படம் முழுக்க முழுக்க அரசியல்ல அவர நிலை நிறுத்தறதுக்காகவே ஆரம்பக் காட்சில இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் யோசிச்சு எடுத்த படமிது.. அதுக்கு அவங்க தேடினது பலமான சென்டிமென்ட்.. ஆனா,அதுவே பலவீனமா இருக்கறது தான் பரிதாபம்..
அவருக்கு அது சுலபம்..கதைப்படி அவர் மில்லியனர்.. தன் வாக்குக்காக ஜெத்மலானி ரேஞ்சுல வக்கீல் வச்சு நிமிசத்துக்கு லட்சக் கணக்குல குடுத்து உயர்,உச்ச நீதி மன்றங்கள்ல வாதாடி அவரோட ஜன நாயகக் கடமைய ஆத்தலாம்.. அப்ப காசிருந்தாத் தான் அது சாத்தியம்னு நீங்களே சொல்லிடறதால..எங்கள மாதிரி குப்பனும், சுப்பனும் என்ன பண்றதுன்னு சொல்லவே இல்லீங்களே?
ஆட்சியர் அலுவலகத் தீக்குளிப்பு...
விலையில்லாப் பொருள் அவலங்கள்..
டெங்கு,பன்றிக் காய்ச்சல் பரிதாபங்கள்..
நானும் கிறுக்கறவன் தான்..அதுல பெருசா பேரு வாங்கினவனோ.. படிச்சவனோ இல்ல.. ஆனா,ஒரு படைப்பு நிலைக்க..படிக்கறவங்களோட மனசத் தொட ஒண்ணு அல்லது ஒம்பது சென்டிமென்ட் அதுல இருக்கணும்னு தெரியும்..எழுத்தாளரா ஜெயமோகன் அந்த டெக்னிக்க கைல எடுத்தது தான் மேல சொன்ன விசயங்கள்..டைக்டரா முருகதாசும் காட்சிகள்ல சென்டிமென்ட பிழிஞ்சு எடுக்கறார்..
நடிகரா நீங்களும் இதுல அனல் பறக்க வசனம் பேசி நடிச்சு கல்லா கட்டியாச்சு..ஆனா,ஒரு அரசியல் வாதியா இந்த விசயங்கள்ல நீங்க பண்ணினது என்ன? இது ஒண்ணும் கதைக்கான கற்பனையில்லையே.. போன நூற்றாண்டுல நடந்ததில்லையே..இப்ப சடுதிக்கு நடந்தது தான?அப்ப அரசியல் களத்துல இருந்தீங்க இலலையா... கைக் காச அள்ளி இறைக்காட்டிப் போய்த் தொலையுது..கந்து வட்டிக்கும்,அரசுக்கும் எதிரா போராடினீங்களா?அட்லீஸ்ட் அறிக்கைப் போராவது நடத்துனீங்களா?உங்கள விட வைகோ அண்ணனே தேவல !!!!
கடைசிக்கு..நீங்க இருக்கற துறைல தியேட்டர் காரங்களே அநியாயமா கொள்ளை அடிக்கறாங்களே..ஒரு நடிகராவது வாயத் திறந்து ஒரு வார்த்தை கண்டிச்சிருக்கீங்களா?
சரி..போனதெல்லாம் போகட்டும்.. இப்ப பிரச்னைன்னதும் சில காட்சிகளையும் கோமள வல்லில கோமளத்தையும் தூக்குனது ஏன்?அது தயாரிப்பாளர் செஞ்சது..நானென்ன பண்றதுன்னு சொன்னீங்கன்னா.. ஹல்ல்லோவ் விஜய் சார் .. எம்.ஜி.ஆர் கிட்ட இது நடக்காதுன்னு தெரியுமுங்களா?
அவரு படம்னா அடி முதல் நுனி வரை அவர் தான்.. அவர் அறியாம ஒரு இமைச் சிமிட்டலக் கூட சேர்க்கவும் முடியாது..நீக்கவும் முடியாது.. இத்தனைக்கும் உங்க கிட்ட இருக்கற பிளஸ் பாயிண்டான டான்ஸ் கூட அவருக்குத் தெரியாது..எம்.ஜி.ஆரா திரைல மட்டும் இருந்தாப் போதாதுங்க..நிஜத்துவயும் இருக்கணும்..ஆனா, அதுக்கு தில்லு வேணுமுங்களே?!!!!!!
பி.கு..
÷÷÷÷
சினிமா விமர்சனம்னு ஒரே அரசியல் விமர்சனமா இருக்கேன்னா... நானென்ன பண்ண?படம் எதப் பத்தி பேசுச்சோ அதப் பத்தியே நானும் பேசினேன்..
இங்க மாற வேண்டியது அரசியலோ, அதிகாரிகளோ, சினிமாவோ அல்ல.. மக்கள் !!
இவங்க யாரும் செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தவங்க இல்லையே..நமக்குள்ள ஒருத்தர் தானே.. நாம தேர்ந்தெடுத்து ஊக்குவிச்சவக்க தானே?
ஒரு இலை பழுதுன்னா கிள்ளிடலாம்.. விழுது பழுதுன்னா வெட்டிடலாம்..ஆணி வேரே ஆகா வழியா இருந்தா.... மொத்த மரமும் அழுகிப் போனதா இருந்தா ..???!!!!!!
ஆம்..வெட்டப் பட வேண்டியது நாம் தான்..,!!
என் காலத்தில் மாற்றத்தப் பாக்க முடியும்னு தோணல..இருக்கற இளைய தலை முறையால மாற்றம் வரும்னு இந்தப் படத்தப் பாத்தா நம்ப முடியல..ஆனா, மாற்றம் வரும்னு நம்பிக்கை மட்டும் இருக்கு..ஏன்னா,மாறாதது மாற்றம் மட்டுமே !
சினிமான்னால சமூகம் மாறும்னா இந்தியன், அந்நியன் படங்களுக்கே இது புனித தேசமா மாறி இருக்கணும்.. மாறலியே?மாறாது...ஏன்னா,திருந்த வேண்டியது அவங்க மட்டுமே இல்லைங்கறதால...
கடைசியா..
படத்துல விஜய் அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவார்னு சிம்பாலிக்கா சொல்லிடறார்.. நீங்க கவனிச்சீங்களா?
அதாவது அவர் அரசியல்ல குதிச்சதும் கட்சி நடத்த ஆபீஸ் இல்லையாம்..அதனால, குப்பத்து ஜனங்க தான் குடியிருக்கற பெரிய வீட்டக் காலி பண்ணிக் குடுத்துட்டு தட்டு முட்டுச் சாமான்களோட வீதிக்கு வர்றாங்க..
கதைப் படி விஜய் யாரு...?!!!!!!
பெரிய பன்னாட்டு நிறுவனத்துல வருசம் 1800 கோடி சம்பாதிக்கறவர்..
அதாவது..
மாசம் 150 கோடி..
தினமும் 5 கோடி..
மணிக்கு 20 லட்சம்..
நிமிசத்துக்கு 35 ஆயிரம்..
நொடிக்கு..அதாவது நீங்களும் நானும் கண்ணுச் சிமிட்டற நேரத்துல 600 ரூவா சம்பாதிக்கறவர்..
ஆபீஸ் விலைக்கு வாங்க ஒரு மாச சம்பளம்..
வாடகைக்குப் பிடிக்க ஒரு மணி நேர சம்பளம்..
போதும் தான்..
புரிஞ்சவன் பிஸ்தா..
ஏமாத்துறதுங்கற முயற்சில அவங்களும்..
ஏமாறணும்ங்கற தீவிரத்துல நாமளும் இருந்தா..
இறை காக்கட்டும் என் தேசத்தை...
பிம்பங்கள் கலையட்டும்..
கலையுமென்ற நம்பிக்கையுடன்..
ஜெய்ஹிந்த் !