ஈரங்காயம்
==+===============
சின்ன வெங்காயத்துக்கு எங்க பக்கம் இன்னொரு பேருண்டு
"ஈரங்காயம்"
(ஈர வெங்காயம் தான் இப்படியாச்சு!)
அது ஏன்னா....அப்பல்லாம் வாரச் சந்தைல தான் வரவு,செவவு எல்லாம்!மாட்டு வண்டில தான் பாரப் போக்குவரத்து நடக்கும் ... எங்காளுங்கள எதுக்க பாத்துட்டா 'ஆய்'னு கைய,மண்டைய ஆட்டிட்டு போயிட முடியாது.. சோட்டுக்கு சோடு வயசா இருந்தாலும் "வாங்க மாப்ள"ன்னு பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு மொதல்ல மழை மாரில ஆரம்பிச்சு அப்புறமா பண்டம் பாடிக்கு(கால் நடை)வந்து பட்டி நாய் போட்ட குட்டி நாய் வரைக்கும் வெசாரிச்சுட்டு தான் கடைசியா போச்சாது போங்கற மாதிரி மனுஷ ஜீவனுங்களுக்கு வருவாங்க...
அவங்களுக்கு மண்ணு,பண்டம் பாடி தான் உயிர் நாடி..வீட்டு மனுசங்களுக்கு கை வைத்தியம் பாத்தாலும் பண்டம் பாடிக்கு ஒண்ணுன்னா ஓடிப் போயி மாட்டு டாக்டர (கால் நடை வைத்தியர்) கையோட கூட்டிட்டு வந்து பண்டுதம் (வைத்தியம் )பாத்து அவர் கேக்கற காசக் குடுப்பாங்க ...சொன்னா நம்ப மாட்டீங்க.. எரும மாடுன்னு இல்ல..ஒரு ஆடு போட்ட குட்டி செத்துட்டா கூட போதும்.. ஊட்டு மனுசன் மண்டையப் போட்டா துக்கம் விசாரிக்க வர்ற மாதிரி ஒரம்பரை வந்த வண்ணமா இருக்க காபி அடுப்பு எரிஞ்ச வண்ணமா இருக்கும்...சொந்த பந்தம் மட்டுமில்ல...பழகுன பலவட்டற ஜாதியும் வரும்...
வர்றவங்க சும்மா கைய வீசிட்டு வர மாட்டாங்க...ரெண்டு சீப்பு வாழப் பழம், வளத்திப் பன்னு, கொளந்தைங்க இருந்தா பிரிட்டானியா பிஸ்கட்டு, மிக்சரோ பூந்தியோ எல்லாங் கலந்து ஒரு ஒயர் கூடை நெறைய வரும் ..ஆட்டு குட்டிய பறி குடுத்து மாபெரும் துக்கத்துல இருக்கற இவங்க சின்ன ஆளுங்களா? ஒயர் கூடைய வாங்கிட்டுப் போயி உள்ள இருக்கறத எடுத்து வச்சுட்டு ஒரம்பரை கிட்ட பேசிட்டே ஒரு காரியம் பண்ணுவாங்க பாருங்க ...
அந்த கூடைக்குள்ள அவங்க தோட்டங் காட்டுல என்னென்ன வெளஞ்சுதோ அத்தனையும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்து வச்சுடுவாங்க ...கடலைக்காய், தேங்காய், பாவக்காய், அவரைக்காய்.... எல்லாத்துலயும் சிலதப் போட்டு சந்தில்லாம அமுக்கி திணிச்சு கொண்டு வந்து வெக்கைல ஊட்டுக் கவுண்டன் தம் பங்குக்கு ஒரு குண்டப் போடுவான் பாருங்க
*அட....கொழுந்தியாளுக்கு கொட்டமுத்து கொஞ்சம் குடுத்து உடு"
(கொட்டமுத்து.. .ஆமணக்கு)
பைல தான் எடமே இல்லியேன்னு நீங்க சந்தோசப் பட்டுட முடியாது ...அங்க இங்க தொழாவி கெடைக்கலன்னா பக்கத்து ஊட்ல போயி குறியாப்பா (கைமாத்து) ஒரு மஞ்சப் பைய வாங்கிட்டு வந்து கொட்டி அமுக்கி யையோட காத இழுத்து முடிஞ்சும் குடுத்துடுவாங்க... கவுண்டன் சொன்ன கொஞ்சம் கொட்டமுத்து ரெண்டு கிலோவுக்குக் கொறையாது...
நாம வாங்கிட்டுப் போனது அஞ்சு கிலோன்னா திரும்ப வரைல பத்துக் கிலோவச் சொமந்து தோள் பட்ட கழண்டுடும் ... அத என்ன 'ம'னாவுக்கு அப்படிச் சொமக்கணும்? .. வேண்டாம்னுட்டு வர வேண்டியது தானன்னு புத்திசாலித்தனம் காட்டப் படாது ... கேவலமாயிடும் ... வெள்ளாளனுக்கு தன் வெளச்சல மத்தவங்களுக்குக் குடுக்கறதுல ஒரு சந்தோசம்.. அத மறுக்க முடியாது...கூடாது ... அது ஒரு மொறமை.. சாங்கியம் !நாமளும் வெறுங்கைய வீசிட்டுப் போகக் கூடாது ... அவங்களும் வெறுங் கையா நம்மள அனுப்ப மாட்டாங்க...
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... வர்றவங்க அத்தன பேரும் வாங்கிட்டு வர்ற பண்டங்க அத்தனையும் ஒரு மினி ஆட்டோவுக்கே லோடாகுமே...அத என்ன பண்ணுவாங்க... அதானே?
==+===============
சின்ன வெங்காயத்துக்கு எங்க பக்கம் இன்னொரு பேருண்டு
"ஈரங்காயம்"
(ஈர வெங்காயம் தான் இப்படியாச்சு!)
அது ஏன்னா....அப்பல்லாம் வாரச் சந்தைல தான் வரவு,செவவு எல்லாம்!மாட்டு வண்டில தான் பாரப் போக்குவரத்து நடக்கும் ... எங்காளுங்கள எதுக்க பாத்துட்டா 'ஆய்'னு கைய,மண்டைய ஆட்டிட்டு போயிட முடியாது.. சோட்டுக்கு சோடு வயசா இருந்தாலும் "வாங்க மாப்ள"ன்னு பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு மொதல்ல மழை மாரில ஆரம்பிச்சு அப்புறமா பண்டம் பாடிக்கு(கால் நடை)வந்து பட்டி நாய் போட்ட குட்டி நாய் வரைக்கும் வெசாரிச்சுட்டு தான் கடைசியா போச்சாது போங்கற மாதிரி மனுஷ ஜீவனுங்களுக்கு வருவாங்க...
அவங்களுக்கு மண்ணு,பண்டம் பாடி தான் உயிர் நாடி..வீட்டு மனுசங்களுக்கு கை வைத்தியம் பாத்தாலும் பண்டம் பாடிக்கு ஒண்ணுன்னா ஓடிப் போயி மாட்டு டாக்டர (கால் நடை வைத்தியர்) கையோட கூட்டிட்டு வந்து பண்டுதம் (வைத்தியம் )பாத்து அவர் கேக்கற காசக் குடுப்பாங்க ...சொன்னா நம்ப மாட்டீங்க.. எரும மாடுன்னு இல்ல..ஒரு ஆடு போட்ட குட்டி செத்துட்டா கூட போதும்.. ஊட்டு மனுசன் மண்டையப் போட்டா துக்கம் விசாரிக்க வர்ற மாதிரி ஒரம்பரை வந்த வண்ணமா இருக்க காபி அடுப்பு எரிஞ்ச வண்ணமா இருக்கும்...சொந்த பந்தம் மட்டுமில்ல...பழகுன பலவட்டற ஜாதியும் வரும்...
வர்றவங்க சும்மா கைய வீசிட்டு வர மாட்டாங்க...ரெண்டு சீப்பு வாழப் பழம், வளத்திப் பன்னு, கொளந்தைங்க இருந்தா பிரிட்டானியா பிஸ்கட்டு, மிக்சரோ பூந்தியோ எல்லாங் கலந்து ஒரு ஒயர் கூடை நெறைய வரும் ..ஆட்டு குட்டிய பறி குடுத்து மாபெரும் துக்கத்துல இருக்கற இவங்க சின்ன ஆளுங்களா? ஒயர் கூடைய வாங்கிட்டுப் போயி உள்ள இருக்கறத எடுத்து வச்சுட்டு ஒரம்பரை கிட்ட பேசிட்டே ஒரு காரியம் பண்ணுவாங்க பாருங்க ...
அந்த கூடைக்குள்ள அவங்க தோட்டங் காட்டுல என்னென்ன வெளஞ்சுதோ அத்தனையும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்து வச்சுடுவாங்க ...கடலைக்காய், தேங்காய், பாவக்காய், அவரைக்காய்.... எல்லாத்துலயும் சிலதப் போட்டு சந்தில்லாம அமுக்கி திணிச்சு கொண்டு வந்து வெக்கைல ஊட்டுக் கவுண்டன் தம் பங்குக்கு ஒரு குண்டப் போடுவான் பாருங்க
*அட....கொழுந்தியாளுக்கு கொட்டமுத்து கொஞ்சம் குடுத்து உடு"
(கொட்டமுத்து.. .ஆமணக்கு)
பைல தான் எடமே இல்லியேன்னு நீங்க சந்தோசப் பட்டுட முடியாது ...அங்க இங்க தொழாவி கெடைக்கலன்னா பக்கத்து ஊட்ல போயி குறியாப்பா (கைமாத்து) ஒரு மஞ்சப் பைய வாங்கிட்டு வந்து கொட்டி அமுக்கி யையோட காத இழுத்து முடிஞ்சும் குடுத்துடுவாங்க... கவுண்டன் சொன்ன கொஞ்சம் கொட்டமுத்து ரெண்டு கிலோவுக்குக் கொறையாது...
நாம வாங்கிட்டுப் போனது அஞ்சு கிலோன்னா திரும்ப வரைல பத்துக் கிலோவச் சொமந்து தோள் பட்ட கழண்டுடும் ... அத என்ன 'ம'னாவுக்கு அப்படிச் சொமக்கணும்? .. வேண்டாம்னுட்டு வர வேண்டியது தானன்னு புத்திசாலித்தனம் காட்டப் படாது ... கேவலமாயிடும் ... வெள்ளாளனுக்கு தன் வெளச்சல மத்தவங்களுக்குக் குடுக்கறதுல ஒரு சந்தோசம்.. அத மறுக்க முடியாது...கூடாது ... அது ஒரு மொறமை.. சாங்கியம் !நாமளும் வெறுங்கைய வீசிட்டுப் போகக் கூடாது ... அவங்களும் வெறுங் கையா நம்மள அனுப்ப மாட்டாங்க...
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... வர்றவங்க அத்தன பேரும் வாங்கிட்டு வர்ற பண்டங்க அத்தனையும் ஒரு மினி ஆட்டோவுக்கே லோடாகுமே...அத என்ன பண்ணுவாங்க... அதானே?