• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
கல்யாணம் நடந்து முடிந்த நிம்மதியில் அனைவரும் இருக்க எல்லாரும் உதயா வீட்டிற்க்கு லெட்சுமியை அழைத்து செல்ல நேரம் பார்க்க அதை கேட்ட லெட்சுமிக்கு தன்னை அறியாமல் பயம் சூழ்ந்தது

அவளின் கலக்கத்தை அறிந்த உதயாவும் அவள் கையை அழுத்தி கொடுத்து அமைதி படுத்த முயன்றான் .

"கருவா டார்லிங் இப்படி எதுக்கு இருக்க சிரிடி "
...................................


"அங்கு கமலின் நிலையோ மிகவும் பரிதாபமாய் இருந்தது"

"இத்தனை நாள் தன்னோடு இருந்து சண்டையிட்ட அக்கா இனிமேல் தனது அக்காவாய் இல்லாமல் இன்னோருத்தரின் மனைவியாய் நினைக்க நினைக்க அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை"

"லெட்சுமியின் அம்மாவோ இன்னும் ஒரு படி மேலே போய் அழுது கொண்டிருந்தார்"

"தன் கணவருக்கு பிறகு தான் நேசம் முழுதும் வைத்திருக்கும் இன்னோரு உறவு தனது மகள் இன்று அவளின் பிரிவு அவரை மிகவும் பாதித்தது"

"இது அனைத்து கல்யாண நிகழ்விலும் நடப்பது தான் பெண்ணை கொடுக்கும் ஒவ்வொரு பெண் வீட்டினரின் கலக்கத்தையும் வார்த்தையில் வடித்து விட முடியாது தான்"

"லெட்சுமி பார்த்து இருந்துக்கோ" என கமல் கூற

"டேய் என் பொண்டாட்டிய பார்த்துக்க தான் நான் இருக்கேன்ல நீ என்ன அவகிட்ட வேற தனியா சொல்லுற"

"நீங்க பார்த்துபீங்கனு தெரியும் மாமா,ஆனா கொஞ்சம் பயம் தான் மாமா"

"கமல் அக்கா போயிட்டு வரேன் டா"என கூறி கண் கலங்க

அக்காவை அணைத்திருந்தான்

இருவரும் சில நிமிடங்கள் அழுதவர்கள்

"அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ.டெய்லி போன் பண்ணு அக்காவ மறந்துடாதடா"

"ஏய் லூசு உன்னை போய் மறப்பேனா,நீயும் உடம்பை பார்த்துக்கோ சரியா"

"ஹம் சரி"

"அம்மா போயிட்டு வரேன்,உடம்ப பார்த்துக்கோங்க"

"அத்தை நீங்க இப்படி இருந்தீங்கனா அவ சந்தோசமா இருப்பாளா,பிளிஸ் அத்தை அமைதியா இருங்க " என உதயா லெட்சுமியின் அம்மாவை சமாதானம் பண்ண

"இல்ல மாப்பிள்ளை நான் சரியாகிடுவேன்,நீங்க அவள பத்திரமா பார்த்துப்பீங்க ஆனா பெத்த மனசுல மாப்பிள்ளை அதான் பித்து பிடிச்சிருக்கு,எங்க வீட்டு மகாராணி மாப்பிள்ளை அவ
எங்க வீட்டுல இன்னைக்கு என்ன சமைக்கனும் அப்படிங்குறத கூட அவளுக்கு பிடிச்ச மாதிரி அவகிட்ட கேட்டு தான் சமைக்கனும்னு அவங்க அப்பா சொல்லுவாரு அப்படி இருக்கும் போது நாளைக்கு அவ எங்க வீட்டுல இல்லை அப்படிங்குறத ஏத்துக்க முடியலை மாப்பிள்ளை அவ்ளோதான்"


"ஏன் அத்தை இப்படி பேசுறீங்க ,அவ எப்பவும் உங்க பொண்ணு தான் உங்களுக்கு எப்ப இவள பாக்கணும்னு சொன்னாலும் பார்க்க வாங்க இல்ல எங்கிட்ட சொல்லுங்க நான் கூட்டிட்டு வரேன் சரியா"

சந்தோசமாய் தலையசைத்தார்

"எல்லாரிடமும் விடைபெற்று உதயாவின் வீடு நோக்கி கார் பறந்தது"

"வாசலிலேயே ஆரத்தி கரைத்து வரவேற்றனர்,வலது காலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே சென்றாள்"

"சாம்மி ரூமில் விளக்கேற்றினால் திருமதி.லெட்சுமி உதயாவாக"

"இனி இந்த வீடு தான் அவள் எல்லா சொந்தமாய் இருக்க போகிறது என்ற எண்ணத்துடன்"

எல்லாரும் சாமி கும்பிட்டுவிட்டு ஹாலில் வந்தமர்ந்தனர்

அங்கிருந்த உறவுகார பெண் ஒருவர் உதயாவின் அன்னையிடம்

"என்ன மதினி இனிமே எல்லா வேலையும் உங்க மருமகளே பார்த்துக்குவாளா " எனக்கேட்க

"நல்லா கேட்டுக்கோங்க கல்யாண்ம் பண்ணி மருமகள் கொண்டு வர்றது வீட்டு வேலைக்காக இல்ல,நான் என் மருமகள மகளா பார்த்துக்கணும் தான் என நினைக்கிறேன் புரிஞ்சிதா மதினி"என திருப்பி கொடுக்க லெட்சுமிக்கு மனம் முழுதும் நிம்மதியால் நிறைந்தது.

"அவளின் இரு அக்காக்களும் கூட அவளின் உடன் தான் இருந்தனர்"

"லெட்சு வா போகலாம் என இருவரும் அவளை தயார் படுத்த அழைத்து சென்றனர்"

"லெட்சு உன் மாமியார் வீட்டுக்காரர் எல்லாருமே நல்லவங்க தான் சரியா,நம்ம மூணு பேரும் ஆசை பட்ட மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சரியா நீங்க இரண்டு பேரும் எதுக்கும் கோவப்படக்கூடாது " என நிவேதா தன் இரு தங்கைகளுக்கும் அறிவுரை கூற

இருவரும் சம்மதமாய் தலை ஆட்டினர்

இருவரும் சேர்ந்து லெட்சுமியை முதல் இரவுக்கு தயார் செய்ய

இவர்களின் கிண்டலில் கலங்கிதான் போனாள் பெண்ணவள்

அலங்காரம் முடித்து அவளை அவள் அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தவர்கள்

உதயாவின் அறையில் கொண்டு போய் விட்டனர்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவளின் அழகை ரசித்த வண்ணம் நின்றான் உதயா

அவளை அழைத்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் கையில் இருந்த பால் சொம்பை அருகில் வைத்து விட்டு அப்படியே அவள் மடியில் தலை சாய்த்து படுத்து விட்டான்.

அவளும் அவனின் தலையை கோத

"எல்லாமே சீக்கிரமா நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு கருவா டார்லிங் நீ என் வாழ்க்கைல வந்தது உன்னை நான் கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணது இப்போ உன் மடியில தலை வைச்சு படுத்துருக்கிறது எல்லாமே நினைச்சு பார்த்தா செம்ம ஃபீலிங்கா இருக்குடி"

வார்த்தைகள் அற்று மௌனாமாய் இருந்தவளை கண்டு எழுந்தமர்ந்தவன்

"உன்ன முத தடவை பார்த்தப்பவே மாமா உங்கிட்ட விழுந்திட்டேன்டி"

"காலம் பூராவும் உங்கிட்ட இப்படி விழுந்து கிடக்கனும்டி "என காதிற்க்குள் அவன் மீசை உராய பேசி கொண்டு கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்
அவள் சந்தோசத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டாள்


அவளை நிமிர்த்தி அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்

மெதுவாக அவன் முத்த யுத்தத்தை தொடங்கினான்
முத்தயுத்தத்தில் பெண்ணவைளை மொத்தமாய் கொள்ளைகொண்டுவிடும் நோக்கில் இருந்தான்
உதயா


அவளின் தயக்கங்களை உடைத்து ,அவளை மென்மையாக கையாண்டு திருமதி உதயாவாக மொத்தமாய் மாற்றினான்

சோர்வில் கண்மூடி அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவளை நிமிர்த்தியன்
"அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் சந்தோசமா இருக்கீயாடி "என கேட்க


"ஹம் ரொம்ப ரொம்பபப"

"இப்படியே சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இரு இது தான் என்னோட எனர்ஜி சரியா"

"என் பொண்டாட்டி எப்பவும் சந்தோசமா இருக்கனும் "என கூறி அவன் சிரிக்க

அவன் மார்பில் புதைந்து கொண்டாள்

"போலிஸ் காரனே உங்கிட்ட திருடனாக்கிட்டேயே டி" என அவன் சீண்ட

"என்ன சொல்லுறீங்க"

"அவள் காதிற்க்குள் அவன் கிசுகிசுக்க"

"சீ போலிஸ் நீங்களே போரிக்கி மாதிரி பேசாதீங்க மாமா"

அப்போ செஞ்சு காட்டுறேன் வா என அவளை இழுத்து அணைத்து அடுத்து அத்தியாத்தை தொடங்கினான்



காலையில் கஸ்டப்பட்டு லெட்சுமி கண்விழிக்க கல்யாண சோர்வும் நேற்று முதலிரவு சோர்வும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்க தான் செய்த்து.


எழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவள் கணவன்.


"ஏய் பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே இருடி"


"மாமா விடுங்க"


"ஏய் என்னடி"


"மாமா குளிக்கனும்,பிளிஸ் விடுங்க"


"அப்போ மாமாவ கொஞ்சம் கொஞ்சிட்டு போ"


"அதெல்லாம் முடியாது"


"அப்ப என்னாலையும் விட முடியாது "என கழுத்தில் முகம் புதைத்தவனை விலக்கும் வழி தெரியாது முழித்தாள் பெண் அவள்


"மாமா பிளிஸ் மாமா விடுங்க"


எதுவும் பேச முடியாத வண்ணம் அவளின் இதழை முற்றுகை இட்டான்.


அவனிடமிருந்து வழுக்கட்டாயமாக பிரிந்தவள்


"மாமா உன்னோட பெரிய தொல்லையா போச்சு போயா"


"என்னது யா வா,என்னடி மாமாவ இப்படி மரியாதை இல்லாம எல்லாம் பேசுற"


"அப்படித்தான் பேசுவேன் எனக்கு உரிமை இருக்கு"


"என் பொண்டாட்டிக்கு மிரட்டுறா,அரட்டுறா ஒரு நைட் ல வந்த மாற்றமா இதெல்லாம்,அப்பா என் பொண்டாட்டி பக்கா போலீஸ்காரன் பொண்டாட்டியா மாறிட்டாளே"என தனக்குதானே பேசிகொண்டிருப்பவனை கண்டு முறைத்தவள் அவனை விட்டு விலகி குளியலறை சென்றாள்"


"குளித்து வந்து ஒரு பட்ரோஸ் நிற பட்டு புடவை அணிந்தவளை கண்டு விசில் அடித்தவாறே அவளை நெருங்கியிருங்ந்தான்"


அவளின் பின் கழுத்தில் முகம் புதைத்து மஞ்சள் வாசம் பிடித்தவன்

"செம வாசனையா இருக்கடி கருவா டார்லிங்"


"மாமா போய் குளிங்க " என குரல் கொஞ்ச கூறியவளை இன்னும் இறுக்கியணைத்தவன்


"என்னடி உன் ஸிபிக்கர் சௌண்ட் கம்மியா இருக்கு இன்னைக்கு"


"நீங்க பக்கத்துல வந்தாலே இப்படி தான் மாமா பேச முடியுது பிளிஸ் தள்ளி நில்லுங்க"


"போடி லூசு,தள்ளி நிக்கிறதுக்கு தான் தாலி கட்டிருக்கேனாடி என் பொண்டாட்டி"


"இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் அழுதுருவேன் மாமா.பிளிஸ் போய் குளிங்க மாமா"


"சரி டி " என அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான்.


குளித்து முடித்து வெளியில் வந்தவன் கண்களால் தன்னவளை தேட அவள் அறையில் இருந்தால்தானே


"தப்பிச்சிட்டியாடி கேடி,இரு மாட்டாமயா போயிருவ" என மனதிற்க்குள் அவளை திட்டியவன்


ஹாலிற்க்கு வந்தான் அங்கு அவன் கண்ட காட்சி


சோபாவில் ஒரு புறம் அவன் அம்மா அமர்ந்திருக்க மறுபுறம் அவன் அப்பா அமர்ந்திருக்க நடுவில் லெட்சுமி அமர்ந்து அவள் மீன் விழிகளை மீட்டி கதை பேசிகொண்டிருந்தவளை தான்


திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு நேற்றே மண்டபத்தில் கல்யாணத்தோடு விருந்தையும் முடித்திருந்தனர் உதயாவின் வேலையின் காரணத்தினால்


"அம்மா எனக்கு டீ"


"போய் கிச்சன்ல ஆள் இருப்பாங்க வாங்கிக்கோ"


"ஏம்மா கல்யாணம் பண்ணி வைச்சிடீங்கள்ள உங்க மருமக கிட்ட இந்த வேலையெல்லாம் சொல்ல மாட்டீங்களா"


"ஏன் இத்தனை நாள் நீயாதான டீ குடிச்ச,இப்ப மட்டும் என் மருமள வேலை சொல்லுற"என உதயாவின் அப்பா கோபப்பட


இதையெல்லாம் சிரித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து அவனின் ஆருயிர் மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள்,அவளை பார்த்து பல்லைகடித்தவன்


அவன் அம்மாவிடம் திரும்பி

"அம்மா நான் ஒரு முக்கியமான கேஸ் விசயமா ஸ்டேசன் போறேன் ,போயிட்டு ஒரு ஒரு மணி நேரத்துல வந்துருவேன் கோவிலுக்கு போகனும்னு சொன்னீங்க்கள"


"கிளம்பிறேன் மா"


"டேய் காபி குடிச்சுட்டு போடா"


"அதையும் உங்க செல்ல மருமகளுக்கே ஊட்டி விடுங்க"என அவன் வெளியே சொல்ல போக


"நில்லுங்க" குரல் அவனின் மனைவியுடையது


"என்னடி"


"நான் போய் டீ எடுத்துட்டு வரேன்,குடிச்சுட்டு போங்க"

அமைதியாக அவனும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.


"ஏன் டா அவளை இப்படி வேலை வாங்குற"


"அம்மா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை,அவ எனக்கு பொண்டாட்டியா இல்ல உங்க பொண்டாட்டியா"


"இப்படி கண்டிசன் போடுறீங்க"


"இதென்னடா கேள்வி,அவ என் மரும டா அவளுக்கு நான் சப்போர்ட் பண்ண வேண்டாம்" என முறுக்கி கொள்ள


இவர்களின் செல்ல சண்டையை வாசலில் நின்று மனது நிறைவுடன் லெட்சுமியின் அம்மாவும் கமலும் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.


டீ கொண்டு வந்தவள் உதயாவிடம் கொடுத்துவிட்டு,வாசலில் இருந்து உள்ளே நுழைந்த அம்மாவையும் தம்பியையும் கட்டிக்கொண்டாள்


x
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"அம்மா"



"எப்படி பாப்பா இருக்க"



"பார்த்தா எப்படி தெரியுறேன்"



"எங்கண்ணே பட்டு போகும் போல அவ்ளோ அழகா இருக்க "



"பெத்தவ கண்ணு கொள்ளிக்கண்ணு அண்ணி ,என் மருமக மேல கண்ணு வைக்காதீங்க"



"இது போதும் அண்ணி என் பொண்ணு சந்தோசமா இங்க இருக்கா அது மட்டும் இல்லாம அவளுக்கு இன்னோரு அம்மா அப்பாவா நீங்க கிடைச்சுருக்கீங்க,ரொம்ப நன்றி அண்ணன்,அண்ணி உங்களுக்கும் நன்றி அண்ணி"



"அண்ணி என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு"



"விடுமா எங்களுக்கு பொண்ணு இல்லாத லெட்சுமி தீர்த்துவைக்கிறா இதுக்கு ஈடா என்னவேணும்னாலும் பண்ணலாம்"



"இப்போ ஒரு அரை மணி நேரம் தான் அவகூட பேசிகிட்டு இருந்தோம் ஆனா அவ்ளொ சந்தோசமா இருந்தோம் நானும் என் பொண்டாட்டியும் ,இந்த சந்தோசத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் எங்க மருமளுக்கு" என உதயாவின் அப்பா கூற



அனைவரும் அங்கு மகிழ்ச்சியில் இருந்தனர்.



"சரி எல்லாரும் சாப்பிடுங்க,நான் இப்போ வந்துருவேன்" என உதயா கிளம்ப



"அத்தை சாப்பிடுங்க.டேய் கமல் நீயும் சாப்புடுடா "என கூறி நகர்ந்தான்



"எல்லாரும் சாப்பிட லெட்சுமி மட்டும் உதயா வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்றுவிட்டாள்" எல்லோரும் சரியென விட்டு விட்டார்கள்.



உதயா வந்து உண்டவுடன் எல்லோரும் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று மனதார வேண்டி விட்டு வெளியே வரும் போது



பின் தங்கி வந்து தன்னவள் கரம் பற்றியவன் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவன்



"என்னடி கருவா டார்கிங் ரொம்ப பெரிய வேண்டுதளோ சாமிக்கிட்ட ,தீவிரமா வேண்டிக்கிட்ட"



"ஹம் ஆமா மாமா"



"என்னடி அது"



"அது வந்து"



"எங்க வந்து ஒழுங்கா சொல்லுடி"



"இல்ல மாமா என் மாமாவுக்கு முன்னாடி என் உயிர் போயிடனும் அப்படினு வேண்டிக்கிட்டேன்"

என தயங்கி கூற



"உதயாவின் முகத்தில் கரை கடந்த கோபம்"



"கோபத்தில் நம்ம ஆளு என்ன பண்ண போறாருனு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்போம்"



சித்திரம் சிந்தும்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
First போஸ்ட்ல வந்ததுல பாதிக்கும்
மேல் இரண்டாவது போஸ்டிலும்
Repeated வந்திருக்கு
பார்த்து சரி பண்ணுங்க, கனி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top