மொதல்ல சக்தி திட்டத்தப் பாப்போம்.. கார நிறுத்திட்டு மூணு பேரும் உள்ள வந்த போது சக்தி ஸ்கேனிங் பார்வையால ஒவ்வொரு எடத்தின் சாதக,பாதகங்கள கணக்குப் போட்டுக்கிட்டே வந்தான்..கிட்டத்தட்ட கொளத்தோட மையத்துக்கு வந்த போது கண்ணுல பட்ட அந்தப் பெரிய பள்ளத்தப் பாத்ததும் ஹைட்ராலிக் பிரேக்கடிச்சு அவன் நிக்க..ஏதோ யோசனைல அவம் பின்னால வந்த சி.கே,ஒயிட் அவன் மேல மோதித் தான் நின்னாங்க..விலகிப் பாத்த அவங்க கண்ணுலயும் அந்தப் பள்ளம் விஸ்வரூபமெடுத்து விரிஞ்சுது...
ஒரு ஏக்கராவுக்கும் மேல வீஸ்தீரணம் உள்ள பள்ளமது.. ஐயாயிரம் அடிப் பரப்பளவு !அந்த எடத்துல விவசாயத்துக்கு மண் எடுத்தது போக வீடு கட்ட, கிணறு மூடன்னு பல தலை முறைகளா மண்ணெடுத்து எடுத்து முப்படி ஆழத்துக்கு பள்ளமான குளத்தின் துண்டுப் பகுதி..மேல இருந்து கீழ போகவும்,வரவும் சரிவா ஒரு மண் பாதை பள்ளத்தின் கடைசி வரைக்கும் இருக்க பள்ளத்தச் சுத்தியும்,உள்ளயும் முள் புதர்,மரங்களா அத ஏறக்குறைய மூடி இருக்க இருபதடிக்கு அந்தப் பக்கமிருந்து பாத்தா பள்ளமே யாரு கண்ணுக்கும் தெரியாது..
அதப் பல வருசமா சி.கே,ஒயிட் பாத்தது தான்..ஆனா, தங்களோட சீட்டாட்டக் கிளப்ப அங்க நடத்தாததுக்குக் காரணம் உள்ள போகவும்,வரவும் அதிக்கிருந்த அந்த ஒரே வழி தான் !அத விட்டா வேற வழியே கிடையாது.. போலீஸ் சுத்தி வளைச்சா தப்பிக்கச் சான்ஸே இல்லைங்கறதால அதுக்குள்ள சி.கேவும் அவன் ஆளுங்களும் எட்டிக் கூட பாக்க மாட்டாங்க.. சரிஞ்சு எறங்கின அந்த மண் வண்டித் தடத்துல சக்தி வேகமா எறங்க ரெண்டு பேரும் அவன் காலடில கால் வெச்சுப் போனாங்க..
சரியா முப்பதடி ஆழத்துல அந்தத் தடம் முடிஞ்ச எடத்துல அந்த வேப்ப மரம் இருக்க சக்தி அங்க நின்னான்.. சுத்தியும் கிளை பரப்பி ஒரு ஆள் கட்டிப் பிடிச்சாலும் கைக்குள்ள அடங்காத தடிமனான அடிப் பகுதி கொண்ட எழுவது வயசு மரமது !அதச் சுத்தி பத்தடி அகலத்துக்கு யாரோ அப்பத் தான் சுத்தம் பண்ணி இருந்ததக் கவனிச்சு சக்தி முகம் சுண்டினான்..பனிரெண்டு ஊருக்குச் சொந்தமான அந்தக் கொளத்துக்குள்ள யாரு வேண்ணாலும் பூந்து மரம் வெட்டுவாங்க..யாரு வந்து தடுக்கறது?எல்லாரும் உனக்கென்ன, எனக்கென்னன்னு இருந்ததால திருடித் திங்கற சில பேருக்கு அது புகலிடமாப் போச்சு !
,அந்த வேப்ப மரத்துக்கும் ஏதோ ஒரு குரூப் கண்ணு வச்சு அடுத்த நாள் ரம்பம் போட்டு அதோட அடி மரத்த அறுத்துச் சாய்க்க வசதியா சுத்தியும் கிளீன் பண்ணி வச்சிருக்காங்க..பத்தடி அகலத்துக்கு படுத்துப் புரள்ற அளவுக்கு ஒரு முள்ளு,கல்லு இல்லாம சுத்தம் பண்ணி இருக்க..பக்கத்துலயே அதுக்குச் சாட்சியா பத்தடிக்கு அந்தப் பக்கம் கள்ளி முள் புதருக்குள்ள ஒரு பெரிய கடப்பாரையும்,மண் வெட்டியும் மறைச்சு வச்சிருக்கறது துல்லியமான சக்தி கண்ணுக்குத் தெரியவே செஞ்சு..
பாவிங்க மரம்,மட்டையக் கூட வெட்டி அழிக்கணுமாங்கற வேதனைய உள்ள அடக்கிட்டு நிதானமா தன் திட்டத்தச் சொன்னான்..
"அதோ..மேல இருந்து தடம் ஆரம்பிக்கற அந்த எடத்துல ஒரு டார்ச் லைட்ட ஆன் பண்ணி அங்க இருக்கற வேப்பங் கொம்புல எட்டடி ஒசரத்துல கட்டணும்.. அங்க நின்னு பாத்தா உடனே கண்ணுல படற மாதிரி இந்த மரத்துல பத்தடி ஒசரத்துல இன்னொரு எரியற டார்ச் லைட்டக் கட்டணும்.. மரத்துக்குக் கீழ அவனுக்காக நான் காத்திருப்பேன்.. பத்து மணிக்குள்ள அவன் வரலேன்னா இந்த வலைல அவன் சிக்கலேன்னு அர்த்தம்..நைட் முழுக்க தோட்டத்துக்கு வர்றானான்னு பாத்துட்டு காலைல ஸ்டேசனுக்குப் போயிடவாம்..எதாவது கேக்க வேண்டியதிருக்கா?"
சி.கே வழக்கம் போல பேசாம இருக்க ஒயிட் தான் பேசினான்..அதே வழக்கம் போல !
"ஏன் இந்த முப்பதடிப் பள்ளம்..குறிப்பா இந்த வேப்ப மரம்?"
"நல்லாக் கவனிச்சுப் பாரு ஒயிட்..வேற எந்த எடம்னாலும் சுத்தியும் சுள்ளிப் பொதரும்,அடர்த்தியா வேலிக் காத்தான் முள் செடிகளும்..இந்த எடம்னா வரவும் போகவும் ஒரே வழி..அவன மேட்டுல எறங்கத் தொடங்கற போதே வேப்பங் கொம்புல கட்டித் தொங்க விட்டிருக்கற டார்ச் வெளிச்சத்துல பாத்துடலாம்.. அப்புறம் இருட்டுல மறைஞ்சாலும்.. இதோ! இந்த வேப்ப மரத்தச் சுத்தியும் பார்..
ஒரு ஏக்கராவுக்கும் மேல வீஸ்தீரணம் உள்ள பள்ளமது.. ஐயாயிரம் அடிப் பரப்பளவு !அந்த எடத்துல விவசாயத்துக்கு மண் எடுத்தது போக வீடு கட்ட, கிணறு மூடன்னு பல தலை முறைகளா மண்ணெடுத்து எடுத்து முப்படி ஆழத்துக்கு பள்ளமான குளத்தின் துண்டுப் பகுதி..மேல இருந்து கீழ போகவும்,வரவும் சரிவா ஒரு மண் பாதை பள்ளத்தின் கடைசி வரைக்கும் இருக்க பள்ளத்தச் சுத்தியும்,உள்ளயும் முள் புதர்,மரங்களா அத ஏறக்குறைய மூடி இருக்க இருபதடிக்கு அந்தப் பக்கமிருந்து பாத்தா பள்ளமே யாரு கண்ணுக்கும் தெரியாது..
அதப் பல வருசமா சி.கே,ஒயிட் பாத்தது தான்..ஆனா, தங்களோட சீட்டாட்டக் கிளப்ப அங்க நடத்தாததுக்குக் காரணம் உள்ள போகவும்,வரவும் அதிக்கிருந்த அந்த ஒரே வழி தான் !அத விட்டா வேற வழியே கிடையாது.. போலீஸ் சுத்தி வளைச்சா தப்பிக்கச் சான்ஸே இல்லைங்கறதால அதுக்குள்ள சி.கேவும் அவன் ஆளுங்களும் எட்டிக் கூட பாக்க மாட்டாங்க.. சரிஞ்சு எறங்கின அந்த மண் வண்டித் தடத்துல சக்தி வேகமா எறங்க ரெண்டு பேரும் அவன் காலடில கால் வெச்சுப் போனாங்க..
சரியா முப்பதடி ஆழத்துல அந்தத் தடம் முடிஞ்ச எடத்துல அந்த வேப்ப மரம் இருக்க சக்தி அங்க நின்னான்.. சுத்தியும் கிளை பரப்பி ஒரு ஆள் கட்டிப் பிடிச்சாலும் கைக்குள்ள அடங்காத தடிமனான அடிப் பகுதி கொண்ட எழுவது வயசு மரமது !அதச் சுத்தி பத்தடி அகலத்துக்கு யாரோ அப்பத் தான் சுத்தம் பண்ணி இருந்ததக் கவனிச்சு சக்தி முகம் சுண்டினான்..பனிரெண்டு ஊருக்குச் சொந்தமான அந்தக் கொளத்துக்குள்ள யாரு வேண்ணாலும் பூந்து மரம் வெட்டுவாங்க..யாரு வந்து தடுக்கறது?எல்லாரும் உனக்கென்ன, எனக்கென்னன்னு இருந்ததால திருடித் திங்கற சில பேருக்கு அது புகலிடமாப் போச்சு !
,அந்த வேப்ப மரத்துக்கும் ஏதோ ஒரு குரூப் கண்ணு வச்சு அடுத்த நாள் ரம்பம் போட்டு அதோட அடி மரத்த அறுத்துச் சாய்க்க வசதியா சுத்தியும் கிளீன் பண்ணி வச்சிருக்காங்க..பத்தடி அகலத்துக்கு படுத்துப் புரள்ற அளவுக்கு ஒரு முள்ளு,கல்லு இல்லாம சுத்தம் பண்ணி இருக்க..பக்கத்துலயே அதுக்குச் சாட்சியா பத்தடிக்கு அந்தப் பக்கம் கள்ளி முள் புதருக்குள்ள ஒரு பெரிய கடப்பாரையும்,மண் வெட்டியும் மறைச்சு வச்சிருக்கறது துல்லியமான சக்தி கண்ணுக்குத் தெரியவே செஞ்சு..
பாவிங்க மரம்,மட்டையக் கூட வெட்டி அழிக்கணுமாங்கற வேதனைய உள்ள அடக்கிட்டு நிதானமா தன் திட்டத்தச் சொன்னான்..
"அதோ..மேல இருந்து தடம் ஆரம்பிக்கற அந்த எடத்துல ஒரு டார்ச் லைட்ட ஆன் பண்ணி அங்க இருக்கற வேப்பங் கொம்புல எட்டடி ஒசரத்துல கட்டணும்.. அங்க நின்னு பாத்தா உடனே கண்ணுல படற மாதிரி இந்த மரத்துல பத்தடி ஒசரத்துல இன்னொரு எரியற டார்ச் லைட்டக் கட்டணும்.. மரத்துக்குக் கீழ அவனுக்காக நான் காத்திருப்பேன்.. பத்து மணிக்குள்ள அவன் வரலேன்னா இந்த வலைல அவன் சிக்கலேன்னு அர்த்தம்..நைட் முழுக்க தோட்டத்துக்கு வர்றானான்னு பாத்துட்டு காலைல ஸ்டேசனுக்குப் போயிடவாம்..எதாவது கேக்க வேண்டியதிருக்கா?"
சி.கே வழக்கம் போல பேசாம இருக்க ஒயிட் தான் பேசினான்..அதே வழக்கம் போல !
"ஏன் இந்த முப்பதடிப் பள்ளம்..குறிப்பா இந்த வேப்ப மரம்?"
"நல்லாக் கவனிச்சுப் பாரு ஒயிட்..வேற எந்த எடம்னாலும் சுத்தியும் சுள்ளிப் பொதரும்,அடர்த்தியா வேலிக் காத்தான் முள் செடிகளும்..இந்த எடம்னா வரவும் போகவும் ஒரே வழி..அவன மேட்டுல எறங்கத் தொடங்கற போதே வேப்பங் கொம்புல கட்டித் தொங்க விட்டிருக்கற டார்ச் வெளிச்சத்துல பாத்துடலாம்.. அப்புறம் இருட்டுல மறைஞ்சாலும்.. இதோ! இந்த வேப்ப மரத்தச் சுத்தியும் பார்..