வாங்க..வாங்க..நானும் வந்துட்டேன்,
தேவா தம்பி
வாங்க..வாங்க..நானும் வந்துட்டேன்,
தேவா தம்பி
நன்றிங்க..Nice bri
நன்றிங்க..Bro... Night full ah mulichu update koduthirukeenga...inum koduthalum padika nanga ready...
Ana ivlo mosamana villain ah sakthi kandupidikama..rendu uyir poyiduchu....
Viruvirupan thirrupangaludan...
வாங்க..நல்வரவுநான் தான் 1st
நன்றிங்க மாப்ஸ்..Super nga mamz
Sakthi epdiyo oru plan la vandhurukar pola.....thank god.எனக்கு உன் விசயத்த ரெண்டே நாள்ல முடிச்சுட்டு மும்பை ஓடறதே என் பிளான்..உன் மேல அன்பு வச்சிருக்கறவங்கள வரிசையாக் கொன்னு உன்ன ஒரேயடியா தளர வச்சு கடைசியா உன்னப் போடறதே என் உச்சகட்டப் பிளான்..."
பேச்ச நிறுத்தி கண் சொருக மறுபடியும் ஆனந்தமா ரசிச்சுப் புகை இழுக்க சக்தி இன்னொரு அடி பின்னால நகர மூக்கன் கிண்டலாச் சொன்னான்...
"இதுக்கு மேல எங்க போவே சக்தி வேல் டார்லிங்?இனி முன்னால உன் எமனான நான்...பின்னால கொத்துக் கொத்தா ஆளு உசரத்துக்கு முள் புதருங்க..சரி..உன் ஆளுங்க சந்தேகப்பட்டு இங்க வர்றதுக்குள்ள நம்ம கதைய முடிச்சுக்கலாம்..வந்த அன்னிக்கே பக்காவா பிளான் பண்ணி கெழவிய தெரு நாய அடிக்கற மாதிரி அடிச்சுத் தள்ளினேன்..இவளையும் நடு மண்டைல நச்சுனு .ஒரே போடு..பொசுக்குனு போயிட்டா.. அன்னிக்குத் தான் அந்த மான்யாவ மொத மொதலாப் பாத்தேன்..ஆஹா..என்ன அழகு...
பொண்ணுங்கள அலட்சியம் பண்ணினவனையே அசைச்சுப் பாத்த அழகு ! அப்ப முடிவு பண்ணினேன்.. அன்னிக்கே அரை உசுராக்கி அவள அனுபவிக்கணும்னு.. ஆனா,கஞ்சா இல்லாததால சரக்க ஓவரா அடிக்க எல்லாமே கந்தலாகிப் போச்சு..அப்பவே பெருமாளையும் முடிச்சிருப்பேன்..அந்த அடிமை உள்ள இருக்கற வரைக்கும் எனக்குத் தான் சாதகம்னு விட்டு வச்சேன்..அப்படியே அவன் சிக்கி உளறினாலும் அவன் சொல்றத வச்சு என்னக் கண்டு பிடிக்க முடியாதுன்னு நெனைச்சேன்.. ஆனா,நீ கஞ்சாங்கற சின்ன நூல் கொண்டு என்னக் கட்டிப் போடப் பாத்தே.. புத்திசாலி தான் !
பட் மை டியர் டார்லிங்..உன்னக் குறியா வச்சு ஒருத்தன் ஆட்டத்த ஆரம்பிச்சிருந்தான்னா இருபத்து நாலு மணி நேரமும் உன்னக் கவனிப்பாங்கறத யோசிக்க வேண்டாமா டார்லிங்?நான் நெனைச்சிருந்தா இதுல சிக்காம தப்பிச்சிருக்கலாம்..ஆனா,நானா வந்து உன் வலைல ஏன் விழுந்தேன் தெரியுமா?உனக்கு வாழறதுக்கு ஒரு சான்ஸ் குடுக்க..புரியலியா டார்லிங்? மனசார உண்மையச் சொல்றேன் மை டியர் சக்தி வேல்.. பதினாறு வருசத்துக்கு முன்ன நான் உம் மேல வச்ச லவ் துளியும் மாறல..அதனால தான் உம் மேல பிரியம் வச்சவங்களைக் கொல்ல நெனைச்சேன்.. எல்லாத்தையும் உதறிட்டு எங்கூட ஒரேயடியா மும்பை வந்துடு..நான் ஆபரேசன் பண்ணிக்கிட்டு லேடி ஆயிட்டா ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்..மாட்டேன்னு சொன்னா..நாயடிக்கற மாதிரி அடிச்செறிஞ்சுட்டு போயிக்கிட்டே இருப்பேன்..ஏன்னா,எனக்கில்லாத நீ இந்த உலகத்துலயே இருக்கக் கூடாது..என்ன சொல்றே சக்தி வேல் டார்லிங்?"
ரெண்டு நாளைக்கப்புறம் மொத தடவையா சக்தி வாய் விட்டுச் சிரிச்சான்..அந்தச் சிரிப்புக்குக் காரணம் புரியாம மூக்கன் கேட்டான்..
"இன்னதுன்னு சொல்லிட்டுச் சிரிச்சா நானுங் கூடச் சேந்து சிரிப்பனே சக்தி வேல் டார்லிங்?"
சக்தி சிரிப்ப நிறுத்திட்டு அமைதியா பின்னால ரெண்டு கையவும் ஊணி நல்லா சாஞ்சு சொன்னான்...
"எனக்குக் கிடைக்கற காதலெல்லாம் தாறுமாறான முரட்டுக் காதலாவே இருக்கேன்னு நெனைச்சேன்... சிரிப்ப அடக்க முடியல"சொல்லிட்டு மறுபடியும் வாய் விட்டுச் சிரிச்சான்..அவ்வளவு நேரம் ஒரு வார்த்தை கூடப் பேசாதவன் வாய் விட்டுச் சிரிச்சு சரளமாப் பேசவும் மூக்கன் உஷாரானான்..முதுகுக்குப் பின்னால இருந்து ஒரு அடி நீள கத்திய உருவிக்கிட்டே எந்திரிச்சு இன்னொரு கைல இருந்த தடிய நெலத்துல ஊணிக் கேட்டான்...
"நாங் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல"
"ஸாரி..அது நடக்காத விசயம்"
"வீணாச் சாகப் போறே"
"இதுவும் நடக்காத விசயம்"
கத்திய வீசத் தயாரா வச்சுக்கிட்டு சக்திய நோக்கி நாலெட்டு வச்சு ரெணடடி கேப்ல நின்னு கேட்டான் மூக்கன்..
"எத வச்சு நடக்காதுன்னு சொல்றே மை டியர் சக்தி வேல் டார்லிங்"
அடுத்த நொடியே சக்தி மல்லாக்கப் படுத்து பின்னாலிருந்த புதருக்குள் வேகமாய் கை விட்டு இழுக்க கையோடு வந்நது அஞ்சடி நீளமும்,எட்டு கிலோ எடையும் கொண்ட கனமான கடப்பாரை..மல்லாந்த வேகத்தில் நிமிர்ந்து உக்காந்த சக்தி தன் பலமத்தனையும் கைகளுக்குக் கொண்டு வந்து மூக்கனின் முழங் காலுக்குக் கீழ புயலாய் அடித்துச் சொன்னான்..
"இத வச்சுத் தான்டா மடையா"
(தொடரும்..