சரிந்த மணல் பரப்பில் ஆளரவமற்ற அந்த நதிகரையில் புற்களை போர்வையாக்கி... பூக்களை தலையனையாக்கி... சாய்ந்திருந்தான் அவளவன். அவன் மார்பை தலையனையாக்கி மஞ்சம் கொண்டிருந்தாள் சமுத்ரா...
"ஏழாயிரத்தி நூற்றித் தொண்ணூத்தி ஒன்பது..."
"எதையெண்ணுகிறீர்கள்?? நட்சத்திரத்தையா??"
"வள்ளுவனின் மூன்றாம் பாலில் எங்கு வந்தது நட்சத்திர சாஸ்திரம்... நான் தித்திக்கும் தேன் துளிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்."
"தேனா... ப்ச்ச்.. எனக்களிக்காமல் தனித்துண்டீரா??" மூக்கு நனிச் சிவந்தபடி கேட்டவளை... தன் பதிலால் கன்னக் கனி சிவக்க வைத்தான் அக்காதல் கள்வன்.
"நீ என் மார்பில் சிந்திய உன் இதழ்த் தேன் துளிகளைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.. அழகி.."
"கண்டுகொண்டீரா... பொல்லாதவர்தான் தாங்கள்... ஆமாம் அதென்ன கணக்கு ஏழாயிரத்தி நூற்றித் தொண்ணூத்தி ஒன்பது??"
"இப்போது ஏழாயிரத்தி இருநூறு..." என்று கண்சிமிட்டினான்.
"சொல்லுடா அழகா அந்த கணக்கைத்தான்.." என்று கொஞ்சினாள்.
"நாம் இங்கு வந்த இரண்டு மணி நேரத்தில் மொத்த விநாடிகள்... அழகி.."
"அதையெதற்கு இப்போது?????" கேட்டவள் பாதியிலேயே பதிலையுணர்ந்து.. வெக்கமிகுதியில் பேசாமடந்தையானாள்.
"முதலிலேயே கண்டுகெண்டீரா... அழகரே??"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... அதென்ன எதைப்பார்த்தும் எளிதில் பரவசமடையாத என்னழகி... இந்த அற்பனின் மார்பு மச்சத்திற்கு மயங்குகிறாய்???"
"என்ன இப்படி கேட்கிறீர்கள்??? உங்கள் மச்சத்தை உற்று கவனியுங்கள் ஆதித்யனான சூரியன் உமக்குள் நிறைந்தவள் உம் கடலழகி சமுத்ரா.."
"பிறப்பிலேயே உன்னை கொண்டவன் நான் அதுதானே மற்றொரு வியக்கத்தக்க காரணம்?!!"
"ம்ம்ம்ம்ம்" என்று மயங்கி பதிலளித்தாள் அக்காரிகை.
அவள் காதலனோ அவளிடம் வம்பு செய்ய எண்ணி ஆற்றுநீரை கைகளில் அள்ளி அவள் மீது தெளித்தான்....
மயக்கம் தெளிந்தவள் கண்டது தனக்கு மிக அருகே தன் கனவில் வந்த மச்சம் கொண்ட தன் அழகனை... ஆம் அவள் அழகன் ஆதித்த கரிகாலன்...
Carry on darling
@sandhiya sri