நியாயமா இந்த சமயத்துல அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்..சக்தியும்,மூக்கனும் தனியா இருந்தாலும் யாருக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை..சிகே வடக்க இருந்தும் ஒயிட் தெக்க இருந்தும் அந்த மாபெரும் பள்ளத்த நோக்கி வந்துக்கிட்டிருந்தாங்க..ஆனா,மெதுவாத் தான்! அதுக்குக் காரணங்களும் இருக்கத் தான் செஞ்சுது..
முதல் காரணம்..அந்தக் குளம் முள்ளால் சூழப் பட்ட குட்டி வனப் பகுதி ! பத்தடிக்கு மேலயும்,இருபது அடி அகலப் பரப்புலயும் சிறு சிறு கிளைகளாப் பரப்பி சுண்டு விரல் நீளத்துக்கு ஒரு அங்குல அளவு ஆணி மாதிரி முள்ளா நிறைஞ்சிருக்கும்..அதனால,கவனமாப் பாத்துப் போகலைன்னா பின்னி முள்ளால் பிணைஞ்சிருக்கற கிளைகள்ல ஒண்ண நேக்காத் தள்ளினா இன்னும் ரெண்டு மின்னலா பின்னலிலிருந்து கண்ண நோக்கி வரும்..ரெண்டுல ஒரு கண்ணா முழிய நம்ம பர்மிசனுக்காக காத்திருக்காம புடுங்கிட்டுப் போயிடும்..
அதனாலென்ன.. மேல கவனமா பாத்துப் போனா கண்ண முள்ளு களவாடாம காப்பாத்திக்கலாமேங்கற உங்க மைண்ட் வாய்ஸ சரியா காட்ச் பண்ணிட்டேன்.. எண் சாண் ஒடம்புக்குச் சிரசே பிரதானம்னா..அந்த மண்டப் புரடைக்கு கண்ணா முழி தான் பிரதானம்.. இதுல மாத்துக் கருத்தே இல்ல..ஆனா பாருங்க.. அந்தக் குளமிருக்கே?அது முள் மரங்களும் சுள்ளிப் புதரும் கத்தாழை மடலுமா ஓங்கி வளந்திருக்க,.. அதை சுத்திப் படர்ந்திருக்கும் பிரண்டைகளும்,கோவைப் பழக் கொடிகளும்,கூடவே காட்டுக் கொடிகளும்..பந்தலா அது மேல!இப்பக் கீழ வந்தீங்கன்னா..அருகம் புல்லும், கோரைகளும்,காட்டுக் கொடி பிரண்டையின் அடித் தண்டுகளும் கணுக்கால மறைக்கற அளவுக்கு வளந்திருக்கும்..
தரைன்னா இதெல்லாம் வளரத் தானே செய்யும்ங்கற இந்த மைண்ட் வாய்ஸையும் காட்ச் பண்ணிட்டேன்.. உங்க கேள்வி ஓரளவுக்கு நியாயம் தான்..ஆனா, நீங்க ஒண்ண மறந்துட்டீங்க..தரைன்னா முளைப்பன மட்டுமில்ல..ஊர்வனவும் இருக்கும்..சிறு வண்டுல ஆரம்பிச்சு பொன் வண்டு வரைக்கும்..சிறு சிலந்தில இருந்து ஓணாண் வரைக்கும்..தெள்ளுப் பூச்சில ஆரம்பிச்சு பூரான்,தேளு வரைக்கும்.. சிறு பல்லில ஆரம்பிச்சு சாரை,நாக பாம்பு வரைக்கும்..விரியன்லயே ரெண்டு வகையுண்டு..கட்டு விரியன்,கண்ணாடி விரியன்..மத்த பாம்புகளை விட கடுமையான விஷங் கொண்டது..நாகனெல்லாம் தேர்ட் பிரைஸ் தான் !
மூணாவது எடத்துல இருக்கற நாகனுக்கு ஏன் அவ்வளவு பயம்னா..அந்தப் பய புள்ள ஆபத்து வந்ததும் தலைக்குக் கீழ சிறு குடையா விரிஞ்சு ரெண்டடி ஒசரத்துக்கு எழும்பி படமெடுத்து தன் இரு நாக்க நீட்டி உஷ்ஷ்.னு சீறி பில்டப்புக் குடுத்தே மொத பிரைஸ் வாங்கிருச்சு..இதும் கடுமையான விசம்னாலும் விரியன்கள விஞ்ச முடியாது..இதுலயும் கண்ணாடி விரியனிருக்கே?இதுக்குச் செல்ல(?!!!)ப் பேரே செவுட்டு விரியன் தான்..பாம்புக்குக் காது கிடையாது..(ஆனா நம்ம நாட்டுல தான் காதுப் புலன் கூர்மையா இருக்கறங்கள 'பாம்புபச் செவி'ன்னு பாராட்டற முரண் நகை நிறைய உண்டு...கணக்குல முதன்மையானவன 'கணக்குல புலி மாதிரி'ன்னு சொல்றதில்லையா?அந்த மாதிரி தான் !புலிக்கு ஏ பிளஸ் பி ஈக்வல்ட் சி.ங்கறதோ அல்ஜீப்ராவோ தெரியுமா? )மற்ற உயிரினங்களின் நகர்வினால் ஏற்படும் நில அதிர்வினைக் கொண்டும்,கண்களின் துணை கொண்டுமே பாம்புகள் தாக்குவதும்,தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும் செய்கின்றன..
மற்ற அரவங்கள் மனிதனைக் கண்டவால் பெரும்பாலும் பயந்து விலகவே செய்கின்றன..(எல்லா மிருகங்களுக்குமே மனுசன்னா பயம் தான்..அவ்வளவு மோசமான மிருகமவன் ! )கண்ணாடி விரியன்கள் மனிதனைக் கண்டால் நகர்வை நிறுத்தி அப்படியே படுத்து விடும்..தெரியாம கிட்டப் போயிட்டாலோ, மிதிச்சுட்டாலோ எட்டி வீசுச்சுன்னா பாடை தான் ! அதனால தான் எங்க கொங்குப் பக்கம் விதி முத்துனாத் தான் விரியன் கடிக்கும்பாங்க..
சுத்தி வளைச்சுச் சொல்ல வர்றது என்னன்னா.. கொளத்துல சுண்டெலில இருந்து பெருச்சாளி வரைக்கும் உண்டு..இதுங்க இருந்தாலே அந்தப் பகுதில எல்லா வகையான பாம்புகளுக்கும் பஞ்சமிருக்காது.. எந்தப் பொதருக்குள்ள எது இருக்கும்னு சொல்ல முடியாது..பகல்லயே இப்படின்னா ராத்திரில சொல்லவே வேண்டியதில்ல..உள்ள போறவன் உயிரோட திரும்பி வராறதுக்கு உத்தரவாதமில்ல.. அதனால நான் சி.கே,ஒயிட் நகர்வு மிக மெதுவாய்...
முதல் காரணம்..அந்தக் குளம் முள்ளால் சூழப் பட்ட குட்டி வனப் பகுதி ! பத்தடிக்கு மேலயும்,இருபது அடி அகலப் பரப்புலயும் சிறு சிறு கிளைகளாப் பரப்பி சுண்டு விரல் நீளத்துக்கு ஒரு அங்குல அளவு ஆணி மாதிரி முள்ளா நிறைஞ்சிருக்கும்..அதனால,கவனமாப் பாத்துப் போகலைன்னா பின்னி முள்ளால் பிணைஞ்சிருக்கற கிளைகள்ல ஒண்ண நேக்காத் தள்ளினா இன்னும் ரெண்டு மின்னலா பின்னலிலிருந்து கண்ண நோக்கி வரும்..ரெண்டுல ஒரு கண்ணா முழிய நம்ம பர்மிசனுக்காக காத்திருக்காம புடுங்கிட்டுப் போயிடும்..
அதனாலென்ன.. மேல கவனமா பாத்துப் போனா கண்ண முள்ளு களவாடாம காப்பாத்திக்கலாமேங்கற உங்க மைண்ட் வாய்ஸ சரியா காட்ச் பண்ணிட்டேன்.. எண் சாண் ஒடம்புக்குச் சிரசே பிரதானம்னா..அந்த மண்டப் புரடைக்கு கண்ணா முழி தான் பிரதானம்.. இதுல மாத்துக் கருத்தே இல்ல..ஆனா பாருங்க.. அந்தக் குளமிருக்கே?அது முள் மரங்களும் சுள்ளிப் புதரும் கத்தாழை மடலுமா ஓங்கி வளந்திருக்க,.. அதை சுத்திப் படர்ந்திருக்கும் பிரண்டைகளும்,கோவைப் பழக் கொடிகளும்,கூடவே காட்டுக் கொடிகளும்..பந்தலா அது மேல!இப்பக் கீழ வந்தீங்கன்னா..அருகம் புல்லும், கோரைகளும்,காட்டுக் கொடி பிரண்டையின் அடித் தண்டுகளும் கணுக்கால மறைக்கற அளவுக்கு வளந்திருக்கும்..
தரைன்னா இதெல்லாம் வளரத் தானே செய்யும்ங்கற இந்த மைண்ட் வாய்ஸையும் காட்ச் பண்ணிட்டேன்.. உங்க கேள்வி ஓரளவுக்கு நியாயம் தான்..ஆனா, நீங்க ஒண்ண மறந்துட்டீங்க..தரைன்னா முளைப்பன மட்டுமில்ல..ஊர்வனவும் இருக்கும்..சிறு வண்டுல ஆரம்பிச்சு பொன் வண்டு வரைக்கும்..சிறு சிலந்தில இருந்து ஓணாண் வரைக்கும்..தெள்ளுப் பூச்சில ஆரம்பிச்சு பூரான்,தேளு வரைக்கும்.. சிறு பல்லில ஆரம்பிச்சு சாரை,நாக பாம்பு வரைக்கும்..விரியன்லயே ரெண்டு வகையுண்டு..கட்டு விரியன்,கண்ணாடி விரியன்..மத்த பாம்புகளை விட கடுமையான விஷங் கொண்டது..நாகனெல்லாம் தேர்ட் பிரைஸ் தான் !
மூணாவது எடத்துல இருக்கற நாகனுக்கு ஏன் அவ்வளவு பயம்னா..அந்தப் பய புள்ள ஆபத்து வந்ததும் தலைக்குக் கீழ சிறு குடையா விரிஞ்சு ரெண்டடி ஒசரத்துக்கு எழும்பி படமெடுத்து தன் இரு நாக்க நீட்டி உஷ்ஷ்.னு சீறி பில்டப்புக் குடுத்தே மொத பிரைஸ் வாங்கிருச்சு..இதும் கடுமையான விசம்னாலும் விரியன்கள விஞ்ச முடியாது..இதுலயும் கண்ணாடி விரியனிருக்கே?இதுக்குச் செல்ல(?!!!)ப் பேரே செவுட்டு விரியன் தான்..பாம்புக்குக் காது கிடையாது..(ஆனா நம்ம நாட்டுல தான் காதுப் புலன் கூர்மையா இருக்கறங்கள 'பாம்புபச் செவி'ன்னு பாராட்டற முரண் நகை நிறைய உண்டு...கணக்குல முதன்மையானவன 'கணக்குல புலி மாதிரி'ன்னு சொல்றதில்லையா?அந்த மாதிரி தான் !புலிக்கு ஏ பிளஸ் பி ஈக்வல்ட் சி.ங்கறதோ அல்ஜீப்ராவோ தெரியுமா? )மற்ற உயிரினங்களின் நகர்வினால் ஏற்படும் நில அதிர்வினைக் கொண்டும்,கண்களின் துணை கொண்டுமே பாம்புகள் தாக்குவதும்,தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும் செய்கின்றன..
மற்ற அரவங்கள் மனிதனைக் கண்டவால் பெரும்பாலும் பயந்து விலகவே செய்கின்றன..(எல்லா மிருகங்களுக்குமே மனுசன்னா பயம் தான்..அவ்வளவு மோசமான மிருகமவன் ! )கண்ணாடி விரியன்கள் மனிதனைக் கண்டால் நகர்வை நிறுத்தி அப்படியே படுத்து விடும்..தெரியாம கிட்டப் போயிட்டாலோ, மிதிச்சுட்டாலோ எட்டி வீசுச்சுன்னா பாடை தான் ! அதனால தான் எங்க கொங்குப் பக்கம் விதி முத்துனாத் தான் விரியன் கடிக்கும்பாங்க..
சுத்தி வளைச்சுச் சொல்ல வர்றது என்னன்னா.. கொளத்துல சுண்டெலில இருந்து பெருச்சாளி வரைக்கும் உண்டு..இதுங்க இருந்தாலே அந்தப் பகுதில எல்லா வகையான பாம்புகளுக்கும் பஞ்சமிருக்காது.. எந்தப் பொதருக்குள்ள எது இருக்கும்னு சொல்ல முடியாது..பகல்லயே இப்படின்னா ராத்திரில சொல்லவே வேண்டியதில்ல..உள்ள போறவன் உயிரோட திரும்பி வராறதுக்கு உத்தரவாதமில்ல.. அதனால நான் சி.கே,ஒயிட் நகர்வு மிக மெதுவாய்...