சிவா மனசுல சக்தி.
அந்த இரவு நேரத்தில் ஒரு விசாரணைக்காக அந்த
பப்பிற்குள் நுழைந்தாள் சக்தி தன் தோழிகளோடு. அங்கே அதன் உரிமையாளரிடம் ஒரு கேஸ் விஷயமாக, குறிப்பிட்ட தேதியில் உள்ள cctv footage வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“சாரி மேடம்! அன்னைக்கு நடந்த அத்தனை சம்பவ புட்டேஜ் இன்ஸ்பெக்டர் வாங்கிட்டு போய்ட்டார் மேடம், என்கிட்ட இப்போ அந்த புட்டேஜ் இல்லை மேடம்” என்று பணிவுடன் அவர் கூறவும், அவள் தன் தோழிக்கு கன்னசைவை காட்டவும், அவள் ஒரு ஆடியோ ஒன்றை ஓட விட்டாள்.
அதைக் கேட்ட அந்த உரிமையாளர் முகம் வியர்க்க தொடங்கியது, இது எப்படி இவர்கள் கையில் என்று யோசிக்க தொடங்கினார்.
“எப்படி எங்க கைக்கு இந்த ஆடியோ கிடைச்சது? இதை எப்படி ஹேண்டில் பண்ணுறது? இப்படி யோசிக்காம, ஒழுங்கா எனக்கு அந்த புட்டேஜ் கொடுத்துட்டு போய்கிட்டே இருங்க, இல்லைனா அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை” என்று சக்தி கூறவும், அவர் அப்பொழுதும் கொடுக்க யோசித்தார்.
“சக்தி! இவர் கொடுக்க இவ்வளவு யோசிக்கிறார், இவர் வீட்டுல தான இப்போ சுபா நம்ம ஆளுங்க கூட இருக்கா, பேசாம டோட்டல் குடும்பத்தை தூக்க சொல்லலாமா?” என்று அவள் தோழி வினவவும், அவர் அரண்டு விட்டார்.
“மேடம்! வேண்டாம், என் ஃபேமிலியை ஒன்னும் செய்யாதீங்க, அவங்களுக்கு எதுவும் தெரியாது. நான் இப்போ அந்த புட்டேஜ் எடுத்து தரேன், ஆனா யாருக்கும் நான் தான் கொடுத்தேன் அப்படினு சொல்லிடாதீங்க” என்று கூறிக் கொண்டே அதை எடுத்துக் கொடுத்தார்.
அவளின் தோழி ஒருத்தி அதை வாங்கி சரி பார்க்கவும், எல்லாம் சரியாக இருக்கும், அங்கே அவரிடம் சில விஷயங்களை சொல்லிவிட்டு வெளியேறினர்.
பப்பில் இருந்த சில பானங்கள், அவளின் இரு தோழிகளை ஈர்க்கவும், மெதுவாக சக்தியை பார்த்தனர். அவளின் பார்வையோ, குடித்து தொலையுங்கள் என்றுவிட்டு அங்கு நடப்பவற்றை கவனிக்க தொடங்கினாள்.
“சக்தி! இந்த லூசுங்களை எதுக்கு இப்போ குடிக்க ஒத்துகிட்ட? என்ன பிளான் இப்போ?” என்று அவளை அறிந்தவளாக கேட்டாள் அவளின் சகோதரியும், தோழியுமான சுமதி.
“சுமதி! இன்னொரு தடவை நீ அவங்களை லூசு அப்படினு சொன்னா, உன்னை அடிக்க நான் யோசிக்க மாட்டேன். சூரியா, நிலா இரண்டு பேரும் என் கூட வேலை பார்கிறவங்க மட்டும் இல்லை, தே ஆர் மை ப்ரெண்ட்ஸ் காட் இட்” என்று கண்கள் சிவக்க அவள் கூறவும், சுமதி கப்ஸிபென்று அடங்கினாள்.
இப்படித்தான் பதில் வரும் என்று தெரிந்தும், கேட்ட தன் மடமையை எண்ணி நொந்து கொண்டாள். அவள் எண்ணியது போல், சக்தி ஒரு முடிவோடு தான் அங்கே அமர்ந்து இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல், அங்கே அப்பொழுது தன் படை சூழ உள்ளே நுழைந்தான் சிவா என்கிற சிவனேஸ்வரன். அவளுக்கு எதிராக இந்த கேசை எடுத்து வாதாட போவது அவன் தான்.
சென்னையில், லீடிங் கிரிமினல் லாயர் பாஷ்யம் சிஷ்யன் இவன். இவன் இதுவரை எடுத்த கேஸ் அனைத்தும் ஜெய்த்து காட்டி இருக்கிறான். ஆகையால், எப்பொழுதும் அவனை சுற்றி ஜூனியர் கூட்டம் ஒன்று திரிந்து கொண்டே இருக்கும், அவனிடம் கற்றுக் கொள்ள.
ஆனால், அவனோ அவர்களை எல்லாம் ஒரு எல்லையில் நிறுத்தி இருந்தான். கற்றுக் கொள்ள வேண்டும் எனில், கேஸ் நடக்கும் பொழுது பாய்ண்ட் எடுத்து வைத்துக் கொண்டு கற்றால் போதும், தள்ளியே இருங்கள் என்று நிறுத்தி இருந்தான்.
ஆனால் சிலர் அவனை சுற்றி வர தொடங்கினர், அவனின் ஜூனியர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள. அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அடிபட்டு திருந்தட்டும் என்று அந்த கூட்டத்தை கண்டுகொள்ள மாட்டான்.
இப்பொழுதும், அந்த கூட்டம் அவனை பின் தொடர்ந்து வந்து இருந்தது. அதை பார்த்த சக்திக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டு, அவனை நோட்டம் விட தொடங்கினாள்.
அவன் அங்கே அந்த உரிமையாளரிடம், சில கேள்விகளை கேட்க அவர் இவளை கை காட்டவும், அப்பொழுது தான் அவன் இவளை கவனித்தான்.
நேராக அவளிடம் வந்தவன், தனியாக பேச வேண்டும் என்றான். அவளோ, காரில் போகும் பொழுது பேசலாம் என்று கூறி தன் தோழிகள் பட்டாளத்தோடு அவனோடு வெளியேறினாள்.
“சக்தி! நான் தனியா பேசணும் உன் கிட்ட” என்று அழுத்தி கூறவும், அவளோ இவர்களை வீட்டில் இறக்கி விடுவது என் பொறுப்பு, என்னை நம்பி வந்தவர்கள் என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு, தன் பிஎம்பிள்யூ காரை எடுத்தாள்.
பின் இருக்கையில் அவளின் தோழிகள் மூன்று பேர் இருக்க, முன்னால் இவள் கார் ஓட்ட அவள் அருகில் சிவா. அவள் தனது மூன்று தோழிகளை வீட்டில் விடும் வரை காரில் மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.
காரில் இவர்கள் மட்டும் இருக்க, சிவா பேச்சை தொடங்கினான்.
“அந்த ஃபுட்டேஜ் எனக்கு வேணும், எனக்கு கொடுத்திடு. நீ இந்த கேஸ் ல இருந்து விலகி போ, இல்லைனா உனக்கு தான் ஆபத்து” என்றான்.
“அதை நான் பார்துப்பேன், நீங்க கவலை பட வேண்டாம். உங்க அக்கறைக்கு மிக நன்றி, வேற எதுவும் பேச வேண்டுமா?” என்று கேட்டாள்.
“சக்தி! உன் மேல நான் அக்கறை படாம வேற யார் அக்கறை எடுத்துப்பாங்க? இப்படி பேசாத, இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம கல்யாணம், இப்போ இந்த கேஸ் ல எவ்வளவு பெரிய ஆட்களோட மோதி இருக்க அப்படினு தெரியுமா உனக்கு?” என்று அழுத்தி கேட்டான்.
“எல்லாம் தெரிஞ்சு தான் எடுத்து இருக்கேன், பாதிக்கப்பட்டது ஒரு அப்பாவி பொண்ணு, அவளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?” என்றவளை கூர்ந்து பார்த்தான் இப்பொழுது.
“எது? அந்த குடிகார பொண்ணு அப்பாவியா?” என்று நக்கலாக கேட்கவும், அவள் அந்த ஆளில்லா ரோட்டில் காரை ஓரமாக நிறுத்தினாள்.
“நீயும் தான் குடிக்கிற, அப்போ நீ கெட்டவனா?” என்று அவள் அழுத்தமாக கேட்கவும், அவன் முறைத்தான்.
“எதுக்கு இப்போ என்னை இளுக்கிற இதுல? கேஸ் வித்டிரா பண்ணிடு சக்தி, பிளீஸ்” என்றவனை அவள் விடுவதாக இல்லை.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில், அப்புறம் எதுக்காக இதை எடுத்து இருக்கேன் சொல்லுறேன்” என்று மகா அழுத்தத்துடன் சக்தி.
அவளின் பார்வை சற்று அழுத்தத்துடன் தன்னை பார்ப்பதை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினான்.
“குடிக்கிற எல்லோரும் கெட்டவங்க இல்லை, மன அழுத்தம் தாங்காம குடிக்கிறான் ஒரு பக்கம், குடி தான் வாழ்க்கை அப்படினு குடிக்கிறான் ஒரு பக்கம். இதுல நான் முதல் வகை, எனக்கு மன அழுத்தம் ஏற்படும் பொழுது எப்போவாவது தான் குடிக்கிறேன்”.
“ரெண்டாவது வகை உள்ளவன், அதுக்கு அடிமையாகி குடிக்கிறானே தவிர அவனும் முழு கெட்டவன் கிடையாது” என்று அவன் கூறவும், அவள் சிரித்தாள்.
“நீ உனக்கு மன அழுத்தம் வந்தா குடிப்ப, அது தப்பில்லை. ஆனா அதே ஒரு பொண்ணு செய்தா, அவங்களை நீ எதோ கெட்டவங்க ரேஞ்சுக்கு பேசுவ அப்படித்தானே” என்றவளை இப்பொழுது அதிசயமாக பார்த்தான்.
அந்த இரவு நேரத்தில் ஒரு விசாரணைக்காக அந்த
பப்பிற்குள் நுழைந்தாள் சக்தி தன் தோழிகளோடு. அங்கே அதன் உரிமையாளரிடம் ஒரு கேஸ் விஷயமாக, குறிப்பிட்ட தேதியில் உள்ள cctv footage வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“சாரி மேடம்! அன்னைக்கு நடந்த அத்தனை சம்பவ புட்டேஜ் இன்ஸ்பெக்டர் வாங்கிட்டு போய்ட்டார் மேடம், என்கிட்ட இப்போ அந்த புட்டேஜ் இல்லை மேடம்” என்று பணிவுடன் அவர் கூறவும், அவள் தன் தோழிக்கு கன்னசைவை காட்டவும், அவள் ஒரு ஆடியோ ஒன்றை ஓட விட்டாள்.
அதைக் கேட்ட அந்த உரிமையாளர் முகம் வியர்க்க தொடங்கியது, இது எப்படி இவர்கள் கையில் என்று யோசிக்க தொடங்கினார்.
“எப்படி எங்க கைக்கு இந்த ஆடியோ கிடைச்சது? இதை எப்படி ஹேண்டில் பண்ணுறது? இப்படி யோசிக்காம, ஒழுங்கா எனக்கு அந்த புட்டேஜ் கொடுத்துட்டு போய்கிட்டே இருங்க, இல்லைனா அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை” என்று சக்தி கூறவும், அவர் அப்பொழுதும் கொடுக்க யோசித்தார்.
“சக்தி! இவர் கொடுக்க இவ்வளவு யோசிக்கிறார், இவர் வீட்டுல தான இப்போ சுபா நம்ம ஆளுங்க கூட இருக்கா, பேசாம டோட்டல் குடும்பத்தை தூக்க சொல்லலாமா?” என்று அவள் தோழி வினவவும், அவர் அரண்டு விட்டார்.
“மேடம்! வேண்டாம், என் ஃபேமிலியை ஒன்னும் செய்யாதீங்க, அவங்களுக்கு எதுவும் தெரியாது. நான் இப்போ அந்த புட்டேஜ் எடுத்து தரேன், ஆனா யாருக்கும் நான் தான் கொடுத்தேன் அப்படினு சொல்லிடாதீங்க” என்று கூறிக் கொண்டே அதை எடுத்துக் கொடுத்தார்.
அவளின் தோழி ஒருத்தி அதை வாங்கி சரி பார்க்கவும், எல்லாம் சரியாக இருக்கும், அங்கே அவரிடம் சில விஷயங்களை சொல்லிவிட்டு வெளியேறினர்.
பப்பில் இருந்த சில பானங்கள், அவளின் இரு தோழிகளை ஈர்க்கவும், மெதுவாக சக்தியை பார்த்தனர். அவளின் பார்வையோ, குடித்து தொலையுங்கள் என்றுவிட்டு அங்கு நடப்பவற்றை கவனிக்க தொடங்கினாள்.
“சக்தி! இந்த லூசுங்களை எதுக்கு இப்போ குடிக்க ஒத்துகிட்ட? என்ன பிளான் இப்போ?” என்று அவளை அறிந்தவளாக கேட்டாள் அவளின் சகோதரியும், தோழியுமான சுமதி.
“சுமதி! இன்னொரு தடவை நீ அவங்களை லூசு அப்படினு சொன்னா, உன்னை அடிக்க நான் யோசிக்க மாட்டேன். சூரியா, நிலா இரண்டு பேரும் என் கூட வேலை பார்கிறவங்க மட்டும் இல்லை, தே ஆர் மை ப்ரெண்ட்ஸ் காட் இட்” என்று கண்கள் சிவக்க அவள் கூறவும், சுமதி கப்ஸிபென்று அடங்கினாள்.
இப்படித்தான் பதில் வரும் என்று தெரிந்தும், கேட்ட தன் மடமையை எண்ணி நொந்து கொண்டாள். அவள் எண்ணியது போல், சக்தி ஒரு முடிவோடு தான் அங்கே அமர்ந்து இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல், அங்கே அப்பொழுது தன் படை சூழ உள்ளே நுழைந்தான் சிவா என்கிற சிவனேஸ்வரன். அவளுக்கு எதிராக இந்த கேசை எடுத்து வாதாட போவது அவன் தான்.
சென்னையில், லீடிங் கிரிமினல் லாயர் பாஷ்யம் சிஷ்யன் இவன். இவன் இதுவரை எடுத்த கேஸ் அனைத்தும் ஜெய்த்து காட்டி இருக்கிறான். ஆகையால், எப்பொழுதும் அவனை சுற்றி ஜூனியர் கூட்டம் ஒன்று திரிந்து கொண்டே இருக்கும், அவனிடம் கற்றுக் கொள்ள.
ஆனால், அவனோ அவர்களை எல்லாம் ஒரு எல்லையில் நிறுத்தி இருந்தான். கற்றுக் கொள்ள வேண்டும் எனில், கேஸ் நடக்கும் பொழுது பாய்ண்ட் எடுத்து வைத்துக் கொண்டு கற்றால் போதும், தள்ளியே இருங்கள் என்று நிறுத்தி இருந்தான்.
ஆனால் சிலர் அவனை சுற்றி வர தொடங்கினர், அவனின் ஜூனியர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள. அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அடிபட்டு திருந்தட்டும் என்று அந்த கூட்டத்தை கண்டுகொள்ள மாட்டான்.
இப்பொழுதும், அந்த கூட்டம் அவனை பின் தொடர்ந்து வந்து இருந்தது. அதை பார்த்த சக்திக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டு, அவனை நோட்டம் விட தொடங்கினாள்.
அவன் அங்கே அந்த உரிமையாளரிடம், சில கேள்விகளை கேட்க அவர் இவளை கை காட்டவும், அப்பொழுது தான் அவன் இவளை கவனித்தான்.
நேராக அவளிடம் வந்தவன், தனியாக பேச வேண்டும் என்றான். அவளோ, காரில் போகும் பொழுது பேசலாம் என்று கூறி தன் தோழிகள் பட்டாளத்தோடு அவனோடு வெளியேறினாள்.
“சக்தி! நான் தனியா பேசணும் உன் கிட்ட” என்று அழுத்தி கூறவும், அவளோ இவர்களை வீட்டில் இறக்கி விடுவது என் பொறுப்பு, என்னை நம்பி வந்தவர்கள் என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு, தன் பிஎம்பிள்யூ காரை எடுத்தாள்.
பின் இருக்கையில் அவளின் தோழிகள் மூன்று பேர் இருக்க, முன்னால் இவள் கார் ஓட்ட அவள் அருகில் சிவா. அவள் தனது மூன்று தோழிகளை வீட்டில் விடும் வரை காரில் மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.
காரில் இவர்கள் மட்டும் இருக்க, சிவா பேச்சை தொடங்கினான்.
“அந்த ஃபுட்டேஜ் எனக்கு வேணும், எனக்கு கொடுத்திடு. நீ இந்த கேஸ் ல இருந்து விலகி போ, இல்லைனா உனக்கு தான் ஆபத்து” என்றான்.
“அதை நான் பார்துப்பேன், நீங்க கவலை பட வேண்டாம். உங்க அக்கறைக்கு மிக நன்றி, வேற எதுவும் பேச வேண்டுமா?” என்று கேட்டாள்.
“சக்தி! உன் மேல நான் அக்கறை படாம வேற யார் அக்கறை எடுத்துப்பாங்க? இப்படி பேசாத, இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம கல்யாணம், இப்போ இந்த கேஸ் ல எவ்வளவு பெரிய ஆட்களோட மோதி இருக்க அப்படினு தெரியுமா உனக்கு?” என்று அழுத்தி கேட்டான்.
“எல்லாம் தெரிஞ்சு தான் எடுத்து இருக்கேன், பாதிக்கப்பட்டது ஒரு அப்பாவி பொண்ணு, அவளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?” என்றவளை கூர்ந்து பார்த்தான் இப்பொழுது.
“எது? அந்த குடிகார பொண்ணு அப்பாவியா?” என்று நக்கலாக கேட்கவும், அவள் அந்த ஆளில்லா ரோட்டில் காரை ஓரமாக நிறுத்தினாள்.
“நீயும் தான் குடிக்கிற, அப்போ நீ கெட்டவனா?” என்று அவள் அழுத்தமாக கேட்கவும், அவன் முறைத்தான்.
“எதுக்கு இப்போ என்னை இளுக்கிற இதுல? கேஸ் வித்டிரா பண்ணிடு சக்தி, பிளீஸ்” என்றவனை அவள் விடுவதாக இல்லை.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில், அப்புறம் எதுக்காக இதை எடுத்து இருக்கேன் சொல்லுறேன்” என்று மகா அழுத்தத்துடன் சக்தி.
அவளின் பார்வை சற்று அழுத்தத்துடன் தன்னை பார்ப்பதை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினான்.
“குடிக்கிற எல்லோரும் கெட்டவங்க இல்லை, மன அழுத்தம் தாங்காம குடிக்கிறான் ஒரு பக்கம், குடி தான் வாழ்க்கை அப்படினு குடிக்கிறான் ஒரு பக்கம். இதுல நான் முதல் வகை, எனக்கு மன அழுத்தம் ஏற்படும் பொழுது எப்போவாவது தான் குடிக்கிறேன்”.
“ரெண்டாவது வகை உள்ளவன், அதுக்கு அடிமையாகி குடிக்கிறானே தவிர அவனும் முழு கெட்டவன் கிடையாது” என்று அவன் கூறவும், அவள் சிரித்தாள்.
“நீ உனக்கு மன அழுத்தம் வந்தா குடிப்ப, அது தப்பில்லை. ஆனா அதே ஒரு பொண்ணு செய்தா, அவங்களை நீ எதோ கெட்டவங்க ரேஞ்சுக்கு பேசுவ அப்படித்தானே” என்றவளை இப்பொழுது அதிசயமாக பார்த்தான்.