sollikitanga....... ooru pakkam.....Nan nalla pilla ???yarkittanalum kelu appdithan solluvanga??
நன்றி ??Nice....
Theliva elutha theriyathe??unga ularale ippadi irunthaa .... innamum thelivaa ezhuthinaa ????
Thanks dear ??Excellent Narration Sree... Dialogues ellam simply superb... ???
பாத்தியா நீயே ஒத்துக்கிட்ட.... ??ஊரு பக்கம் வந்து கேக்குறியா ? வாடா வாடா வந்து கேளு ???sollikitanga....... ooru pakkam.....
சந்தோசம் அக்கா....என்ன ஒரு எழுத்து நடை சும்மா தமிழ் உங்க கையில் நர்த்தனம் ஆடுது முத்துமாலை கோர்த்தது வைத்தது போல இருந்தது உங்கள் தேன்மழை அருமை ஸ்ரீ??
அருமை?????அவளின் பேச்சு கரிகாலனுக்கு புன்னகையை வரவழைத்தது. இத்துனை நேரமும் அழுகையில் கரைந்தவளை பார்த்து
“இந்த உலகம் பரந்திருக்கிறது தேவி!... மனதில் நம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி வாய்ப்பு நம்மை தேடி வரும்.... நான் இந்நாட்டை விட்டு சென்றாலும் என் மனம் என்றும் சோழ சாம்ராஜியத்தின் நலனை கருத்தில்கொண்டு செயல்படும்.... என் மகன் வருவான் என் பணியை அவன் சிரமேற்கொண்டு செய்வான் தேவி!.. நீ இவ்வாறு துயரம் கொள்வதில் அர்த்தமே இல்லை...” என்று கூறி அவள் நெற்றியில் தன் முத்திரையை பதித்தான்....
கரிகாலனின் பேச்சில் தெளிவடைந்தவள் அவனின் முத்தத்தில் தலை குனிந்தாள். அது அவனுக்கு உல்லாச நிலைக்கு இட்டுச் சென்றது....
முகத்தின் வடிவழகை அளந்தவனின் விரல்களை தடுத்தவள் “வேண்டாம் இளவரசே! விடுங்கள்!.... இச்சமயம் இங்கே?.... “ என்று இழுத்தவளை.....
“ ஏன் தேவி!... இந்த இடத்திற்கு என்ன.... மலர் மஞ்சமும் , அரண்மனை தூளியும் தான் நம்மை சுகப்படுத்துமா? ... அன்பை பரிமாற இரு இதயங்கள் போதும் ..... அந்த அன்பை பகிர்ந்துகொள்ள முழுமனதுடன் கூடும் கூடலே நம் உறவை மேன்மை படுத்தும்....” என்று உரைத்தவனின் கைகள் தன் செயலுக்கு அச்சாரமாய் அவளின் இடையினை அழுத்தி ஒருவித மாயலோகத்திற்கு இட்டுச் சென்றன...
கரிகாலனின் கைகள் செய்த மாயத்தால் துவளத் தொடங்கிய பாவையவளின் மேனி முழுதும் சிவந்து செங்க்கொழுந்தாய் மாறியது....
அவளின் மோன நிலையையே சம்மதமாய் ஏற்றவன் பிறகு பேசவில்லை..... வாய்ச்சொல் யாதும் பயனில்லாததால், சொல் நின்று.. செயல் தொடர்ந்தது.....
அடைமழையின் குளிர்ச்சியும், தீயின் வெப்பமும் தேன்மழையாய் மாறி இருவரின் மீதும் பொழிந்தது.