கரிகாலனின் மடலை ஏந்தி வாயுவேகத்தில் வந்தது மித்ரன்.அதை கண்டவுடன் மனதில் மகிழ்ச்சி வெள்ளமாய் பொங்க ஓடிவந்தாள் வெண்மதி.....அதில் இருந்த செய்தியை படித்தவுடன் அவள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... அப்போது அங்கு வந்த அல்லிக்கும் அந்த மகிழ்ச்சி பரவ,
"என்ன இது அதிசயம் நேற்று வரை அமாவாசையாய் இருண்டிருந்த தோழியின் முகம் இன்று பௌர்ணமி போல் மிளிர்கிறதே?, தமையனிடம் இருந்து மடல் வந்ததா என்ன?"
"ம்ச்..அல்லி பரிகாசம் செய்யாதே" என்று சிணுங்க...
"கூறு கூறு என்ன சொன்னார் உன்னவர்"
"அவர் என்னை சந்திக்க வருகிறார்"
என்று சிறுபிள்ளைபோல் தன்னை சுற்றியவளை பார்த்து இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் இறைவா!!! என்று வேண்டுதல் வைத்தாள்.....
" பார் நான் வந்த விடயத்தை மறந்தேன்...அரசர் உன்னை அழைத்தார்"
"இது எப்போதும் நடப்பதுதானே...வா செல்லலாம்"..
முகம் முழுதும் புன்னகையுடன் வரும் மகளை வாஞ்சையுடன் பார்த்த அரசர் சில காலமாக வாடியிருந்த மகளின் முகம் இன்று,பொலிவுடன் இருப்பதை கண்டு மகிழ்ந்து போனார்.அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்..மகளின் மெலிவு,அவரை வருத்தம் கொள்ள செய்தது.
" இதே போல் என்றும் மகிழ்ச்சியாக இரு மகளே " தலையில் கை வைத்து பரிவுடன் தடவினார்.
"இனி கவலையில்லை தந்தையே எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்"
"யாரம்மா அவர் என் மகளின் கவலையை போக்கியவர் "
அப்போதுதான் உளறி வைத்ததை உணர்ந்தவள் , ஒரு சமாளிப்பு சிரிப்பு சிரித்து வைத்தாள்...."
"அது..அது..அதுவா தந்தையே ..ஹான் கடவுள்..கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறினேன்..."
அவளின் பதிலில் புன்னகைத்தவர் "சரியம்மா .... நான்"
"நீங்கள் நகர்வலம் செல்கிறீர்கள், வருவதற்க்கு இரண்டு நாட்கள் ஆகும்..அதுவரை கவனமாக இருக்க வேண்டும் ..அதுதானே தந்தையே"
"ஹா..ஹா..ஹா... சத்தமாக சிரித்தவர் கவனமாக இருக்க வேண்டியது நீயில்லையம்மா, இந்த அரண்மனையில் உள்ளவர்களை கவனமாக பார்த்துக்கொள்...வருங்கால மகாராணி ஆயிற்றே ..நீதான் நம் மக்களை காக்க வேண்டும்"
"ஆகட்டும் தந்தையே நீங்கள் சென்று வாருங்கள் இங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்..உடன் மாறனும் இருக்கிறான் பிறகென்ன கவலை "
அவள் மனதிற்கு ஏதோ நெருடலாக பட " "சிறிய தந்தையே கவனமாக சென்று வாருங்கள்" என்று கூற
"தமையனை நான் பார்த்துக்கொள்கிறேன் மகளே கவலை வேண்டாம்"
ஆம் அரசர் நெடுமாறர் , தன் ஒன்றுவிட்ட தம்பி பராந்தகனுடன் நகர்வலம் செல்கிறார்..இவ்வாறு மாறுவேடத்தில் நாட்டிற்குள் சென்று மக்களின் நிறை குறைகளை கண்டறிந்து அதை தீர்த்து வைப்பார். அவ்வாறு சென்றால் திரும்பி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்..
மீண்டும் ஒருமுறை பத்திரம் சொல்லி இருவரும் கிளம்பி சென்றனர். அன்றுதான் அவள் தந்தையை கடைசியாக கண்டது அதன் பிறகு இரண்டாம் நாள் காலை அவர் மரணித்த செய்திதான் வந்தது..அதுவும் அவள் யாருடைய வரவிற்காக காத்திருந்தாளோ அந்த ஆதித்தன் அரசரை கொன்று விட்டான் என்ற தகவலே வந்தது...அதுவும் அவளின் சிறிய தந்தை தான் உடன் இருந்த போதே இது நடந்ததாகவும் கூறினார்.
கரிகாலனும், தந்தையும் வாக்குவாதத்தில் ஈடுபட, வாக்குவாதம் முற்றி எதிர்பாரா சமயத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றான் என்றும் கூறினார்... முதலில் இதை வெண்மதி நம்பவில்லை. உடனே மித்ரனின் மூலம் என்ன நடந்தது என்று அறிய தூது அனுப்பினாள்..ஆனால் பதிலும் வரவில்லை....மித்ரனும் வரவில்லை...
அதன்பிறகும் தான் அமைதியாய் இருப்பதில் பலனில்லை.... நெஞ்சை பிளக்கும் வேதனைதான்...தந்தையை இழந்தது ஒரு புறமென்றால், அதற்கு காரனமானவன் ஆதித்தன் என்பதில் இன்னும் நரகத்தை கண்டாள். கூடவே சிற்றப்பாவின் போதனைகளும் சேர்ந்து சினமூட்ட தந்தைக்கு மகளாய், தன் கடமையை ஆற்ற போர் அறிவிப்பை விடுத்துவிட்டாள்...
ஆனால் இன்னும் கூட ஆதித்தன் வருவானா என எதிர்பார்க்கும் மனதை அடக்குவதே பெரும்பாடாக இருக்க , அதற்கு கோபம் என்னும் முகமூடி போட்டு அடக்கினாள்.
இதை யோசித்தே விடியல் புலர்ந்ததை அறியவில்லை....பறவையின் கூச்சலில் சிந்தை தெளிந்தவள் ஆற்ற வேண்டிய கடமை அறிந்து தனது சிறிய தத்தையுடன் செல்ல தயாராக நிற்கும் போது...அவ்விடம் வந்தான் மாறன்...
"கவனம் தமக்கையே...விழிப்போடு இருங்கள்"
அவனது அக்கறையில் நெகிழ்ந்தவள் "அப்படியென்றால் நீயும் எங்களோடு வா"
"வேண்டாம்"
"இல்லை"
என இரண்டு குரல்கள் ஒலித்தன...
" வேண்டாம் " என கூறியது பராந்தகன் .
வெண்மதி "ஏன்?" என்று ஒரு பார்வை பார்வையை மட்டுமே அவரிடம் செலுத்த அதை அறிந்தவர்
"அது அவன் இங்கு உள்ள பணியை மேற்பார்வை பார்க்க வேண்டும்"
என்று கூற, தந்தையை பார்த்த மாறன் புன்னகையுடன்
"ஆம் தமக்கையே அவசியமான வேலை உள்ளது...தாங்கள் சென்று வாருங்கள்" என்க...
அவனிடம் தலையசைத்து விடைபெற்றாள் வெண்மதி.அவர்கள் சென்றதை உறுதிபடுத்திய மாறன் தன் நண்பனை அழைத்து ஏதோ கூறிவிட்டு, தானும் புரவியில் ஏறி பறந்தான்.
"என்ன இது அதிசயம் நேற்று வரை அமாவாசையாய் இருண்டிருந்த தோழியின் முகம் இன்று பௌர்ணமி போல் மிளிர்கிறதே?, தமையனிடம் இருந்து மடல் வந்ததா என்ன?"
"ம்ச்..அல்லி பரிகாசம் செய்யாதே" என்று சிணுங்க...
"கூறு கூறு என்ன சொன்னார் உன்னவர்"
"அவர் என்னை சந்திக்க வருகிறார்"
என்று சிறுபிள்ளைபோல் தன்னை சுற்றியவளை பார்த்து இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் இறைவா!!! என்று வேண்டுதல் வைத்தாள்.....
" பார் நான் வந்த விடயத்தை மறந்தேன்...அரசர் உன்னை அழைத்தார்"
"இது எப்போதும் நடப்பதுதானே...வா செல்லலாம்"..
முகம் முழுதும் புன்னகையுடன் வரும் மகளை வாஞ்சையுடன் பார்த்த அரசர் சில காலமாக வாடியிருந்த மகளின் முகம் இன்று,பொலிவுடன் இருப்பதை கண்டு மகிழ்ந்து போனார்.அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்..மகளின் மெலிவு,அவரை வருத்தம் கொள்ள செய்தது.
" இதே போல் என்றும் மகிழ்ச்சியாக இரு மகளே " தலையில் கை வைத்து பரிவுடன் தடவினார்.
"இனி கவலையில்லை தந்தையே எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்"
"யாரம்மா அவர் என் மகளின் கவலையை போக்கியவர் "
அப்போதுதான் உளறி வைத்ததை உணர்ந்தவள் , ஒரு சமாளிப்பு சிரிப்பு சிரித்து வைத்தாள்...."
"அது..அது..அதுவா தந்தையே ..ஹான் கடவுள்..கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறினேன்..."
அவளின் பதிலில் புன்னகைத்தவர் "சரியம்மா .... நான்"
"நீங்கள் நகர்வலம் செல்கிறீர்கள், வருவதற்க்கு இரண்டு நாட்கள் ஆகும்..அதுவரை கவனமாக இருக்க வேண்டும் ..அதுதானே தந்தையே"
"ஹா..ஹா..ஹா... சத்தமாக சிரித்தவர் கவனமாக இருக்க வேண்டியது நீயில்லையம்மா, இந்த அரண்மனையில் உள்ளவர்களை கவனமாக பார்த்துக்கொள்...வருங்கால மகாராணி ஆயிற்றே ..நீதான் நம் மக்களை காக்க வேண்டும்"
"ஆகட்டும் தந்தையே நீங்கள் சென்று வாருங்கள் இங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்..உடன் மாறனும் இருக்கிறான் பிறகென்ன கவலை "
அவள் மனதிற்கு ஏதோ நெருடலாக பட " "சிறிய தந்தையே கவனமாக சென்று வாருங்கள்" என்று கூற
"தமையனை நான் பார்த்துக்கொள்கிறேன் மகளே கவலை வேண்டாம்"
ஆம் அரசர் நெடுமாறர் , தன் ஒன்றுவிட்ட தம்பி பராந்தகனுடன் நகர்வலம் செல்கிறார்..இவ்வாறு மாறுவேடத்தில் நாட்டிற்குள் சென்று மக்களின் நிறை குறைகளை கண்டறிந்து அதை தீர்த்து வைப்பார். அவ்வாறு சென்றால் திரும்பி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்..
மீண்டும் ஒருமுறை பத்திரம் சொல்லி இருவரும் கிளம்பி சென்றனர். அன்றுதான் அவள் தந்தையை கடைசியாக கண்டது அதன் பிறகு இரண்டாம் நாள் காலை அவர் மரணித்த செய்திதான் வந்தது..அதுவும் அவள் யாருடைய வரவிற்காக காத்திருந்தாளோ அந்த ஆதித்தன் அரசரை கொன்று விட்டான் என்ற தகவலே வந்தது...அதுவும் அவளின் சிறிய தந்தை தான் உடன் இருந்த போதே இது நடந்ததாகவும் கூறினார்.
கரிகாலனும், தந்தையும் வாக்குவாதத்தில் ஈடுபட, வாக்குவாதம் முற்றி எதிர்பாரா சமயத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றான் என்றும் கூறினார்... முதலில் இதை வெண்மதி நம்பவில்லை. உடனே மித்ரனின் மூலம் என்ன நடந்தது என்று அறிய தூது அனுப்பினாள்..ஆனால் பதிலும் வரவில்லை....மித்ரனும் வரவில்லை...
அதன்பிறகும் தான் அமைதியாய் இருப்பதில் பலனில்லை.... நெஞ்சை பிளக்கும் வேதனைதான்...தந்தையை இழந்தது ஒரு புறமென்றால், அதற்கு காரனமானவன் ஆதித்தன் என்பதில் இன்னும் நரகத்தை கண்டாள். கூடவே சிற்றப்பாவின் போதனைகளும் சேர்ந்து சினமூட்ட தந்தைக்கு மகளாய், தன் கடமையை ஆற்ற போர் அறிவிப்பை விடுத்துவிட்டாள்...
ஆனால் இன்னும் கூட ஆதித்தன் வருவானா என எதிர்பார்க்கும் மனதை அடக்குவதே பெரும்பாடாக இருக்க , அதற்கு கோபம் என்னும் முகமூடி போட்டு அடக்கினாள்.
இதை யோசித்தே விடியல் புலர்ந்ததை அறியவில்லை....பறவையின் கூச்சலில் சிந்தை தெளிந்தவள் ஆற்ற வேண்டிய கடமை அறிந்து தனது சிறிய தத்தையுடன் செல்ல தயாராக நிற்கும் போது...அவ்விடம் வந்தான் மாறன்...
"கவனம் தமக்கையே...விழிப்போடு இருங்கள்"
அவனது அக்கறையில் நெகிழ்ந்தவள் "அப்படியென்றால் நீயும் எங்களோடு வா"
"வேண்டாம்"
"இல்லை"
என இரண்டு குரல்கள் ஒலித்தன...
" வேண்டாம் " என கூறியது பராந்தகன் .
வெண்மதி "ஏன்?" என்று ஒரு பார்வை பார்வையை மட்டுமே அவரிடம் செலுத்த அதை அறிந்தவர்
"அது அவன் இங்கு உள்ள பணியை மேற்பார்வை பார்க்க வேண்டும்"
என்று கூற, தந்தையை பார்த்த மாறன் புன்னகையுடன்
"ஆம் தமக்கையே அவசியமான வேலை உள்ளது...தாங்கள் சென்று வாருங்கள்" என்க...
அவனிடம் தலையசைத்து விடைபெற்றாள் வெண்மதி.அவர்கள் சென்றதை உறுதிபடுத்திய மாறன் தன் நண்பனை அழைத்து ஏதோ கூறிவிட்டு, தானும் புரவியில் ஏறி பறந்தான்.