மனநிலை பேதலிச்சு ஒரு தோழியால மருத்துவ மனைல சேர்க்கப் பட்டு..நினைவக அடுக்குகள்ல ஏற்பட்ட கோளாறால..எது நிஜம்,எது கற்பனைங்கற குழப்பமாகி..ஆஸ்பிடல் இருந்து வந்து கொஞ்ச நாள் தோழி வீட்டுல இருந்துட்டு ஜூலைக் கடைசில நான் பெருந்துறை வந்த போது ஏறக்குறைய சக்கையா, காதல் நீவாம்பரிய முழுக்க மறந்தவனா இருந்தேன்..
மொதல்ல அடிப்படைத் தேவைகளச் சமாளிக்கணுமே? அலைஞ்சு திரிஞ்சு சிப்காட்ல ஒரு கம்பெனில செக்யூயிட்டியாச் சேர்ந்தேன்..அப்புறம் மெல்லத் தேர்ந்து பழைய நட்புகளைக் கூப்பிட்டுப் பேசினேன்.. நான் முதலில் கூப்பிட்டது விஜி மேடத்தைத் தான்..அவர்கள் மூலமாய் மீண்டும் *** தங்கங்கள் தொடர்பு எல்லைக்குள் வந்தார்கள்..அத்தனை பேரும் நலம் விசாரிப்புக்குப் பின் கேட்ட ஒரே கேள்வி...
"காதல் நீலாம்பரிய எப்ப ஆரம்பிக்கப் போறீங்க?"
அப்படி ஒண்ண எஸ்எம் சைட்ல ஆரம்பிச்சது ஞாபகத்துல இருக்கு..ஆனா,என்ன எழுதினோம்கறது ஞாபகத்துல இல்ல.கோவைத் தோழி கிட்ட இருந்த போனும்,சிம்மும் செப்டம்பர் முதல் வாரத்துல தான் எங் கைக்கு வந்தது..வேலை நெருக்கடியால் காதல் நீலாம்பரியை எட்டிக் கூட பாக்கல..
அங்கயும் கால் பிரச்னையால கால் கடுதாசிய நீட்டிட்டு கொஞ்ச நாள் (2.10.18 டூ 16.11.18)தோதான வேலை கெடைக்கற வரைக்கும் வெட்டி ஆபீசரா இருந்தேன்.. மறூபடியூம் விஜி மேடம்,*** தங்கங்கள் நச்சரிப்பு..
"சும்மா தான இருக்கீங்க..காதல் நீலாம்பரிய எழுதி முடிக்கலாமே?"
தாங்க முடியாம காதல் நீலாம்பரி பதினொரு அத்தியாயத்தையும் இங்க வந்து பல தடவ படிச்சேன்.. சொந்தக் கதையவே கற்பனைய மிக்ஸ் பண்ணி எழுதி இருக்கறது புரிஞ்சுது..ஆனா,அடுத்த அத்தியாயங்கள்ல கற்பனைய எப்படி கொண்டு போக நெனச்சிருந்தேன்ங்கறது சுத்தமா ஞாபகத்துல இல்ல.. விஜி மேடம் கதை பத்தி நாஞ் சொன்னதெல்லாம் எடுத்துக் குடுக்க சபரி பிறந்த நாளான 11.10.18 அன்னிக்கு காதல் நீலாம்பரிய மறுபடியும் தொடங்கறதா இங்க ஒரு பதிவும் போட்டேன்..
நெருக்கடிகளால் ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கதை ஒரு கட்டத்துல முழிச்சுக்கிட்டு தன்னைத் தானே கொண்டு போக முடிவு பண்ணிடுச்சு போல இருக்கு..யுடிய ஆரம்பிக்கறது தான் நான்..அப்புறம் அது என்ன எழுத வச்சுது..கதை தாறுமாறுப் போயி எல்லாருமே பக்கம் பக்கமா பேச ஆரம்பிச்சுட்டாங்க..ஒரு கட்டத்துல வெறுத்துப் போன தோழி ஒருத்தி போன் பண்ணி இப்படிக் கத்தறா..
"யோவ் தேவா...என்னய்யா இது?பேரு தான் காதல் நீலாம்பரி..மருந்துக்குக் கூட ரொமான்ஸ் இல்லையே? ஒரே பிலாஸபியா இருக்கே?போய்யா.."
கதைய நான் எழுதல..அது தான் என்ன எழுத வெக்குதுன்னா நம்பவா போறீங்க?நான் நின்னு யோசிக்கைல கதை 25 அத்தியாயம் தாண்டிடுச்சு..
அக்டோபர்ல மீண்டும் நீலாம்பரிய ஆரம்பிக்கைல என் ஐடியா இதான்..முப்பது அத்தியாயத்துக்குள்ள முடிச்சுடணும்..இருபதாவது அத்தியாயத்துல சித்ர மாலா உள்ள வர்றா..இருபத்தி ரெண்டுல டெய்லர்.. இருபத்தி நாலுல டெய்லர் அவ கதைய முடிக்கறான்.. இப்படிக் கொண்டு போயி முப்பதுல சக்தியும் மனுவும் இணைய கதம்..கதம்..இது தான் அப்ப முடிவு பண்ணி வச்சிருந்தது..
ஆனா,கதை என்னைய இழுத்துத்கிட்டுப் போனதால முப்பதாவது அத்தியாயத்திலும் சித்ர மாலாவந்த பாடில்ல..நானே வெறுத்துப் போயி அதோட முதல் பாகம் முற்றும்னு போட்டேன்.அங்க தான் கதை மொத்தமா எங்கைய விட்டு நழுவுச்சு..நீங்களும் கதையோட சேர்ந்து என்ன எழுத வச்சீங்க..யெஸ்! முப்பது அத்தியாயத்துக்கு மேல கதையக் கொண்டு போனது நீங்க தான் !
ரெண்டாவது பாகத்துல அருக்காணி,கந்தசாமிய அடுத்தடுத்து போட்டுத் தள்ளி மனுவும் தாக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்துல அனுமதிக்கப் பட்ட பின்னால தான் சக்தி முழிச்செழுந்து ஆட்டத்த ஆரம்பிச்சு டெய்லர போட்டுத் தள்ளி இருபது. அத்தியாயத்துக்குள்ள கதைய முடிக்கறது தான் ரெண்டாம் பாகம் ஆரம்பிக்கறப்ப எம் பிளான்..! ஆனா, நீங்க உள்ள பூந்து என் எல்லா பிளானுக்கும் வேட்டு வச்சீங்க...???? ????
மொதல்ல அடிப்படைத் தேவைகளச் சமாளிக்கணுமே? அலைஞ்சு திரிஞ்சு சிப்காட்ல ஒரு கம்பெனில செக்யூயிட்டியாச் சேர்ந்தேன்..அப்புறம் மெல்லத் தேர்ந்து பழைய நட்புகளைக் கூப்பிட்டுப் பேசினேன்.. நான் முதலில் கூப்பிட்டது விஜி மேடத்தைத் தான்..அவர்கள் மூலமாய் மீண்டும் *** தங்கங்கள் தொடர்பு எல்லைக்குள் வந்தார்கள்..அத்தனை பேரும் நலம் விசாரிப்புக்குப் பின் கேட்ட ஒரே கேள்வி...
"காதல் நீலாம்பரிய எப்ப ஆரம்பிக்கப் போறீங்க?"
அப்படி ஒண்ண எஸ்எம் சைட்ல ஆரம்பிச்சது ஞாபகத்துல இருக்கு..ஆனா,என்ன எழுதினோம்கறது ஞாபகத்துல இல்ல.கோவைத் தோழி கிட்ட இருந்த போனும்,சிம்மும் செப்டம்பர் முதல் வாரத்துல தான் எங் கைக்கு வந்தது..வேலை நெருக்கடியால் காதல் நீலாம்பரியை எட்டிக் கூட பாக்கல..
அங்கயும் கால் பிரச்னையால கால் கடுதாசிய நீட்டிட்டு கொஞ்ச நாள் (2.10.18 டூ 16.11.18)தோதான வேலை கெடைக்கற வரைக்கும் வெட்டி ஆபீசரா இருந்தேன்.. மறூபடியூம் விஜி மேடம்,*** தங்கங்கள் நச்சரிப்பு..
"சும்மா தான இருக்கீங்க..காதல் நீலாம்பரிய எழுதி முடிக்கலாமே?"
தாங்க முடியாம காதல் நீலாம்பரி பதினொரு அத்தியாயத்தையும் இங்க வந்து பல தடவ படிச்சேன்.. சொந்தக் கதையவே கற்பனைய மிக்ஸ் பண்ணி எழுதி இருக்கறது புரிஞ்சுது..ஆனா,அடுத்த அத்தியாயங்கள்ல கற்பனைய எப்படி கொண்டு போக நெனச்சிருந்தேன்ங்கறது சுத்தமா ஞாபகத்துல இல்ல.. விஜி மேடம் கதை பத்தி நாஞ் சொன்னதெல்லாம் எடுத்துக் குடுக்க சபரி பிறந்த நாளான 11.10.18 அன்னிக்கு காதல் நீலாம்பரிய மறுபடியும் தொடங்கறதா இங்க ஒரு பதிவும் போட்டேன்..
நெருக்கடிகளால் ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கதை ஒரு கட்டத்துல முழிச்சுக்கிட்டு தன்னைத் தானே கொண்டு போக முடிவு பண்ணிடுச்சு போல இருக்கு..யுடிய ஆரம்பிக்கறது தான் நான்..அப்புறம் அது என்ன எழுத வச்சுது..கதை தாறுமாறுப் போயி எல்லாருமே பக்கம் பக்கமா பேச ஆரம்பிச்சுட்டாங்க..ஒரு கட்டத்துல வெறுத்துப் போன தோழி ஒருத்தி போன் பண்ணி இப்படிக் கத்தறா..
"யோவ் தேவா...என்னய்யா இது?பேரு தான் காதல் நீலாம்பரி..மருந்துக்குக் கூட ரொமான்ஸ் இல்லையே? ஒரே பிலாஸபியா இருக்கே?போய்யா.."
கதைய நான் எழுதல..அது தான் என்ன எழுத வெக்குதுன்னா நம்பவா போறீங்க?நான் நின்னு யோசிக்கைல கதை 25 அத்தியாயம் தாண்டிடுச்சு..
அக்டோபர்ல மீண்டும் நீலாம்பரிய ஆரம்பிக்கைல என் ஐடியா இதான்..முப்பது அத்தியாயத்துக்குள்ள முடிச்சுடணும்..இருபதாவது அத்தியாயத்துல சித்ர மாலா உள்ள வர்றா..இருபத்தி ரெண்டுல டெய்லர்.. இருபத்தி நாலுல டெய்லர் அவ கதைய முடிக்கறான்.. இப்படிக் கொண்டு போயி முப்பதுல சக்தியும் மனுவும் இணைய கதம்..கதம்..இது தான் அப்ப முடிவு பண்ணி வச்சிருந்தது..
ஆனா,கதை என்னைய இழுத்துத்கிட்டுப் போனதால முப்பதாவது அத்தியாயத்திலும் சித்ர மாலாவந்த பாடில்ல..நானே வெறுத்துப் போயி அதோட முதல் பாகம் முற்றும்னு போட்டேன்.அங்க தான் கதை மொத்தமா எங்கைய விட்டு நழுவுச்சு..நீங்களும் கதையோட சேர்ந்து என்ன எழுத வச்சீங்க..யெஸ்! முப்பது அத்தியாயத்துக்கு மேல கதையக் கொண்டு போனது நீங்க தான் !
ரெண்டாவது பாகத்துல அருக்காணி,கந்தசாமிய அடுத்தடுத்து போட்டுத் தள்ளி மனுவும் தாக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்துல அனுமதிக்கப் பட்ட பின்னால தான் சக்தி முழிச்செழுந்து ஆட்டத்த ஆரம்பிச்சு டெய்லர போட்டுத் தள்ளி இருபது. அத்தியாயத்துக்குள்ள கதைய முடிக்கறது தான் ரெண்டாம் பாகம் ஆரம்பிக்கறப்ப எம் பிளான்..! ஆனா, நீங்க உள்ள பூந்து என் எல்லா பிளானுக்கும் வேட்டு வச்சீங்க...???? ????
Last edited: