இளரவசன் அவளின் நாட்டு பற்று கண்டு ,பெருமை மேலிட்டவனாக இதழில் முழு புன்னைகையுடன் அவளை பின் தொடர்ந்து சென்று படித்துறைகளில் ஏறினான் .
அந்த கார் இருளில் அவளை நிலா ஒளியில் தேடினான் ஆதித்யன் .சற்று தொலைவில் தீப்பந்தத்தின் ஒளியில் அவளை கண்டவனின் இதயம் ஒரு கணம் நின்றே விட்டது .அதற்குள் வேறு ஆடைக்குள் மாறி இருந்த அவள் கார்குழலை விரிய விட்டு அதன் அடியில் சிறு முடிச்சிட்டு ,அங்கே வளர்ந்து இருந்த காட்டு பூக்களை காதின் அருகே அணிந்து அவளே ஒரு மலர்வனமாய் ,ஆற்று நீரில் தாழ்ந்து இருந்த மரக்கிளை ஒன்றின் மேல் ஒயிலாக அமர்ந்து ஒரு இரு கால்களையும் நீரில் விட்டு ,நீரினை அளைந்து கொண்டு இருந்தாள் .
அவளின் மேனியழகினை மறைக்க முடியாமல் தோல்வியை தழுவி கொண்டு இருந்தன அவள் மேல் ஆடைகள் .
"அந்த ஆடையாக தான் இருக்க கூடாதா ?'என்ற எண்ணம் எழாமல் இல்லை ஆதித்யனுக்கு .
அவளின் சங்கம் (கணைகால் ,)நுசுப்பு (இடை ),துத்தம் (வயிறு )கூற்பரம் (முழங்கை ),அங்குலி (விரல் ),வதனம் (முகம் )பாலிகை (உதடு ),விலோசனம் (கண்கள் )ஒவ்வொன்றிலும் விவரிக்க முடியாத தேவ அழகு ஒளிந்திருக்க , அதனை விவரித்து சொல்ல எத்தனை ஆயுகம் (வாழ்நாள் )எடுத்தாலும் போதாது என்று தோன்றியது ஆதித்யனுக்கு .
அவன் மிக அருகில் வருவதை கண்டும் அவன் புறம் முகம் திருப்பவில்லை அந்த மதிமுகத்தாள் .
"இந்த சீற்றம் ஏற்பட தேவையே இல்லையே ....போரில் வென்று பாண்டிய நாட்டினையும் நம் நாடாக மாற்றிய பிறகு ,அந்த தென்னம்பாடி முத்துக்கள் சோழருக்கு தானே உரிமை .....சோழ நாட்டிற்கு சொந்தமான முத்தினை பற்றி பேசினால் சோழ நாட்டின் காரிககைக்கு ஏன் இந்த சீற்றம் ....இந்த முத்துக்கள் சோழனுக்கு உரிமையானது தானே ...."என்ற அவன் பேச்சில் ,பேச்சிழந்து நின்றது அந்த பெண்மை .
‘நீ எனக்கு உடையவள் தானே?’ என்று கேட்டால் ,பெண்மையால் என்ன செய்ய முடியும் ?வேகமாய் சுழித்தோடும் வேகவதி ஆற்றின் மேல் திரும்பியது அவள் பார்வை .அந்த ஆற்றினை போல் அவனை சேர்ந்து விட துடிக்கும் மனதை அணையிட்டு தடுக்க முடியாதவளாய் ,அவன் கேள்விக்கு பதில் அளிக்க முடியாதவளாய் வதங்கி நின்றாள் அவனை மட்டுமே தன்னுடையவனாக நினைத்து வாழ்ந்து வரும் அவனுடையவள் .
வாய் விட்டு தான் இதை உரைக்க முடியுமா ...அவன் யார் ..நாளை தரணியை ஆள போகும் சக்கரவர்த்தி ...அவளோ சாதாரண குடிமகள்களில் ஒருத்தி . இது அறநிலை இன்பவியல் கிடையாதே ....அவன் அரசகுலம் உயர்ந்த குடி...உயர்ந்த குடியால் தானே அநுலோமர் -நாளை நாட்டை ஆளும் சக்கரவர்த்தி பிறக்க முடியும் ..இவன் உரியோனாக கேட்கும் கேள்விக்கு உரிமையாட்டியாக பதில் சொல்ல உள்ளம் துடித்தாலும் ,அவள் மூகையாக(ஊமையாக )இருந்து விட முயன்றாள்.
அவன் விடும் மன்மத பானங்களை எப்படி திசை திருப்புவது என்று புரியாமல் தவித்தவளின் கண்களில் பட்டன் இளரவசனின் மெய் காவலன் முத்தழகன் .
இதழில் இளநகை பூக்க ,"இளவரசே !...தங்கள் சிதிலன் (தோழர் )என்னை நோக்கி வீச தயாராய் இருக்கும் குறுவாளை இறக்கினால் நன்றாய் இருக்கும் ....குத்துவதாய் இருந்தால் நெஞ்சில் குத்த சொல்லுங்கள் ...சோழவள தேசத்து பெண் நான் ....காயம் நெஞ்சில் பட்டு உயிர் பிரிந்தால் தான் நிம்மதியாய் இருக்கும். அதே சமயம் உங்கள் தோழரின் சிரம் உடலை விட்டு பிரிந்தால் என்னை குற்றம் சாட்டி பயனில்லை ."என்றாள் அவள் .
அவள் பேச்சை கேட்ட உடன் ஆதித்யன் மீண்டும் வியந்து பின் புன்னகையுடன் அவளை விழுங்குவதை போல் பார்த்து வைக்க ,அழகன் தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான் .
"யார் நீ ?'என்றான் சந்தேகத்துடன்
"ஹ்ம்ம் பார்த்தால் தெரியவில்லையோ உமக்கு- நான் காரிகை என்பது ?"என்றாள் அவள் .
"நீ காரிகையா இல்லையா ....பகை வீட்டு காளகூடமா(ஆலகாலம் விஷம் ) யாருக்கு தெரியும் ?.....கூர்வாட்களை தாங்கி குமரிகளும் வருவதுண்டு ..."என்றான் அழகன் .
"காளகூடத்திற்கும் (ஆலகால விஷத்திற்கு ),அமரிக்கும் (அமுதம் )வேற்றுமை தெரியவில்லை எனில் அதற்கு நான் என்ன பிணையா ?"என்றாள் அவள் .
இரு ஆடவரின் முன் நிற்கும் அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு என்று எதுவும் அவளிடம் தென்படவில்லை .பேச்சில் ஒரு எள்ளல் இருப்பதை கண்டான் இளவரசன் .ஏதோ குடிமைகளை கேள்வி கேட்கும் அரசியின் தோரணை அவளிடம் .
'இவளா ஆலகாலம் ?இவள் ஒரு கன்மேய்வூ (மாடப்புறா ),நடையில் ஒரு அளகு (மயில் ),குரல் ஆஹா காலகண்டம் (குயில் ),உடலோ திண்மையான சாசம் (முயல் ),கழுத்து கொக்கரை (வலம்புரி சங்கு ),நிறம் பிஷணம் (செஞ்சசந்தனம் ),இதழ் கழையில் (கரும்பு ரசத்தில் )ஊற வைத்த மாதுளங்கம் (மாதுளை ) ...இவளை எப்படி இந்த அழகன் ஆலகாலம் என்று சொல்கின்றான் ....இவனுக்கு கண்ணில் தான் ஏதோ பழுது ...அரண்மனைக்கு திரும்பிய உடன் மாமத்திரர் (ஆயுள்வேதியர் /மருத்துவர் )இடம் தான் காண்பிக்க வேண்டும் .'என்று அவள் பால் சாய்ந்து விட்ட மனம் தலைவனாய் பிதற்றி (உளறி )கொண்டு இருந்தது .
"பகடி பேச்சு தேவையில்லை பெண்ணே ...என் வாள் வீச்சில் ஒரே கணம் பத்து சிரங்கள் உருளும் ....எங்களிடம் உன் சாகச பேச்சு வேண்டாம் ."என்றான் அழகன் .
"ஒஹ்ஹ என் தலையை கொய்து விட்டு அயனம் (வழி .)தெரியாமல் இந்த கானகத்தில் அலைந்து கொண்டு இருப்பது உங்கள் அவா என்றால் நான் என் பேடு (சிற்றூர் )செல்கிறேன் ....ஒன்று உறுதி அண்ணலே (அண்ணா )என் சிரம் விழுவதற்கு முன் உங்கள் சிரம் வானில் பறந்து இருக்கும் ...அப்படி என்னையும் மீறி உங்கள் வாள் என் சிரம் கொய்தால் ,என் தாதை (தந்தை )உங்கள் குலத்தையே வேரறுக்கமால் இருக்க மாட்டார் ."என்றாள் அவள் .
"உன் தாதை என்ன பௌரவரோ (குருகுலத்து ஆசிரியர் )...எங்கள் வாள் வீச்சுக்கு எதிர் நிற்க ?'என்றான் அழகன் .
"உண்மை தான் அண்ணலே ....என் தாதை பௌரவரே ...அதுவும் உங்களுக்கும் ,இளவரசருக்குமே.."என்றவள் தன் ஆடை மறைவில் இருந்து "தேவநாராயணர் "இலச்சினை எடுத்து விளக்கொளியில் காண்பிக்க ,ஆதித்யனும் ,அழகனும் அதிர்ந்து நின்றனர் .
அப்பொழுது தான் அவர்களுக்கு புரிந்தது ,தேவநாராயணர் சொன்ன வழிகாட்டி அவள் தான் என்றும் ,அவள் தான் அவரின் குமாரத்தி என்பதும் .
அந்த கார் இருளில் அவளை நிலா ஒளியில் தேடினான் ஆதித்யன் .சற்று தொலைவில் தீப்பந்தத்தின் ஒளியில் அவளை கண்டவனின் இதயம் ஒரு கணம் நின்றே விட்டது .அதற்குள் வேறு ஆடைக்குள் மாறி இருந்த அவள் கார்குழலை விரிய விட்டு அதன் அடியில் சிறு முடிச்சிட்டு ,அங்கே வளர்ந்து இருந்த காட்டு பூக்களை காதின் அருகே அணிந்து அவளே ஒரு மலர்வனமாய் ,ஆற்று நீரில் தாழ்ந்து இருந்த மரக்கிளை ஒன்றின் மேல் ஒயிலாக அமர்ந்து ஒரு இரு கால்களையும் நீரில் விட்டு ,நீரினை அளைந்து கொண்டு இருந்தாள் .
அவளின் மேனியழகினை மறைக்க முடியாமல் தோல்வியை தழுவி கொண்டு இருந்தன அவள் மேல் ஆடைகள் .
"அந்த ஆடையாக தான் இருக்க கூடாதா ?'என்ற எண்ணம் எழாமல் இல்லை ஆதித்யனுக்கு .
அவளின் சங்கம் (கணைகால் ,)நுசுப்பு (இடை ),துத்தம் (வயிறு )கூற்பரம் (முழங்கை ),அங்குலி (விரல் ),வதனம் (முகம் )பாலிகை (உதடு ),விலோசனம் (கண்கள் )ஒவ்வொன்றிலும் விவரிக்க முடியாத தேவ அழகு ஒளிந்திருக்க , அதனை விவரித்து சொல்ல எத்தனை ஆயுகம் (வாழ்நாள் )எடுத்தாலும் போதாது என்று தோன்றியது ஆதித்யனுக்கு .
அவன் மிக அருகில் வருவதை கண்டும் அவன் புறம் முகம் திருப்பவில்லை அந்த மதிமுகத்தாள் .
"இந்த சீற்றம் ஏற்பட தேவையே இல்லையே ....போரில் வென்று பாண்டிய நாட்டினையும் நம் நாடாக மாற்றிய பிறகு ,அந்த தென்னம்பாடி முத்துக்கள் சோழருக்கு தானே உரிமை .....சோழ நாட்டிற்கு சொந்தமான முத்தினை பற்றி பேசினால் சோழ நாட்டின் காரிககைக்கு ஏன் இந்த சீற்றம் ....இந்த முத்துக்கள் சோழனுக்கு உரிமையானது தானே ...."என்ற அவன் பேச்சில் ,பேச்சிழந்து நின்றது அந்த பெண்மை .
‘நீ எனக்கு உடையவள் தானே?’ என்று கேட்டால் ,பெண்மையால் என்ன செய்ய முடியும் ?வேகமாய் சுழித்தோடும் வேகவதி ஆற்றின் மேல் திரும்பியது அவள் பார்வை .அந்த ஆற்றினை போல் அவனை சேர்ந்து விட துடிக்கும் மனதை அணையிட்டு தடுக்க முடியாதவளாய் ,அவன் கேள்விக்கு பதில் அளிக்க முடியாதவளாய் வதங்கி நின்றாள் அவனை மட்டுமே தன்னுடையவனாக நினைத்து வாழ்ந்து வரும் அவனுடையவள் .
வாய் விட்டு தான் இதை உரைக்க முடியுமா ...அவன் யார் ..நாளை தரணியை ஆள போகும் சக்கரவர்த்தி ...அவளோ சாதாரண குடிமகள்களில் ஒருத்தி . இது அறநிலை இன்பவியல் கிடையாதே ....அவன் அரசகுலம் உயர்ந்த குடி...உயர்ந்த குடியால் தானே அநுலோமர் -நாளை நாட்டை ஆளும் சக்கரவர்த்தி பிறக்க முடியும் ..இவன் உரியோனாக கேட்கும் கேள்விக்கு உரிமையாட்டியாக பதில் சொல்ல உள்ளம் துடித்தாலும் ,அவள் மூகையாக(ஊமையாக )இருந்து விட முயன்றாள்.
அவன் விடும் மன்மத பானங்களை எப்படி திசை திருப்புவது என்று புரியாமல் தவித்தவளின் கண்களில் பட்டன் இளரவசனின் மெய் காவலன் முத்தழகன் .
இதழில் இளநகை பூக்க ,"இளவரசே !...தங்கள் சிதிலன் (தோழர் )என்னை நோக்கி வீச தயாராய் இருக்கும் குறுவாளை இறக்கினால் நன்றாய் இருக்கும் ....குத்துவதாய் இருந்தால் நெஞ்சில் குத்த சொல்லுங்கள் ...சோழவள தேசத்து பெண் நான் ....காயம் நெஞ்சில் பட்டு உயிர் பிரிந்தால் தான் நிம்மதியாய் இருக்கும். அதே சமயம் உங்கள் தோழரின் சிரம் உடலை விட்டு பிரிந்தால் என்னை குற்றம் சாட்டி பயனில்லை ."என்றாள் அவள் .
அவள் பேச்சை கேட்ட உடன் ஆதித்யன் மீண்டும் வியந்து பின் புன்னகையுடன் அவளை விழுங்குவதை போல் பார்த்து வைக்க ,அழகன் தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான் .
"யார் நீ ?'என்றான் சந்தேகத்துடன்
"ஹ்ம்ம் பார்த்தால் தெரியவில்லையோ உமக்கு- நான் காரிகை என்பது ?"என்றாள் அவள் .
"நீ காரிகையா இல்லையா ....பகை வீட்டு காளகூடமா(ஆலகாலம் விஷம் ) யாருக்கு தெரியும் ?.....கூர்வாட்களை தாங்கி குமரிகளும் வருவதுண்டு ..."என்றான் அழகன் .
"காளகூடத்திற்கும் (ஆலகால விஷத்திற்கு ),அமரிக்கும் (அமுதம் )வேற்றுமை தெரியவில்லை எனில் அதற்கு நான் என்ன பிணையா ?"என்றாள் அவள் .
இரு ஆடவரின் முன் நிற்கும் அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு என்று எதுவும் அவளிடம் தென்படவில்லை .பேச்சில் ஒரு எள்ளல் இருப்பதை கண்டான் இளவரசன் .ஏதோ குடிமைகளை கேள்வி கேட்கும் அரசியின் தோரணை அவளிடம் .
'இவளா ஆலகாலம் ?இவள் ஒரு கன்மேய்வூ (மாடப்புறா ),நடையில் ஒரு அளகு (மயில் ),குரல் ஆஹா காலகண்டம் (குயில் ),உடலோ திண்மையான சாசம் (முயல் ),கழுத்து கொக்கரை (வலம்புரி சங்கு ),நிறம் பிஷணம் (செஞ்சசந்தனம் ),இதழ் கழையில் (கரும்பு ரசத்தில் )ஊற வைத்த மாதுளங்கம் (மாதுளை ) ...இவளை எப்படி இந்த அழகன் ஆலகாலம் என்று சொல்கின்றான் ....இவனுக்கு கண்ணில் தான் ஏதோ பழுது ...அரண்மனைக்கு திரும்பிய உடன் மாமத்திரர் (ஆயுள்வேதியர் /மருத்துவர் )இடம் தான் காண்பிக்க வேண்டும் .'என்று அவள் பால் சாய்ந்து விட்ட மனம் தலைவனாய் பிதற்றி (உளறி )கொண்டு இருந்தது .
"பகடி பேச்சு தேவையில்லை பெண்ணே ...என் வாள் வீச்சில் ஒரே கணம் பத்து சிரங்கள் உருளும் ....எங்களிடம் உன் சாகச பேச்சு வேண்டாம் ."என்றான் அழகன் .
"ஒஹ்ஹ என் தலையை கொய்து விட்டு அயனம் (வழி .)தெரியாமல் இந்த கானகத்தில் அலைந்து கொண்டு இருப்பது உங்கள் அவா என்றால் நான் என் பேடு (சிற்றூர் )செல்கிறேன் ....ஒன்று உறுதி அண்ணலே (அண்ணா )என் சிரம் விழுவதற்கு முன் உங்கள் சிரம் வானில் பறந்து இருக்கும் ...அப்படி என்னையும் மீறி உங்கள் வாள் என் சிரம் கொய்தால் ,என் தாதை (தந்தை )உங்கள் குலத்தையே வேரறுக்கமால் இருக்க மாட்டார் ."என்றாள் அவள் .
"உன் தாதை என்ன பௌரவரோ (குருகுலத்து ஆசிரியர் )...எங்கள் வாள் வீச்சுக்கு எதிர் நிற்க ?'என்றான் அழகன் .
"உண்மை தான் அண்ணலே ....என் தாதை பௌரவரே ...அதுவும் உங்களுக்கும் ,இளவரசருக்குமே.."என்றவள் தன் ஆடை மறைவில் இருந்து "தேவநாராயணர் "இலச்சினை எடுத்து விளக்கொளியில் காண்பிக்க ,ஆதித்யனும் ,அழகனும் அதிர்ந்து நின்றனர் .
அப்பொழுது தான் அவர்களுக்கு புரிந்தது ,தேவநாராயணர் சொன்ன வழிகாட்டி அவள் தான் என்றும் ,அவள் தான் அவரின் குமாரத்தி என்பதும் .
Attachments
-
112 KB Views: 0
-
10.6 KB Views: 0
-
31.7 KB Views: 1