//கமலம் கிளம்பிச் சென்றதும் மயங்கிய மதுமதியை அன்றிலிருந்து தாயாகவே தாங்கினார் அஞ்சுகம். அதனாலேயே அவளால் தனக்கு நேர்ந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் இருந்து வெளிவர முடிந்தது...அவர் மதுமதியை சிறிது சிறிதாக அந்த வீட்டுச் சூழலுக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்தார்...//
இதுல ’தன்னை’ என்ற சொல் அதிகப்படியா தோனுது சகோ! அதை நீக்கிடலாம்!
--
கதையின் சில காட்சிகள் வழமையானவையாக இருந்தாலும், உங்கள் விவரிப்பு அவற்றைச் சுவாரசியமாக்குது.
என்னை மீண்டும் மீண்டும் கவர்வது உங்கள் வசனங்கள்தான்!
மிக நேர்த்தியாக அமைத்திருக்கின்றீர்கள்!
படித்த மதுமதி ‘ரூம்’ என்பதை படிக்காத அவளது கிராமத்து அத்தை ‘ரூம்பு’ என்று சொல்வது (அதை மிஸ் பண்ணாம சரியா அவரவர் வசனத்துல வெச்சது) ரொம்ப அருமை (இது ஒரு பதச் சோறுதான்! முழு வசனங்களும், அந்த வட்டார வழக்கும் இனிமையோ இனிமை!)
‘வனத்தோட மேஞ்சாலும் இனத்தோட சேரனும்’ (அத்-1), ‘படைப்பைவிட்டுப் படைத்தவனை நோக்கிச் சென்றார்’ போன்று ஆங்காங்கே பல வைரங்கள் மின்னுகின்றன... சபாஷ்...
மதுமதிக்கும் வெற்றிக்கும் இடையில் இரண்டாடுகளுக்கு முன் என்னதான் நடந்துச்சு? என்ற அந்தக் கேள்விதான் கதையைப் படிக்கத் தூண்டும் உந்துதல்...
என்னதான்பா ஆச்சு?!