Unmaiya varthaikal dr???
Yaska???Unmaiya varthaikal dr???
Yes Kutty?????Yaska???
?????Arumai dear
Yes ka...avunga rmba pavam than...na anupavachathu ila..but ennala mutinja alavuku yeluthiruken...and ???kaAmma ....kavithai padikama ella.niraiya padichiruka.but neenga eluthunathu kadal thayavalai patri.pavamla avanga.unga kavithai neenga anupavichu eluthunamari. Rompa feeling ah eruku.nijamave padikrapa aluthuten ????
Enna solradhney theriyala... Avlo pidichiruku.. ????... Goosebumps... Deiva ???அள்ள அள்ள குறையாம கொடுத்த உன்ன ஒன்னும் சொல்லல நான்..
ஆனா
உன்ன நம்பி வந்த எம்புள்ள இன்னும் கரை திரும்பலயே...
அவன் முகம் காணாம சோறு தண்ணி இறங்காம சுவத்தோட ஒட்டியிருக்கும் அவன் பொஞ்சாதிக்கு நான் என்ன பதில் சொல்ல...
பாதகத்தி ஒம்மேல பாசத்த பொழிஞ்சோமே
உன்கிட்ட வந்தா ஊர் மெச்ச வாழ்ந்திடுவோம்னு மீன் பிடிக்க வந்த எம்மவராசன் இன்னும் வீடு திரும்பலயே...
நாட்டிலே மிகப் பெரிய தொழில் உன்னோடதுதான்.
ஆனா நாதியத்து போன எங்கள பாக்கத்தான் நாலு பேரு கூட இல்ல....
எங்க புள்ளயல்லாம் கடலுக்குள்ள போயி கரை திரும்பலைன்னு மனு குடுக்க போனா
அந்த மவராசனுங்க மனுசனா கூட மதிக்க மாட்டேங்கிறாங்க...
அரசாங்கத்துக்கு எங்க கிட்டயிருந்து வர மீனு வேணும், இறா வேணும் அதுலயிருந்து ஏற்றுமதியாகிற லாபம் வேணும்.
ஆனா
பாவப்பட்ட மனுசங்க நாங்க தான் வேணாம்மய்யா...
பாதி நேரம் வல பின்னுரோம், மீதி நேரம் அந்த வலையோடு உன்ன பாக்க வாரோம்.
நீயும் எங்கள ஏமாத்தாம அள்ளி தான் தந்த ஒன்னு ஒன்னும் சொல்லல தாயி...
ஆனா
உன்ன நம்பி வந்த என்ற புள்ள இன்னும் கரை சேரலியே...
அந்த இலங்கைகாரன் எம்மவன புடிச்சு வச்சிருக்காங்கிற செய்தியாவது காத்தோட வராதா...
அவன் உசுரோடயிருந்தா போதுமே அந்த நினைப்போட காலத்த கடத்திருவோமே....
மடச்சி நான் பொழம்புறது மங்கை உனக்கு கேட்கலியோ...
மவராசன உன்ன நம்பி அனுப்பி வச்சேனே அவன் இன்னும் மங்கள முகம் பார்க்க வீடு திரும்பலியே...
அவன பார்த்தாக்க சொல்லு கரையில ஒரு உசுரு உனக்காக தினம் என்கிட்ட புலம்பி தவிக்குதுனு....
????????KaEnna solradhney theriyala... Avlo pidichiruku.. ????... Goosebumps... Deiva ???