Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
நீ கரெக்டாதான் எழுதிற பிரேம்ஸ். ஆனா படிப்பவர்கள் யாரும் காலத்தை ஆராயாமல் குழம்பிவிட கூடாதே அதுதான் என் வருத்தம்.Thanks Moni for your lovely comment ..
எனக்கு தெரியும் இவங்க 950 ம் நுற்றாண்டை சேர்ந்தவர்கள் என்றும் பாரி 2 ம் நுற்றாண்டை சேர்ந்தவன் என்றும்...
நான் முதலிலேயே சொன்னது தான் இது முழுக்க என் கற்பனையே.. கதாபாத்திரங்களின் பெயரை சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்து இருக்கிறேன் என்று... எனக்கு வரலாற்று நாவல்கள் படித்த பழக்கமில்ல ... ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்காமல் என்னால் எழுத முடியவில்லை அதனால் தான் என் மனதிற்கு நெருக்கமான பாரி, பொற்சுவையின் பெயர்களை உபயோகபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
என் மனதிற்கு நெருக்கமான பாரியையும்
சசி ஜி மனதிற்கு நெருக்கமான ஆதித்யனையும் இணைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவமே இந்த தேன்மழை??
பாரிக்கும்.... ஆதித்யனுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பது போல நான் உணர்ந்தேன் அதான் ...
ஆதித்யனை அழுத்தமாக காட்டவே அந்த வசனம்... சோழர்களை குறைத்து சொல்ல அல்ல.,, அப்படி என்றாலும் ஆதித்யன் சோழ இளவரசன் தானே??
இது எல்லாத்துக்கும் மேலே நான் ஒரு இராஜராஜ சோழன் பைத்தியம். அதனால வந்து வெளிப்பாடு. உண்மையை சொல்லனும்னா நான் நேசிக்கிற கதாபாத்திரம் இந்த ஆதித்த கரிகாலன் நந்தினி குந்தவை அருள் மொழி வந்தியத்தேவன் எல்லாம்.
மனசில பொன்னியின் செல்வம் ஆழமான என்னோட கலந்திருக்கு. ஒரு வரி கூட என்னால அதை மாற்ற இயலவில்லை. அதான் தேன்மழை பக்கம் தலை வைத்து படிக்கல.
ஆனா என் டார்லிங் நீ எழுதி இருக்கும் போது படிச்சி கமெண்ட் போடாம எப்படி?
அதான் வந்து கொஞ்சம் உளறிட்டேன்.