Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
கொத்துக் கறி - கால் கிலோ
சாதாரண கறி - கால் கிலோ
சி. வெங்காயம் - கால் கிலோ
பொ.கடலை - 100 கிராம்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பூண்டு - 20 பல்
மிளகு - 15
வரமிளகாய் - 7
கறிமசாலா உதிரி - சிறிதளவு
வெங்காயம் - நறுக்கியது குழம்புக்கு
தக்காளி - 1 பெரியது
மிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்- 1 துருவியது
செய்முறை:-
கொத்திய கறியை கழுவி நன்கு வடித்துக் கொள்ளவும். சாதாரண கறியை குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீில் வேகவைத்து கொள்ளவும். கழுவிய கொத்துக்கறியை தனியாக முதலில் அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் வரமிளகாய், தேங்காய், பொ. கடலை, சோம்பு, சீரகம், கறிமசாலா உதிரி, கசகசா, பூண்டு, மிளகு, சி. வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்துஅரைத்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வேகவைத்த கறியுடன் மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள், மல்லித்தூள் சேர்த்து கொள்ளவும். வாணலியில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு கறிமசாலா, சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பாதி வேகவைத்த மசாலா சேர்த்த கறியை சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின்னர் நான்கு உருண்டைகளை போட்டு சிறிது கொதிக்க விடவும். பத்து நிமிடம் கழித்து இன்னும் நான்கு உருண்டைகள் சேர்த்து அதே போல் எல்லா உருண்டைகளையும் சேர்த்து உப்பு சரிபார்த்து இறக்கவும்.