சுவி சொல்லியதையே நான் வழிமொழிகிறேன் சகோதரி . ஏன் அழகிய எழுத்து வரத்தை சந்தேகப்படுகிறீர்கள். விமர்சனம் யார் வேண்டுமானாலும் எழுதலாம். எழுத்து அப்படி இல்லை அது ஒரு தவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எப்பொழுதும் நேர்மறை எண்ணத்துடன் எழுதும் உங்கள் எழுத்தும் அபூர்வமானதுதான். நேரம் கிடைக்காமல்் எழுத முடியாது போனால் ஒத்துக் கொள்ளலாம் . குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளலாம் இந்த காரணத்தை ஒத்துக்கொள்ள முடியாது உங்கள் எழுத்தை விரும்பும் எங்களுக்காக இனி இம்மாதிரியான எண்ணம் வேண்டாம்பொதுவாக ஸீனா, எழுதும் எல்லாருக்கும் நான் சொல்வது ஒன்றே தான் ...
எழுத்து என்பது ஒரு வரம்..
அது எல்லாருக்கும் அமையாது..
அந்த வரம் கிடைக்கபெற்றவர்கள் எங்களை போன்றவர்களை உங்கள் எழுத்தால் மகிழ்வியுங்கள் என்பது தான்..
எதற்காக இந்த சுய விளக்கம்..
எது உன் மனதை காயப்படுத்தியது தோழி???
புதுமுக எழுத்தாளர் என்ற தொனியே இல்லாத அழகான எழுத்து நடை என் ஸீனாவோடது..
கதாபாத்திரங்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள் ...அப்பா!!!அப்படியே உயிர் வரை சென்று உணர வைக்கும்..
எழுத்து பிழை என்பது அறவே இருக்காது..
தெளிந்த சிற்றோடை போல,வீசும் மெல்லிய தென்றல் போல கவிதையாய் இருக்கும் கதை களம் உன்னுடையது..
வெறும் லைக்ஸ்ஸைக் கொண்டு உன் கதையை எடைபோடாதே..
அது சில நாள் ஏறுமுகமாகலாம்,சில நாள் இறங்குமுகம் ஆகலாம்..
கதையின் போக்கு அருமையாக இருக்கிறது..
உன்னோடு பயணம் செய்யும் உனது கதாநாயகி பெண் சிங்கமாய் நிமிர்ந்து நிற்கையில்,நீ ஏன் துவள்கிறாய் தோழி??
உன்னை சொல்வது என்னைச்சொல்வது போல எண்ணியே நான் உன் எழுத்தை அதிகம் site ல் புகழ்வது கூட கிடையாது...
ஆனால் இன்று உன்னுடைய இந்த பதிவு என்னை என்னவோ செய்கிறது..