• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 40\

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
எனக்கு வேண்டாம்ப்பா
அந்த ஜீவராசிகளையெல்லாம்
நீங்களே சாப்பிடுங்க, தேவா தம்பி
:LOL::LOL::LOL:
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
"உங்க பாடு தேவலை தலைவரே.. மனுசச் சத்தம் கேக்குது..எனக்குப் பக்கத்துல ஒரு நாலடி ஒசர பனங் கருக்கு ஒண்ணு இருக்கு..அதுல ஊது சுருட்டைப் பாம்பு குடும்பத்தோட குடித்தனமிருக்கு போல..அதுலயும் புருசன்,பொண்டாட்டிக்குள்ள சரியான சண்டைங்க..
'உஷ்ஷ்' 'உஷ்ஷ்'னு மாத்தி மாத்தி ஊதி பயங்கரமான சண்டை ..நாக பாம்பு மாதிரியே ஊதுதா?அது ஊதற ஒவ்வொரு தடவையும் என் உச்சி மண்ட மசுரு மானம் பாத்து நட்டுக்கிட்டு நிக்குதுங்க..அத விடுங்க.. தலைவரே !-ஏதோ தீசல் வாசனை அடிக்கற மாதிரி எனக்குப் படுது..உங்களுக்கு எப்படி?"

"எனக்கும் தான்டா..வர்றதா இருந்நா அவன் இன்னேரத்துக்கு வந்திருக்கணுமே?உள்ள போக வேற வழியுமில்ல..எனக்கு என்ன தோணுதுன்னா...."

"சொல்லாதீங்க தலைவரே..எனக்கு வயித்தக் கலக்குது...நாம நெனைக்கறது உண்மையா இருந்தா நம்ம பெரிய தலைவர் இப்ப ஆபத்திலிருக்கார்"

"மூணு பேருல யாருமே அத யோசிக்கல பாரேன்.."

"அவனுக்கு நம்ம திட்டம் தெரிஞ்சாத் தான முந்தியே மரத்து மேல இருக்க முடியும்?"

""மடையா...யோசி..சக்தியே குறியா இருக்கறவன் ஏதோ ஒரு வழில தோட்டத்தக் கண்காணிப்பான்..நேத்து உள்ள போன சக்தி இன்னிக்குச் சாயந்திரம் தான் வெளிய வந்தான்..நம்மள பாலோ பண்ணி அவன் கொளத்துக்குள்ள வந்திருந்தா நம்ம திட்டம் துளிப் பிசகாம அவனுக்குத் தெரிய வாய்ப்பிருக்கு"

"அதக் கண்டு பிடிக்கணுமே?"

"என்னச் சுத்தி முள்ளுங்க தான்..டேய்...ஒண்ணு பண்ணு..உடனே அந்தப் பன மரத்துல ஏறி சக்தி போன இடத்தப் பாத்துச் சொல்லு"

செல்ல ஆப் பண்ணாம பாக்கெட்ல போட்டுக்கிட்டு சாரைப் பாம்பா சரசரன்னு பனை மரத்துல பாதிக்கு ஏறின ஒயிட் அந்தப் பள்ளத்தப் பாக்க அவன் முகம் கலவரத்தால் வெளுக்க சர்ருனு இறங்கி போன எடுத்துப் பேசிக்கிட்டே சுத்தியும் உன்னிப்பா கவனிச்சுக்கிட்டே பள்ளத்தப் பாத்து நடையக் கட்டினான்..

"தலைவரே..ஏதோ தப்பு நடக்குது..தடத்தோட ஆரம்பத்துல வேப்பங் கொம்பு லைட் சிக்னல் தான் தெரியுது..பள்ளத்துக்குள்ள தலைவர் காத்திருக்கற வேப்ப மர லைட் எரியல..அப்படியே அவன் வரலைன்னாலும் லைட்ட அணைக்க வேண்டிய அவசியமில்ல..வந்திருந்தாலும் தலைவர் விசில் சிக்னல் குடுத்திருக்கணுமே?"

"குடுக்க மாட்டான்..தன் உசுரக் குடுத்தாவது நம்ம உசுரக் காப்பாத்தப் பாப்பான்..பக்கா சுயநலவாதிடா அவன்"

"இருக்கட்டும் தலைவரே ! எல்லாம் நல்ல படியா முடிஞ்ச பின்னால மொத வேலையா அவர மொதலாளி,பெரிய தலைவர்..எல்வாப் பதவில இருந்தும் டிஸ்மிஸ் பண்ணிட்டுத் தான் மறு வேலை'

ஒயிட்டும், சி.கேவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு சுற்றிலும் உன்னிப்பாய் கவனித்த படி பள்ளம் நோக்கி மெதுவாய் நகர்ந்த அதே நேரம்..

××××××××××××××××××××××××××××××××××××

சக்தி சிரமப் பட்டு கைய ஊணி வலி பொறுத்து பல் கடித்து ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தான்..நிற்காமல் வழிந்த ரத்தத்தால் ஏறக்குறைய அவன் சட்டை முழுக்கவே நனைந்து விட்டது..இதே நிலை நீடிச்சா இன்னும் பத்து நிமிசத்துல தனக்கு மறுபடியும் மயக்கம் நிச்சயம்னு சக்தி நினைக்க மூக்கன் கிண்டலா சிரிச்சுச் சொன்னான்..

"ஓடினாலே தப்பிக்க முடியாது..ஊர்ந்து போயா தப்பிக்கப் போறே சக்திவேல் ?ஐயோ பாவம்..எல்லாமே நீயா தேடிக்கிட்டது..எஸ்.பி ரெய்டுன்னா ஈரோடு மாவட்டத்துல தான் கஞ்சா கெடைக்காது மை டியர் டார்லிங்.. ஆனா,இருவது கிலோ மீட்டர் தள்ளி இருக்கற நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்துலயோ,பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கற திருப்பூர் மாவட்ட ஊத்துக் குளிலயோ கெடைக்காதுன்னு நெனைச்சியா?காசிருந்தா இந்த இந்தியத் திரு நாட்டில் எல்லாமே சாத்தியம் மிஸ்டர் சக்திவேல்"

சக்தி சிரமப்பட்டு இன்னொரு அடி நகர இன்னொரு இடியும்,மின்னலும் பின்னிப் பிணைந்து இறங்க அந்த வெளிச்சத்தில் அவனை அடையாளம் கண்ட சக்தி அதிர்ச்சியில் உறைந்தான்...'இவன எப்படி மறந்தோம்?'

"வெல் மிஸ்டர் சக்தி வேல்..இப்ப எல்லாமே ஞாபகத்துக்கு வருதா?உன்னால பத்து வருசம் உள்ள இருந்தேன்..வெளிய வந்ததும் உன்னத் தான் தேடினேன்..ஒரு வருசம் அலைஞ்சு பழனில அந்த ஹோட்டல்ல உன் அட்ரஸ் கெடைச்சுது..உடனே இங்க வந்தப்ப தான் தாத்தா,பாட்டி சாக நீ தேசாந்திரம் கெளம்பினே...விடாம பின் தொடர்ந்தேன்.. உனக்கொண்ணு தெரியுமா?சித்ர மாலாவக் கொன்னது நாந் தான்...."

(தொடரும்...
Ipd thalai la ye adichitane.....
Pavam Sakthi.... ☹
16 varusha diary nu lam sonnan villain
Yaru ivan....?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top