ஆண்டு -2019
இடம் -காஞ்சிபுரம்
பல நூற்றாண்டுகளுக்கு முன் அகண்ட காவேரி போல் ஓடி கொண்டு இருந்த வேகவதி ஆறு இன்று ஆடு ,மாடுகள் மேயும் ,ஆகாய தாமரை மலர்ந்த ,மனித கழிவுகள் கொட்டப்பட்டு கொண்டு இருக்கும் சிறு கால்வாய் .அடுத்த கூவம் நதி ஆகும் தகுதிகள் உள்ள பல நதிகளில் இதுவும் ஒன்று.
அந்த கால்வாயையும் பிரிக்கும் விதமாய் நடுவே ஒரு பாலம் .அதை கடந்து சென்றால் அந்த ஆற்றின் தவறு கால்வாயின் அருகே அமைந்து இருந்தது கலெக்டர் அலுவலகம் .அதன் ஒரு பகுதியாய் காஞ்சிபுரம் தலைமை காவல் அதிகாரி DIG அலுவலகம் .
அந்த அலுவலகத்தின் முன் மிக பெரிய பரத் கிரௌண்ட் .அங்கு தான் போலீசார் அணிவகுப்பு ,சுதந்திர தின கொண்டாட்டம் எல்லாம் நடைபெறும் .அந்த கிரௌண்ட் தாண்டி போலீஸ் அலுவலக வாயிலில் வந்து நின்றது சமுத்திராவின் ஸ்கூட்டி .
அங்கு வேலையாய் வந்தவர்கள் செல்பவர்கள் ஒரு கணம் சமுத்திராவின் அழகை கண்டு ."அப்பா என்ன அழகு டா சாமி ..."என்று நினைக்காமல் கடக்கவில்லை .இன்ஸ்டன்ட் கவி சக்ரவர்த்திகளை உருவாக்கி கொண்டு இருப்பதை அறியாதவளாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள் .வழக்கத்தை விட கெடு பிடி மிக அதிகமாய் இருந்தது .
"நில்லு மா .....உன்னை தான் மா ...பிரஸ்காரங்க னா பின்னாடி போங்க ....வேற ஏதாவது வேலை னா அந்த பக்கம் இருக்கும் பிளாக் ல ஆபீஸ் இருக்கு அங்கே போய் விசாரி மா ..."என்றார் வாயிலில் நின்ற கான்ஸ்டபிள் .
"ஹலோ ...அங்கிள் ...அங்கிள் ...ரிலாக்ஸ் ...கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுங்க ...."என்றாள் சமுத்திரா .
ஒரு கணம் அதிர்ந்த அவர்,"ஓஹ் சமுத்திரா நீயாடா கண்ணு ...சாரிமா பார்க்கலை ...வேறு யாரோன்னு ...ஆமா நீ என்ன இந்த பக்கம் ..."என்றார் சமுத்திராவிற்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த அவர் -சோமநாதன்
"அதான் அங்கிள் என் காலேஜ் மேட் ஒருத்தி காணாம போனான்னு உங்க கிட்டே கூட சொல்லி இருந்தேன் இல்லை ....மூன்று நாள் முன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தேன் அங்கிள் ... நேத்து இங்கே இருந்து கால் செஞ்சி மார்னிங் பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாங்க ..அதான் .."என்றாள் சமுத்திரா .
"இங்கேயா ...இருக்காதுமா ...எந்த ஸ்டேஷன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தீயோ அங்கே வர சொல்லி இருப்பாங்க ...:என்றார் சோமு
:நானும் அதை தான் கேட்டேன் அங்கிள் ..இங்கே கலெக்டர் ஆபீஸ்க்கு "A பிளாக் ரெண்டாது மாடிக்கு தான் அங்கிள் வர சொன்னாங்க ...யாரோ SP அழகர்நம்பி அவரை மீட் செய்ய சொன்னாங்க ....ஆமா என்ன அங்கிள் இன்னைக்கு ....இவ்வளவூ பரபரப்பாய் இருக்குது இந்த இடம் ...மத்த நாள் எல்லாம் ஈ ,காக்கை கூட இருக்காது ...கிரௌண்ட்ல பசங்க கிரிக்கெட் ,புட்பால்ன்னு அதகளம் செய்து இருப்பாங்க ....என்னைக்கும் இல்லாத திருநாளாய் வெளிமாநில நியூஸ் சேனல் வண்டி எல்லாம் நிக்குது ?"என்றாள் சமுத்திரா சுத்தி பார்த்த வாறு .
அதற்குள் வேறு ஒரு கான்ஸ்டபிள் அங்கு செக்யூரிட்டிக்கு நிற்க வைத்து விட்டு வந்த சோமு ,"இந்த பக்கம் வாம்மா ...."என்று வராண்டாவில் அழைத்து கொண்டு சென்றார் .அந்த நீண்ட வராண்டாவில் நடந்த வாறே ,"என்னமா இப்படி கேட்டுட்டே ...உனக்கு விஷயமே தெரியாதா ..."என்று ஆரம்பித்தவர் தன் தலையில் தானே தட்டி கொண்டு ,"யாருக்குமே தான் தெரியாது ...இன்னும் சார் இன்டெர்வியூ கொடுக்கலை ...விஷயம் ரொம்ப ரகசியமா வைத்து இருக்காங்க சமுத்திரா ....நேத்து நைட் காஞ்சிபுரம் சுத்தி 36 இடங்களில் நள்ளிரவில் மழையை கூட பொருட்படுத்தாமல் ரைட் நடந்துச்சு ...கிட்டத்தட்ட 2000 மேற்பட்ட சிலைகள் ,தங்கம் ,சில்வர் ,பஞ்சலோகம் ,கல்லுன்னு மீட்டு வந்து இருக்காங்க ...எல்லாமே ராஜா காலத்து கோயில் சிற்பங்க ....அது தவிர 300 குறையாத ஓலை சுவடிகளாம் ...அதில் விலை உயர்ந்த மருத்துவ குறிப்புக்கள் போகர் முதலிய சித்தர்கள் எழுதிய மருந்து பத்தி எல்லாம் இருக்காம் ...சாமிக்கு போட்டு வைத்து இருந்த நகைகளை மாத்திட்டு போலி நகைகளை வேற வச்சி இருக்காங்க ...பல பெரும் புள்ளிகள் இதில் ஈடு பட்டு இருக்காங்களாம் ...."என்றார் சோமு .
"என்ன அங்கிள் சொல்றீங்க ...இவ்வளவூ சிலைகளா ...விளையாடறீங்களா என்ன ?"என்றாள் சமுத்திரா நம்ப முடியாமல் .
"என்னமா இப்படி சொல்லிட்டே ...IG சுந்தர மாணிக்கவேல் அய்யா அவருடன் சிலை கடத்தல் சிறப்பு பிரிவூ ,பொருளாதார குற்ற பிரிவூ (ECONOMIC OFFENCES WING )ஆஃபீஸ்ர் முப்பது பேர் ஒரு மாசமாய் இங்கே தான் மா முகாம் இட்டு இருங்காங்க ... வெளியே யாருக்கும் தெரியமா தினமும் ரைட் போய்ட்டு கிடைச்சவனை எல்லாம் நொண்டி நொங்கு எடுத்துட்டு இருக்காங்க ...அதில் ஒருத்தன் சொன்னது வைத்து நேத்து போன ரைட்டில் தான் இவ்வளவூ சிலை மீட்டு இருக்காங்க ...."என்றவர்கள் பேசி கொண்டே ரெண்டாம் தளத்தை அடைந்து இருந்தார்கள் .
"சுந்தர மாணிக்கவேல் சார் ....முதலமைச்சர் ஸ்பெஷல்லா நியமித்த நேர்மையான IG சார் ..அவரே வந்து இருக்காரா ...அப்போ விஷயம் பெருசு தான் .... "என்றாள் சமுத்திரா
இவர்கள் பேசி கொண்டே முதல் அறை ஒன்றை தாண்ட ,அடுத்த அறையில் இருந்து வெளி வந்த ஒருவன் இவர்களை கண்டு கோபத்துடன் இவர்கள் அருகே வந்தான் .
"என்ன சோமு சார் ...பிரஸ் யாரையும் உள்ளே விட கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி கூட இந்த பெண்ணை ஏன் உள்ளே விட்டிங்க ...மேடம் IG சார் இன்டர்வியூ கொடுப்பார் ..ப்ளீஸ் கோ அபேரட் ...கீழே வெயிட் செய்யுங்க ..."என்றான் எரிச்சலுடன் .
"சார் ...சார் ...இவங்க பிரஸ் இல்லை சார் ...உங்களை பார்க்க தான் வர சொல்லி இருந்தீங்களாம் ...இவங்க காலேஜ் பிரென்ட் காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்த ..."என்று அவர் சொல்வதற்குள் ,
"மிஸ் சமுத்திரா தேவராஜன் ரைட் ...சாரி உங்களை நாங்க தான் வர சொல்லி இருந்தோம் ...பை தி பை ஐ யாம் SP அழகர்நம்பி...திஸ் வே ப்ளீஸ் ...சோமு சார் ..நீங்க போங்க ...இனி யார் என்ன சொன்னாலும் இனி யாரையும் இங்கே அல்லோவ் செய்யாதீங்க ...."என்றவன் சமுத்திராவை நான்கு அறைகள் தாண்டி அழைத்து சென்றான் .
அந்த அறை மிக பெரிதாய் இருந்தது .பெரிய ஆஃபீஸ்ர் ஒருவரின் அறை போல் இருந்தது .அங்கு அழைத்து சென்றவன் ,"ப்ளீஸ் டேக் யுவர் சீட் ....சார் ஒரு இன்வெஸ்டிகஷன்ல இருக்கார் ...வந்துடுவார் ...."என்றான் அழகர்நம்பி .
"என்ன சார் நடக்குது இங்கே ..நீங்க தானே வர சொல்லி இருந்தீங்க ....என் பிரென்ட் கவிக்கு என்ன ஆச்சு சார் ..."என்றாள் சமுத்திரா நடப்பது ஒன்றும் புரியாமல் .
"சிஸ்டர் !...டென்ஷன் ஆக வேண்டாம் ....உங்க பிரென்ட் கவி நல்லாவே இருக்காங்க ...மீதத்தை சார் வந்து சொல்வார் ...இப்போ கவியையும் ,அவங்க பியான்சி மிஸ்டர் நிகில்லையும் டாக்டர் செக் செய்ய வந்துட்டு இருக்காங்க ...டோன்ட் ஒர்ரி ...அவங்களை காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்து இருந்தீங்க இல்லை அதான் இங்கே வரவழைச்சோம் ...மிஸ் கவியும் உங்களை தான் கேட்டாங்க ."என்றான் அழகர் .
"எந்த சார் பத்தி சொல்றீங்க சார் ?"என்றாள் சமுத்திரா -இனம் புரியாத படபடப்பு நெஞ்சில் எழ
"ACP ஆதவ் காலேஸ்வர் ...சிலை கடத்தல் தடுப்பு பிரிவூ ஸ்பெசல் ஆஃபீஸ்ர் ..."என்றான் அழகர்
"IG சுந்தர மாணிக்கவேல் சார் மகனா ?"என்றாள் சமுத்திரா
"ஆதவ் ... ஐ மீன் ACP சார் உங்களுக்கு தெரியுமா சிஸ்டர் ?"என்றான் அழகர் .
"இல்லை சார் ....பேர் கேள்வி பட்டு இருக்கேன் ...என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ...ரொம்ப நேர்மையானவர் ..தப்புன்னா ஸ்பாட் தண்டனை என்று ஒரு புக் ல போட்டு இருந்தாங்க ....பார்த்தது இல்லை ...."என்றாள் சமுத்திரா .
"இப்போ வருவார் பாருங்க ....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ....ஏதாவது வேணும் என்றால் சொல்லுங்க ...ஹெசிட்டேட் செய்யாதீங்க சிஸ்டர்....போலீஸ் ஸ்டேஷன் என்றால் பெண்கள் வர சங்கட படுவாங்கன்னு தெரியும் ...என்னை உங்க பிரதர் மாதிரி நினைசீக்கோங்கோ ...அடுத்த அறையில் தான் இருப்பேன் ..."என்றவன் தலை அசைப்புடன் வெளியேற அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சமுத்திரா .
'என்னங்கடா நடக்குது இங்கே ...தலையும் புரியலை வாலும் புரியலை ....இந்த கவிக்கும் இந்த சிலை கடத்தல் ஏதாவது லிங்க் இருக்குமோ ....ஏற்க்கனவே அது ஒரு முந்திரி ...அவ லவ் செய்த அந்த நிகில் ஒரு முந்திரி ...ரெண்டும் சேர்ந்து என்ன செஞ்சி வச்சி இருக்குங்கனே தெரிலையே .....'என்று மனதிற்குள் புலம்பியவள் ,நேரம் ஆக ஆக பொறுமை இழந்தவளாய் தன் சாம்சங் மொபைல் எடுத்தாள் .
அதில் யூ ட்யூப் ஆன் செய்து, பாடல்களை ஓட விட்டு ஹியர்போன் மாட்டிக்கொண்டு ,அந்த அறையில் மாட்டி இருந்த படங்களை பார்த்தவாறே நடந்து கொண்டு இருந்தாள்.
அதே சமயம் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தனர் கவியும் அவள் பியான்சி நிகிலும் .உடன் ஒரு போலீஸ் ஆஃபீஸ்ர் .அதே சமயம் உள்ளே வந்தார் அவர் .
"ஹலோ சார் ...ஐ ஆம் டாக்டர் சிவானந்த் ."என்றபடி வந்தார் அந்த அறுபது வயது முதியவர் .பார்க்க அப்படி ஒரு தேஜஸ் அந்த முகத்தில் .
இடம் -காஞ்சிபுரம்
பல நூற்றாண்டுகளுக்கு முன் அகண்ட காவேரி போல் ஓடி கொண்டு இருந்த வேகவதி ஆறு இன்று ஆடு ,மாடுகள் மேயும் ,ஆகாய தாமரை மலர்ந்த ,மனித கழிவுகள் கொட்டப்பட்டு கொண்டு இருக்கும் சிறு கால்வாய் .அடுத்த கூவம் நதி ஆகும் தகுதிகள் உள்ள பல நதிகளில் இதுவும் ஒன்று.
அந்த கால்வாயையும் பிரிக்கும் விதமாய் நடுவே ஒரு பாலம் .அதை கடந்து சென்றால் அந்த ஆற்றின் தவறு கால்வாயின் அருகே அமைந்து இருந்தது கலெக்டர் அலுவலகம் .அதன் ஒரு பகுதியாய் காஞ்சிபுரம் தலைமை காவல் அதிகாரி DIG அலுவலகம் .
அந்த அலுவலகத்தின் முன் மிக பெரிய பரத் கிரௌண்ட் .அங்கு தான் போலீசார் அணிவகுப்பு ,சுதந்திர தின கொண்டாட்டம் எல்லாம் நடைபெறும் .அந்த கிரௌண்ட் தாண்டி போலீஸ் அலுவலக வாயிலில் வந்து நின்றது சமுத்திராவின் ஸ்கூட்டி .
அங்கு வேலையாய் வந்தவர்கள் செல்பவர்கள் ஒரு கணம் சமுத்திராவின் அழகை கண்டு ."அப்பா என்ன அழகு டா சாமி ..."என்று நினைக்காமல் கடக்கவில்லை .இன்ஸ்டன்ட் கவி சக்ரவர்த்திகளை உருவாக்கி கொண்டு இருப்பதை அறியாதவளாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள் .வழக்கத்தை விட கெடு பிடி மிக அதிகமாய் இருந்தது .
"நில்லு மா .....உன்னை தான் மா ...பிரஸ்காரங்க னா பின்னாடி போங்க ....வேற ஏதாவது வேலை னா அந்த பக்கம் இருக்கும் பிளாக் ல ஆபீஸ் இருக்கு அங்கே போய் விசாரி மா ..."என்றார் வாயிலில் நின்ற கான்ஸ்டபிள் .
"ஹலோ ...அங்கிள் ...அங்கிள் ...ரிலாக்ஸ் ...கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுங்க ...."என்றாள் சமுத்திரா .
ஒரு கணம் அதிர்ந்த அவர்,"ஓஹ் சமுத்திரா நீயாடா கண்ணு ...சாரிமா பார்க்கலை ...வேறு யாரோன்னு ...ஆமா நீ என்ன இந்த பக்கம் ..."என்றார் சமுத்திராவிற்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த அவர் -சோமநாதன்
"அதான் அங்கிள் என் காலேஜ் மேட் ஒருத்தி காணாம போனான்னு உங்க கிட்டே கூட சொல்லி இருந்தேன் இல்லை ....மூன்று நாள் முன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தேன் அங்கிள் ... நேத்து இங்கே இருந்து கால் செஞ்சி மார்னிங் பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாங்க ..அதான் .."என்றாள் சமுத்திரா .
"இங்கேயா ...இருக்காதுமா ...எந்த ஸ்டேஷன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தீயோ அங்கே வர சொல்லி இருப்பாங்க ...:என்றார் சோமு
:நானும் அதை தான் கேட்டேன் அங்கிள் ..இங்கே கலெக்டர் ஆபீஸ்க்கு "A பிளாக் ரெண்டாது மாடிக்கு தான் அங்கிள் வர சொன்னாங்க ...யாரோ SP அழகர்நம்பி அவரை மீட் செய்ய சொன்னாங்க ....ஆமா என்ன அங்கிள் இன்னைக்கு ....இவ்வளவூ பரபரப்பாய் இருக்குது இந்த இடம் ...மத்த நாள் எல்லாம் ஈ ,காக்கை கூட இருக்காது ...கிரௌண்ட்ல பசங்க கிரிக்கெட் ,புட்பால்ன்னு அதகளம் செய்து இருப்பாங்க ....என்னைக்கும் இல்லாத திருநாளாய் வெளிமாநில நியூஸ் சேனல் வண்டி எல்லாம் நிக்குது ?"என்றாள் சமுத்திரா சுத்தி பார்த்த வாறு .
அதற்குள் வேறு ஒரு கான்ஸ்டபிள் அங்கு செக்யூரிட்டிக்கு நிற்க வைத்து விட்டு வந்த சோமு ,"இந்த பக்கம் வாம்மா ...."என்று வராண்டாவில் அழைத்து கொண்டு சென்றார் .அந்த நீண்ட வராண்டாவில் நடந்த வாறே ,"என்னமா இப்படி கேட்டுட்டே ...உனக்கு விஷயமே தெரியாதா ..."என்று ஆரம்பித்தவர் தன் தலையில் தானே தட்டி கொண்டு ,"யாருக்குமே தான் தெரியாது ...இன்னும் சார் இன்டெர்வியூ கொடுக்கலை ...விஷயம் ரொம்ப ரகசியமா வைத்து இருக்காங்க சமுத்திரா ....நேத்து நைட் காஞ்சிபுரம் சுத்தி 36 இடங்களில் நள்ளிரவில் மழையை கூட பொருட்படுத்தாமல் ரைட் நடந்துச்சு ...கிட்டத்தட்ட 2000 மேற்பட்ட சிலைகள் ,தங்கம் ,சில்வர் ,பஞ்சலோகம் ,கல்லுன்னு மீட்டு வந்து இருக்காங்க ...எல்லாமே ராஜா காலத்து கோயில் சிற்பங்க ....அது தவிர 300 குறையாத ஓலை சுவடிகளாம் ...அதில் விலை உயர்ந்த மருத்துவ குறிப்புக்கள் போகர் முதலிய சித்தர்கள் எழுதிய மருந்து பத்தி எல்லாம் இருக்காம் ...சாமிக்கு போட்டு வைத்து இருந்த நகைகளை மாத்திட்டு போலி நகைகளை வேற வச்சி இருக்காங்க ...பல பெரும் புள்ளிகள் இதில் ஈடு பட்டு இருக்காங்களாம் ...."என்றார் சோமு .
"என்ன அங்கிள் சொல்றீங்க ...இவ்வளவூ சிலைகளா ...விளையாடறீங்களா என்ன ?"என்றாள் சமுத்திரா நம்ப முடியாமல் .
"என்னமா இப்படி சொல்லிட்டே ...IG சுந்தர மாணிக்கவேல் அய்யா அவருடன் சிலை கடத்தல் சிறப்பு பிரிவூ ,பொருளாதார குற்ற பிரிவூ (ECONOMIC OFFENCES WING )ஆஃபீஸ்ர் முப்பது பேர் ஒரு மாசமாய் இங்கே தான் மா முகாம் இட்டு இருங்காங்க ... வெளியே யாருக்கும் தெரியமா தினமும் ரைட் போய்ட்டு கிடைச்சவனை எல்லாம் நொண்டி நொங்கு எடுத்துட்டு இருக்காங்க ...அதில் ஒருத்தன் சொன்னது வைத்து நேத்து போன ரைட்டில் தான் இவ்வளவூ சிலை மீட்டு இருக்காங்க ...."என்றவர்கள் பேசி கொண்டே ரெண்டாம் தளத்தை அடைந்து இருந்தார்கள் .
"சுந்தர மாணிக்கவேல் சார் ....முதலமைச்சர் ஸ்பெஷல்லா நியமித்த நேர்மையான IG சார் ..அவரே வந்து இருக்காரா ...அப்போ விஷயம் பெருசு தான் .... "என்றாள் சமுத்திரா
இவர்கள் பேசி கொண்டே முதல் அறை ஒன்றை தாண்ட ,அடுத்த அறையில் இருந்து வெளி வந்த ஒருவன் இவர்களை கண்டு கோபத்துடன் இவர்கள் அருகே வந்தான் .
"என்ன சோமு சார் ...பிரஸ் யாரையும் உள்ளே விட கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி கூட இந்த பெண்ணை ஏன் உள்ளே விட்டிங்க ...மேடம் IG சார் இன்டர்வியூ கொடுப்பார் ..ப்ளீஸ் கோ அபேரட் ...கீழே வெயிட் செய்யுங்க ..."என்றான் எரிச்சலுடன் .
"சார் ...சார் ...இவங்க பிரஸ் இல்லை சார் ...உங்களை பார்க்க தான் வர சொல்லி இருந்தீங்களாம் ...இவங்க காலேஜ் பிரென்ட் காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்த ..."என்று அவர் சொல்வதற்குள் ,
"மிஸ் சமுத்திரா தேவராஜன் ரைட் ...சாரி உங்களை நாங்க தான் வர சொல்லி இருந்தோம் ...பை தி பை ஐ யாம் SP அழகர்நம்பி...திஸ் வே ப்ளீஸ் ...சோமு சார் ..நீங்க போங்க ...இனி யார் என்ன சொன்னாலும் இனி யாரையும் இங்கே அல்லோவ் செய்யாதீங்க ...."என்றவன் சமுத்திராவை நான்கு அறைகள் தாண்டி அழைத்து சென்றான் .
அந்த அறை மிக பெரிதாய் இருந்தது .பெரிய ஆஃபீஸ்ர் ஒருவரின் அறை போல் இருந்தது .அங்கு அழைத்து சென்றவன் ,"ப்ளீஸ் டேக் யுவர் சீட் ....சார் ஒரு இன்வெஸ்டிகஷன்ல இருக்கார் ...வந்துடுவார் ...."என்றான் அழகர்நம்பி .
"என்ன சார் நடக்குது இங்கே ..நீங்க தானே வர சொல்லி இருந்தீங்க ....என் பிரென்ட் கவிக்கு என்ன ஆச்சு சார் ..."என்றாள் சமுத்திரா நடப்பது ஒன்றும் புரியாமல் .
"சிஸ்டர் !...டென்ஷன் ஆக வேண்டாம் ....உங்க பிரென்ட் கவி நல்லாவே இருக்காங்க ...மீதத்தை சார் வந்து சொல்வார் ...இப்போ கவியையும் ,அவங்க பியான்சி மிஸ்டர் நிகில்லையும் டாக்டர் செக் செய்ய வந்துட்டு இருக்காங்க ...டோன்ட் ஒர்ரி ...அவங்களை காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்து இருந்தீங்க இல்லை அதான் இங்கே வரவழைச்சோம் ...மிஸ் கவியும் உங்களை தான் கேட்டாங்க ."என்றான் அழகர் .
"எந்த சார் பத்தி சொல்றீங்க சார் ?"என்றாள் சமுத்திரா -இனம் புரியாத படபடப்பு நெஞ்சில் எழ
"ACP ஆதவ் காலேஸ்வர் ...சிலை கடத்தல் தடுப்பு பிரிவூ ஸ்பெசல் ஆஃபீஸ்ர் ..."என்றான் அழகர்
"IG சுந்தர மாணிக்கவேல் சார் மகனா ?"என்றாள் சமுத்திரா
"ஆதவ் ... ஐ மீன் ACP சார் உங்களுக்கு தெரியுமா சிஸ்டர் ?"என்றான் அழகர் .
"இல்லை சார் ....பேர் கேள்வி பட்டு இருக்கேன் ...என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ...ரொம்ப நேர்மையானவர் ..தப்புன்னா ஸ்பாட் தண்டனை என்று ஒரு புக் ல போட்டு இருந்தாங்க ....பார்த்தது இல்லை ...."என்றாள் சமுத்திரா .
"இப்போ வருவார் பாருங்க ....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ....ஏதாவது வேணும் என்றால் சொல்லுங்க ...ஹெசிட்டேட் செய்யாதீங்க சிஸ்டர்....போலீஸ் ஸ்டேஷன் என்றால் பெண்கள் வர சங்கட படுவாங்கன்னு தெரியும் ...என்னை உங்க பிரதர் மாதிரி நினைசீக்கோங்கோ ...அடுத்த அறையில் தான் இருப்பேன் ..."என்றவன் தலை அசைப்புடன் வெளியேற அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சமுத்திரா .
'என்னங்கடா நடக்குது இங்கே ...தலையும் புரியலை வாலும் புரியலை ....இந்த கவிக்கும் இந்த சிலை கடத்தல் ஏதாவது லிங்க் இருக்குமோ ....ஏற்க்கனவே அது ஒரு முந்திரி ...அவ லவ் செய்த அந்த நிகில் ஒரு முந்திரி ...ரெண்டும் சேர்ந்து என்ன செஞ்சி வச்சி இருக்குங்கனே தெரிலையே .....'என்று மனதிற்குள் புலம்பியவள் ,நேரம் ஆக ஆக பொறுமை இழந்தவளாய் தன் சாம்சங் மொபைல் எடுத்தாள் .
அதில் யூ ட்யூப் ஆன் செய்து, பாடல்களை ஓட விட்டு ஹியர்போன் மாட்டிக்கொண்டு ,அந்த அறையில் மாட்டி இருந்த படங்களை பார்த்தவாறே நடந்து கொண்டு இருந்தாள்.
அதே சமயம் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தனர் கவியும் அவள் பியான்சி நிகிலும் .உடன் ஒரு போலீஸ் ஆஃபீஸ்ர் .அதே சமயம் உள்ளே வந்தார் அவர் .
"ஹலோ சார் ...ஐ ஆம் டாக்டர் சிவானந்த் ."என்றபடி வந்தார் அந்த அறுபது வயது முதியவர் .பார்க்க அப்படி ஒரு தேஜஸ் அந்த முகத்தில் .