ஹாய் பிரெண்ட்ஸ்...
எல்லாரும் எப்படி இருக்கீங்க? குறுநாவல் போட்டிக்கான கதை தான் காதலில் சொதப்புவது எப்படி..? பாதி பேர் முடிச்சுட்டாங்க, பாதி பேர் முடிக்க போறாங்க... நான் இப்போ தான் ஆரம்பிக்கவே செய்யுறேன்... ஒரு சாதாரண கதை தான். படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க....
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அத்தியாயம் – 1
தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்...
எத்தனை சரிவுகள்... எத்தனை கஷ்டங்கள்...
பொருளாதாரத்தில்... குடும்ப சூழ்நிலையில்... அம்மாவின் மருத்துவ செலவில்...
விபரம் அறியாத தங்கச்சி...
விளையாட்டு தம்பி...
அப்பாவின் சொற்ப பென்சனைத் தவிர எந்தவித வருமானமும் இல்லாத, எதிர்காலம் என்ன என்று அறியாத வாழ்க்கை தான் மிதுனாவின் வாழ்க்கை.
வாழ்கையின் போக்கை அறிய முடியாமல், கணிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி தந்தை செய்த வேலையை செய்தாள்.
கூட்ட நெரிசலில் பஸ்ஸில் நசுங்கி, டிபன் பாக்ஸ் அடைத்த ஹேண்ட் பாகுடன் வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்திற்கு ஓட கற்றுக் கொண்டாள்.
நிறுத்தி, நிதானமாக நடக்க பழகியவள், வாழ்கையின் போராட்டத்தில் ஓட கற்றுக் கொண்டாள்.
கிடைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக இரவு ஏழு மணி வரை உழைக்க கற்றுக் கொண்டாள்.
வீடு வந்ததும் அக்கடா என்று இருந்து விட முடியாதபடி வரிசையாய் வேலைகள் தொடரும். தாயாரின் மருந்துகளை வேளா வேளைக்கு வரிசையாக பிரித்து கொடுப்பதில் இருந்து, சமையல் வேலைகள் தொடர்ந்து தம்பி, தங்கையை படிக்க வைப்பது வரை எல்லா வேலையையும் முகம் சுழிக்காமல், உற்சாகமாய் செய்வாள்.
தாய், சாதனா தான் ‘மகிழ்ச்சியாய் துள்ளி திரிய வேண்டிய வயதில் தன் செல்ல மகள் மாடாய் உழைத்து கஷ்டபடுகிறாளே’ என்று கண்ணீருடன் நொந்துக் கொள்வாள்.
சில சமயம் மனம் கேளாமல், “ரொம்பவும் உன்னை தொந்தரவு பண்ணுறேன்ல கண்ணு” என பிதற்றுவாள்.
அப்பொழுது மனதில் தோன்றும் சந்தோஷ வார்த்தைகளை தாய்க்கு ஆறுதலாய் கூறி, சந்தோசமாய் தாயுடன் பேசிக் கொண்டே வேலைகளை தொடர்வாள்.
சட்டென்று ஏற்பட்ட வீழ்ச்சியில், சுற்றம் எல்லாம் விலகிட, ஒரே ஒரு சொந்தமாய் அப்பாவின் தங்கை தன் கணவனுடன் தங்கிக் கொண்டார்.
குழந்தைகள் இல்லாத அவருக்கு, அண்ணன் குழந்தைகளே தன் குழந்தைகள் என எண்ணி வாழ்கிறார்.
எங்கெல்லாமோ சுற்றி திரிந்து எப்படி எல்லாமோ பிழைப்பை தேடி, அது கைகூடாமல் போக கடைசியில் இவர்களுக்கு பாதுகாப்பாய் வந்து தங்கிக் கொண்டனர். இவர்கள் வந்தது மிதுக்கு கொஞ்சம் ஆறுதலாய், பாதுகாப்பாய் அமைந்தது.
கந்தசாமி மாமாவால், எந்த வருமானமும் கிடையாது தான், அதே போல அவரால் எந்த உபாதையும் கிடையாது.
அவ்வ போது பீடிக்கும், வெற்றிலைக்கும் மட்டுமே அவளை தாங்கி நிற்பார். அதுவும் சில நேரம் மனைவி துணி தைப்பதில் வாங்கிக் கொள்வார்.
அவளிடம் வந்து நிற்கும் பொழுதெல்லாம் மிது கண்ணு ஒரு பத்து ரூபா தாம்மா என்றபடி கொஞ்சி வாங்கிக் கொள்வார்.
மிதுவும் அவரின் கொஞ்சலை ரசித்தபடி, அவரிடம் கொஞ்சம் போக்கு காட்டுவாள். சில நேரம் சாமி மாமா அவள் கண்களுக்கு தன் தந்தையாக தெரிவார்.
அதற்காகவே அவரை நிறைய கொஞ்ச வைப்பாள் மிது. மிகவும் பாசமான மனிதர்.
நேரம் ஆகவே தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள் அவசரமாக கிளம்பி, டிபன்பாக்ஸ் எடுத்துக் கொண்டு தன் தாயிடமும், அத்தயிடமும் கூறிக் கொண்டு வேகமாய் பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடினாள். அந்த பஸ் விட்டால் இனி எப்பொழுதோ?
கூட்ட நெரிசலில் நசுங்கி ஆபிஸ் வந்து வாசலில் நிற்கவும் மேனஜர் ரகுநாதன் அவளை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.
அவளிடம் சில பைல் டீட்டையில் கேட்க, அவரிடம் கூறியவள் தன் இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
மனம் தன் தாயையே சுற்றி வந்தது. தன் தாயின் உடல் நிலை அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்தது.
அவள் முன் வந்து நின்றார் ரகுநாதன். ஆனால் அவள் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.
கைகளை கட்டியபடியே அவளையே பார்த்து நின்றார் ரகுநாதன்...
“என்னம்மா விசயம்? என்னாச்சு?”
“......”
அவள் முன் சேரை இழுத்துப் போட்டவர், அதில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தார்.
“மிதுனா”
“.............”
அங்கிருந்த பென்னை எடுத்து மெதுவாக அவளை தட்ட, அதிர்ந்து விழித்தாள் அவள்.
“சாரி ஸார்”
“என்னாச்சு என்ன விஷயம்?”
பெரும்பாலும் அவளின் விஷயத்தை யாரிடமும் கூறமாட்டாள். அவளுக்கு அது பிடிக்கவும் செய்யாது. ரகுநாதன் மிகவும் நல்லவர் தான் அவளின் தந்தையின் வயதை ஓட்டியவர்.
அவர் மீண்டும் மீண்டும் கேட்கவே இனியும் அவரிடம் விஷயத்தை மறைப்பது நல்லதல்ல என்பது போல் அத்தனை கொட்டிட எண்ணினாள். அப்படி கொட்டினால் மன பாரமும் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ?
“அவளின் அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாம், வயிறு, கை, கால்கள் எல்லாம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது.
உப்பும், சர்க்கரையும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. உடலில் பல உறுப்புக்கள் பாதிப்படைந்து விட்டன.
இனி மருத்துவ மனையில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்றும், அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.
மருத்துவமனையில் முதல் கட்ட செலவே இரண்டு லட்சம் வேண்டுமாம் எங்கு செல்வாள் அவள். கிடைக்கும் ஐந்தாயிரம் சம்பளமும், அத்தையின் துணி தைக்கும் பணமும் வீட்டு செலவும், அம்மாவின் மருந்து செலவுக்குமே சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த மொத்த பணத்துக்கு என்ன செய்வாள்?
டாக்டர் முதலில் சொல்லவும் இடி விழுந்ததை போல் உணர்ந்தாள் மிது. முழுதாய் இரண்டு லட்சம். அவளின் ஐந்து வருட உழைப்பு முழுதாய் ஒரே நாளில் எப்படி அவளால் புரட்ட முடியும்...
எங்கே கிடைக்கும்...? எப்படி கிடைக்கும்...?
விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து மனம் பதைபதைத்தது பிரமை பிடித்தார் போல் அமர்ந்துவிட்டாள்.
கடவுளே! தாயாரின் உயிரை காப்பாற்றாமல் போய் விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்ட ஆரம்பித்தது.
துடிக்க துடிக்க அவள் தாய் அவள் கண் முன்னால் மரணத்தை ஏற்க போகிறாரா? என்ன கொடுமை இது, அவளால் தாங்கமுடியவில்லை.
என்ன செய்ய போகிறாள்? கிடைக்கும் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வது. மிகவும் பெரிய தொகை.
“நடக்குற படி நடக்கட்டும். நான் போகவேண்டியதாக இருந்தால், போக தான் வேண்டும், நீ வீணாக கஷ்ட படாதே செல்லம்?” தாய் பல முறை கூறி விட்டார்.
ஆனால் அவர் கூறும் பொழுது அவளுக்கு தான் உயிர் போவது போல் இருந்தது. எப்படி கண் முன்னால் தன் தாயை சாகவிடுவது. “நீ பேசாமல் இரும்மா... எல்லாம் நான் பாத்துக்கிறேன்?” எப்படியோ சமாதனபடுத்தி வைத்திருந்தாள்.
தாய் படும் கஷ்டத்தை கண்டு தங்கையும், தம்பியும் அழ, ஒரு வழியாய் சமாதானபடுத்தி, ஆறுதல் செய்து வேலைக்கும் கிளம்பி வந்து அவரிடமும் கூறிவிட்டாள். இப்பொழுது ஆர்வமாய் அவர் முகத்தை பார்த்திருந்தாள்.
“இரண்டு லட்ச ரூபாய் மிகவும் பெரிய தொகை தான்” மெதுவாக உச்சரித்த ரகுநாதனுக்கே மலைப்பாக இருந்தது. அவரும் இப்பொழுது தான் மகளுக்கு திருமணத்தை முடித்து கொஞ்சம் கடனில் இருக்கிறார். இல்லை என்றால் கண்டிப்பாக இவளுக்கு உதவி இருப்பார்.
இப்பொழுது அவரால் மட்டும் அல்ல... யாராலும் உதவமுடியாது மிகவும் பெரிய தொகை. எதை நம்பி அவளுக்கு பணம் கொடுப்பர்.
விட்டேற்றியாய் உதடுகளை பிதுக்கியவர் சோகம் பொங்க மிதுவைப் பார்த்தார்.
“கஷ்டமான சூழ்நிலை! என்னாலும் உதவ முடியாது. நம் முதலாளியிடமும் கேட்க முடியாது. வெளிநாடு போயிருக்கிறார்”
‘இங்கு இருந்தால் மட்டும் முதலாளி கொடுத்து விடவா போகிறார்? யோசிக்க தான் செய்வார்?’
எல்லாரும் எப்படி இருக்கீங்க? குறுநாவல் போட்டிக்கான கதை தான் காதலில் சொதப்புவது எப்படி..? பாதி பேர் முடிச்சுட்டாங்க, பாதி பேர் முடிக்க போறாங்க... நான் இப்போ தான் ஆரம்பிக்கவே செய்யுறேன்... ஒரு சாதாரண கதை தான். படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க....
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அத்தியாயம் – 1
தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்...
எத்தனை சரிவுகள்... எத்தனை கஷ்டங்கள்...
பொருளாதாரத்தில்... குடும்ப சூழ்நிலையில்... அம்மாவின் மருத்துவ செலவில்...
விபரம் அறியாத தங்கச்சி...
விளையாட்டு தம்பி...
அப்பாவின் சொற்ப பென்சனைத் தவிர எந்தவித வருமானமும் இல்லாத, எதிர்காலம் என்ன என்று அறியாத வாழ்க்கை தான் மிதுனாவின் வாழ்க்கை.
வாழ்கையின் போக்கை அறிய முடியாமல், கணிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி தந்தை செய்த வேலையை செய்தாள்.
கூட்ட நெரிசலில் பஸ்ஸில் நசுங்கி, டிபன் பாக்ஸ் அடைத்த ஹேண்ட் பாகுடன் வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்திற்கு ஓட கற்றுக் கொண்டாள்.
நிறுத்தி, நிதானமாக நடக்க பழகியவள், வாழ்கையின் போராட்டத்தில் ஓட கற்றுக் கொண்டாள்.
கிடைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக இரவு ஏழு மணி வரை உழைக்க கற்றுக் கொண்டாள்.
வீடு வந்ததும் அக்கடா என்று இருந்து விட முடியாதபடி வரிசையாய் வேலைகள் தொடரும். தாயாரின் மருந்துகளை வேளா வேளைக்கு வரிசையாக பிரித்து கொடுப்பதில் இருந்து, சமையல் வேலைகள் தொடர்ந்து தம்பி, தங்கையை படிக்க வைப்பது வரை எல்லா வேலையையும் முகம் சுழிக்காமல், உற்சாகமாய் செய்வாள்.
தாய், சாதனா தான் ‘மகிழ்ச்சியாய் துள்ளி திரிய வேண்டிய வயதில் தன் செல்ல மகள் மாடாய் உழைத்து கஷ்டபடுகிறாளே’ என்று கண்ணீருடன் நொந்துக் கொள்வாள்.
சில சமயம் மனம் கேளாமல், “ரொம்பவும் உன்னை தொந்தரவு பண்ணுறேன்ல கண்ணு” என பிதற்றுவாள்.
அப்பொழுது மனதில் தோன்றும் சந்தோஷ வார்த்தைகளை தாய்க்கு ஆறுதலாய் கூறி, சந்தோசமாய் தாயுடன் பேசிக் கொண்டே வேலைகளை தொடர்வாள்.
சட்டென்று ஏற்பட்ட வீழ்ச்சியில், சுற்றம் எல்லாம் விலகிட, ஒரே ஒரு சொந்தமாய் அப்பாவின் தங்கை தன் கணவனுடன் தங்கிக் கொண்டார்.
குழந்தைகள் இல்லாத அவருக்கு, அண்ணன் குழந்தைகளே தன் குழந்தைகள் என எண்ணி வாழ்கிறார்.
எங்கெல்லாமோ சுற்றி திரிந்து எப்படி எல்லாமோ பிழைப்பை தேடி, அது கைகூடாமல் போக கடைசியில் இவர்களுக்கு பாதுகாப்பாய் வந்து தங்கிக் கொண்டனர். இவர்கள் வந்தது மிதுக்கு கொஞ்சம் ஆறுதலாய், பாதுகாப்பாய் அமைந்தது.
கந்தசாமி மாமாவால், எந்த வருமானமும் கிடையாது தான், அதே போல அவரால் எந்த உபாதையும் கிடையாது.
அவ்வ போது பீடிக்கும், வெற்றிலைக்கும் மட்டுமே அவளை தாங்கி நிற்பார். அதுவும் சில நேரம் மனைவி துணி தைப்பதில் வாங்கிக் கொள்வார்.
அவளிடம் வந்து நிற்கும் பொழுதெல்லாம் மிது கண்ணு ஒரு பத்து ரூபா தாம்மா என்றபடி கொஞ்சி வாங்கிக் கொள்வார்.
மிதுவும் அவரின் கொஞ்சலை ரசித்தபடி, அவரிடம் கொஞ்சம் போக்கு காட்டுவாள். சில நேரம் சாமி மாமா அவள் கண்களுக்கு தன் தந்தையாக தெரிவார்.
அதற்காகவே அவரை நிறைய கொஞ்ச வைப்பாள் மிது. மிகவும் பாசமான மனிதர்.
நேரம் ஆகவே தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள் அவசரமாக கிளம்பி, டிபன்பாக்ஸ் எடுத்துக் கொண்டு தன் தாயிடமும், அத்தயிடமும் கூறிக் கொண்டு வேகமாய் பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடினாள். அந்த பஸ் விட்டால் இனி எப்பொழுதோ?
கூட்ட நெரிசலில் நசுங்கி ஆபிஸ் வந்து வாசலில் நிற்கவும் மேனஜர் ரகுநாதன் அவளை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.
அவளிடம் சில பைல் டீட்டையில் கேட்க, அவரிடம் கூறியவள் தன் இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
மனம் தன் தாயையே சுற்றி வந்தது. தன் தாயின் உடல் நிலை அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்தது.
அவள் முன் வந்து நின்றார் ரகுநாதன். ஆனால் அவள் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.
கைகளை கட்டியபடியே அவளையே பார்த்து நின்றார் ரகுநாதன்...
“என்னம்மா விசயம்? என்னாச்சு?”
“......”
அவள் முன் சேரை இழுத்துப் போட்டவர், அதில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தார்.
“மிதுனா”
“.............”
அங்கிருந்த பென்னை எடுத்து மெதுவாக அவளை தட்ட, அதிர்ந்து விழித்தாள் அவள்.
“சாரி ஸார்”
“என்னாச்சு என்ன விஷயம்?”
பெரும்பாலும் அவளின் விஷயத்தை யாரிடமும் கூறமாட்டாள். அவளுக்கு அது பிடிக்கவும் செய்யாது. ரகுநாதன் மிகவும் நல்லவர் தான் அவளின் தந்தையின் வயதை ஓட்டியவர்.
அவர் மீண்டும் மீண்டும் கேட்கவே இனியும் அவரிடம் விஷயத்தை மறைப்பது நல்லதல்ல என்பது போல் அத்தனை கொட்டிட எண்ணினாள். அப்படி கொட்டினால் மன பாரமும் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ?
“அவளின் அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாம், வயிறு, கை, கால்கள் எல்லாம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது.
உப்பும், சர்க்கரையும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. உடலில் பல உறுப்புக்கள் பாதிப்படைந்து விட்டன.
இனி மருத்துவ மனையில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்றும், அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.
மருத்துவமனையில் முதல் கட்ட செலவே இரண்டு லட்சம் வேண்டுமாம் எங்கு செல்வாள் அவள். கிடைக்கும் ஐந்தாயிரம் சம்பளமும், அத்தையின் துணி தைக்கும் பணமும் வீட்டு செலவும், அம்மாவின் மருந்து செலவுக்குமே சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த மொத்த பணத்துக்கு என்ன செய்வாள்?
டாக்டர் முதலில் சொல்லவும் இடி விழுந்ததை போல் உணர்ந்தாள் மிது. முழுதாய் இரண்டு லட்சம். அவளின் ஐந்து வருட உழைப்பு முழுதாய் ஒரே நாளில் எப்படி அவளால் புரட்ட முடியும்...
எங்கே கிடைக்கும்...? எப்படி கிடைக்கும்...?
விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து மனம் பதைபதைத்தது பிரமை பிடித்தார் போல் அமர்ந்துவிட்டாள்.
கடவுளே! தாயாரின் உயிரை காப்பாற்றாமல் போய் விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்ட ஆரம்பித்தது.
துடிக்க துடிக்க அவள் தாய் அவள் கண் முன்னால் மரணத்தை ஏற்க போகிறாரா? என்ன கொடுமை இது, அவளால் தாங்கமுடியவில்லை.
என்ன செய்ய போகிறாள்? கிடைக்கும் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வது. மிகவும் பெரிய தொகை.
“நடக்குற படி நடக்கட்டும். நான் போகவேண்டியதாக இருந்தால், போக தான் வேண்டும், நீ வீணாக கஷ்ட படாதே செல்லம்?” தாய் பல முறை கூறி விட்டார்.
ஆனால் அவர் கூறும் பொழுது அவளுக்கு தான் உயிர் போவது போல் இருந்தது. எப்படி கண் முன்னால் தன் தாயை சாகவிடுவது. “நீ பேசாமல் இரும்மா... எல்லாம் நான் பாத்துக்கிறேன்?” எப்படியோ சமாதனபடுத்தி வைத்திருந்தாள்.
தாய் படும் கஷ்டத்தை கண்டு தங்கையும், தம்பியும் அழ, ஒரு வழியாய் சமாதானபடுத்தி, ஆறுதல் செய்து வேலைக்கும் கிளம்பி வந்து அவரிடமும் கூறிவிட்டாள். இப்பொழுது ஆர்வமாய் அவர் முகத்தை பார்த்திருந்தாள்.
“இரண்டு லட்ச ரூபாய் மிகவும் பெரிய தொகை தான்” மெதுவாக உச்சரித்த ரகுநாதனுக்கே மலைப்பாக இருந்தது. அவரும் இப்பொழுது தான் மகளுக்கு திருமணத்தை முடித்து கொஞ்சம் கடனில் இருக்கிறார். இல்லை என்றால் கண்டிப்பாக இவளுக்கு உதவி இருப்பார்.
இப்பொழுது அவரால் மட்டும் அல்ல... யாராலும் உதவமுடியாது மிகவும் பெரிய தொகை. எதை நம்பி அவளுக்கு பணம் கொடுப்பர்.
விட்டேற்றியாய் உதடுகளை பிதுக்கியவர் சோகம் பொங்க மிதுவைப் பார்த்தார்.
“கஷ்டமான சூழ்நிலை! என்னாலும் உதவ முடியாது. நம் முதலாளியிடமும் கேட்க முடியாது. வெளிநாடு போயிருக்கிறார்”
‘இங்கு இருந்தால் மட்டும் முதலாளி கொடுத்து விடவா போகிறார்? யோசிக்க தான் செய்வார்?’
Last edited: