Super deiva ? ?? ? ? ?..நானும் எழுதுறேன்னு எழுதிட்டேன். ஆனா எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்னாலேயே என் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல??.. ஏன் நினைக்கிறீங்களா இது வேற வரலாறு சம்பந்தப்பட்ட கதை ஆனா நான் எழுதியிருக்கிறதுல தமிழும் இல்ல வருணனையும் இல்ல??.. கொஞ்சமா புகழ்றதாயிருந்தா(திட்டுறது) கமெண்ட் பாக்ஸில் புகழுங்க கொஞ்சம் அதிகமா புகழ்றதாயிருந்தா இன்பாக்ஸ் க்கு வந்துடுங்க??
நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை.இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க.. நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்தப் புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!
“அரசே…!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பிப் பார்த்தான் அவன்! என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!
நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!
மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இருக்கமாக கட்டியிருந்த கீழாடையும், முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரன் என கூற “சொல் முத்தழகா” என்றான் ஆதித்த கரிகாலன்.
அரசே என்னை தவறாக நினையாதியுங்கள். நாம் இருக்கும் அவசர சூழலில் இந்தப் பயணம் தேவைதானா!
இப்பொழுது என்ன அவசர சூழல் ஏற்பட்டது முத்தழகா. இருவரும் நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறோம் .”அங்கே ஆகாயத்தை பார்!”சித்திரையில் பூரண சந்திர நிலவு தன் முழு ஒளியும் இந்த வனம் முழுவதும் பரவி வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.தூரத்தில் இரு புள்ளினங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதற்காக கானம் மீட்டு கொண்டிருக்கின்றன.
“தென்றல் அவள் சாமரமாய் வீசுகிற பொழுதெல்லாம் சுகந்தமான நறுமணத்தை அள்ளி வீசி செல்கிறாள்”. இன்னும்!...
“போதும் அரசே!” நாம் இருக்கும் சூழ்நிலை தெரியாமல் நிலா, புள்ளினம், தென்றல் என்று கூறுகிறீர்கள்…
முத்தழகா! நாம் இருக்கும் சூழ்நிலையை நன்கு அறிவேன் நான். இருந்தாலும் காலம் என்பது ஒரே ஒருமுறைதான். நாம் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து கொண்டே செல்ல வேண்டும். ஏனென்றால் இது போல் இன்னொரு வாய்ப்பு நமக்கு அமையாது அல்லவா!
அது சரி அரசே! ஆனால், நாம்…. போதும் முத்தழகா! இப்பொழுது நீர் என்ன தான் சொல்ல வருகிறீர்… நான் வீரபாண்டியனின் தலையை கொய்து தஞ்சை முழுவதும் ஊர்வலம் வந்ததால் என்னை கொல்வதற்கு மாபெரும் சதி நடக்கிறது இதுதானே!...
உனக்கே தெரிந்திருக்கும் பொழுது எனக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்!
ஐயோ! அரசே கோபம் கொள்ளாதீர்கள்!.. உங்களுக்கு தெரியாது என்று நான் எப்பொழுது கூறினேன்! இப்பொழுது இந்த பயணம் தேவைதானா என்றே என் கேள்வி!...
கோபம் அல்ல முத்தழகா உனக்கே தெரிந்திருக்கும் பொழுது எனக்கு தெரியாமலா இந்த பயணத்தை மேற்கொள்வேன்.
“இளவரசி நந்தினி தேவியாரை கண்டு நான்கு திங்கள் ஆகப்போகிறது!”… ஏனோ என் மனம் சிறிது சஞ்சலமாக இருக்கிறது. அதுதான் அவர்களை கண்டு வரலாம் என்று கிளம்பினேன்… ஆனால் நீரோ என்னை கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்!.
அரசே, தங்களை நான் கேள்வி கேட்பேனா… என் மனதில் இருந்ததை மட்டும் தான் கூறினேன்!
இடிஇடியென சிரித்த கரிகாலன் அதற்கு பெயர்தான் கேள்வி முத்தழகா! மிகவும் சாதுரியமாக பதில் கூறுவதாக நினைப்போ! வாரும் செல்லலாம்!
அரசே!போதும் முத்தழகா இதைப் பற்றிய பேச்சுக்கள். நாட்டில் இப்பொழுது என்ன நடைபெறுகிறது என்று கூறுங்கள்.
“காவிரியாற்றில் வெள்ளம் அடிக்கடி வருவதால் நம் மக்கள் பலர் மாண்டு போகிறார்கள். பலரின் விளைநிலங்கள் பாழாகிறது… இப்பொழுது இது ஒன்றுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும்,வெள்ளக்காலங்கள் இல்லாத நேரத்தில் தண்ணீர் வற்றி, மக்கள் வேளாண்மை செய்ய இயலாமல் உணவிற்காக தவிக்கின்றனர் அரசே!”
முத்தழகன் கூறி முடித்தவுடன் ஆதித்யனனிடம் பெரும் சிந்தனை. இப்படியே சில நாழிகைகள் சென்றவுடன் ஆதித்ய கரிகாலன் தன் திருவாய் மலர்ந்தான்...
ஏன் முத்தழகா காவிரிக்கு நடுவே நாம் ஒரு அணையை கட்டினால் என்ன! உனக்கு என்ன தோன்றுகிறது.
“அரசே! இது எப்படி சாத்தியமாகும். காவிரியிலிருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே அணை என்பது நிச்சயம் சாத்தியமல்ல”.
“சாத்தியமில்லாத ஒன்றை செய்து வெற்றி பெறுவதே என் குறிக்கோள் முத்தழகா”. நாம் நம் இடம் சென்றவுடன் நமது முதன்மை கட்டுமான கலை வல்லுனர் மூரியனை என்னை வந்து பார்க்க சொல்!
இப்பொழுது நந்தினி தேவியாரின் அரண்மனை அருகில் வந்து விட்டோம். சுரங்கப்பாதை வழியாக சென்று நந்தினி தேவியாரை வரச்சொல்!...
“உத்தரவு அரசே! இதோ சென்று அழைத்து வருகிறேன்”...
அங்கே அரண்மனைக்குள் ஆளுயர உருப்பளிங்குக்கு நேர் உட்கார்ந்து இருந்தாள் மாது ஒருத்தி. மாது என்பதற்கு பதில் தேவலோக மங்கை என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
“பளிங்கு போன்றவள் எனும் எடுத்துக்காட்டுக்கு மிகச் சரியாக பொருந்தக் கூடிய உருவம்… இரண்டு வில்லையே முகத்தில் ஒட்டியது போன்ற புருவங்கள்..அது கண்களா அல்லது இரண்டு கயல்களா என்று பிரித்தறிய முடியாதபடி மீன் போன்ற கண்கள்... அதற்கு மேலும் அழகு சேர்ப்பது பச்சை நிற கருவிழிகள் தான்...கூரான நாசிகள் அதற்கும் கீழே பிரம்மன் மிகவும் சிரமப்பட்டு மிக நேர்த்தியாக செய்து வைத்த உதடுகள்… முன் கோபுர கலசங்கள் இரண்டையும் மிக நேர்த்தியாகவும் இறுக்கமாகவும் கட்டிய சிகப்பு கச்சைகள் என் தலைவனுக்கு மட்டுமே என்று கட்டியம் கூறுகின்றது... இடையென்ற ஒன்று உள்ளதா எனும் தேடும்படியான இடையுடையாள்... கீழேயும் மிகவும் வேலைப்பாடுகள் கொண்ட அதே நிறத்திலான சிகப்பு கச்சை தன் பணியை செவ்வன செய்திருக்கிறது…
மேலாடையாக மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட பச்சை நிறத்திலான பாலின் ஆடையை ஒத்த பட்டாடை இது என் இடம்மென்று சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது...”
அகலின் நறுமணத்தால் அந்த அறையே சுகந்தமான நறுமணத்தில் மூழ்கி இருந்தது… அதற்கு நடுவே புது மலரேன அமர்ந்து தன் கயல் விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்க அஞ்சனம் தீட்டுகிறாள். அப்பொழுது கதவு திறக்கும் ஓசையினால் தன் கவனம் கலைய திரும்பிப் பார்க்கிறாள் அவள்!வந்தது அவளது தோழி அனலிகா...
“இளவரசி! சொல் அனலிகா என்கிறாள் பிரபஞ்ச பேரழகி நந்தினி”. இரு நாழிகைக்கு அனலிகாவிடம் எந்த அசைவும் இல்லாததால் தன் கண்களுக்கு அஞ்சனம் தீட்டும் வேலையை மீண்டும் செய்கிறாள்.
மறுபடியும் “இளவரசி!” என்னும் சொல்லுக்கு நந்தினியிடமிருந்து ஒரு பார்வையே பரிசாக கிடைத்தது…
Inboxlayum solananuma.?? ??