• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே-15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"அவன் கைகளில் இருந்தது அவளுடைய டைரி"


"அவளின் இன்பம்,துன்பம் ,ஏக்கம்,கண்ணீர்,சோகம்,ஆசை,பாசம்,கனவு,லட்சியம் எல்லாம் அந்த டைரியினில் உள்ளே தான் இருக்கிறது"

"அவள் மறக்க நினைப்பவைகளும் அந்த டைரியில் அடக்கம்"

"கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பவளை முறைத்தான் அவள் கணவன்"

"இப்போ எதுக்குடி அழுகுற,இவனுக்கு இந்த டைரியை பார்க்க என்ன தகுதி இருக்குனு நினைச்சு அழுகிறீயாடி" என அவன் கோபமாக கேட்க

"இல்லை என மறுப்பாக தலையசைத்து மறுத்தாள்"

"அப்ப சொல்லுடி எதுக்கு அழுகுற"

"இந்த டைரி வேணாம் மாமா தூக்கி போட்டிடுங்க பிளிஸ்"

"போடி லூசு என் பொண்டாட்டி டைரிய தூக்கி போட நீ யாருடி "என இவன் கேட்க அவள் கண்களில் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை"

"சொல்லுடி ஏன் எங்கிட்ட இருந்து இதை எல்லாம் மறைச்ச"

"நான் மறக்கனும்னு நினைக்கிறத எதுக்கு மாமா சொல்லனும்"

"எதுக்குடி நீ மறக்கனும்,உன் மாமா இருக்கிறேன் டி ,நீ ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேத்த அப்பறம் ஏன் டி மறக்கனும் நீ"

"நீ எழுதுன இந்த கவிதை எல்லாம் நான் எப்படி ரசிச்சு படிச்சேன் தெரியுமாடி"

"அது எப்படி மேடம் பிடிக்கலை பிடிக்கலைனு சொல்லிட்டு எனக்கே கவிதை எழுதிருக்கியேடி என் பொண்டாட்டி"

"அது எப்படி எப்படி"

"சிறகடித்து பறந்த என் மனம்
சிறை பட்டுவிட்டது உன்னிடத்தில்
சிந்தனை முழுதும் நீ இருக்க
உன் நினைவில் நான் இருக்க
ஆயுள் முழுவதும் உன்
அன்பை அனுபவிக்கும்
தண்டனை வேண்டி
தவிப்புடன் காத்திருக்கிறேன்
தருவாயா என் காதல் கோட்டையின் காவலனே?"


"ஹம் எப்படிடி இப்படி எழுதுன பிளாட் ஆயிட்டேண்டி என் அழகி"

"இப்படி எழுதுனதெல்லாம் ஏன் டி மறைச்சு உன் துணிக்கடில வைச்சிருக்கடி"

"இதெல்லாம் இனிமே பண்ண முடியாது மாமா,வேணாம் இதை தூக்கி போட்டிடுங்க"

"லூசாடி நீ,கல்யாணம் ஆனாதல பண்ண முடியாதுனு யோசிக்கிறீயா"

"இல்ல மாமா நான் படிக்கலைல"

"அடிங்க,ஏய் நீ ஒரு மனுசனுக்கு தேவைபடுற அடிப்படை படிப்ப முடிச்சிட்ட,அதுக்கும் மீறி நீ படிக்கனும்னு ஆசைப்பட்டா அதை நிறைவேத்த நான் இருக்கும் போது உனக்கு என்னடி"

"இல்ல மாமா அது வந்து நான் படிக்க போக முடியாது இனிமே காலேஜூக்கு"

"அப்போ வீட்டிலேருந்தே படி"

"வேணாம் மாமா"

"நீ படிக்கிற தமிழ் இலக்கியம் சரியா"

"மாமா"

"என்னடி மாமா நீ படிக்கிற இப்படி எழுனதெல்லாம் நான் பப்ளீஷ் பண்ணுவேன் சரியா"

"வேணாம் மாமா பிளிஸ்"

"அப்ப எங்கூட பேசாதடி இனிமே"

"மாமா ஏன் மாமா"

"பேசாத போ மாத்திரை போட்டலை படு"

"எனக்கு தூக்கம் வரலை"

"அவன் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துவிட்டான்"

"அவனருகில் நெருங்கி படுத்தாள்"

"அவன் விலகி போக"

"மாமா பிளிஸ்"

"தள்ளி படுடி"

" மாமா கால் வலிக்குது "என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினான்.

"வேகமாக எழுந்தவன்,அவள் காலை எடுத்து தன் மேல் வைத்து கொள்ள அவள் கண்களில் கண்ணீர் தடங்கள்"

"மாமா நான் படிக்கிறேன்"

"ஹம்"

"நீங்க சொன்ன மாதிரி நான் இனிமே மறுபடியும் எழுதுறேன்"

"ஹம்"

"மாமா பேசுங்க"

"என்ன பேச"

"ஐ லவ் யூ மாமா "என கூறி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க

"ஏய் என்னடி பண்ற " என கூற அவன் இதழ் கடையோரம் சிரிப்பு வந்துவிட்டது.

"நானே உனக்கு கால் சரியாகனும்னு தள்ளி இருந்தா நீ இப்படி என்ன கிளப்பி விடாதடி"

"ஹம் என்ன மாமா பண்ணுவீங்க"

"ஹம் பண்ணும் போது பாருடி பொண்டாட்டி"

"மாமா,நான் கண்டிப்பா படிக்கனுமா"

"உன்ன பேச விடுற தால தானடி இப்படி பேசுற எனக்கூறி அவள் இதழை முற்றுகையிட்டான்"

"சில நிமிடங்கள் கழித்து விட்டவன்,அவளை தன் மார்பில் போட்டு தூங்க ரெடியாகினான்"

"நீ படிக்கிற அவ்ளோ தான் சரியா,எதையும் போட்டு குழப்பிக்காத தூங்கு"

"அவன் மார்பில் புதைந்தவள் நிம்மதியாக தூங்கினாள்"

"லெட்சுமியின் அக்காக்கள் கீர்த்தியும்,நிவேதாவும் வந்து பார்த்துவிட்டு சென்றனர் இருவரும் அவளை கேலிக்கைகளோடு கழிந்தது அன்றைய பொழுதும்"

"இப்பொழுது லெட்சுமியின் கால் ஓரளவு சரியாகி இருந்தது"

"அவள் கால் சரியானதும் படிக்க வேண்டும் எனக் கூறியிருந்தான் உதயா"

"இன்று நிவேதாவிற்கு ஏழாம் மாதம் வளைகாப்பு"

"எல்லாரும் அங்கே கிளம்பி கொண்டிருக்க இவளும் கிளம்பினாள்"

"கிளம்பும் போதே உதயா அவளை எச்சரித்து தான் கிளப்பியிருந்தான் ரொம்ப நேரம் நிற்க கூடாது என "

"அவளும் சரி சரியென்று தலையாட்டி கொண்டிருந்தாள்"

நிவேதாவின் வளைகாப்பில் சந்திப்போம்.

"அன்று நிவேதாவின் வளைக்காப்பு முடிந்து கீர்த்தியும்-அர்ஜூனும் அமெரிக்கா கிளம்புவதாக இருந்தது."


"அதில் அக்கா தங்கை மூவருக்கும் சிறு வருத்தம்"

"எல்லோரையும் நிவேதாவின் வளைக்காப்பிற்க்கு அனுப்பிவிட்டு உதயா கமிஷனர் அலுவலகம் சென்று இருந்தான்"

"அங்கே அவனுக்கு திருமங்கலத்துக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்த செய்தி காத்துகொண்டிருந்தது"

"அவனுக்கு அதை கேட்டதும் ஐயோ என்றானது"

"ஏனேனில் வேணி,மகேஸ்வரன் ,லெட்சுமி மூவரும் இப்பொழுது இன்னும் அதிகமாய் ஒருவர் மேல் ஒருவர் பாசம் வைத்திருந்தனர்"

"அதில் உதயா மட்டும் அவர்களின் எதிர்கட்சி,காண்பவர்கள் யாரும் அவர்களை மாமியார்,மருமகள்,மாமனார் என்றே சொல்ல முடியாத அளவிற்க்கு அதீத அன்பு,பலர் கேட்டும் விட்டனர்,நீங்கள் மூவரும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளா என"

"இந்நிலையில் லெட்சுமியை வெளியூர் அழைத்து செல்ல வாய்ப்புகள் கம்மி,அதிலும் அவள் காலின் நிலையை கருத்தில் கொள்ளும் போது வாய்ப்பில்லை ராஜா எனும் நிலைதான்"

"டிரான்ஸ்பர் ஆர்டரை கையில் வாங்கி கொண்டு நிவியின் வளைகாப்பிற்க்கு சென்றான்"

"அங்கு அவனுடைய கருவா டார்லிங் சொந்தங்கள் புடை சூழ பேசி சிரித்து கொண்டிருந்தாள்"

"அருகில் அவளின் அம்மா மற்றும் தம்பியும் இணைந்து பேசி கொண்டிருந்தனர்"

"இவன் வருவதை கண்டவுடன் இருவரும் எழுந்து கொள்ள முற்பட,அவர்களை அமரும் படி கூறி விட்டு அவனும் தன் மனைவி அருகில் வந்து அமர்ந்தான்."

"இயல்பான நல விசாரிப்புகளுக்கு பிறகு எல்லாரும் வளையல் போட போக,தனிமையில் கணவனிடம் "

"என்னாச்சு மாமா உங்க முகமே சரியில்லை ஏதாவது பிரச்சனையா" என்றாள் லெட்சுமி.

"ஒன்னும் இல்லடி ,வா போகலாம்"

"இல்ல ஏதோ இருக்கு"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ,உனக்கு எப்போ இப்படி வளைகாப்பு பண்ணுறதுனு யோசிக்கிறேன்" என்றான்.

"வெட்கி சிவந்த முகத்துடன் "போங்க மாமா" என்றாள்.

"வளைகாப்பில் கல்யாண புடவையில் அழகாய் ஜொலித்து கொண்டிருந்தாள் நிவேதா,நிரஞ்சனுக்கு தான் பார்வை மனைவின் புறம் இருந்து திருப்புவது சிரமாக இருந்தது."

"ஒவ்வொருவராக வளையல் போட்டு முடிக்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு பேசி கொண்டிருந்தனர்."

"கீர்த்தி ஏர்போர்ட் செல்ல ரெடியாகி வர,லெட்சுமிக்கும் ,நிவேதாவிற்கும் கண்கள் கலங்குவதை கட்டுபடுத்த முடியவில்லை."

"என்ன தான் வளர்ந்து விட்ட போதும் பாசம் கண்கள் பனித்துதான் விடுகின்றன பல நேரத்தில்."

"எல்லோரிடமும் விடை பெற்று கீர்த்தியும்-அர்ஜூனும் அமெரிக்கா பறந்தனர்"

"எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்ப தயாராக ,மெல்ல உதயாவின் பெற்றொரிடம் வந்த லெட்சுமியின் அம்மா பத்ரா"

"அண்ணி ஒரு வாரம் லெட்சுமி எங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா அண்ணி "என கேட்க

"வேணியும் ,மகேஸ்வரனும் மறுத்து விட்டனர்."

"மாறாக அங்கு வந்து மகளுடன் தங்கும் படி அழைத்தனர்.அது முறையல்ல என்று மறுத்து விட்டார் பத்ரா"

"ஆனாலும் அவர் மனதில் நிறைவு தான் பெற்ற பிள்ளையை போல் பார்த்து கொள்ளும் மாமனார்,மாமியார் எத்தனை பேருக்கு கிடைக்கும்."


"எல்லோரிடமும் விடை பெற்று வீடு திரும்பினர்."

"வீட்டிற்க்கு வந்து எல்லோரும் ஹாலில் உள்ள சோபாவில் அமர அதற்காகவே காத்திருந்தவன் போல் பேச தொடங்கினான் உதயா"

'லேசகா தொண்டையை செருமி கொண்டு "எனக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு திருமங்கலந்துக்கு "எனக் கூற

"ஹம் சரி நீ போயிட்டு வா உதயா" என வேணி கூற

"பல்லை கடித்தவன் "அம்மா" எனக் கத்தி கொண்டே

"நான் என் பொண்டாட்டியையும் தான் கூட்டிட்டு போகபோறேன் ,அங்க குவார்ட்டஸ் கொடுத்திருக்காங்க" எனக் கூற

"யாரை கேட்டு நீ லெட்சுமியை கூட்டிட்டு போக போறே,அவ காலே இன்னும் சரியாகலை அவ படிக்க வேற செய்யனும் இதுல அங்க வந்து அவ எப்படி தனியா வீட்டை பார்த்துப்பா" என மகேஸ்வரன் கேட்க
 




Last edited:

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த லெட்சுமி மறந்தும் வாய் திறக்கவில்லை கணவனுக்காக பேசுவதா,இல்லை மாமனார் ,மாமியாருக்காகவா என குழம்பி தவித்திருந்தாள்"

"இவளின் அமைதியை கண்ட உதயா கொஞ்சமாவது வாயை திறந்து நான் என் புருசனோட தான் இருப்பேன்னு சொல்லுறாளா பாரு கேடி என மனதிற்குள் அவளுக்கு வசைபாடிக்கொண்டிருந்தான்."

"அப்போ எல்லாரும் அங்கேயே போயிடுவோம்" என உதயா கூற

"தோப்பு எல்லாத்தையும் யாருடா பார்த்துப்பாங்க,நீ மட்டும் போ எங்க மருமக எங்கேயும் வர மாட்டா.நீ வேனும்னா வார வாரம் இங்க வா"என வேணி கோபமாக கூறி விட்டு நிற்காமல் சென்றுவிட்டார்,மகேஸ்வருனும் அவருடன் சென்று விட்டார்.


"அவர்கள் இருவரும் சென்று விட உதயாவும் அவனுடய மாடிறைக்கு சென்றுவிட்டான்."

"எல்லோரும் சென்று விட ஹாலில் இருந்த லெட்சுமி வலிக்கும் கால்களோடு சோபாவில் இருந்து எழ முற்பட,காலை ஊன்றியதால் ஏற்பட்ட வலியில் முகம் சுழிக்க அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் அவளை கைகளில் அள்ளி இருந்தான் அவள் கண்வன்"

"தூக்கி சென்று மாடியறை கட்டிலில் விட்டவன் அவளிடம் ஒன்றுமே பேசவில்லை."


"அவளின் கால்களுக்கு மருந்து தடவியவன்,எதுவுமே பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்."

"வெளியே வந்தவன் எதுவும் பேசாமல் கட்டிலின் மறுசென்று படுக்க அவனை பின்னிருந்து அணைத்து கொண்டாள் அவன் மனைவி"


"காக்கிசட்டை ஏன் கடுப்பாயிருக்காரு" என லெட்சுமி கேட்க

"காரணம் தெரிஞ்சிக்கிட்டே தெரியாதமாதிரி கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியாதுடி" என உதயா பதில் சொல்ல

"அத்தை மாமா பாவம்ல ,அவங்க எப்படி மாமா தனியா இருப்பாங்க"

"அப்ப புருஷன் பாவம் இல்ல"

"மாமா பிளிஸ்"


"என்ன பிளிஸ் ஏன் டி என்னடி பண்ண அவங்கள உன்னை விட்டு பிரியனும்னா இவ்ளோ வருத்தபடுறாங்க"

"ஹம் உண்மையான பாசம் ஒரு போதும் தோற்காது மாமா"


"அப்ப என் பாசம் உண்மையில்ல அப்படித்தான"


"மாமா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க,என்னால மட்டும் உங்கள விட்டு தனியா இருக்க முடியுமா என்ன"



"அப்ப எங்கூட வந்திரு"

".........................."

"முடியாது இல்ல,நீ உங்க அத்தை மாமாகூடவே இரு"எனக் கூறி கண்களை மூடிக்கொண்டான்.

"இனி எப்படி பேசினாலும் அவன் சமாதானம் ஆகப்போவதில்லை என்பதை அறிந்தவளும் எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள்."


சித்திரம் சிந்தும்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தாழைக் கனி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top