சக்தி நம்பாத மாதிரி அவனப் பாத்தான்...
"என்ன பாக்கறே?உனக்கு வச்ச குறி தான்.. அவ வந்து மாட்டிக்கிட்டா..அந்த டெய்லருக்கும் உனக்கும் என்ன பிரச்னைன்னு எனக்கு இப்பவும் தெரியாது.. நீ அவங் கடைக்கு உள்ள போனதும் வெளிய வர்றப்பத் தீத்துடவாம்னு தான் காத்திருந்தேன்..ஆனா,நாலா பக்கமிருந்தும் ஓவ்வொரு ஆளா வந்து பத்துப் பேராட்டம் மொள்ள கடைய நோக்கி நகரவும் உஷாராயி ஜகா வாங்கிட்டேன்..நீ ஷட்டரத் தெறந்ததும் அந்தப் பத்து பேரும் பரேடு குடுக்கற மாதிரி நிக்கவும் எல்லாம் உன் ஆளுங்கன்னு புரிஞ்சு போச்சு.. ஆனா,மனசுல வேற ஒரு திட்டம் உருவாச்சு..
அந்த டைம்ல உன்னக் கொன்னா அந்தப் பழி டெய்லர் மேல விழும்னு நம்பினேன்..அதனால உங்களுக்கு முன்னாலயே போய் தறிக் குடோனுக்கு பக்கத்துல இருந்த லெட்ரினுக்குப் பக்கத்துல வந்து ஒழிஞ்சுக்கிட்டேன்.. ஏன்னா,அந்தப் பழைய வீட்ல உள்ள பாத்ரூம்,லெட்ரின் இல்லேன்னு மத்தியானமே நோட் பண்ணிட்டேன்.. ஒண்ணுக்கு,ரெண்டுக்கு நீ வந்தா ஒரே போடுல தீத்துடறதுன்னு கைல இரும்பு ராடோட காத்திருந்தேன்.
அப்பத் தான் கரண்ட் போச்சு..கொஞ்ச நேரத்துல அந்த வீட்டுக்குள்ள இருந்து நீ வந்தே..அப்படித் தான் நான் நெனைச்சேன்.. சுத்தியும் இருடாடானதால தூரத்துல தெரிஞ்ச அவுட் லைன வச்சு அந்த முடிவுக்கு வந்தேன்..
அது நேரா ஆயில் இன்ஜின் ரூமுக்குப் போக பின்னாலயே போனேன்..அது உள்ள போயி ஆயில்ஃ இன்ஜின ஸ்டார்ட் பண்ணி முடிக்கற நேர்த்துல ராடால ஒரே போடு..இன்ஜின் ஸ்டார்ட் ஆனதால லைட் எரிய அந்த வெளிச்சத்துல பாத்தா..அது சித்ர மாலா!
நான் அடிச்ச வேகத்துல அவ பெல்ட் மேல உளுவ. பெல்ட்ல புடவை சிக்கி இழுத்து செவத்தோட அடிச்சு இன்ஜின் நிக்க அதும் நல்லதுன்னு ஓடிட்டேன்..ரெண்டு நாள் தலை மறைவா இருந்து பேப்பர் நியூஸ் பாத்தேன்..
அவ சாவப் பத்தின இரங்கல் செய்திங்க தான் போட்டோ போட்டு 'வருந்துகிறோம்'னு வந்துது.. மத்தபடி எதுவுமில்லேங்கவும் அவ சாவுல யாருக்கும் சந்தேகம் வரலேன்னு புரிஞ்சு மொள்ள வெளிய வர ஆரம்பிச்சேன்..ஆனா..உன் நல்ல நேரம்..அன்னிக்கே ஒரு கொலையப் பண்ணி ஆறு வருசம் உள்ள போக வேண்டியதாப் போச்சு..
ஆரம்பத்துல இருந்தே வர்றேன்..எனக்கு பத்து வயசுல இருந்தே பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்லாம போச்சு..பதினாறு வருசத்துக்கு முந்தி அந்தக் கடைல வேலைக்குச் சேந்தப்ப அவனச் சந்திச்சு அவம் மேல பிரியம் வச்சேன்..அவனும் என்ன மாதிரி தான்! அதனால ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தோம்.. அப்பத் தான் பதினாறு வயசுல வீட்ட விட்டு ஓடியாந்து நீ அந்தக் கடைல வேலைக்குச் சேர அரும் பிஞ்சான உம் மேல எங்க ரெண்டு பேரு கண்ணுமே விழ விரிசலும், பொகைச்சலும் ஆரம்பிச்சது..நீ எங்க விசயம் தெரியாம ''அண்ணா,அண்ணா'ன்னு அவன் மேல பாசத்தப் பொழியவும் அப்ப முடிவு பண்ணினேன்.. அவனப் போட்டு எறிஞ்சாத் தான் நீ கெடைப்பேன்னு உறுதியான முடிவுக்கு வந்தேன்..
அதையும் ஒரு நாள் சுளுவாச் செஞ்சேன்..ஆனா,நீ பாத்துட்டே..பதினாறு வயசுப் பையனாவா இருந்தே நீ? அப்பவே மொரட்டு ஆம்பள..தப்பிச்சு ஓடின இருபத்து அஞ்சு வயசக்காரனான என்ன துரத்திப் புடிச்சு,அடித்துத் தொவைச்சுக் கொண்டு போயி ஸ்டேசன்ல போட்டே..
என்னமோ அண்ணனா அவன் உங்கூட பழகினான்னு நம்பி எனக்கெதிரா ஐ விட்னஸா சாட்சி சொல்லி ஆயுள் தண்டனை வாங்கிக் குடுத்தே..அப்ப முடிவு பண்ணினேன் உன்ன எங்க இருந்தாலும் தொரத்தித் தொரத்திக் கொல்லணும்னு...
மொதவ்ல பன்னென்டு வருசம்,அப்புறம் ஆறு வருசம்.. நன்னடத்தை...லொட்டு லொசுக்குல மூணு வருசம் கழிய..மொத்தம் பதினஞ்சு வருசம் உன்னால ஜெயில் களி தின்னேன் சக்திவேல்..என் வாலிபத்துல முக்கால் வாசி கம்பிகளுக்குப் பின்னால காணாம போகடிச்சுட்டே.. மறுபடியும் வெளிய வந்ததும் இந்தத் தடவ பக்காவா திட்டம் போட்டேன்..என்னோட ஜெயில்ல இருந்தவன கூட்டாளியாக்கி ஒரு வாரம் நோட்டம் போட்டு கிளீனா பிளான் போட்டு பட்டப் பகல்ல அந்த வீட்டுக்குள்ள பூந்தோம்..அந்த வீட்டுக்காரி,ஒரு வேலைக்காரி ரெண்டே லேடீஸ்..இரும்பு ராடால ஆளுக்கொரு அடி..நச்சுனு நடு மண்டைல...பேச்சு மூச்சில்லாம உளுந்துட்டாங்க... அப்பத் தான் எனக்கு அந்த ஆசை வந்தது...."
"என்ன பாக்கறே?உனக்கு வச்ச குறி தான்.. அவ வந்து மாட்டிக்கிட்டா..அந்த டெய்லருக்கும் உனக்கும் என்ன பிரச்னைன்னு எனக்கு இப்பவும் தெரியாது.. நீ அவங் கடைக்கு உள்ள போனதும் வெளிய வர்றப்பத் தீத்துடவாம்னு தான் காத்திருந்தேன்..ஆனா,நாலா பக்கமிருந்தும் ஓவ்வொரு ஆளா வந்து பத்துப் பேராட்டம் மொள்ள கடைய நோக்கி நகரவும் உஷாராயி ஜகா வாங்கிட்டேன்..நீ ஷட்டரத் தெறந்ததும் அந்தப் பத்து பேரும் பரேடு குடுக்கற மாதிரி நிக்கவும் எல்லாம் உன் ஆளுங்கன்னு புரிஞ்சு போச்சு.. ஆனா,மனசுல வேற ஒரு திட்டம் உருவாச்சு..
அந்த டைம்ல உன்னக் கொன்னா அந்தப் பழி டெய்லர் மேல விழும்னு நம்பினேன்..அதனால உங்களுக்கு முன்னாலயே போய் தறிக் குடோனுக்கு பக்கத்துல இருந்த லெட்ரினுக்குப் பக்கத்துல வந்து ஒழிஞ்சுக்கிட்டேன்.. ஏன்னா,அந்தப் பழைய வீட்ல உள்ள பாத்ரூம்,லெட்ரின் இல்லேன்னு மத்தியானமே நோட் பண்ணிட்டேன்.. ஒண்ணுக்கு,ரெண்டுக்கு நீ வந்தா ஒரே போடுல தீத்துடறதுன்னு கைல இரும்பு ராடோட காத்திருந்தேன்.
அப்பத் தான் கரண்ட் போச்சு..கொஞ்ச நேரத்துல அந்த வீட்டுக்குள்ள இருந்து நீ வந்தே..அப்படித் தான் நான் நெனைச்சேன்.. சுத்தியும் இருடாடானதால தூரத்துல தெரிஞ்ச அவுட் லைன வச்சு அந்த முடிவுக்கு வந்தேன்..
அது நேரா ஆயில் இன்ஜின் ரூமுக்குப் போக பின்னாலயே போனேன்..அது உள்ள போயி ஆயில்ஃ இன்ஜின ஸ்டார்ட் பண்ணி முடிக்கற நேர்த்துல ராடால ஒரே போடு..இன்ஜின் ஸ்டார்ட் ஆனதால லைட் எரிய அந்த வெளிச்சத்துல பாத்தா..அது சித்ர மாலா!
நான் அடிச்ச வேகத்துல அவ பெல்ட் மேல உளுவ. பெல்ட்ல புடவை சிக்கி இழுத்து செவத்தோட அடிச்சு இன்ஜின் நிக்க அதும் நல்லதுன்னு ஓடிட்டேன்..ரெண்டு நாள் தலை மறைவா இருந்து பேப்பர் நியூஸ் பாத்தேன்..
அவ சாவப் பத்தின இரங்கல் செய்திங்க தான் போட்டோ போட்டு 'வருந்துகிறோம்'னு வந்துது.. மத்தபடி எதுவுமில்லேங்கவும் அவ சாவுல யாருக்கும் சந்தேகம் வரலேன்னு புரிஞ்சு மொள்ள வெளிய வர ஆரம்பிச்சேன்..ஆனா..உன் நல்ல நேரம்..அன்னிக்கே ஒரு கொலையப் பண்ணி ஆறு வருசம் உள்ள போக வேண்டியதாப் போச்சு..
ஆரம்பத்துல இருந்தே வர்றேன்..எனக்கு பத்து வயசுல இருந்தே பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்லாம போச்சு..பதினாறு வருசத்துக்கு முந்தி அந்தக் கடைல வேலைக்குச் சேந்தப்ப அவனச் சந்திச்சு அவம் மேல பிரியம் வச்சேன்..அவனும் என்ன மாதிரி தான்! அதனால ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தோம்.. அப்பத் தான் பதினாறு வயசுல வீட்ட விட்டு ஓடியாந்து நீ அந்தக் கடைல வேலைக்குச் சேர அரும் பிஞ்சான உம் மேல எங்க ரெண்டு பேரு கண்ணுமே விழ விரிசலும், பொகைச்சலும் ஆரம்பிச்சது..நீ எங்க விசயம் தெரியாம ''அண்ணா,அண்ணா'ன்னு அவன் மேல பாசத்தப் பொழியவும் அப்ப முடிவு பண்ணினேன்.. அவனப் போட்டு எறிஞ்சாத் தான் நீ கெடைப்பேன்னு உறுதியான முடிவுக்கு வந்தேன்..
அதையும் ஒரு நாள் சுளுவாச் செஞ்சேன்..ஆனா,நீ பாத்துட்டே..பதினாறு வயசுப் பையனாவா இருந்தே நீ? அப்பவே மொரட்டு ஆம்பள..தப்பிச்சு ஓடின இருபத்து அஞ்சு வயசக்காரனான என்ன துரத்திப் புடிச்சு,அடித்துத் தொவைச்சுக் கொண்டு போயி ஸ்டேசன்ல போட்டே..
என்னமோ அண்ணனா அவன் உங்கூட பழகினான்னு நம்பி எனக்கெதிரா ஐ விட்னஸா சாட்சி சொல்லி ஆயுள் தண்டனை வாங்கிக் குடுத்தே..அப்ப முடிவு பண்ணினேன் உன்ன எங்க இருந்தாலும் தொரத்தித் தொரத்திக் கொல்லணும்னு...
மொதவ்ல பன்னென்டு வருசம்,அப்புறம் ஆறு வருசம்.. நன்னடத்தை...லொட்டு லொசுக்குல மூணு வருசம் கழிய..மொத்தம் பதினஞ்சு வருசம் உன்னால ஜெயில் களி தின்னேன் சக்திவேல்..என் வாலிபத்துல முக்கால் வாசி கம்பிகளுக்குப் பின்னால காணாம போகடிச்சுட்டே.. மறுபடியும் வெளிய வந்ததும் இந்தத் தடவ பக்காவா திட்டம் போட்டேன்..என்னோட ஜெயில்ல இருந்தவன கூட்டாளியாக்கி ஒரு வாரம் நோட்டம் போட்டு கிளீனா பிளான் போட்டு பட்டப் பகல்ல அந்த வீட்டுக்குள்ள பூந்தோம்..அந்த வீட்டுக்காரி,ஒரு வேலைக்காரி ரெண்டே லேடீஸ்..இரும்பு ராடால ஆளுக்கொரு அடி..நச்சுனு நடு மண்டைல...பேச்சு மூச்சில்லாம உளுந்துட்டாங்க... அப்பத் தான் எனக்கு அந்த ஆசை வந்தது...."