Soundarya Krish
முதலமைச்சர்
தொடர்கொலைகள்
வேண்டாம்மா எதுக்கு பிரச்சன விட்ரலாம்..
முடியாதுண்ணா.. என் காதல கொன்னவன நான் சும்மாவிட்டா அவர் ஆத்மா சாந்தியடையாது... அதுக்காகவாது நான் அந்த மனித மிருகத்த பழிவாங்கனும்.
உன்னோட தவிப்பு எனக்கு புரியுதுமா.. ஆனால் அவன எதிர்த்து நம்மால என்ன செய்யமுடியும்னு நினைக்கிற??
புரியுதுண்ணா... ஆனா ஏதாவது பண்ணி அவன பழிவாங்கனும்... இப்படி பண்ணா என்னண்ணா?? (திட்டத்தை விளக்கினாள்)
மறுநாளே திட்டத்தை செயல்படுத்த இருவரும் அந்த மிருகத்தின் வீட்டை அடைந்தனர். அவளது அண்ணன் வெளியே வேவு பார்க்க இவள் பதுங்கி பதுங்கி உள்ளே சென்றாள். அந்த இராட்சசனின் அறையை கண்டுபிடித்து அங்கே சென்றாள். அவன் எதையோ வாசித்துக்கொண்டிருந்தான். அவள் அரவம் ஏதுமின்றி தான் சென்றாள், ஆனாலும் அவன் அவளை கண்டுகொண்டான். அவளோ அதையறியாது அவனை நெருங்கினாள்... அவனும் ஏதுமறியாதவனைப்போல் அமர்ந்து தக்க தருணத்திற்காக காத்திருந்தான். அவள் அவனை நெருங்கிவிட்டாள். இவனும் கவனமானான். அவள் செயல்பட துவங்கிய நொடி நேரத்தில் அவனும் அவளை அறைந்தான் சப்பென்று. அவள் அந்த ஒற்றை அறையிலே உயிர்நீத்தாள்.
அந்த அரவத்தை கிரகித்த அவள் அண்ணனோ நடந்ததையூகித்து கண்ணீருடன் வீடுதிரும்பினான்...
அவன் எண்ண அலைகளிலோ பல உதயங்கள்...
இப்படி பிறந்தது எங்கள் தப்பா... இல்லவே இல்லை.. நாங்கள் உருவாக காரணமானோரின் தப்பு... ஏன் எங்களை உருவாக்கவும் செய்து இப்படி துடிதுடிக்க தொடர்கொலைகளும் செய்றீங்க... அதுக்கு நாங்க பிறக்காம இருக்க என்ன பண்ணனுமோ அதை செய்யங்கள்...
சிந்தனையோடே தன் இருப்பிடத்தை அடைந்தது சற்று முன் உயிர்நீத்த க்யலெக்ஸ் கொசுவின் அண்ணன் ஏடீஸ் கொசு.
Last edited: