அவள்.. படித்த சரித்திர நாவல்கள்..
அவள் கற்பனை உலகத்தை தூண்டி விட்டு.. அதிலேயே.. அவள் வாழ்ந்து.. அந்த கற்பனை கதாபாத்திரங்களை.. தன்னோடு இருக்கும் நிஜ மனிதர்களோடு கலந்து... வாழ்ந்து வந்திருக்கிறாள்.. என்று அந்த மன நல மருத்துவர் கூற கேட்ட ஆதி மருத்துவரிடம்.. " அப்போ அவ என் மீது கொண்ட காதலும் கற்பனையா? " என்று கேட்க..
மருத்துவர் "அதை அவுங்க குணமானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுக்க முடியும் மிஸ்டர். ஆதித்தியன்"
ஆதி.. " ஓ. எவ்வுளவு நாளாகும் டாக்டர்"
டாக்டர் "அது அவுங்க ஒத்துழைப்பை பொறுத்து.. மினிமம் 3 சிட்டிங்.. Counselling ல. முடியும்.. "
சமுத்திரா அந்த மன நல மருத்துவரின் ஆலோசனை பெயரில்.. அவர்கள் அளித்த சிகிச்சை முறையில் குணம் அடைந்தால்.. கல்லூரி இறுதி தேர்வை முடிந்தது... கல்லூரி கடைசி நாளில் அவனது அறைக்கு சென்றால்
ஆதி " உள்ள வாங்க சமுத்திரா"
சமுத்ரா" உங்களிடம் பேசனும் சார்"
"சொல்லுங்க"
"இல்ல treatment எடுக்குறது முன்னாடி நான் எப்படி நடந்து கிட்டேனு.. இப்ப தான் தேஜ் சொன்னா.. அதான் அப்படி நா உங்ககிட்ட நடந்து கிட்டது மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்.." என்றால் பார்வை தாழ்த்தி..
"அவ்வுளவு தானா.. "
"ம்ம்.. "
இதழ்களில் புன்னகை அரும்ப நின்ற ஆதி "சரி போய்டுவாங்க"
அதிர்ச்சியில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்கள் கலங்க அந்த அறையை விட்டு வெளியேறினாள்..
வீட்டில் அவளை நாளை பெண் பார்க்க வருவதாக சொல்ல ஏற்கனவே.. அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்.. வேண்டாம் என்று காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தாள்.. ஆம் என்னதான் கற்பனை என்று அவள் வாழ்ந்தாலும்.. ஆழ் மனதில் ஆதித்தன் மேல் பெண்ணவள் காதல் உண்மையே...
மறுநாள் மனமே இன்றி தயாரானால்.. பெண் பார்க்கும் படலத்திற்காக..
கார் வந்த சப்தமும் ஆட்களின் அரவமும்.. அம்மா அப்பாவின் ஆர்பரிப்பும் கேட்டது.. மனத்தை தயார்படுத்தி தன்னை அழைக்க காத்திருந்தவளை.. வந்து அழைத்து சென்றால் அத்தை பெண் சுதா உடன் அவள் தோழி தேஜ்..
தலையை குனிந்தாவாரே நின்றிந்தவளை... நிமிர்ந்து பார்க்க சொன்ன தோழியை முறைத்தாவாரே திரும்பியவளின் கண்ணில் அவன் பட்டான்.. ஆம் அங்கே மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்தாவன் அவளது ஆதித்தனே..
இவள் நிமிர்ந்து பார்த்தும் ஒற்றை கண்ணை சிமிட்டி.. இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட பெண்ணவளோ.. அதிர்ச்சியாகி பின் நாணத்தை அணைத்து கொண்டாள்..
அதற்கு பிறகு கல்யாண நாள் அடுத்த முகூர்த்தத்தில் முடிவாகி வேலைகள் விறுவிறுபாக.. நடக்க தொடங்கின.. இங்கே மணமக்களே.. கனவில் மிதந்தனர்(மறுபடியுமா..???????? )(அட கல்யாண கனவு மா..)
மணநாளும் விடிந்தது.. மங்கள வாத்தியங்கள் முழங்க மங்கள நாணை அவளது சங்கு கழுத்தில் கட்டினான்.. ஆதி..
சடங்குகள் அனைத்தும் நிறைவு பெற.. மணமக்களுக்கான தனிமை நேரமும் வந்தது..
அறைகுள் நுழைந்தவளை புன்னகையுடன் வரவேற்றான்..
தயக்கத்துடன் நின்றவளின்.. அருகே வந்து கொஞ்சம் நிமிர்ந்து பார் சமுத்ரா என்றான்
அவள் நிமிர்ந்து பார்த்தது அதிர்ந்து பின் ஆச்சிரியமாக அவனை கேள்வியாக ஏறிட்டாள்.. அவன் கண்ணை மூடி திறந்து ஆம் என்றான்.. கண்களை இன்னும் அகல விரித்தாள் திகைத்து.. நின்றாள்...
அவனோ குறும்பு புன்னகையுடன்.. பண்ணிய கற்பனை கொஞ்சம் சின்னதா பண்ணிருக்க கூடாதா.. இத குத்துறதுக்குள்ள வலி பின்னிட்டு..
என்ன குத்துறதுகுள்ளயா என புருவத்தை சுருக்கி ஏறிட்டாள்..
ஆம் அவன் காட்டியது.. நெஞ்சில் அவன் வரைந்த சமுத்ராவின்.. கற்பனை மச்சத்தை தான்.. ஆதிகுள் சமுத்ரா
Original இல்லமா. Tatoo தான்.. அதுக்காக.. பார்க்க மட்டும் தான் செய்வாயா.. நான் கூட அந்த ஆதிக்கு கிடைச்ச மாதிரி இல்லநாலும் atleast பாதி முத்தமாது கிடைக்கும்னு நினைச்சேன்.. வலிக்க வலிக்க நீ குத்துனது waste டா ஆதி என்று கூறி பெருமூச்சிறைந்தான்..
சமுத்ரா.. புன்னகையுடன் வெட்கம் மேலிட அவன் மார்ப்பில் அந்த tatoo வில் தன் இதழினை பதிக்க.. அவள்.. முகத்தை பற்றி.. அவன் இதழில் தேன் மழையை பருக தொடங்கினான்...
இனி அவர்கள் வாழ்க்கையில் தேன் மழை மட்டுமே..
சுபம்