- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் :
துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.
சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள் என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.
சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது, தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.
சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.
விரத பூஜை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் பெருகும். ஈடுபாடு அதிகரிக்கும் என்ற காரணத்தால் சுயமாக செய்வது நல்லது. பூஜையை தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயி நாத் மஹாராஜ்கீ ஜய் என்று 3 முறை கூற வேண்டும். பிறகு அவரவர் இஷ்ட தெய்வங்களை மனதில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
2. பின்னர், சாயி நாதரை மனதில் நினைத்து விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும். குங்குமம், சந்தனம் வைத்துக் கொள்ளலாம்.
3. பூஜை செய்யும் இடத்தில் ஒரு மணையை போட்டு, அதன் மீது புதிய வெள்ளை துணியையோ அல்லது துவைத்து சுத்தம் செய்த வெள்ளைத் துணியையோ போடவும்.
4. அந்த ஆசனத்தின் மீது சாயி பாபாவின் சிலையையோ அல்லது படத்தையோ வைத்து இரு பக்கமும் தீபம் ஏற்ற வேண்டும். பசு நெய்யிலோ அல்லது நல்லெண்ணையிலோ தீபம் ஏற்ற வேண்டும்.
5. பூஜை தொடங்குவதற்கு முன் பாபாவின் படத்திற்கோ அல்லது சிலைக்கோ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை ஏற்ற வேண்டும்.
எனக்கு சமர்ப்பிக்கப்படும் இலை, புஷ்பம், தீர்த்தம் எதுவாகிலும் அதை பரிசுத்தமான மனதோடும், பக்தியுடனும் எனக்கு சமர்ப்பிப்பார்களேயானால் அவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் சாயி நாதர். இதையேதான் பகவத்கீதை 9வது அத்தியாயத்தில் ராஜவித்யா ராஜ குஹ்யா யோகத்தில் 26வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு கூறினார்.
பத்ரம், புஷ்பம், ஃபலம், தோயம், யோமே, பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் ச் னாமி ப்ரயதாத்மன :
மேலுள்ள விசயத்தை நினைவில் கொண்டு, பரிசுத்தமான மனதோடும், பக்தி விசுவாசத்துடனும் பூஜை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், விசேஷமான பலனை பெறலாம் என்பது உறுதி.
சீரடி சாயி நாதா ஸ்மரணம்!
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு நாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப் பெயர்), நிரதாக்னி ஹோத்தரன் (ஷீர்டியில் அவரருகே துனி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்), அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர், தியான ஸ்வரூபி, அவரே பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன், அப்படிப்பட்ட சாயிநாதரை ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோம். ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜய்!
தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில், செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது. இது தெரியாமல் மாயையில் திளைத்து பொறாமை, கோபம், துவேஷம், உதாசீனப்படுத்துதல் போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது போல், இந்த லோகத்தில் பிறப்பதும், இறப்பதுமான சுழற்சி நடந்து கொண்டிருக்கிறது. இறப்பது மறுபடியும் பிறப்பதற்கா? எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம்? என்று கேட்கிறார் சாயிபாபா. ஒரு தடவை நிதானமாக யோசியுங்கள். நிரந்தரம் இல்லாத ஈனமான, அருவருப்பான ஒரு விநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர, நிரந்தரமான சந்தோஷம் ஒன்று இருக்கிறது என்பதை அறியவில்லை. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ?
க்ருதே ஜனார்த்தனோ, த்ரேதாயாம் ரகு நந்தன:
த்வாபரே ராம கிருஷ்ணௌச
கலௌ ஸ்ரீ ஸாயிநாத:
க்ருத யுகத்தில் சமதா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை) மூலமும், த்ரேதாயுகத்தில் யாகத்தின் மூலமும், த்வாபர யுகத்தில் பூஜை முறையிலும் தெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டும் போதும் என்கிறார் சாயி.
நாமஸ்மரணையிலும் குண நாமஸ்மரணம் விசேஷம். யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ, அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயணம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது, மனது பகவானுடன் ஐக்கியமாகிறது. இதன் மூலமே முழு பலன் அடைய முடியும். அதனால்தான், கலியுகத்தில் நாம ஸ்மரணை போதும் என்பது சாயிநாதரின் நோக்கம். அதனால்தான், நாம் அனைவருக்கும் நாதரான சாயிநாதரின் சரித்திரமான சாயி ஸத்சரித்திரத்தை இந்த சப்த சப்தாஹாவில் பாராயணம் செய்வது அவசியமாகிறது.
கண்மூடித்தனமாக இல்லாமல், எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து, கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, எனது நாமத்தை ஸ்மரனை செய்தால் போதும் என்கிறார் பாபா. அதோடு பாபா கூறிய மற்றொரு உன்னதமான விஷயம். பலவகையில் வழி தவறி ஓடும் மனதை, அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார். வழி தவறிய மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நம் மனதை நாமே கட்டுப்படுத்தி, அதற்குப் பிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.
அவ்வாறு, நம் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அது பூரண விசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை, பஜனை, பாராயணம், ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும்.
ஸத் ஸங்கத்வே நி: ஸங்கத்வம்
நி: ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச் சலதத்யம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி
என்று ஆதிசங்கரர் கூறினாரென்றால் ஸத்ஸங்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடக்கும் ஸத்சங்கங்களில் கலந்து கொண்டு, அங்கு சொல்லப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு நடந்தால், குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சாயி ஸத் சரித்திர பாராயணம்!
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் சரித்திரத்தை நினைத்து, சாயி பாபாவும் அவரது சரித்திரமும் (இரண்டும்) வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிய வேண்டும். எங்கெல்லாம் சாயி ஸத் சரித்திர பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சீரடி சாயிநாதர், பவித்ரமான கோதாவரி, துவாரகமாயி, குருவிருக்குமிடம், துனி ஆகியவை அகண்டமான கீர்த்தி அளிக்கும் நோக்கில் நமக்கு பிரத்யட்சமாக தோன்றும்.
நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரவெள
மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத
எங்கெல்லாம் பக்தியோடு தன் நாமஸ்மரனை, பஜனை, பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கு பக்தர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மேலும் நன்மை தருவதற்கு பகவான் அங்கு கட்டாயம் இருப்பார். அதனால், வியாழக்கிழமைகளில் விரத பூஜையும் தொடர்ந்து 67 நாட்கள் (9 வாரங்கள்) தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் - சாயி ஸத் சரித்திரத்தை பக்தி விசுவாசத்துடன் பாராயணம் செய்து சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறலாம்.
1910 ஆம் ஆண்டு, முதன் முதலில் ஹேமந்த்பந்த் சீரடியில் காலடி வைத்தபோது, ஊர் எல்லையில் கோதுமை மாவை தூவிக் கொண்டிருந்த பாபாவை கண்டார். காரணம் கேட்டபோது, காலரா வியாதி ஊருக்குள் பரவியுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. அந்தக் காட்சியைக் கண்ணார கண்ட அவருக்கு, அவரைப் பற்றிய சரித்திரத்தை எழுத ஆர்வம் வந்தது. இதைப் படிப்பதால், வரும் சந்ததியர்கள் பயன்பெறுவார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதற்கு, பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக சியாமா என்ற பக்தரை அணுகினார். அவர் இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா, ஹேமந்த்பந்த் தனது அஹங்காரத்தைக் களைந்து என் பாதங்களில் சரணடையட்டும். அப்போது நானே அவருள் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுகிறேன். வாழ்க்கையில் இவ்வாறு அஹங்காரத்தை விட்டவனுக்கே நாம் மிகவும் உதவி புரிகிறேன். அவனுக்கு என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை சொல்வது மட்டுமல்ல. நான் அவருடைய வீட்டில் ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே பணிபுரிகிறேன் என்று சுயமாகவே வாக்களித்தார். பாபா சொன்னதைப் போலவே ஹேமந்த்பந்த் ஸத்சரித்திரத்தை எழுதி முடித்தார். பாபாவின் வாக்கிலிருந்து வந்த அப்படிப்பட்ட இந்த ஸத்சரித்திரத்தைப் பாராயணம் செய்ய கிடைத்தால், அது நாம் செய்த பாக்கியமே. அப்போதும், இப்போதும் சாயி சத் சரித்திர பாராயணம், பூஜை, பஜனை செய்ததன் மூலம் லட்சக்கணக்கானோர் அடைந்த பலன்கள் கணக்கிலடங்கா.
அஜ்ஞச் சாச் ரத்ததாநச் ச ஸம்ச யாத்மா விநச் யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ச் யாத் மந:
என்கிறது பகவத்கீதை 4ஆவது அத்தியாயம். 40 ஆவது ஸ்லோகம். அதாவது ஞானத்தின் மீது அன்பு, ஆர்வம் இல்லாமல் சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்திலோ, பரலோகத்திலோ சுகம் இருக்காது.
ஆகவே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் கீழ் குறிப்பிட்டுள்ளவற்றை படித்து சாயிநாதனின் மஹிமையை தெரிந்து கொண்டு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் பூஜையில் கலந்து கொண்டு, சாயிநாதரின் அனுக்கிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.
சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள் என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.
சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது, தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.
சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.
விரத பூஜை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் பெருகும். ஈடுபாடு அதிகரிக்கும் என்ற காரணத்தால் சுயமாக செய்வது நல்லது. பூஜையை தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயி நாத் மஹாராஜ்கீ ஜய் என்று 3 முறை கூற வேண்டும். பிறகு அவரவர் இஷ்ட தெய்வங்களை மனதில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
2. பின்னர், சாயி நாதரை மனதில் நினைத்து விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும். குங்குமம், சந்தனம் வைத்துக் கொள்ளலாம்.
3. பூஜை செய்யும் இடத்தில் ஒரு மணையை போட்டு, அதன் மீது புதிய வெள்ளை துணியையோ அல்லது துவைத்து சுத்தம் செய்த வெள்ளைத் துணியையோ போடவும்.
4. அந்த ஆசனத்தின் மீது சாயி பாபாவின் சிலையையோ அல்லது படத்தையோ வைத்து இரு பக்கமும் தீபம் ஏற்ற வேண்டும். பசு நெய்யிலோ அல்லது நல்லெண்ணையிலோ தீபம் ஏற்ற வேண்டும்.
5. பூஜை தொடங்குவதற்கு முன் பாபாவின் படத்திற்கோ அல்லது சிலைக்கோ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை ஏற்ற வேண்டும்.
எனக்கு சமர்ப்பிக்கப்படும் இலை, புஷ்பம், தீர்த்தம் எதுவாகிலும் அதை பரிசுத்தமான மனதோடும், பக்தியுடனும் எனக்கு சமர்ப்பிப்பார்களேயானால் அவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் சாயி நாதர். இதையேதான் பகவத்கீதை 9வது அத்தியாயத்தில் ராஜவித்யா ராஜ குஹ்யா யோகத்தில் 26வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு கூறினார்.
பத்ரம், புஷ்பம், ஃபலம், தோயம், யோமே, பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் ச் னாமி ப்ரயதாத்மன :
மேலுள்ள விசயத்தை நினைவில் கொண்டு, பரிசுத்தமான மனதோடும், பக்தி விசுவாசத்துடனும் பூஜை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், விசேஷமான பலனை பெறலாம் என்பது உறுதி.
சீரடி சாயி நாதா ஸ்மரணம்!
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு நாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப் பெயர்), நிரதாக்னி ஹோத்தரன் (ஷீர்டியில் அவரருகே துனி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்), அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர், தியான ஸ்வரூபி, அவரே பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன், அப்படிப்பட்ட சாயிநாதரை ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோம். ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜய்!
தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில், செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது. இது தெரியாமல் மாயையில் திளைத்து பொறாமை, கோபம், துவேஷம், உதாசீனப்படுத்துதல் போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது போல், இந்த லோகத்தில் பிறப்பதும், இறப்பதுமான சுழற்சி நடந்து கொண்டிருக்கிறது. இறப்பது மறுபடியும் பிறப்பதற்கா? எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம்? என்று கேட்கிறார் சாயிபாபா. ஒரு தடவை நிதானமாக யோசியுங்கள். நிரந்தரம் இல்லாத ஈனமான, அருவருப்பான ஒரு விநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர, நிரந்தரமான சந்தோஷம் ஒன்று இருக்கிறது என்பதை அறியவில்லை. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ?
க்ருதே ஜனார்த்தனோ, த்ரேதாயாம் ரகு நந்தன:
த்வாபரே ராம கிருஷ்ணௌச
கலௌ ஸ்ரீ ஸாயிநாத:
க்ருத யுகத்தில் சமதா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை) மூலமும், த்ரேதாயுகத்தில் யாகத்தின் மூலமும், த்வாபர யுகத்தில் பூஜை முறையிலும் தெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டும் போதும் என்கிறார் சாயி.
நாமஸ்மரணையிலும் குண நாமஸ்மரணம் விசேஷம். யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ, அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயணம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது, மனது பகவானுடன் ஐக்கியமாகிறது. இதன் மூலமே முழு பலன் அடைய முடியும். அதனால்தான், கலியுகத்தில் நாம ஸ்மரணை போதும் என்பது சாயிநாதரின் நோக்கம். அதனால்தான், நாம் அனைவருக்கும் நாதரான சாயிநாதரின் சரித்திரமான சாயி ஸத்சரித்திரத்தை இந்த சப்த சப்தாஹாவில் பாராயணம் செய்வது அவசியமாகிறது.
கண்மூடித்தனமாக இல்லாமல், எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து, கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, எனது நாமத்தை ஸ்மரனை செய்தால் போதும் என்கிறார் பாபா. அதோடு பாபா கூறிய மற்றொரு உன்னதமான விஷயம். பலவகையில் வழி தவறி ஓடும் மனதை, அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார். வழி தவறிய மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நம் மனதை நாமே கட்டுப்படுத்தி, அதற்குப் பிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.
அவ்வாறு, நம் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அது பூரண விசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை, பஜனை, பாராயணம், ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும்.
ஸத் ஸங்கத்வே நி: ஸங்கத்வம்
நி: ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச் சலதத்யம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி
என்று ஆதிசங்கரர் கூறினாரென்றால் ஸத்ஸங்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடக்கும் ஸத்சங்கங்களில் கலந்து கொண்டு, அங்கு சொல்லப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு நடந்தால், குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சாயி ஸத் சரித்திர பாராயணம்!
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் சரித்திரத்தை நினைத்து, சாயி பாபாவும் அவரது சரித்திரமும் (இரண்டும்) வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிய வேண்டும். எங்கெல்லாம் சாயி ஸத் சரித்திர பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சீரடி சாயிநாதர், பவித்ரமான கோதாவரி, துவாரகமாயி, குருவிருக்குமிடம், துனி ஆகியவை அகண்டமான கீர்த்தி அளிக்கும் நோக்கில் நமக்கு பிரத்யட்சமாக தோன்றும்.
நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரவெள
மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத
எங்கெல்லாம் பக்தியோடு தன் நாமஸ்மரனை, பஜனை, பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கு பக்தர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மேலும் நன்மை தருவதற்கு பகவான் அங்கு கட்டாயம் இருப்பார். அதனால், வியாழக்கிழமைகளில் விரத பூஜையும் தொடர்ந்து 67 நாட்கள் (9 வாரங்கள்) தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் - சாயி ஸத் சரித்திரத்தை பக்தி விசுவாசத்துடன் பாராயணம் செய்து சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறலாம்.
1910 ஆம் ஆண்டு, முதன் முதலில் ஹேமந்த்பந்த் சீரடியில் காலடி வைத்தபோது, ஊர் எல்லையில் கோதுமை மாவை தூவிக் கொண்டிருந்த பாபாவை கண்டார். காரணம் கேட்டபோது, காலரா வியாதி ஊருக்குள் பரவியுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. அந்தக் காட்சியைக் கண்ணார கண்ட அவருக்கு, அவரைப் பற்றிய சரித்திரத்தை எழுத ஆர்வம் வந்தது. இதைப் படிப்பதால், வரும் சந்ததியர்கள் பயன்பெறுவார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதற்கு, பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக சியாமா என்ற பக்தரை அணுகினார். அவர் இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா, ஹேமந்த்பந்த் தனது அஹங்காரத்தைக் களைந்து என் பாதங்களில் சரணடையட்டும். அப்போது நானே அவருள் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுகிறேன். வாழ்க்கையில் இவ்வாறு அஹங்காரத்தை விட்டவனுக்கே நாம் மிகவும் உதவி புரிகிறேன். அவனுக்கு என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை சொல்வது மட்டுமல்ல. நான் அவருடைய வீட்டில் ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே பணிபுரிகிறேன் என்று சுயமாகவே வாக்களித்தார். பாபா சொன்னதைப் போலவே ஹேமந்த்பந்த் ஸத்சரித்திரத்தை எழுதி முடித்தார். பாபாவின் வாக்கிலிருந்து வந்த அப்படிப்பட்ட இந்த ஸத்சரித்திரத்தைப் பாராயணம் செய்ய கிடைத்தால், அது நாம் செய்த பாக்கியமே. அப்போதும், இப்போதும் சாயி சத் சரித்திர பாராயணம், பூஜை, பஜனை செய்ததன் மூலம் லட்சக்கணக்கானோர் அடைந்த பலன்கள் கணக்கிலடங்கா.
அஜ்ஞச் சாச் ரத்ததாநச் ச ஸம்ச யாத்மா விநச் யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ச் யாத் மந:
என்கிறது பகவத்கீதை 4ஆவது அத்தியாயம். 40 ஆவது ஸ்லோகம். அதாவது ஞானத்தின் மீது அன்பு, ஆர்வம் இல்லாமல் சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்திலோ, பரலோகத்திலோ சுகம் இருக்காது.
ஆகவே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் கீழ் குறிப்பிட்டுள்ளவற்றை படித்து சாயிநாதனின் மஹிமையை தெரிந்து கொண்டு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் பூஜையில் கலந்து கொண்டு, சாயிநாதரின் அனுக்கிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
Last edited: