biriyani specialist nnu marubadium niroobichutta"கண்ணி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்"
"பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்கள் சுற்றும் வாலிபன் எவனோ?" ஓ....ஓ...ஓ...
அவனே காதல் மன்னன்....காதல் மன்னன்....
என்ற பாட்டின் வரிகள் ஆறடி ஐந்தங்குல ஆணழகன் இவனுக்காகவே எழுதப்பட்டதோ....
"பரந்த நெற்றி, கூரானா நாசி, நான் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என எடுத்துக்காட்டும் சிவந்த இதழ்கள், அதில் உறையும் குறும்பான மென்னகை, உறுதியான கடவாய், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வலிமையான தோள்கள், பரந்த மார்பும், குறுகிய இடையும், என ராஜதோரனையுடன் வலம் வருபவன். "ஆதித்தன்"."
அந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்களின் ரோல் மாடல், பெண்களின் கனவு நாயகன்.......இந்த "கனவு நாயகன் " அப்படிங்கற இடத்திலதான் அவனுக்கு கண்டமே......
பாடத்தில் எதாவது சந்தேகம் கேட்டு பெண்கள் கூட்டம் அவனை சுற்றிக்கொண்டே இருக்கும்...இதை பார்த்தால் எந்த மனைவிக்குதான் குளுகுளுன்னு இருக்கும்....கண்ணு, காது, மூக்குல எல்லாம் புகை புகையா வரும் அம்மணி்க்கு. விளைவு சாயங்காலம் வீட்டில் ஒரு போர்க்களமே நடக்கும். இன்னைக்கும் அதான் நடக்குது வாங்க பார்க்கலாம்.
(அவளுக்கு எப்படி தெரியும்னு நினைக்கறீங்களா? சமுத்திராவும் அங்கதான் இப்பொழுது வேலை செய்கிறாள்.. )
ஹாலில் சமுத்திரா அமர்ந்திருக்க, ஆதித்தன் அவள்முன் முகத்தை பாவமாய் வைத்தவாறு நின்றிருந்தான். அவனின் நாடகத்தை அறிந்தவளாய் இதழுக்குள் வந்த சிரிப்பை அடக்கி....கோபமாய் வைத்துக்கொண்டாள்.
"Mr. ஆதித்தன் .....நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசில?"
" உங்களதான்"......
"என்னது?"
"என்னோட மனைவியன்னு சொன்னேன்"
( இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று மனதில் நினைத்தவள்)
"இன்னைக்கு என்ன..... அந்த பொண்ணுங்ககிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிகிட்டு இருந்தீங்க"....
"காமெடி பண்ணா சிரிக்கதான் செய்வாங்க..... இது ஒரு குத்தம்னு என்ன நிக்க வச்சு கேள்வி கேக்கறது நியாயமே இல்ல மை லார்ட்"....
"அப்ப நீங்க என்ன பண்ணாலும் கேள்வி கேக்க கூடாதா?" எனக்கு அந்த உரிமையில்லையா?"
முகத்த ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிக்கிட்டு போயிட்டா..... (வெளிய இல்லங்க உள்ளதான் அப்பதான சமாதானம் செய்வான்)
இது தினமும் நடப்பதால் சிறுசிரிப்புடன் சமையலறைக்கு சென்று எதையோ எடுத்தவன் அவளை காண அறைக்கு சென்றான்....
"பேபி....பேபி.....பே....பி..."
" பேபியாம் பேபி ம்ஹும்"என வாய்க்குள்ளயே முனகிக்கொண்டு ஜன்னலோரமாக திரும்பி நின்றிருந்தாள்.
மாலை நேர மஞ்சள் வெயில் முகத்தினில் பட இளஞ்சிவப்பு நிற சேலையில் அப்சரஸ் போல இருந்தவளை எப்போதும் போல அவனது கண்கள் ரசிக்க தவறவில்லை.
மெல்ல அவளருகே சென்றவன் " என்னடா கோபமா?" என பின்னிருந்து இடது கையால் அவளை அணைத்துக்கொண்டான்.
..................
"அப்ப மேடம் பேசமாட்டீங்க?"
..........
"ரொம்ப சூடா இருக்காங்களோ? என நினைத்தவன்......
இப்ப பாரு .... என்ன பண்றேன்னு....
குறும்பு புன்னகையுடன் கையில் வைத்திருந்த குளிர்நீர் பாட்டிலை அப்படியே அவள் தலையில் கொட்டிவிட்டான்......
"ஆ......"
"மேடம் சூடா இருந்தீங்களே... இப்ப ஜில்லுன்னு இருக்கா?" என கேட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான் கள்ளன்.
அதிர்ச்சியில் இருந்தவள்.... "ஆதீ".......என்றவாறு அவனை துரத்திச்செல்ல ....அவன்தான் அப்போதே ஓடிவிட்டானே....
இதழ்களில் சிரிப்புடன் வரட்டும் இன்னைக்கு இருக்கு!!!! என்று எண்ணிக்கொண்டு குளிக்க சென்று விட்டாள்.
குளித்துவிட்டு மஞ்சள் நிற சேலையில் தலையை துவட்டியவாறு வந்தவள் அவனை தேட அவனை காணவில்லை....
" எங்க போய்ட்டாங்க?" என எண்ணும்போதே இரு கரங்கள் பின்னிருந்து அணைத்தன.
வந்துவிட்டான் அவளின் அழகன், அவளின் உணர்வுகளை ஆர்ப்பரிக்க வைக்கும் அசுரன்.
குளித்திருப்பான் போல இடையில் துண்டுடன்.....அவன் வெற்று மார்பின் மேல் அவளை அழுத்தமாக பிணைத்தவாறு....மூச்சுக்காற்று கழுத்தில் பட "இப்ப கோவம் போச்சா?" என்று உதடுகள் காதில் ரகசியம் பேசியது.....
அவளுக்கு தேகம் சிலிர்த்து அடங்கியது...அவனின் வலது கை கூந்தலில் அலைய, இடது கை இடையில் வீணை மீட்டியது.
"கோவம் போச்சா கேட்டேன்?" என்று இன்னும் அழுத்தம் கொடுக்க...அவள் எங்கே பதில் பேசும் நிலையிலா இருக்கிறாள்.....
அவளை முன்பக்கம் திருப்பியவன்.."பேபி"....
ம்......
"என்னடா?"
அவன் கண்களை பார்த்தவாறு "கோவம் வந்தாதான போறதுக்கு.....இங்க நாந்தான் இருக்கேன்னு எனக்கு தெரியுமே" என்று அவன் இதயத்தை சுட்டிக்காட்டி கூறினாள்.
" கள்ளி.....வேணும்னே நடிச்சியா?"இதுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு"......
" நீங்க மட்டும் என்னவாம் நான் இருக்கறது தெரிஞ்சேதான அந்த பொண்ணுங்ககிட்ட வேணும்னே சிரிச்சு பேசுனீங்க" என்றாள் அவனை அறிந்தவளாய்.
"சரியான கேடிடி நீ!!!!!!" என்று சிரித்தவன்...அவளுக்கான தண்டனை நிறைவேற்ற அவளை கையில் ஏந்திக்கொண்டான்.....
அவளும் அதை ஏற்கும் விதமாய் அவனது மச்சத்தில் இதழ் பதிக்க, இவன் அவளின் இதழில் இசைமீட்ட தொடங்கினான்.
.......முற்றும்.....