,மனு முகம் முழுக்கப் புன்னகையாச் கேட்டா...
"மணி என்ன செல்வி?"
"ஒம்பதரையாகப் போவுது?"
"உனக்கு ஞாபகமிருக்கா?ஆறு வருசத்துக்கு முன்ன இதே தேதி இதே நேரத்துல தான் உங்கண்ணன் ஆஸ்பிடல்ல எம் முன்னால மயங்கிச் சரிஞ்சார்"
"மறக்க முடியுமா?உயிருக்கே ஆபத்துன்னு சொன்ன நீங்களும்,தாத்தாவும் அடுத்த நாளே எந்திரிச்சுட அண்ணன் தான் பத்து நாளு அங்க படுத்திருந்தார்"
"அவரக் காப்பாத்தினது யாரு தெரியுமா?"
"நீங்க தான்..பத்து நாளும் அண்ணன விட்டு நகரலியே?"
"இல்ல செல்வி..கொளத்துக்குள்ளயும் சரி.. அங்கிருந்து வந்த போதும் சரி..உங்கண்ணனக் காப்பாத்தினது நானில்ல..சித்ர மாலா !"
அந்த நேரத்துல கேட் கிட்ட ஹாரன் சத்தம் கேட்க பேச்ச நிறுத்தி ரெண்டு பேரும் திரும்பிப் பாக்க கேட் திறக்கப் பட்டு ஒரு கார் உள்ள நுழைஞ்சு செட்ல போயி நிக்க அதுல இருந்து மூணு பேரு இறங்கினாங்க..சக்தி,சி.கே, ஒயிட் ! அவங்க கிட்டயும் இந்த ஆறு வருசத்துல பெருசா மாறுதல் இல்லேன்னாலும் ஒயிட் மட்டும் கொஞ்சம் சதை போட்டு பூசின மாதிரி இருந்தான்.சி.கே கூட தாமாசா அதப் பத்தி ''பெருத்துக்கிட்டே போறடா..நாலு நாள்ல கண்டிப்பா பலூன் மாதிரி வெடிக்கப் போறே பாரு''ன்னு சொன்னா...அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நம்ம ஒயிட்டு?கண்ணடிச்சு குறும்பாச் சொல்வான்..
"என்ன தலைவரே பண்ணச் சொல்றீங்க?எனக்கு ரெண்டு தங்கச்சிங்க..பாச மலர் சாவித்திரியெல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்..அம்புட்டுப் பாசம்.. மொதல்ல செல்வி தங்கச்சிக்காக இங்க சாப்பிடுவேன்.. கொஞ்ச நேரத்துல பெரிய தலைவரப் பாக்கப் போவேன்..சரியா நாம் போற நேரம் சாப்பாட்டு நேரமா இருக்கும்..ரெண்டு பேரும் சாப்பிடச் சொல்லுவாங்க.. நான் இங்க சாப்பிட்டுட்டேன்னு சொன்னா பெரிய தலைவர் விட்டாலும்'எனக்காக கொஞ்சமாவது சாப்பபிடுங்கண்ணா'ன்னு மனு தங்கச்சி சொல்லும்.. அது சொல்ல மீர்ற ஆளு இந்தத் தோட்டத்துல உண்டா? ஆனானப் பட்ட பெரிய தலைவரே அவங்களுக்கு அடிமையாயிட்ட போது இந்த ஒயிட் பக்கியெல்லாம் எம் மாத்திரம்?தங்கச்சி மனசு புண் பட்டுடக் கூடாதுன்னு உக்காருவேன்.. சொன்னதென்னவோ கொஞ்சம்னு தான்! எந் தட்டுன்னா ரெண்டு தங்கச்சிங்களும் கரண்டில அள்ளறதில்ல..பாத்திரத்தையே சாய்ச்சுடுவாங்க.. நானும் அவங்க மனசு கோணக் கூடாதுன்னு சாப்பிடுவேன்..இத்தனைக்கும் காரணம் பெரிய தலைவர் தான்"
சி.கே ஆச்சரியமா பாத்துக் கேப்பான்..
"அவனென்னடா பண்ணினான்?"
"ஆறு வருசத்துக்கு முன்னால.. இதே நாள்..மூக்கன் மண்டைல ஆப்பு வெக்கறதுக்கு முன்னால சொன்னாரே?தனக்காக வாழறத விட மத்தவங்களுக்காக வாழறதே வாழ்க்கைன்னு.. நா ஒருத்தன் மட்டுமே அத இங்க பாலோ பண்றேனாக்கும்.."
",நீ திங்கறது அடுத்தவங்களுக்காகவா?"
"இல்லீங்களா பின்ன?இந்த தங்கச்சிய சந்தோசப் படுத்த இங்க திங்கறேன்..அந்தத் தங்கச்சியச் சந்தோசப் படுத்த அங்க திங்கறேன்..அப்படியே நம்மாளுங்க குடியிருப்புப் பக்கம் போனா அங்க ஒரு தங்கச்சிய சந்தோசப் படுத்தறேன்..மத்தவங்களச் சந்தோசப் படுத்தவே உழைச்சு ஊதிட்டேன்"
"என்னடா உழைச்சே நீ?°
"என்ன தலைவரே..இப்படிக் கேட்டுட்டீங்க?திங்கறதும் ஒரு உழைப்புத் தானே?"
எல்லோரும் பல தடவ சொல்லியும் ஒயிட் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னுட்டான்..அவனுக்குன்னு கணிசமான தொகை மாசமானா மனு கைல வாங்கினான்னா தோட்டத்துல இருக்கற அத்தன கொழந்தைங்களுக்கும் அன்னிக்கே செலவு பண்ணிடுவான்..
"உனக்குன்னு எதாச்சும் சேர்த்து வைடா"
சி.கே ஒரு தடவ அலுப்பாச் சொல்ல உடனே பதில் சொன்னான்..
"வச்சிருக்கேன் தலைவரே..சி.கே,சக்தி,மனு, செல்வின்னு மதிப்பிட முடியாத சொத்து எனக்கிருக்கு.. மத்த எதுவும் எனக்கு வேணாம்"
அதோட சி.கே அந்தப் பேச்சையே விட்டுட்டான்.. தோட்டத்துக்குள்ள எந்த வீட்டுலயும் சாப்பிடுவான்.. இன்ன வேலைன்னும் அவனுக்குக் கிடையாது..ஆனா, எல்லா வேலையும் செய்வான்..பேப்பர் படிக்கறதோ, டிவி பாக்கறதோ,சினிமாவுக்குப் போறதோ கிடையாது.. எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டு மொட்ட மாடிக்குப் போயிடுவான்..அவங் கைல தவறாம பைனாகுலர் இருக்கும்..செட்ல படுத்திருக்கும் போது ஒரு பாட்ட அப்பப்பப் பாடுவான்..
"மணி என்ன செல்வி?"
"ஒம்பதரையாகப் போவுது?"
"உனக்கு ஞாபகமிருக்கா?ஆறு வருசத்துக்கு முன்ன இதே தேதி இதே நேரத்துல தான் உங்கண்ணன் ஆஸ்பிடல்ல எம் முன்னால மயங்கிச் சரிஞ்சார்"
"மறக்க முடியுமா?உயிருக்கே ஆபத்துன்னு சொன்ன நீங்களும்,தாத்தாவும் அடுத்த நாளே எந்திரிச்சுட அண்ணன் தான் பத்து நாளு அங்க படுத்திருந்தார்"
"அவரக் காப்பாத்தினது யாரு தெரியுமா?"
"நீங்க தான்..பத்து நாளும் அண்ணன விட்டு நகரலியே?"
"இல்ல செல்வி..கொளத்துக்குள்ளயும் சரி.. அங்கிருந்து வந்த போதும் சரி..உங்கண்ணனக் காப்பாத்தினது நானில்ல..சித்ர மாலா !"
அந்த நேரத்துல கேட் கிட்ட ஹாரன் சத்தம் கேட்க பேச்ச நிறுத்தி ரெண்டு பேரும் திரும்பிப் பாக்க கேட் திறக்கப் பட்டு ஒரு கார் உள்ள நுழைஞ்சு செட்ல போயி நிக்க அதுல இருந்து மூணு பேரு இறங்கினாங்க..சக்தி,சி.கே, ஒயிட் ! அவங்க கிட்டயும் இந்த ஆறு வருசத்துல பெருசா மாறுதல் இல்லேன்னாலும் ஒயிட் மட்டும் கொஞ்சம் சதை போட்டு பூசின மாதிரி இருந்தான்.சி.கே கூட தாமாசா அதப் பத்தி ''பெருத்துக்கிட்டே போறடா..நாலு நாள்ல கண்டிப்பா பலூன் மாதிரி வெடிக்கப் போறே பாரு''ன்னு சொன்னா...அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நம்ம ஒயிட்டு?கண்ணடிச்சு குறும்பாச் சொல்வான்..
"என்ன தலைவரே பண்ணச் சொல்றீங்க?எனக்கு ரெண்டு தங்கச்சிங்க..பாச மலர் சாவித்திரியெல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்..அம்புட்டுப் பாசம்.. மொதல்ல செல்வி தங்கச்சிக்காக இங்க சாப்பிடுவேன்.. கொஞ்ச நேரத்துல பெரிய தலைவரப் பாக்கப் போவேன்..சரியா நாம் போற நேரம் சாப்பாட்டு நேரமா இருக்கும்..ரெண்டு பேரும் சாப்பிடச் சொல்லுவாங்க.. நான் இங்க சாப்பிட்டுட்டேன்னு சொன்னா பெரிய தலைவர் விட்டாலும்'எனக்காக கொஞ்சமாவது சாப்பபிடுங்கண்ணா'ன்னு மனு தங்கச்சி சொல்லும்.. அது சொல்ல மீர்ற ஆளு இந்தத் தோட்டத்துல உண்டா? ஆனானப் பட்ட பெரிய தலைவரே அவங்களுக்கு அடிமையாயிட்ட போது இந்த ஒயிட் பக்கியெல்லாம் எம் மாத்திரம்?தங்கச்சி மனசு புண் பட்டுடக் கூடாதுன்னு உக்காருவேன்.. சொன்னதென்னவோ கொஞ்சம்னு தான்! எந் தட்டுன்னா ரெண்டு தங்கச்சிங்களும் கரண்டில அள்ளறதில்ல..பாத்திரத்தையே சாய்ச்சுடுவாங்க.. நானும் அவங்க மனசு கோணக் கூடாதுன்னு சாப்பிடுவேன்..இத்தனைக்கும் காரணம் பெரிய தலைவர் தான்"
சி.கே ஆச்சரியமா பாத்துக் கேப்பான்..
"அவனென்னடா பண்ணினான்?"
"ஆறு வருசத்துக்கு முன்னால.. இதே நாள்..மூக்கன் மண்டைல ஆப்பு வெக்கறதுக்கு முன்னால சொன்னாரே?தனக்காக வாழறத விட மத்தவங்களுக்காக வாழறதே வாழ்க்கைன்னு.. நா ஒருத்தன் மட்டுமே அத இங்க பாலோ பண்றேனாக்கும்.."
",நீ திங்கறது அடுத்தவங்களுக்காகவா?"
"இல்லீங்களா பின்ன?இந்த தங்கச்சிய சந்தோசப் படுத்த இங்க திங்கறேன்..அந்தத் தங்கச்சியச் சந்தோசப் படுத்த அங்க திங்கறேன்..அப்படியே நம்மாளுங்க குடியிருப்புப் பக்கம் போனா அங்க ஒரு தங்கச்சிய சந்தோசப் படுத்தறேன்..மத்தவங்களச் சந்தோசப் படுத்தவே உழைச்சு ஊதிட்டேன்"
"என்னடா உழைச்சே நீ?°
"என்ன தலைவரே..இப்படிக் கேட்டுட்டீங்க?திங்கறதும் ஒரு உழைப்புத் தானே?"
எல்லோரும் பல தடவ சொல்லியும் ஒயிட் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னுட்டான்..அவனுக்குன்னு கணிசமான தொகை மாசமானா மனு கைல வாங்கினான்னா தோட்டத்துல இருக்கற அத்தன கொழந்தைங்களுக்கும் அன்னிக்கே செலவு பண்ணிடுவான்..
"உனக்குன்னு எதாச்சும் சேர்த்து வைடா"
சி.கே ஒரு தடவ அலுப்பாச் சொல்ல உடனே பதில் சொன்னான்..
"வச்சிருக்கேன் தலைவரே..சி.கே,சக்தி,மனு, செல்வின்னு மதிப்பிட முடியாத சொத்து எனக்கிருக்கு.. மத்த எதுவும் எனக்கு வேணாம்"
அதோட சி.கே அந்தப் பேச்சையே விட்டுட்டான்.. தோட்டத்துக்குள்ள எந்த வீட்டுலயும் சாப்பிடுவான்.. இன்ன வேலைன்னும் அவனுக்குக் கிடையாது..ஆனா, எல்லா வேலையும் செய்வான்..பேப்பர் படிக்கறதோ, டிவி பாக்கறதோ,சினிமாவுக்குப் போறதோ கிடையாது.. எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டு மொட்ட மாடிக்குப் போயிடுவான்..அவங் கைல தவறாம பைனாகுலர் இருக்கும்..செட்ல படுத்திருக்கும் போது ஒரு பாட்ட அப்பப்பப் பாடுவான்..