Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி- 200 கிராம் ( 1 டம்ளர்)
பா. பருப்பு - 50 கிராம் ( 1/4 டம்ளர்)
சீனி - 100 கிராம்
தேங்காய் - அரை மூடி
டால்டா - 25 கிராம்
எள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அதனை தண்ணீர் வடித்து ஒரு துணியில் சிறிது நேரம் உலர விடவும். ஈரம் உலர்ந்ததும் மிக்ஸியில் பொடித்து பின்னர் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாவை லேசாக வறுத்து கொள்ளவும். பா. பருப்பையும் வறுத்து பொடித்து கொள்ளவும். தேங்காயை அரைத்து கெட்டியாக முக்கால் டம்ளர் பால் எடுத்து கொள்ளவும். அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதனுடன் சீனியை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஆறவிடவும். ஒரு வாயகல பாத்திரத்தில் வறுத்த மாவு, வறுத்து அரைத்த பா.பருப்பு வறுத்த எள் ஒரே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இந்த சீனி கலந்த தேங்காய் பாலை சேர்த்து, அதனுடன் டால்டா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு கொய்யா இலையில் சிறிது எண்ணெய் தடவி சிறிதளவு மாவை நீளவாக்கில் உருட்டி கொய்யா இலையில் வைத்து இலை முழுவதும் மாவை இழுத்து அப்படியே இலையை சுருட்டினால் மாவு மேலே உள்ளது போல் சுருளாக வரும்.இலையை நீக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே இலையில் மீதமுள்ள எல்லா மாவையும் அதே போல் செய்து வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.