• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் பந்தயம் அத்தியாயம் #1(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai
அழகிய பெண் மங்கையான அவள் பிங்க் கலர் சுடிதார் அணிந்து அதை கலரில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள்.

நீண்ட அழகிய கூந்தல் இடையை கடந்து செல்ல அதை தளர்வாக பின்னி அதில் சிவப்பு ரோஜா அணிந்து இருந்தாள்.

சின்ன ஜிமிக்கி கம்மல், கோபுர வடிவ பொட்டு, வலது கையில் பிங்க் வளையல், இடது கையில் வாட்ச் என சாதாரணமாக பார்த்தாலே தேவதை போல் இருந்தாள்.

"இதுதான் பவளமலையா?" என்று அவள் கேட்ட பொழுது அவளின் முத்துபற்கள் பளிச்சென்று பிரகாசிக்க குயில் போல் குரல் ஒலித்தது.

"ம்" என்று ஒற்றைச் சொல்லில் அவனிடமிருந்து பதில் வந்தது.

"வாவ்! எவ்வளவு அழகாக இருக்கு! பியூட்டிபுல்!" என்று உற்சாகமாக சொன்னாள்.

இளைஞன் மலை உச்சியை நன்றாக ஒருமுறை பார்த்து விட்டு திரும்ப தன் காருக்கு சென்றான்.

தன் பான்ட் பாக்கெட்டில் கைவிட்டு கிரடிட் கார்டுகள், ஆயிரம் ஜநூறு தாள்கள் அடங்கிய பர்ஸ், சில பில்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து காருக்குள் போட்டான்.

இறுதியாக ஆப்பிள் ஐ போனையும் எடுத்து காரில் போடும் முன்னர் திரையில் தெரிந்த ஸ்வப்னாவின் முகம் பார்த்தவுடன் அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

சில நிமிடங்கள் அவள் படத்தை பார்த்து ரசித்துவிட்டு ஐபோனை சீட்டில் போட்டுவிட்டு அவைகளை எல்லாம் பார்த்து சிரித்தான்.

கார் கதவை மூடிவிட்டு வந்தவன் பவளமலையை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த ஹாசினியை பார்த்தான் அருண்.

அவள் தோளில் அணிந்திருந்த ஹேண்ட் பேக், கழுத்தில் கவரிங் செயின், வாட்ச் தவிர எதுவும் அவளிடம் இல்லை.

"உங்க பிரண்ட்ஸ் எல்லாம் இங்க இருக்கறதா சொன்னிங்க" என்றான் அருண்.

"தோ! என் பிரண்ட்ஸ் எல்லாம் இங்க இருக்காங்களே" என்று கைகளை காட்டினாள் ஹாசினி.

அவள் கைகளை நீட்டிய இடத்தில் அருண் நன்றாக பார்த்துவிட்டு,
"அங்க என்ன இருக்கு? மரம், செடி, கொடித்தான் இருக்கு." என்றான் அருண்.

"அவங்கதான் என் பிரண்ட்ஸ்" என்றவளை பார்த்து சாகிற நேரத்தில் கடைசியாக ஒரு லூசுகிட்ட மாட்டிகிட்டயே அருண் என்று மனதில் நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"என்னடா மரம் செடி கொடியை எல்லாம் பிரண்ட்ஸ் என்று சொல்றாளே இவ மெண்டலான்னு நினைக்கிறிங்க" என்று மைண்ட் வாய்சை அப்படியே சொல்ல ஆச்சரியமாக பார்த்தான் அருண்.

"நமக்கு தீங்கு விளைவிக்காத நண்பன் இயற்கைதாங்க. இயற்கையை ரசிச்சா மனசு லேசாகும். நமக்குள் இருக்கிற சோகம், துக்கம், கவலை எல்லாம் மறைந்து புது உற்சாகம் பிறக்கும்.

புத்தகத்துல கூட வன்முறைகள் இருக்கலாம் ஆனா இங்க அப்படி எதுவும் இல்லை. பச்சை பசேல்லுன்னு மரங்கள், செடி, கொடிகள், ஜில்லுன்னு மலைக் காற்று, நிசப்தமான அமைதி, பறவைகளின் சத்தம் அப்படின்னு எவ்வளவு அருமையாக இருக்குது." என்று இயற்கையை ரசித்த இளம் பெண்ணை ரசித்தபடி கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் அருண்.

"அப்படியே நீங்க கண்ணை மூடி இயற்கை காற்றை ரசித்தபடி அனுபவிச்சா தனி சுகம். நீங்க வேண்டுமென்றால் முயற்சி செஞ்சு பன்னுங்களேன்" என்று தத்துவம் பேசியவளை ஆச்சரியமாக பார்த்தபடி அருணும் இயற்கையை ரசித்தான்.

அதான் சாகத்தான் போறோமே அதுக்கு முன் இவள் சொல்றபடி கொஞ்சம் ரசித்து விட்டு சாகலாம் என்று நினைத்த அருண் கண்களை மூடினான்.

"அருண் டார்லிங்! ஐ லவ் யூடா செல்லம்!" என்ற ஸ்வப்னாவின் குரலும் அவன் மனதில் ஒலித்தது. அவளின் வெட்கம் சிந்தும் காதல் முகம் மனதில் தோன்ற உடனே சட்டென்று கண்களை திறந்து விட்டான்

Write your reply...
(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top