• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்தி நம்பாத மாதிரி அவனப் பாத்தான்...

"என்ன பாக்கறே?உனக்கு வச்ச குறி தான்.. அவ வந்து மாட்டிக்கிட்டா..அந்த டெய்லருக்கும் உனக்கும் என்ன பிரச்னைன்னு எனக்கு இப்பவும் தெரியாது.. நீ அவங் கடைக்கு உள்ள போனதும் வெளிய வர்றப்பத் தீத்துடவாம்னு தான் காத்திருந்தேன்..ஆனா,நாலா பக்கமிருந்தும் ஓவ்வொரு ஆளா வந்து பத்துப் பேராட்டம் மொள்ள கடைய நோக்கி நகரவும் உஷாராயி ஜகா வாங்கிட்டேன்..நீ ஷட்டரத் தெறந்ததும் அந்தப் பத்து பேரும் பரேடு குடுக்கற மாதிரி நிக்கவும் எல்லாம் உன் ஆளுங்கன்னு புரிஞ்சு போச்சு.. ஆனா,மனசுல வேற ஒரு திட்டம் உருவாச்சு..

அந்த டைம்ல உன்னக் கொன்னா அந்தப் பழி டெய்லர் மேல விழும்னு நம்பினேன்..அதனால உங்களுக்கு முன்னாலயே போய் தறிக் குடோனுக்கு பக்கத்துல இருந்த லெட்ரினுக்குப் பக்கத்துல வந்து ஒழிஞ்சுக்கிட்டேன்.. ஏன்னா,அந்தப் பழைய வீட்ல உள்ள பாத்ரூம்,லெட்ரின் இல்லேன்னு மத்தியானமே நோட் பண்ணிட்டேன்.. ஒண்ணுக்கு,ரெண்டுக்கு நீ வந்தா ஒரே போடுல தீத்துடறதுன்னு கைல இரும்பு ராடோட காத்திருந்தேன்.

அப்பத் தான் கரண்ட் போச்சு..கொஞ்ச நேரத்துல அந்த வீட்டுக்குள்ள இருந்து நீ வந்தே..அப்படித் தான் நான் நெனைச்சேன்.. சுத்தியும் இருடாடானதால தூரத்துல தெரிஞ்ச அவுட் லைன வச்சு அந்த முடிவுக்கு வந்தேன்..
அது நேரா ஆயில் இன்ஜின் ரூமுக்குப் போக பின்னாலயே போனேன்..அது உள்ள போயி ஆயில்ஃ இன்ஜின ஸ்டார்ட் பண்ணி முடிக்கற நேர்த்துல ராடால ஒரே போடு..இன்ஜின் ஸ்டார்ட் ஆனதால லைட் எரிய அந்த வெளிச்சத்துல பாத்தா..அது சித்ர மாலா!

நான் அடிச்ச வேகத்துல அவ பெல்ட் மேல உளுவ. பெல்ட்ல புடவை சிக்கி இழுத்து செவத்தோட அடிச்சு இன்ஜின் நிக்க அதும் நல்லதுன்னு ஓடிட்டேன்..ரெண்டு நாள் தலை மறைவா இருந்து பேப்பர் நியூஸ் பாத்தேன்..
அவ சாவப் பத்தின இரங்கல் செய்திங்க தான் போட்டோ போட்டு 'வருந்துகிறோம்'னு வந்துது.. மத்தபடி எதுவுமில்லேங்கவும் அவ சாவுல யாருக்கும் சந்தேகம் வரலேன்னு புரிஞ்சு மொள்ள வெளிய வர ஆரம்பிச்சேன்..ஆனா..உன் நல்ல நேரம்..அன்னிக்கே ஒரு கொலையப் பண்ணி ஆறு வருசம் உள்ள போக வேண்டியதாப் போச்சு..

ஆரம்பத்துல இருந்தே வர்றேன்..எனக்கு பத்து வயசுல இருந்தே பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்லாம போச்சு..பதினாறு வருசத்துக்கு முந்தி அந்தக் கடைல வேலைக்குச் சேந்தப்ப அவனச் சந்திச்சு அவம் மேல பிரியம் வச்சேன்..அவனும் என்ன மாதிரி தான்! அதனால ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தோம்.. அப்பத் தான் பதினாறு வயசுல வீட்ட விட்டு ஓடியாந்து நீ அந்தக் கடைல வேலைக்குச் சேர அரும் பிஞ்சான உம் மேல எங்க ரெண்டு பேரு கண்ணுமே விழ விரிசலும், பொகைச்சலும் ஆரம்பிச்சது..நீ எங்க விசயம் தெரியாம ''அண்ணா,அண்ணா'ன்னு அவன் மேல பாசத்தப் பொழியவும் அப்ப முடிவு பண்ணினேன்.. அவனப் போட்டு எறிஞ்சாத் தான் நீ கெடைப்பேன்னு உறுதியான முடிவுக்கு வந்தேன்..

அதையும் ஒரு நாள் சுளுவாச் செஞ்சேன்..ஆனா,நீ பாத்துட்டே..பதினாறு வயசுப் பையனாவா இருந்தே நீ? அப்பவே மொரட்டு ஆம்பள..தப்பிச்சு ஓடின இருபத்து அஞ்சு வயசக்காரனான என்ன துரத்திப் புடிச்சு,அடித்துத் தொவைச்சுக் கொண்டு போயி ஸ்டேசன்ல போட்டே..
என்னமோ அண்ணனா அவன் உங்கூட பழகினான்னு நம்பி எனக்கெதிரா ஐ விட்னஸா சாட்சி சொல்லி ஆயுள் தண்டனை வாங்கிக் குடுத்தே..அப்ப முடிவு பண்ணினேன் உன்ன எங்க இருந்தாலும் தொரத்தித் தொரத்திக் கொல்லணும்னு...

மொதவ்ல பன்னென்டு வருசம்,அப்புறம் ஆறு வருசம்.. நன்னடத்தை...லொட்டு லொசுக்குல மூணு வருசம் கழிய..மொத்தம் பதினஞ்சு வருசம் உன்னால ஜெயில் களி தின்னேன் சக்திவேல்..என் வாலிபத்துல முக்கால் வாசி கம்பிகளுக்குப் பின்னால காணாம போகடிச்சுட்டே.. மறுபடியும் வெளிய வந்ததும் இந்தத் தடவ பக்காவா திட்டம் போட்டேன்..என்னோட ஜெயில்ல இருந்தவன கூட்டாளியாக்கி ஒரு வாரம் நோட்டம் போட்டு கிளீனா பிளான் போட்டு பட்டப் பகல்ல அந்த வீட்டுக்குள்ள பூந்தோம்..அந்த வீட்டுக்காரி,ஒரு வேலைக்காரி ரெண்டே லேடீஸ்..இரும்பு ராடால ஆளுக்கொரு அடி..நச்சுனு நடு மண்டைல...பேச்சு மூச்சில்லாம உளுந்துட்டாங்க... அப்பத் தான் எனக்கு அந்த ஆசை வந்தது...."
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பேச்ச நிறுத்தி சிகரெட் எடுத்து அத மெல்ல உருட்டி நசுக்கி அதுல இருந்த புகையிலத் தூள உதிர்த்துட்டு கஞாசாத் தூள கை நிறையக் கொட்டி அதுல இருந்த விதைகளப் பொறுக்கி வீசினான்..அவன் கொட்டி இருந்த கஞ்சாவின் அளவப் பாக்கவே சக்திக்கு மூச்சடைச்சுது..ஓவர் டோஸ் அது !சாதாரண மனுசன் அதக் குடிச்சா ரெண்டு நாளைக்கு அசையாம பொணம் மாதிரி கெடப்பான்..சக்தி ரொம்பவே கஷ்டப்பட்டு கைய அழுத்தி ஊணி பின்னால நகர்ந்தான்..அவன் அத ஓரக் கண்ணால பாத்து ரசிச்சுக்கிட்டே கையிலிருந்த கஞ்சாத் தூள தூளில்லா வெத்து சிகரெட்ல இடிஞ்சு மூக்குல வச்சு வாசனை பாத்து சக்தியப் பாத்து கண்ணடிச்சுட்டு பத்த வச்சு ஆனந்தமா பொகைய இழுத்து நுரையீரல் முழுக்க நிரப்பி அரை நிமிசம் உள்ளயே நிறுத்தி மனசில்லாம அத வெளியா ஊதி ஆனந்தமாச் சொன்னான்..

'மை டியர் சக்தி வேல் டார்லிங்..சொன்னா கேக்க மாட்டியா?மிஞ்சி மிஞ்சிப் போனா இன்னும் ரெண்டடி தான் நீ நகரலாம்..அதுக்கு பின்னால சுள்ளி,கத்தாழைப் புதரும்,வெட்டிப் போட்ட வேலி முள்ளுமா கெடக்குது.. ம்.. சீக்கிரம் நாஞ் சொன்ன கதைய முடிச்சு உங் கதையவும் முடிக்கணும்..அடிச்சுப் போட்டிருந்த அந்த ரெண்டு லேடீஸையும் பாக்க எனக்கு அந்த ஆசை வந்தது எனக்கே ஆச்சரியம் தான் ! ,பதினஞ்சு வருசம் ஜெயில்ல கழிச்சு அங்கயும் ஆம்பளைங்களோட பழகி லேடீஸ் மேல நாட்டமே போயிடுச்சு..ஆனா,அவங்க அடிபட்டு அரை உசுராக் கெடக்கறவங்க..என்ன பண்ணினாலும் ஏதிர்ப்புக் காட்ட முடியாதவங்க..அதான் ஆரம்பம் ! அந்த வீட்ல பணமும்,நகையுமா பத்துக் கோடி ரூபா அடிச்சோம்..கூடவே அடிபட்டு அரை உசுராக் கெடக்கற பொம்பளைங்க ருசியும் !

நகையப் பத்திரப் படுத்தி பணத்தப் பங்கு போட்டுக்கிட்டு நானும் கூட்டாளியும் பிரிஞ்சோம்..அவன் மும்பை போக நான் உன்னத் தேடி வந்தேன்..ஒரு வாரம் உன்னப் பாலோ பண்ணினதுல வெளிய அவ்வளவு சுலபத்துல உன்ன நெருங்க முடியாதுன்னு புரிஞ்சுது..காச வீசி கூலிப் படைய ஏவறது இப்ப எனக்கு ரொம்ப சுலபம்.. ஆனா,எனக்கதுல இன்ட்ரஸ்ட் இல்ல..அரை உசுரா எதிர்ப்பில்லாத லேடீஸ அனுபவிக்கற மாதிரி உன்னக் கொல்ல ஆசைப் பட்டேன்..எதெல்லாம் உன் பலமோ, எவையெல்லாம் உன் விருப்பமோ அதத் தகர்க்க நெனைச்சேன்.. அதுக்கு உன் தோட்டத்துக்குள்ள எனக்கொரு அடிமை வேணும்ங்கற ஐடியாவுக்கு அகப் பட்டவன் தான் பெருமாள் !

அவன உள்ள நொழைச்சதுமே எனக்கு முன்ன தேட்டை போட்ட எடத்துல போலீஸ் மோப்பம் புடிச்சுட்டதா தகவல் வர கூட்டாளி இருக்கற மும்பைக்கே ஓடினேன்..ஆறு மாசம் தவமா காத்திருந்தேன்..போலீஸ் துப்புக் கெடைக்காம பைல ஓரங் கட்டிட்டதா தகவல் வர கூட்டாளியும்,நானும் கெளம்பி வந்தோம்..இந்தத் தடவ லம்பா ஒரு தேட்டை, உன் விசயம்..ரெண்டையும் முடிச்சுட்டு நிரந்தரமா மும்பைக்கே ஓடிடலாம்னு முடிவோட வந்தோம். .. கூட்டாளிய நோட்டம் பாக்க அனுப்பிச்சுட்டு பெருமாளக் கூப்பிட்டு விசயங்களக் கறந்தேன்..

அந்த சமயம் கூட்டாளி அடுத்த தேட்டைக்கு இடமும், நாளும் குறிச்சுக் கூப்பிட சொத்துப் பிரச்னைன்னு பெருமாளு கிட்டப் பொய் சொல்லிட்டு உடனே கெளம்பி பட்டப் பகல்ல பூந்து ஒரு வீட்ல நாலு பேரக் கொன்னு தங்கமும்,வெள்ளியும் கிலோ கணக்குல அள்ளினோம்.. நாய்ங்க விடாம குரைச்சதால இந்தத் தடவ அரை உசுரு சுகம் கெடைக்காம ஓடியாநதவன் வெறி கொண்டவனா அலைஞ்சேன்..பெருமாளு கிட்டச் சொன்னது முக்கா வாசி பக்கா பொய்ங்க தான்!,செல் போன்ல உனக்கே தெரியாம உன் போட்டோவ எடுத்து வச்சுக்கிட்டு அதப் பொம்பளைன்னு அவன நம்ப வச்சேன்..அவன எப்பவும் பயத்துலயும் குழப்பத்துலயும் வெக்கவும் ஒரு வேள அவன நீ மோப்பம் புடிச்சுட்டா அவன் உனக்குத் தப்பான தகவல் குடுக்கணும்னு தான் இதெல்லாம்.. குடும்பத்தையே வெசம் வச்சுக் கொன்னேன்னு சொன்னதும் அதுக்குத் தான்!

ரெண்டு தடவ அடிச்ச தங்கம்,வெள்ளிய வித்ததுல ஆளுக்கு ஏழு கோடி ரூபா கெடைச்சுது..கூட்டாளி பக்கத்தூருல சொந்தக்காரன் வீட்டுக்குப் போக நான் இங்க வந்தேன்..பெருமாளு கிட்ட ஏகத்துக்கும் புளுகி உன் தோட்டத்துக்குள்ள நொழைஞ்சேன்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
.எனக்கு உன் விசயத்த ரெண்டே நாள்ல முடிச்சுட்டு மும்பை ஓடறதே என் பிளான்..உன் மேல அன்பு வச்சிருக்கறவங்கள வரிசையாக் கொன்னு உன்ன ஒரேயடியா தளர வச்சு கடைசியா உன்னப் போடறதே என் உச்சகட்டப் பிளான்..."

பேச்ச நிறுத்தி கண் சொருக மறுபடியும் ஆனந்தமா ரசிச்சுப் புகை இழுக்க சக்தி இன்னொரு அடி பின்னால நகர மூக்கன் கிண்டலாச் சொன்னான்...

"இதுக்கு மேல எங்க போவே சக்தி வேல் டார்லிங்?இனி முன்னால உன் எமனான நான்...பின்னால கொத்துக் கொத்தா ஆளு உசரத்துக்கு முள் புதருங்க..சரி..உன் ஆளுங்க சந்தேகப்பட்டு இங்க வர்றதுக்குள்ள நம்ம கதைய முடிச்சுக்கலாம்..வந்த அன்னிக்கே பக்காவா பிளான் பண்ணி கெழவிய தெரு நாய அடிக்கற மாதிரி அடிச்சுத் தள்ளினேன்..இவளையும் நடு மண்டைல நச்சுனு .ஒரே போடு..பொசுக்குனு போயிட்டா.. அன்னிக்குத் தான் அந்த மான்யாவ மொத மொதலாப் பாத்தேன்..ஆஹா..என்ன அழகு...

பொண்ணுங்கள அலட்சியம் பண்ணினவனையே அசைச்சுப் பாத்த அழகு ! அப்ப முடிவு பண்ணினேன்.. அன்னிக்கே அரை உசுராக்கி அவள அனுபவிக்கணும்னு.. ஆனா,கஞ்சா இல்லாததால சரக்க ஓவரா அடிக்க எல்லாமே கந்தலாகிப் போச்சு..அப்பவே பெருமாளையும் முடிச்சிருப்பேன்..அந்த அடிமை உள்ள இருக்கற வரைக்கும் எனக்குத் தான் சாதகம்னு விட்டு வச்சேன்..அப்படியே அவன் சிக்கி உளறினாலும் அவன் சொல்றத வச்சு என்னக் கண்டு பிடிக்க முடியாதுன்னு நெனைச்சேன்.. ஆனா,நீ கஞ்சாங்கற சின்ன நூல் கொண்டு என்னக் கட்டிப் போடப் பாத்தே.. புத்திசாலி தான் !

பட் மை டியர் டார்லிங்..உன்னக் குறியா வச்சு ஒருத்தன் ஆட்டத்த ஆரம்பிச்சிருந்தான்னா இருபத்து நாலு மணி நேரமும் உன்னக் கவனிப்பாங்கறத யோசிக்க வேண்டாமா டார்லிங்?நான் நெனைச்சிருந்தா இதுல சிக்காம தப்பிச்சிருக்கலாம்..ஆனா,நானா வந்து உன் வலைல ஏன் விழுந்தேன் தெரியுமா?உனக்கு வாழறதுக்கு ஒரு சான்ஸ் குடுக்க..புரியலியா டார்லிங்? மனசார உண்மையச் சொல்றேன் மை டியர் சக்தி வேல்.. பதினாறு வருசத்துக்கு முன்ன நான் உம் மேல வச்ச லவ் துளியும் மாறல..அதனால தான் உம் மேல பிரியம் வச்சவங்களைக் கொல்ல நெனைச்சேன்.. எல்லாத்தையும் உதறிட்டு எங்கூட ஒரேயடியா மும்பை வந்துடு..நான் ஆபரேசன் பண்ணிக்கிட்டு லேடி ஆயிட்டா ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்..மாட்டேன்னு சொன்னா..நாயடிக்கற மாதிரி அடிச்செறிஞ்சுட்டு போயிக்கிட்டே இருப்பேன்..ஏன்னா,எனக்கில்லாத நீ இந்த உலகத்துலயே இருக்கக் கூடாது..என்ன சொல்றே சக்தி வேல் டார்லிங்?"

ரெண்டு நாளைக்கப்புறம் மொத தடவையா சக்தி வாய் விட்டுச் சிரிச்சான்..அந்தச் சிரிப்புக்குக் காரணம் புரியாம மூக்கன் கேட்டான்..

"இன்னதுன்னு சொல்லிட்டுச் சிரிச்சா நானுங் கூடச் சேந்து சிரிப்பனே சக்தி வேல் டார்லிங்?"

சக்தி சிரிப்ப நிறுத்திட்டு அமைதியா பின்னால ரெண்டு கையவும் ஊணி நல்லா சாஞ்சு சொன்னான்...

"எனக்குக் கிடைக்கற காதலெல்லாம் தாறுமாறான முரட்டுக் காதலாவே இருக்கேன்னு நெனைச்சேன்... சிரிப்ப அடக்க முடியல"சொல்லிட்டு மறுபடியும் வாய் விட்டுச் சிரிச்சான்..அவ்வளவு நேரம் ஒரு வார்த்தை கூடப் பேசாதவன் வாய் விட்டுச் சிரிச்சு சரளமாப் பேசவும் மூக்கன் உஷாரானான்..முதுகுக்குப் பின்னால இருந்து ஒரு அடி நீள கத்திய உருவிக்கிட்டே எந்திரிச்சு இன்னொரு கைல இருந்த தடிய நெலத்துல ஊணிக் கேட்டான்...

"நாங் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல"

"ஸாரி..அது நடக்காத விசயம்"

"வீணாச் சாகப் போறே"

"இதுவும் நடக்காத விசயம்"

கத்திய வீசத் தயாரா வச்சுக்கிட்டு சக்திய நோக்கி நாலெட்டு வச்சு ரெணடடி கேப்ல நின்னு கேட்டான் மூக்கன்..

"எத வச்சு நடக்காதுன்னு சொல்றே மை டியர் சக்தி வேல் டார்லிங்"

அடுத்த நொடியே சக்தி மல்லாக்கப் படுத்து பின்னாலிருந்த புதருக்குள் வேகமாய் கை விட்டு இழுக்க கையோடு வந்நது அஞ்சடி நீளமும்,எட்டு கிலோ எடையும் கொண்ட கனமான கடப்பாரை..மல்லாந்த வேகத்தில் நிமிர்ந்து உக்காந்த சக்தி தன் பலமத்தனையும் கைகளுக்குக் கொண்டு வந்து மூக்கனின் முழங் காலுக்குக் கீழ புயலாய் அடித்துச் சொன்னான்..

"இத வச்சுத் தான்டா மடையா"

(தொடரும்..
 




Satz

நாட்டாமை
Joined
Apr 11, 2018
Messages
31
Reaction score
75
Location
Bangalore
Bro... Night full ah mulichu update koduthirukeenga...inum koduthalum padika nanga ready...
Ana ivlo mosamana villain ah sakthi kandupidikama..rendu uyir poyiduchu....
Viruvirupan thirrupangaludan...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top