இங்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த அதே சமயம்,"நகரேஷூ காஞ்சி " என்று நகரங்களில் உயர்ந்ததாய் ,சிறப்பானதாய் சொல்ல படும் ,காஞ்சிபுரத்தின் எல்லையில் அமைந்து இருந்த அந்த தோப்பின் பாழ் அடைந்த கட்டிடத்தில் அமர்ந்து ஒருவன். அங்கு நடப்பதை நெருப்பு ஜுவாலையில் பார்த்து கொண்டு இருந்தான் .ஆம் நெருப்பில் அவன் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தான் .
உயரம் ஏழடி ,கண்கள் கோவை பழம் போலே சிவந்து இருந்தன கழுத்தில் சிறு பிள்ளைகளின் மண்டை ஒட்டு மாலை .கருப்பு நிற கோவணம் மட்டுமே அணிந்து இருந்தான் .வாய் விடாமல் ஏதோ ஒரு மந்திரத்தை ஜெபித்து கொண்டு இருந்தது ....தொடர்ந்து எட்டு கோடி முறையாய் விடாமல் .....
அவன் இருந்த தோப்பில் மட்டும் கருமேகம் சூழ்ந்து இருந்தது .கும்மிருட்டு -இதற்கும் பகல் வேலை .
காதில் கேட்கவே முடியாத ,புரிந்து கொள்ளவே முடியாத பாஷையில் அழுகுரல்கள் கேட்டு கொண்டு இருந்தது அந்த தோப்பில் இருந்து .இதய துடிப்பை நிச்சயம் நிறுத்தி விடும் அமானுஷயம் அங்கு நிறைந்து இருந்தது.
அந்த கட்டிடத்தின் பாதாளம் மூன்று ,நான்கு அடுக்குகள் பூமிக்கு உள்ளேயே சென்று இருந்தது.காற்று என்பதே இல்லாத அதள பாதாளம் .அங்கு நிறுவ பட்டு இருந்தது அந்தரத்தில் மிதக்கும் பெயர் சொல்ல முடியாத தீய சக்தியின் சிலை .அந்த சிலையின் தலை முடி காற்றில் ஆடி கொண்டு இருந்தது .கிட்டே நெருங்கி பார்த்தால் தான் அவை அனைத்தும் பாம்புகள் என்பதே தெரியும் ....மெதூசா என்ற கிரேக்க கடவுள் போலே.
அவன் முன் ஆடை அணியாத பெண் ஒருத்தி உடல் முழுவதும் ரத்த அபிஷேகம் செய்ய பட்டவளாய் தன் ப்ராக்ஜய் இன்றி இருந்தாள் .
"ம்ம் "என்ற அவன் கர்ஜனைக்கு உட்பட்டு அடுத்த நொடி எரிந்து கொண்டு இருந்த அக்னி குண்டத்தில் குதித்து விட்டாள் .
அவள் குதித்த மறுகணம் வானில் மின்னல் வெட்டியது .அந்த அக்னியில் இருந்து வெளிவந்தது ஒரு அழுகி போன கை .அதன் கரத்தில் மின்னியது வைர வாள் .காஞ்சிபுரத்தில் முன்பு இளவரசன் உயிர் போக காரணமாய் இருந்த அதே வாள் .சமுத்திராவின் கனவில் ஆதித்தன் தலை கொய்த அதே வாள் .
"இந்த தடவையும் உன் உயிர் பறிப்பேன் ஆதித்யா ....காஞ்சிபுரம் மீண்டும் எழும்ப விட மாட்டேன் ...மண்னோடு மண்ணாய் போன நீ கட்டிய தங்க அரண்மனை வெளி வர விடவே மாட்டேன் ......இது என் சபதம் ...எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஜெயிக்க போவது நான் தான் .....இந்த முறை சமுத்திரா என்ற பெயரில் பிறந்து இருக்கும்பெண் மீண்டும் இரவில் நர பலி கொடுக்க போகிறேன்.அதற்கு தான் சமுத்ராவை மணக்கஉன் குடும்பத்தை அனுப்பி இருக்கேன். .....யார் வருவார் என்னை வெல்ல ?"என்ற அவன்-ரக்த பீஜன் என்னும் அரக்கனின் குரல் கேட்டு அந்த மாளிகையில் கண்ணுக்கு தெரியாத பலர் அழ ஆரம்பித்தனர்.
கரிகாலன் தாய் அருகே நிற்கும் நந்தினி யார்?...இந்த ரக்தபீஜன் யார் ?காஞ்சிபுரத்தின் நிலை என்ன ?தங்க அரண்மனை ரகசியம் என்ன?ஆதித்யன் இந்த ஜென்மத்தில் நல்லவனா கெட்டவனா ?
உயரம் ஏழடி ,கண்கள் கோவை பழம் போலே சிவந்து இருந்தன கழுத்தில் சிறு பிள்ளைகளின் மண்டை ஒட்டு மாலை .கருப்பு நிற கோவணம் மட்டுமே அணிந்து இருந்தான் .வாய் விடாமல் ஏதோ ஒரு மந்திரத்தை ஜெபித்து கொண்டு இருந்தது ....தொடர்ந்து எட்டு கோடி முறையாய் விடாமல் .....
அவன் இருந்த தோப்பில் மட்டும் கருமேகம் சூழ்ந்து இருந்தது .கும்மிருட்டு -இதற்கும் பகல் வேலை .
காதில் கேட்கவே முடியாத ,புரிந்து கொள்ளவே முடியாத பாஷையில் அழுகுரல்கள் கேட்டு கொண்டு இருந்தது அந்த தோப்பில் இருந்து .இதய துடிப்பை நிச்சயம் நிறுத்தி விடும் அமானுஷயம் அங்கு நிறைந்து இருந்தது.
அந்த கட்டிடத்தின் பாதாளம் மூன்று ,நான்கு அடுக்குகள் பூமிக்கு உள்ளேயே சென்று இருந்தது.காற்று என்பதே இல்லாத அதள பாதாளம் .அங்கு நிறுவ பட்டு இருந்தது அந்தரத்தில் மிதக்கும் பெயர் சொல்ல முடியாத தீய சக்தியின் சிலை .அந்த சிலையின் தலை முடி காற்றில் ஆடி கொண்டு இருந்தது .கிட்டே நெருங்கி பார்த்தால் தான் அவை அனைத்தும் பாம்புகள் என்பதே தெரியும் ....மெதூசா என்ற கிரேக்க கடவுள் போலே.
அவன் முன் ஆடை அணியாத பெண் ஒருத்தி உடல் முழுவதும் ரத்த அபிஷேகம் செய்ய பட்டவளாய் தன் ப்ராக்ஜய் இன்றி இருந்தாள் .
"ம்ம் "என்ற அவன் கர்ஜனைக்கு உட்பட்டு அடுத்த நொடி எரிந்து கொண்டு இருந்த அக்னி குண்டத்தில் குதித்து விட்டாள் .
அவள் குதித்த மறுகணம் வானில் மின்னல் வெட்டியது .அந்த அக்னியில் இருந்து வெளிவந்தது ஒரு அழுகி போன கை .அதன் கரத்தில் மின்னியது வைர வாள் .காஞ்சிபுரத்தில் முன்பு இளவரசன் உயிர் போக காரணமாய் இருந்த அதே வாள் .சமுத்திராவின் கனவில் ஆதித்தன் தலை கொய்த அதே வாள் .
"இந்த தடவையும் உன் உயிர் பறிப்பேன் ஆதித்யா ....காஞ்சிபுரம் மீண்டும் எழும்ப விட மாட்டேன் ...மண்னோடு மண்ணாய் போன நீ கட்டிய தங்க அரண்மனை வெளி வர விடவே மாட்டேன் ......இது என் சபதம் ...எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஜெயிக்க போவது நான் தான் .....இந்த முறை சமுத்திரா என்ற பெயரில் பிறந்து இருக்கும்பெண் மீண்டும் இரவில் நர பலி கொடுக்க போகிறேன்.அதற்கு தான் சமுத்ராவை மணக்கஉன் குடும்பத்தை அனுப்பி இருக்கேன். .....யார் வருவார் என்னை வெல்ல ?"என்ற அவன்-ரக்த பீஜன் என்னும் அரக்கனின் குரல் கேட்டு அந்த மாளிகையில் கண்ணுக்கு தெரியாத பலர் அழ ஆரம்பித்தனர்.
கரிகாலன் தாய் அருகே நிற்கும் நந்தினி யார்?...இந்த ரக்தபீஜன் யார் ?காஞ்சிபுரத்தின் நிலை என்ன ?தங்க அரண்மனை ரகசியம் என்ன?ஆதித்யன் இந்த ஜென்மத்தில் நல்லவனா கெட்டவனா ?
Attachments
-
71.9 KB Views: 3
Last edited: