இரைதேட சென்ற பறவைகள் களைத்து தன் கூட்டிற்க்கு செல்ல , கதிரவனும் ஓய்வெடுக்க செல்ல வேண்டி சோபையாக தன் கதிர்களை பூமிக்கு செலுத்திக்கொண்டிருந்த மாலை நேரம். அந்த மிகப்பெரிய மாளிகையின் பின்புறத்தில் இருந்த அழகிய நந்தவனத்தின் நடுவே இருந்தது அந்த நீர்த்தடாகம். அதன் அருகில் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தாள் அவள் ..... "தேவ வெண்மதி"...கண்களில் நீர் தேங்கி நின்றாலும், கீழே விழக்கூடாது என்ற திடம் அவள் மனதில்.அரண்மனை முழுதும் போர் ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, அதற்கு காரணமானவளோ எதிலும் ஒட்டாமல் , அமைதியாய் இருந்தாள்.
கடந்த ஒரு வார காலமாக இப்படிதான்....மருந்தாய் உணவுண்டு, தூக்கமில்லாமல், மூச்சு விடுவது கூட பாரமாகிபோனது அவளுக்கு. தந்தையை எண்ணி கலங்கினாலும், அவனது துரோகமே பெரும் இடியாய் இருந்தது. அவராசெய்தார்? இருக்காது? என்று ஒரு மனமும், திட்டம்போட்டு சதி செய்துவிட்டான் என்று இன்னொரு மனமும் அவளிடம் வாதிட்டதில் வெகுவாக சோர்ந்தாள். அப்போது அவ்விடம் வந்தாள் அல்லி..
"இளவரசி!!"
முகத்தில் அத்தனை வெறுமை..."
"நான் தோற்றுவிட்டேன் அல்லி!!!! மிகவும் மோசமாக தோற்றுவிட்டேன்.....என் முட்டாள் தனத்தால் தந்தையையும் இழந்து விட்டேன். இனி என் செய்யேன்??? "
அனைத்தும் இழந்த நிர்கதியற்ற நிலை...அவளை தன் தோளில் சாய்த்து கொண்டவளின் கண்கள் கலங்கியது. அல்லிக்கு...எத்தனை தைரியமானவர்...இந்த காதல் இப்படி உருக்குழைத்து நரகத்தை காட்டவல்லதா?
இளவரசி!!! "ஒருவேளை அவர் குற்றமிழைக்கவில்லை என்றறிந்தால்.."
"ஓலைக்கு மேல் ஓலை அனுப்பியாயிற்று...அல்லி , எதற்கும் பதில் இல்லை!!!! அவர் குற்றமற்றவராய் இருந்தால் விளக்கம் அளித்திருக்க வேண்டுமே!!!! ஆனால் அவரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை .....
"அதற்காக இந்த போர் அவசியம்தானா?"
"என்,தந்தை மரணத்திற்க்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்.....என் தந்தை மரணத்திற்கு காரணம் யாராக இருந்தாலு்ம்......யாராக இருந்தாலும் அவர்கள் என் வாளுக்கு பதில் கூறியே ஆகவேண்டும்." அத்தனை சீற்றம் அவள் கண்ணில்.
"உன் காதலை துறந்தாயா?"
"என் காதல் மரித்து விட்டது...." இனி உயிர்பிக்க வழியில்லை. இனி என் வாழ்வனைத்தும் என் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காக மட்டுமே"..
அவ்வாறு கூறும் தோழியவளை கண்டு அல்லி வருத்தமுற்றாள்.
அப்போது அங்கு வந்தான் "இளமாறன்" வெண்மதியின் சிற்றப்பாவின் மகன். அவளது அன்பு இளவல். பதின் பருவத்தில் இருந்தாலும் , வாள் பயிற்சியில் திறமையானவன். அறிவுக்கூர்மை உடையவன்....
" வணங்குகிறேன் தமக்கையே!!"
அவனை கண்டதும் இவளது முகத்தில் சிறு இளக்கம் வந்தது...வாஞ்சையுடன்
"வாருவாய் மாறா!!!!"
அவளெதிரில் அமர்ந்தவன் " "நான் ஒன்று கேட்கலாமா?"
"அதிலென்ன தயக்கம் தாராளமாக வினவலாம்"
"போர் முடிவில் தாங்கள் உறுதியாக உள்ளீரா?"
" ஏன் அவ்வாறு வினவுகிறாய்?"
"சோழரின் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லையே!!"
"ஆனால் குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவும் அவர் முனையவில்லை...அப்படியென்றால் அதை ஒப்புக்கொள்வதாகதானே அர்த்தம்!!!" அதுவுமில்லாமல் நேரில் கண்ட சாட்சியாய் சிறிய தந்தையார் இருக்கிறார்"
"தீர விசாரிப்பதே மெய்யாகும்"
"சிறிய தந்தை ஏன் பொய்யுரைக்க வேண்டும்" எதையோ யோசித்தவன் அமைதியாகி விட்டான்.
ஆகட்டும் தமக்கையே!!!! இனி தாம் கவனமாக இருக்க வேண்டும். எங்கு செல்வதாயினும் பாதுகாப்பாக செல்ல வேண்டும்...என்று படபடத்தவனை கண்டு சிறு புன்னகை எழுந்தது அவளுக்கு....
நீ வளர்ந்து விட்டாய் மாறா!!! உன்னுடைய தமக்கையை நீ பாதுகாக்க மாட்டாயா? என்று கேட்க..
"என் உயிரை கொடுத்தாவது தங்களை காப்பேன்"
அதில் திடுக்கிட்டவள் "மாறா!!! என்ன இது நான் விளையாட்டாகதான் கூறினேன்..."
" ஆனால் நான் உண்மையையே உரைத்தேன், உங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமாயின் அதை ஏற்படுத்துபவர் யாராயினும் அவர்களின் காலனாவேன்..".என்று உறுதியுடன் கூறியவன் ... "நாளை வெளியில் எதாவது பணிக்கு செல்கிறீர்களா?" அவனது அன்பில் நெஞ்சுருகி நின்றவள்
" ஆம் மாறா...போருக்கான ஆயத்த பணிகளை காண காலை சிறிய தந்தையுடன் செல்கிறேன்"
எதையோ நினைத்து கடினமுற்றவன் "கவனம் தமக்கையே ...நான் சென்று வருகிறேன்." என்றவன் அல்லியிடம் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டான்.
"பார்த்தாயா அல்லி இவனுக்குதான் என்மேல் எத்தனை அன்பு...."
"உண்மைதான் ஆனால் இரண்டு நாட்களாக மாறனின் முகம் சரியில்லையே? வெளியே செல்வதும் , வருவதுமாக பரபரப்பாக உள்ளான்." என்று கூறவும் ...
கடந்த ஒரு வார காலமாக இப்படிதான்....மருந்தாய் உணவுண்டு, தூக்கமில்லாமல், மூச்சு விடுவது கூட பாரமாகிபோனது அவளுக்கு. தந்தையை எண்ணி கலங்கினாலும், அவனது துரோகமே பெரும் இடியாய் இருந்தது. அவராசெய்தார்? இருக்காது? என்று ஒரு மனமும், திட்டம்போட்டு சதி செய்துவிட்டான் என்று இன்னொரு மனமும் அவளிடம் வாதிட்டதில் வெகுவாக சோர்ந்தாள். அப்போது அவ்விடம் வந்தாள் அல்லி..
"இளவரசி!!"
முகத்தில் அத்தனை வெறுமை..."
"நான் தோற்றுவிட்டேன் அல்லி!!!! மிகவும் மோசமாக தோற்றுவிட்டேன்.....என் முட்டாள் தனத்தால் தந்தையையும் இழந்து விட்டேன். இனி என் செய்யேன்??? "
அனைத்தும் இழந்த நிர்கதியற்ற நிலை...அவளை தன் தோளில் சாய்த்து கொண்டவளின் கண்கள் கலங்கியது. அல்லிக்கு...எத்தனை தைரியமானவர்...இந்த காதல் இப்படி உருக்குழைத்து நரகத்தை காட்டவல்லதா?
இளவரசி!!! "ஒருவேளை அவர் குற்றமிழைக்கவில்லை என்றறிந்தால்.."
"ஓலைக்கு மேல் ஓலை அனுப்பியாயிற்று...அல்லி , எதற்கும் பதில் இல்லை!!!! அவர் குற்றமற்றவராய் இருந்தால் விளக்கம் அளித்திருக்க வேண்டுமே!!!! ஆனால் அவரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை .....
"அதற்காக இந்த போர் அவசியம்தானா?"
"என்,தந்தை மரணத்திற்க்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்.....என் தந்தை மரணத்திற்கு காரணம் யாராக இருந்தாலு்ம்......யாராக இருந்தாலும் அவர்கள் என் வாளுக்கு பதில் கூறியே ஆகவேண்டும்." அத்தனை சீற்றம் அவள் கண்ணில்.
"உன் காதலை துறந்தாயா?"
"என் காதல் மரித்து விட்டது...." இனி உயிர்பிக்க வழியில்லை. இனி என் வாழ்வனைத்தும் என் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காக மட்டுமே"..
அவ்வாறு கூறும் தோழியவளை கண்டு அல்லி வருத்தமுற்றாள்.
அப்போது அங்கு வந்தான் "இளமாறன்" வெண்மதியின் சிற்றப்பாவின் மகன். அவளது அன்பு இளவல். பதின் பருவத்தில் இருந்தாலும் , வாள் பயிற்சியில் திறமையானவன். அறிவுக்கூர்மை உடையவன்....
" வணங்குகிறேன் தமக்கையே!!"
அவனை கண்டதும் இவளது முகத்தில் சிறு இளக்கம் வந்தது...வாஞ்சையுடன்
"வாருவாய் மாறா!!!!"
அவளெதிரில் அமர்ந்தவன் " "நான் ஒன்று கேட்கலாமா?"
"அதிலென்ன தயக்கம் தாராளமாக வினவலாம்"
"போர் முடிவில் தாங்கள் உறுதியாக உள்ளீரா?"
" ஏன் அவ்வாறு வினவுகிறாய்?"
"சோழரின் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லையே!!"
"ஆனால் குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவும் அவர் முனையவில்லை...அப்படியென்றால் அதை ஒப்புக்கொள்வதாகதானே அர்த்தம்!!!" அதுவுமில்லாமல் நேரில் கண்ட சாட்சியாய் சிறிய தந்தையார் இருக்கிறார்"
"தீர விசாரிப்பதே மெய்யாகும்"
"சிறிய தந்தை ஏன் பொய்யுரைக்க வேண்டும்" எதையோ யோசித்தவன் அமைதியாகி விட்டான்.
ஆகட்டும் தமக்கையே!!!! இனி தாம் கவனமாக இருக்க வேண்டும். எங்கு செல்வதாயினும் பாதுகாப்பாக செல்ல வேண்டும்...என்று படபடத்தவனை கண்டு சிறு புன்னகை எழுந்தது அவளுக்கு....
நீ வளர்ந்து விட்டாய் மாறா!!! உன்னுடைய தமக்கையை நீ பாதுகாக்க மாட்டாயா? என்று கேட்க..
"என் உயிரை கொடுத்தாவது தங்களை காப்பேன்"
அதில் திடுக்கிட்டவள் "மாறா!!! என்ன இது நான் விளையாட்டாகதான் கூறினேன்..."
" ஆனால் நான் உண்மையையே உரைத்தேன், உங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமாயின் அதை ஏற்படுத்துபவர் யாராயினும் அவர்களின் காலனாவேன்..".என்று உறுதியுடன் கூறியவன் ... "நாளை வெளியில் எதாவது பணிக்கு செல்கிறீர்களா?" அவனது அன்பில் நெஞ்சுருகி நின்றவள்
" ஆம் மாறா...போருக்கான ஆயத்த பணிகளை காண காலை சிறிய தந்தையுடன் செல்கிறேன்"
எதையோ நினைத்து கடினமுற்றவன் "கவனம் தமக்கையே ...நான் சென்று வருகிறேன்." என்றவன் அல்லியிடம் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டான்.
"பார்த்தாயா அல்லி இவனுக்குதான் என்மேல் எத்தனை அன்பு...."
"உண்மைதான் ஆனால் இரண்டு நாட்களாக மாறனின் முகம் சரியில்லையே? வெளியே செல்வதும் , வருவதுமாக பரபரப்பாக உள்ளான்." என்று கூறவும் ...