நான் தோற்பது கண்டு....
சிதறுகாயின் சிதறி ஓடிச்சென்ற சில்லுகளாய்
உறவுகள்...
மெழுகு பூசிய ஆப்பிளின் மேல்
நிற்கும் நீராய்
தோழமைகள்...
சிறு இழுப்பில் விழும், மரம் நின்ற மழைத்துளியாய்
சுற்றங்கள்...
எனினும்
மிதக்கும் இலையின் மேலேறி
ஆற்றின் கரை காணும்
எறும்பின் நம்பிக்கையுடன்
நான்...
விரட்டப்படுவோமென்று தெரிந்தே
வற்றல் கூழ் வாசத்திற்கு வரும்
காகத்தின் பயமின்மையுடன்
நான்...
பிரிந்த வலையின் ஒற்றை நூல்
பிடித்து வாழ நினைக்கும்
சிலந்தியின் முயற்சியுடன்
நான்...
வீழாமல் வாழ்கின்றேன்...
இது தருகின்ற
உள்ளக் களிப்பில் - உங்களது
எள்ளலும் ஏளனமும்
புள்ளியாய் போய்விடுமடா!!!
சிதறுகாயின் சிதறி ஓடிச்சென்ற சில்லுகளாய்
உறவுகள்...
மெழுகு பூசிய ஆப்பிளின் மேல்
நிற்கும் நீராய்
தோழமைகள்...
சிறு இழுப்பில் விழும், மரம் நின்ற மழைத்துளியாய்
சுற்றங்கள்...
எனினும்
மிதக்கும் இலையின் மேலேறி
ஆற்றின் கரை காணும்
எறும்பின் நம்பிக்கையுடன்
நான்...
விரட்டப்படுவோமென்று தெரிந்தே
வற்றல் கூழ் வாசத்திற்கு வரும்
காகத்தின் பயமின்மையுடன்
நான்...
பிரிந்த வலையின் ஒற்றை நூல்
பிடித்து வாழ நினைக்கும்
சிலந்தியின் முயற்சியுடன்
நான்...
வீழாமல் வாழ்கின்றேன்...
இது தருகின்ற
உள்ளக் களிப்பில் - உங்களது
எள்ளலும் ஏளனமும்
புள்ளியாய் போய்விடுமடா!!!