கரிகாலன் தனக்கு மாப்பிள்ளை என்பதில் மகிழ்ந்த நெடுமாறர், "பார்த்தாயா பராந்தகா என் மகள் பாக்கியசாலி ..இப்படி ஒரு வரன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..மேலும் அவளை பிரியும் துன்பமும் இல்லை...
"இல்லை அண்ணா இந்த திருமணம் நடக்க போவதில்லை"
"பராந்தகா என்ன அபத்தம் உரைக்கிறாய்"
"தங்களை சோழன் கொன்ற பின் எப்படி தங்கள் மகள் அவனை மணப்பாள்" என்றவாறு எதிர்பாறா சமயத்தில் வாளை அவர் நெஞ்சில் இறக்கினான்...பராந்தகன்.. அவனின் இந்த துரோகத்தில் இத்தனை நாளாய் நச்சுப் பாம்புக்கு பால்வார்த்ததை எண்ணி மனம் நொந்தவர் தன் உயிரை விட்டார்.
பராந்தகன் இதை கூறி முடிக்க வெண்மதியின் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது... தந்தை ஆதித்தனை ஏற்று கொண்டு , திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் என்பதில் மகிழ்ந்தாலும் அவரது முடிவு மனம் கனக்க செய்தது.....
" இனி உன்னையும் கொன்று அந்த பழியையும் அந்த கரியவன் மேல் சுமத்துவேன்... பிறகு அரியணையில் நான் .....ஹா...ஹா....ஹா..." என்று,கொக்கரித்தவனை கண்டு கோபம் கிளர்ந்தெழ
"என்னவரான அம்மன்னவர் இருக்கும் வரை என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது அற்பனே!!!!" அதில் அவனது சிரிப்பு மறைய
"என்ன புறாவை தூதுவிட்டோம் என்ற நம்பிக்கையா?"
திகைப்புடன் "அது எப்படி உனக்கு தெரியும்!!"
" ஹா.. நீ இதைத்தான் செய்வாய் என்று அறிவேன் , அதனால் தான் உன்னோடு சேர்த்து உன் புறாவையும் கண்காணித்து மடல் கொண்டு சென்ற புறாவை அம்பிட்டு வீழ்த்தி விட்டேன். "
என்ன மித்ரனை கொன்றாயா?" திகைப்பு அவளிடத்தில்.
"அதுமட்டுமில்லை சோழ நாட்டிலிருந்து வந்த அனைத்து மடல்களும் பாண்டிய எல்லையிலேயே கவரப்பட்டன....அதில் அந்த கரியவனின் மடல்களும் அடக்கம்."
இதை அவள் எதிர்பார்க்கவில்லை எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று நொந்துகொண்டாள். இருப்பினும் ஆதித்தன் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை...
" அவர் நிச்சயம் வருவார்"
"வருவான் வந்து உன் உயிரற்ற உடலை காண்பான் , என் தமையனை நலம் விசாரித்ததாக சொல்"
என்றவாறு நொடி நேரத்தில் வாள் வீச எங்கிருந்தோ வந்த அம்பு பராந்தகனின் வாளை தட்டிச் சென்றது. எங்கிருந்து வந்தது இந்த அம்பு என்று திகைத்த பராந்தகன் திரும்பி பார்க்க அங்கு காலபைரவனாய் உச்சபட்ச கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்த கரிகாலனை கண்டதும் அதிர்ந்தான் என்றால் , உடன் இருந்த இளமாறனையும், அமைச்சரவையின் முக்கிய மந்திரிகளையும் கண்டவன் பேரிடியை தலையில் தாங்கியவன் போல ஆனான்.
பராந்தகன் வாள் ஏந்தவும் ஒரு கணம் திகைத்த வெண்மதி தன் வாளை ஏந்த முற்பட்ட போதே அம்பு எய்யப்பட , யாரென்று பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள் என்றால் உடன் மாறனை கண்டவளுக்கு இன்னும் அதிர்ச்சியே...அப்படியே நின்றிருந்தவளை கரிகாலனின் குரல் சுயத்திற்க்கு கொண்டு வந்தது ....
"உன் குள்ள நரி தனத்தை கையும்,களவுமாக பிடிப்பதற்க்கே இத்தனை நாள் பராந்தகா!!! இல்லையென்றால் இன்னேரம் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்."
இனி தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை அறிந்த பராந்தகன் அமைதியாகிவிட ...
"என்ன இதெல்லாம் எப்படி நடந்தது என்பதை அறிய வேண்டுமா?"
வெண்மதிக்குமே அறிய வேண்டியிருந்தது ...மாறன் எவ்வாறு ஆதித்தரோடு என்று.
"இங்கிருந்து சென்ற நான்காவது நாள் என் தந்தையுடன் திருமணத்தை பற்றி பேசவேண்டும் என்று எண்ணியிருந்த வேளைதான், போருக்கான ஓலை வந்தது... ஓலை வந்தது அதிர்ச்சி என்றால் அதன் காரனம் பேரதிர்ச்சியாய் இருந்தது.... என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து விட்டேன்.... அதற்கேற்றார் போல் அடுத்த நாள் மித்ரன் வந்தான்" இப்போது கண்கள் வெண்மதியை பார்த்தது.
,"என்ன மித்ரன் இருக்கிறானா? இங்கு வந்துள்ளானா என்று கண்கள் அலைபாய அவளது தேடலை அறிந்தவன் ஒருவித சத்தம் கொடுக்க மித்ரன் பறந்து வந்து வெண்மதியிடம் தஞ்சமடைந்தது.....
"மித்ரா வந்துவிட்டாயா" அவள் மித்ரனிடம் நலம் விசாரிக்க அதை கண்டவன் மனம் சற்று அமைதியடைந்தது.
மீண்டும் தொடர்ந்தான் "மித்ரன் அங்கு வரும் போதே மிகுந்த அடிபட்டிருந்தான். அவனிடம் வந்த மடல், அவனின் நிலை இதையெல்லாம் வைத்து இங்கு நிலமை சரியில்லை என்று அறிந்து கொண்டேன்.... அதோடு இங்கிருந்து செல்லும் மடல்கள் எல்லையிலேயே பறிக்க படுவதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.எனக்கு நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார்...ஒருமுறை வெண்மதி இளமாறனை பற்றி கூற , இதற்கு இளமாறனே உகந்தவன் என்று அவனை தொடர்பு கொண்டேன்....அரசவைக்கு வரும் மடல்கள் மட்டுமே நிறுத்தப்பட்டன....அதனால் இளமாறனின் பெயரால் அனுப்பபட்ட மடல் அவனை அடைந்தது...அதில் கூறியிருந்த படி இந்த வேலைகளை மூன்று நாட்களில் முடித்து ,நான்காம் நாள் கிளம்பி ஐந்தாவது நாள் இங்கு வந்தேன்.
ஆனால் மாறன் எளிதில் நான் கூறியவற்றை நம்பவில்லை... மித்ரனை கண்ட பின்பே நம்ப தொடங்கினான். அவனும் கண்கானிக்க குற்றவாளி நீ இப்போது எங்கள் முன்னால்" நடந்ததை கூறவும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதை பராந்தகன் அறிந்து கொண்டான்.
வெண்மதியிடம் வந்த மாறன் "மன்னிக்க வேண்டுகிறேன் தமக்கையே!!! என் பொருட்டே பெரியப்பாவிற்க்கு இந்த நிலை" என்று கலங்கியவனை
"இல்லை மாறா...இது ஒரு தனி மனிதனின் பேராசை..."
"இல்லை அண்ணா இந்த திருமணம் நடக்க போவதில்லை"
"பராந்தகா என்ன அபத்தம் உரைக்கிறாய்"
"தங்களை சோழன் கொன்ற பின் எப்படி தங்கள் மகள் அவனை மணப்பாள்" என்றவாறு எதிர்பாறா சமயத்தில் வாளை அவர் நெஞ்சில் இறக்கினான்...பராந்தகன்.. அவனின் இந்த துரோகத்தில் இத்தனை நாளாய் நச்சுப் பாம்புக்கு பால்வார்த்ததை எண்ணி மனம் நொந்தவர் தன் உயிரை விட்டார்.
பராந்தகன் இதை கூறி முடிக்க வெண்மதியின் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது... தந்தை ஆதித்தனை ஏற்று கொண்டு , திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் என்பதில் மகிழ்ந்தாலும் அவரது முடிவு மனம் கனக்க செய்தது.....
" இனி உன்னையும் கொன்று அந்த பழியையும் அந்த கரியவன் மேல் சுமத்துவேன்... பிறகு அரியணையில் நான் .....ஹா...ஹா....ஹா..." என்று,கொக்கரித்தவனை கண்டு கோபம் கிளர்ந்தெழ
"என்னவரான அம்மன்னவர் இருக்கும் வரை என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது அற்பனே!!!!" அதில் அவனது சிரிப்பு மறைய
"என்ன புறாவை தூதுவிட்டோம் என்ற நம்பிக்கையா?"
திகைப்புடன் "அது எப்படி உனக்கு தெரியும்!!"
" ஹா.. நீ இதைத்தான் செய்வாய் என்று அறிவேன் , அதனால் தான் உன்னோடு சேர்த்து உன் புறாவையும் கண்காணித்து மடல் கொண்டு சென்ற புறாவை அம்பிட்டு வீழ்த்தி விட்டேன். "
என்ன மித்ரனை கொன்றாயா?" திகைப்பு அவளிடத்தில்.
"அதுமட்டுமில்லை சோழ நாட்டிலிருந்து வந்த அனைத்து மடல்களும் பாண்டிய எல்லையிலேயே கவரப்பட்டன....அதில் அந்த கரியவனின் மடல்களும் அடக்கம்."
இதை அவள் எதிர்பார்க்கவில்லை எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று நொந்துகொண்டாள். இருப்பினும் ஆதித்தன் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை...
" அவர் நிச்சயம் வருவார்"
"வருவான் வந்து உன் உயிரற்ற உடலை காண்பான் , என் தமையனை நலம் விசாரித்ததாக சொல்"
என்றவாறு நொடி நேரத்தில் வாள் வீச எங்கிருந்தோ வந்த அம்பு பராந்தகனின் வாளை தட்டிச் சென்றது. எங்கிருந்து வந்தது இந்த அம்பு என்று திகைத்த பராந்தகன் திரும்பி பார்க்க அங்கு காலபைரவனாய் உச்சபட்ச கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்த கரிகாலனை கண்டதும் அதிர்ந்தான் என்றால் , உடன் இருந்த இளமாறனையும், அமைச்சரவையின் முக்கிய மந்திரிகளையும் கண்டவன் பேரிடியை தலையில் தாங்கியவன் போல ஆனான்.
பராந்தகன் வாள் ஏந்தவும் ஒரு கணம் திகைத்த வெண்மதி தன் வாளை ஏந்த முற்பட்ட போதே அம்பு எய்யப்பட , யாரென்று பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள் என்றால் உடன் மாறனை கண்டவளுக்கு இன்னும் அதிர்ச்சியே...அப்படியே நின்றிருந்தவளை கரிகாலனின் குரல் சுயத்திற்க்கு கொண்டு வந்தது ....
"உன் குள்ள நரி தனத்தை கையும்,களவுமாக பிடிப்பதற்க்கே இத்தனை நாள் பராந்தகா!!! இல்லையென்றால் இன்னேரம் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்."
இனி தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை அறிந்த பராந்தகன் அமைதியாகிவிட ...
"என்ன இதெல்லாம் எப்படி நடந்தது என்பதை அறிய வேண்டுமா?"
வெண்மதிக்குமே அறிய வேண்டியிருந்தது ...மாறன் எவ்வாறு ஆதித்தரோடு என்று.
"இங்கிருந்து சென்ற நான்காவது நாள் என் தந்தையுடன் திருமணத்தை பற்றி பேசவேண்டும் என்று எண்ணியிருந்த வேளைதான், போருக்கான ஓலை வந்தது... ஓலை வந்தது அதிர்ச்சி என்றால் அதன் காரனம் பேரதிர்ச்சியாய் இருந்தது.... என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து விட்டேன்.... அதற்கேற்றார் போல் அடுத்த நாள் மித்ரன் வந்தான்" இப்போது கண்கள் வெண்மதியை பார்த்தது.
,"என்ன மித்ரன் இருக்கிறானா? இங்கு வந்துள்ளானா என்று கண்கள் அலைபாய அவளது தேடலை அறிந்தவன் ஒருவித சத்தம் கொடுக்க மித்ரன் பறந்து வந்து வெண்மதியிடம் தஞ்சமடைந்தது.....
"மித்ரா வந்துவிட்டாயா" அவள் மித்ரனிடம் நலம் விசாரிக்க அதை கண்டவன் மனம் சற்று அமைதியடைந்தது.
மீண்டும் தொடர்ந்தான் "மித்ரன் அங்கு வரும் போதே மிகுந்த அடிபட்டிருந்தான். அவனிடம் வந்த மடல், அவனின் நிலை இதையெல்லாம் வைத்து இங்கு நிலமை சரியில்லை என்று அறிந்து கொண்டேன்.... அதோடு இங்கிருந்து செல்லும் மடல்கள் எல்லையிலேயே பறிக்க படுவதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.எனக்கு நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார்...ஒருமுறை வெண்மதி இளமாறனை பற்றி கூற , இதற்கு இளமாறனே உகந்தவன் என்று அவனை தொடர்பு கொண்டேன்....அரசவைக்கு வரும் மடல்கள் மட்டுமே நிறுத்தப்பட்டன....அதனால் இளமாறனின் பெயரால் அனுப்பபட்ட மடல் அவனை அடைந்தது...அதில் கூறியிருந்த படி இந்த வேலைகளை மூன்று நாட்களில் முடித்து ,நான்காம் நாள் கிளம்பி ஐந்தாவது நாள் இங்கு வந்தேன்.
ஆனால் மாறன் எளிதில் நான் கூறியவற்றை நம்பவில்லை... மித்ரனை கண்ட பின்பே நம்ப தொடங்கினான். அவனும் கண்கானிக்க குற்றவாளி நீ இப்போது எங்கள் முன்னால்" நடந்ததை கூறவும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதை பராந்தகன் அறிந்து கொண்டான்.
வெண்மதியிடம் வந்த மாறன் "மன்னிக்க வேண்டுகிறேன் தமக்கையே!!! என் பொருட்டே பெரியப்பாவிற்க்கு இந்த நிலை" என்று கலங்கியவனை
"இல்லை மாறா...இது ஒரு தனி மனிதனின் பேராசை..."
Last edited: