிக்க ஆயிரம் நாவன்ங்கள் (நாக்கு )இருந்தாலும் கூறுவது கடினமே ..."என்றான் ஆதித்யன் .
"இளவரசே !.இந்த எல்லா பெருமையும் நம் முன்னோர்களையே சேரும் ..."என்றார் தேவநாராயணர் .
"அது எங்கனம் ...விவரித்து இயம்பினால் நம் முன்னோர்களின் திறனை ,அறிவூகூர்மையை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ....நமக்கு பின் வரும் சந்ததிகளும் பயன் பெரும் ."என்றான் ஆதித்யன் .
"இளவரசே !நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற எண்ணில் அடங்கா கலைகளுக்கு ஈடு ஈரேழு பதினான்கு உலகளிலும் காணமுடியாது .ஒரு மனையாகட்டும் ,ஒரு கந்தகோட்டம் ஆகட்டும் ,ஒரு ஊர் ,நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்து இருக்கிறார்கள் .நான்கு புறம் சுவர் இருந்து விட்டால் மட்டும் அது மனை ஆகி விடாது என்கிறது அதர்வ வேதம் .வசிஷ்ட மகரிஷி மூன்று அடுக்கு மனை ,1000 கம்பம் (தூண் /pillar )கொண்ட மனை தன்னை நிர்மாணித்து கொண்டதாகவும் அது" த்ரி தத்து சரணம் "(மூன்று அடுக்கு மாளிகை )என்று அழைக்க பட்டதாய் சொல்வார்கள் .கல்ப சாஸ்திரத்தின் விரிவுரையான சுல்வ சூத்திரம் ஒரு மனையின் அளவூ ,அகலம் ,நீளம் போன்றவற்றை சொல்கிறது .கந்த புராணம் ஒரு ஊர் எப்படி அமைக்க படவேண்டும் என்று அறிவுறுத்துகிறது .அதில் கூறப்பட்டு இருக்கும் தங்க மாளிகை ,மூன்று ரதங்களில் வடிவில் நிர்மாணித்த கல்வினையாளர்கள் பெயரினை உரைக்கிறது .கருட புராணம் மூன்று வகை வடிவமைப்புகளை பற்றி சொல்கிறது .மக்கள் ,அரசர் குலம் வாழும் மனை ,படை தங்கும் படைவீடு ,இறைவன் வாழும் ஆலயம் அமையும் முறை இருக்கிறது .அக்னி புராணத்தில் பதினாறு காண்டங்கள் (CHAPTERS )நகர நிர்மாணிப்பை பற்றி மட்டும் சொல்கிறது .மீதம் உள்ள பதிமூன்று காண்டங்கள் சிற்ப சாஸ்திரத்தை பற்றி கூறுகிறது .நாரத புராணம் குளம் ,கேணி ,ஆறு ,ஆலயம் பற்றியும் ,வாயு புராணம் மலை மேல் ஆலயங்கள் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்பதையும் ,மட்சயா புராணம் ,பவிஷய புராணம் ,பிருஹதா ஷமிதா,ஆகாம ,கமிக ஆகமா என்று ஆகமத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை மனை ,கோட்டம் ,கந்தவராம் ,ஆலயம் நிர்மாணிப்பை பற்றி சொல்கிறது .இவை எல்லாம் எட்டுத்திக்கிலும் உள்ள தெய்வ அலைகளை மனையின் உள் செலுத்தும் வண்ணம் வழிமுறைகளை சொல்கிறது .இவை தவிர மேலும் எட்டு வகையான முன்னோர்களின் ஓலைச்சுவடி குறிப்புக்கள் கொண்டே எந்த ஒரு கல்வினையாளரும் எங்கள் நிர்மாணிப்பு தொழிலை செய்கிறோம் ."என்றார் தேவநாராயணர் .
"அவை என்ன தந்தையே ?"என்றாள் நித்திலவல்லி .
"சில்ப சாஸ்திரத்தின் வகையில் வருபவை -"மனசாரா ,மாயாமாதா சில்ப சாஸ்திரம் ,காஸ்யப முனிவரின் அம்சுமத்பேதா,விஸ்வகர்ம சில்ப சாஸ்திரம் ,அகஸ்திய முனிவர் சாஸ்திரம் ,சனத் குமார வாஸ்து சாஸ்திரம் ,மந்தன சாஸ்திரம் ,சம்கிரஹா" ..போன்றவை கற்ற பின்னே ஒரு நிலத்தின் புனிதம் ,அங்கு எவ்வகையான அலைகள் பரவி உள்ளன ,அதில் எவ்வகையான மனை ,கோட்டம் ,ஆலயம் ,எவ்விதமான பொருள் கொண்டு நிர்மாணிக்கலாம் ,எத்தனை மாடம் (balcony )சாளரம் (window ),கம்பம் (pillar /தூண் ),இருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது .அதனால் தான் இறை சந்நிதானத்திற்கு செல்லும் போது நம்மையும் அறியாமல் இறைவன் பால் ஈர்க்க படுகிறோம் ."என்றார் தேவநாராயணர் .
"'உங்கள் திறமை ,நீங்கள் கற்ற வித்தை இந்த சாதரூப கந்தகோட்டத்தின் நிர்மாணிப்பிலேயே தெரிகிறது குருவே ...உமது மாணாக்கனாய் இருப்பது எனக்கு பெருமையே ...இனி இந்த முன்னோர்களின் அறிவினை,மறைந்து உள்ள நம் அறிவு செல்வத்தை தரணி எங்கும் பரவும் வகை செய்வேன் ,.இவை எல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டிய கலை பொக்கிஷங்கள் .எங்குமே இல்லாத அறிவின் வெளிப்பாடு .மக்களை பிரித்து வைக்க மட்டுமே வேதங்கள் பயன்படுகின்றன என்று சொல்லும் அறிவிலிகளுக்கு உங்கள் விளக்கம் அறிவு கண்ணை திறக்கட்டும் .கல்லாதவரும் இதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இவற்றை எழுத ஆணை பிறப்பிக்க போகிறேன் ."என்றான் ஆதித்யன் .
"வாழ்க இளவரசே ...வாழ்க உமது எண்ணம் ....வேதங்கள் சில்ப சாஸ்திரத்தையும் ,நிர்மாணிப்பையும் மட்டும் சொல்வது இல்லை .மருத்துவம் ,வானவியல் சாஸ்திரம் ,எண் கணிதம் ,சஸ்திர ,அஸ்திர வித்தைகள் ,ஒரு தரணியின் நிர்வாகம் ,அரசியல் ,ராஜதந்திரம் ,தவம் போன்றவற்றையும் சொல்கிறது .இவை எல்லாம் மீண்டும் மறுமலர்ச்சி பெற வேண்டும் ..காலத்திற்கு ஏற்றார் போல் எது தேவையோ அதை சாதக பட்சியின் அறிவுடன் ,தெளிவுடன் ஏற்று கொள்வதே கூர்மை...."என்றார் தேவநாராயணர் .
(தேவநாராயணர் கூறிய நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் விட்டு சென்ற புதையல்கள் ...இவற்றை படிக்கச் நேர்ந்தது மிக பெரும் பெருமையே ...நம் முன்னோர்கள் கட்டிட கலைக்கு என்று 100 மேற்பட்ட ஓலை சுவடிகளை ,குறிப்புகளை விட்டு சென்று இருக்கிறார்கள் .அவற்றின் தகவல்களின் அடிப்படையில் ,சரஸ்வதி மஹால் ,சில்ப சாஸ்திர நூல்களின் உதவியோடு சிலவற்றை கூறி இருக்கிறேன் .அடுத்து சொல்ல பட்டு உள்ள சண்டை முறைகளும் ,வாட்சண்டை முறைகளும் 3000 ஆண்டுகளுக்கு முன் சோழ ,பாண்டிய ,சேர மன்னர்கள் கற்ற வித்தை ஓலை சுவடிகளில் இருந்து எடுக்க பட்டவையே ..)
"அயன்மீர் ...உங்கள் திறமைக்கு அளவே இல்லை ....கண் கோடி வேண்டும் இந்த அரண்மனையை காண ,வர்ணிக்க ஆயிரம் நாவன்ங்கள் (நாக்கு )இருந்தாலும் கூறுவது கடினமே ..."என்றான் ஆதித்யன் .
"இளவரசே !.இந்த எல்லா பெருமையும் நம் முன்னோர்களையே சேரும் ..."என்றார் தேவநாராயணர் .
"அது எங்கனம் ...விவரித்து இயம்பினால் நம் முன்னோர்களின் திறனை ,அறிவூகூர்மையை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ....நமக்கு பின் வரும் சந்ததிகளும் பயன் பெரும் ."என்றான் ஆதித்யன் .
"இளவரசே !நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற எண்ணில் அடங்கா கலைகளுக்கு ஈடு ஈரேழு பதினான்கு உலகளிலும் காணமுடியாது .ஒரு மனையாகட்டும் ,ஒரு கந்தகோட்டம் ஆகட்டும் ,ஒரு ஊர் ,நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்து இருக்கிறார்கள் .நான்கு புறம் சுவர் இருந்து விட்டால் மட்டும் அது மனை ஆகி விடாது என்கிறது அதர்வ வேதம் .வசிஷ்ட மகரிஷி மூன்று அடுக்கு மனை ,1000 கம்பம் (தூண் /pillar )கொண்ட மனை தன்னை நிர்மாணித்து கொண்டதாகவும் அது" த்ரி தத்து சரணம் "(மூன்று அடுக்கு மாளிகை )என்று அழைக்க பட்டதாய் சொல்வார்கள் .கல்ப சாஸ்திரத்தின் விரிவுரையான சுல்வ சூத்திரம் ஒரு மனையின் அளவூ ,அகலம் ,நீளம் போன்றவற்றை சொல்கிறது .கந்த புராணம் ஒரு ஊர் எப்படி அமைக்க படவேண்டும் என்று அறிவுறுத்துகிறது .அதில் கூறப்பட்டு இருக்கும் தங்க மாளிகை ,மூன்று ரதங்களில் வடிவில் நிர்மாணித்த கல்வினையாளர்கள் பெயரினை உரைக்கிறது .கருட புராணம் மூன்று வகை வடிவமைப்புகளை பற்றி சொல்கிறது .மக்கள் ,அரசர் குலம் வாழும் மனை ,படை தங்கும் படைவீடு ,இறைவன் வாழும் ஆலயம் அமையும் முறை இருக்கிறது .அக்னி புராணத்தில் பதினாறு காண்டங்கள் (CHAPTERS )நகர நிர்மாணிப்பை பற்றி மட்டும் சொல்கிறது .மீதம் உள்ள பதிமூன்று காண்டங்கள் சிற்ப சாஸ்திரத்தை பற்றி கூறுகிறது .நாரத புராணம் குளம் ,கேணி ,ஆறு ,ஆலயம் பற்றியும் ,வாயு புராணம் மலை மேல் ஆலயங்கள் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்பதையும் ,மட்சயா புராணம் ,பவிஷய புராணம் ,பிருஹதா ஷமிதா,ஆகாம ,கமிக ஆகமா என்று ஆகமத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை மனை ,கோட்டம் ,கந்தவராம் ,ஆலயம் நிர்மாணிப்பை பற்றி சொல்கிறது .இவை எல்லாம் எட்டுத்திக்கிலும் உள்ள தெய்வ அலைகளை மனையின் உள் செலுத்தும் வண்ணம் வழிமுறைகளை சொல்கிறது .இவை தவிர மேலும் எட்டு வகையான முன்னோர்களின் ஓலைச்சுவடி குறிப்புக்கள் கொண்டே எந்த ஒரு கல்வினையாளரும் எங்கள் நிர்மாணிப்பு தொழிலை செய்கிறோம் ."என்றார் தேவநாராயணர் .
"அவை என்ன தந்தையே ?"என்றாள் நித்திலவல்லி .
"சில்ப சாஸ்திரத்தின் வகையில் வருபவை -"மனசாரா ,மாயாமாதா சில்ப சாஸ்திரம் ,காஸ்யப முனிவரின் அம்சுமத்பேதா,விஸ்வகர்ம சில்ப சாஸ்திரம் ,அகஸ்திய முனிவர் சாஸ்திரம் ,சனத் குமார வாஸ்து சாஸ்திரம் ,மந்தன சாஸ்திரம் ,சம்கிரஹா" ..போன்றவை கற்ற பின்னே ஒரு நிலத்தின் புனிதம் ,அங்கு எவ்வகையான அலைகள் பரவி உள்ளன ,அதில் எவ்வகையான மனை ,கோட்டம் ,ஆலயம் ,எவ்விதமான பொருள் கொண்டு நிர்மாணிக்கலாம் ,எத்தனை மாடம் (balcony )சாளரம் (window ),கம்பம் (pillar /தூண் ),இருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது .அதனால் தான் இறை சந்நிதானத்திற்கு செல்லும் போது நம்மையும் அறியாமல் இறைவன் பால் ஈர்க்க படுகிறோம் ."என்றார் தேவநாராயணர் .
"'உங்கள் திறமை ,நீங்கள் கற்ற வித்தை இந்த சாதரூப கந்தகோட்டத்தின் நிர்மாணிப்பிலேயே தெரிகிறது குருவே ...உமது மாணாக்கனாய் இருப்பது எனக்கு பெருமையே ...இனி இந்த முன்னோர்களின் அறிவினை,மறைந்து உள்ள நம் அறிவு செல்வத்தை தரணி எங்கும் பரவும் வகை செய்வேன் ,.இவை எல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டிய கலை பொக்கிஷங்கள் .எங்குமே இல்லாத அறிவின் வெளிப்பாடு .மக்களை பிரித்து வைக்க மட்டுமே வேதங்கள் பயன்படுகின்றன என்று சொல்லும் அறிவிலிகளுக்கு உங்கள் விளக்கம் அறிவு கண்ணை திறக்கட்டும் .கல்லாதவரும் இதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இவற்றை எழுத ஆணை பிறப்பிக்க போகிறேன் ."என்றான் ஆதித்யன் .
"வாழ்க இளவரசே ...வாழ்க உமது எண்ணம் ....வேதங்கள் சில்ப சாஸ்திரத்தையும் ,நிர்மாணிப்பையும் மட்டும் சொல்வது இல்லை .மருத்துவம் ,வானவியல் சாஸ்திரம் ,எண் கணிதம் ,சஸ்திர ,அஸ்திர வித்தைகள் ,ஒரு தரணியின் நிர்வாகம் ,அரசியல் ,ராஜதந்திரம் ,தவம் போன்றவற்றையும் சொல்கிறது .இவை எல்லாம் மீண்டும் மறுமலர்ச்சி பெற வேண்டும் ..காலத்திற்கு ஏற்றார் போல் எது தேவையோ அதை சாதக பட்சியின் அறிவுடன் ,தெளிவுடன் ஏற்று கொள்வதே கூர்மை...."என்றார் தேவநாராயணர் .
(தேவநாராயணர் கூறிய நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் விட்டு சென்ற புதையல்கள் ...இவற்றை படிக்கச் நேர்ந்தது மிக பெரும் பெருமையே ...நம் முன்னோர்கள் கட்டிட கலைக்கு என்று 100 மேற்பட்ட ஓலை சுவடிகளை ,குறிப்புகளை விட்டு சென்று இருக்கிறார்கள் .அவற்றின் தகவல்களின் அடிப்படையில் ,சரஸ்வதி மஹால் ,சில்ப சாஸ்திர நூல்களின் உதவியோடு சிலவற்றை கூறி இருக்கிறேன் .அடுத்து சொல்ல பட்டு உள்ள சண்டை முறைகளும் ,வாட்சண்டை முறைகளும் 3000 ஆண்டுகளுக்கு முன் சோழ ,பாண்டிய ,சேர மன்னர்கள் கற்ற வித்தை ஓலை சுவடிகளில் இருந்து எடுக்க பட்டவையே ..)