Thank u banu maa
மிகவும் அருமையான சிறுகதை,
ஸ்வேதா டியர்
Thank u banu maa
மிகவும் அருமையான சிறுகதை,
ஸ்வேதா டியர்
Hahasemma..swey dr...
but konja nanja velakennai yallam puriyave mattinguthu...
???? Sema paகாரில் இருந்த அமைதி அவனை கொல்லாமல் கொல்ல, என்றும் தன்னுடன் தொனதொனத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் தன் தங்கை இல்லாததால் அந்த பயணத்தை அரவே வெறுத்தான்.
"இதென்ன வாயா இல்ல கார்ப்பரேஷன் வாட்டர் லாரியா திறந்தா மூடவே மாட்டேங்குற..கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வந்து தொலை ..காதெல்லாம் வலிக்கிது" என்று தங்கையிடம் எரிந்து விழுந்தது நினைவில் வந்து அவனை இம்சிக்க , Music playerஐ ஆன் செய்து பாடலை ஒலிக்க விட்டான்..
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அதில் மேயாத மான் படத்திலிருந்து 'தங்கச்சி' பாடல் ஒலிக்க,நொந்து போனவன் அதை அணைத்து விட்டு வேகமாக காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.
40 நிமிடத்தில் வரவேண்டிய தூரத்தை 25 நிமிடங்களிலே அடைந்தவன் பார்க்கிங்கில் வந்து காரை நிறுத்திவிட்டு , வேக எட்டுக்களுடன் தன் கேபினை நோக்கி சென்றான்.
என்றும் தான் வந்ததும் தன்னை வந்து கலாய்த்து கடுப்பேத்தி விட்டே அடுத்த வேலையை பார்க்க செல்லும் தோழியை காணாமல் கடுப்பாகியவன் ,"அட பிரம்மா அவளாம் பொண்ணே இல்லை அவளையும் ஏன் இப்படி ஒளிச்சு வச்சிருக்க..??" என்று மேலே பார்த்து கேக்க,
உள்ளிருந்து எட்டிப்பார்த்த மனசாட்சி ,"பாஸ் for your kind information உனக்கு மட்டும் தான் அவ பொண்ணா தெரியலை மத்த படி அவ பொண்ணு தான்" என்று அவனுக்கு நினைவு படுத்த ,
"உன்ன இப்போ எவனாச்சும் கூப்பிட்டாங்களா ஒழுங்க என் கிட்ட அடி வாங்கி சாகாம ஓடி போய்ரு" என அதை அடக்கியவன் தன் கேபினுள் சென்று அமர்ந்து,
வேறெதையும் பற்றி சிந்திக்காமல் தன் கவனத்தை வேலையில் திருப்ப முயன்றவன் ஒரு வழியாக அதில் வெற்றியும் கண்டான்.
தன் மனதை திசை திருப்ப முடிந்த அவனால் பாவம் வயிரை கட்டுப்படுத்த முடியவில்லை.
உள்ளே பாத்திரம் உருளும் சப்தமெல்லாம் கேக்க ,"என்ன டா வயித்துக்குள்ள என்னைய கேக்காமயே எவனோ கச்சேரி நடத்திட்டு இருக்கான்.பெரிய ட்ரம்ஸ் ப்ளேயரா இருப்பானோ இந்த தட்டு தட்டுறான்..இப்ப சோத்த போட்டு அவன ஆஃப் பண்ணலைனா சப்தம் போட்டு ஊரையே கூட்டிருவான்" என நினைத்தவன் சாப்பாடு பையை தேட ,"கடவுளே என் பொண்டாட்டி கிட்ட இருந்து சோறு மட்டுமாச்சும் பார்சல் பண்ணி அனுப்ப சொல்லுங்க ப்ளீஸ்..என்னால அந்த கேன்டீன்ல காஞ்சு போன ரொட்டியலாம் திங்க முடியாது " என வேண்டுகோள் விடுத்தான்.
அந்தோ பரிதாபம் அவன் வேண்டுகோளை வேஸ்ட் பேப்பர் போல் கடவுள் அவனிடமே தூக்கி எரிந்து விட, அன்று தன் அன்னையிடம் நக்கலாக,"இந்த காலத்துல எவனாச்சும் போய் சாப்பாடு எடுத்துட்டு போவானா மாம் என் கவுரவம் என்னாகுறது.." என்று பேசியது நினைவில் வந்து போனது.
தான் என்னதான் கிண்டல் செய்தாலும் அதெல்லாம் சட்டை செய்யாமல் தனக்கு பிடித்த பதார்த்தங்களை பார்த்து பார்த்து சமைத்து தனக்கு வைத்துவிடும் அன்னையின் அன்புக்கு மனம் ஏங்கியது.
"இன்னைக்கு காஞ்சு போன ரொட்டி தான்னு என் தலைல எழுதிருக்கப்போ அத எவனால மாத்த முடியும்" என தன் விதியை நொந்து கொண்டே கேன்டீனுக்கு சென்று அந்த தீஞ்சு போன பன்னை கொறித்தவன்,பாதி மட்டும் உண்டு விட்டு மிச்ச வயிற்றுக்கு தண்ணீரை நிரப்பிக் கொண்டு தன் கேபினுக்கு வந்தமர்ந்தான்.
தனக்கு அழைப்பு ஏதும் வந்திருக்கிறதா என கைபேசியை எடுத்தவன் அதில் "no new notification" என்று கொட்டை எழுத்தில் அது காண்பிக்க கடுப்பாகி செல்போனை டேபிலில் தூக்கி எறிந்தான்.
தினமும் சரியாக 1.30க்கு கால் செய்து தான் உண்டு விட்டேனா இல்லையா என உறுதி படுத்திக் கொள்ளும் மனைவியின் செய்கையில் முன்பு எரிச்சல் அடைந்தவன் , இன்று அதற்காக ஏங்கினான்.
"இது சரிப்பட்டு வராது முதல்ல வேலைய பாரு " என மீண்டும் தன் மனதை வேலையில் செலுத்தியவன் மாலை மேனேஜர் அழைப்பதாக ப்யூன் வந்து கூறியதும் தான் நிமிர்ந்தான்.
பின் அவர் கேட்ட பைல்களை எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு செல்ல, அங்கே அவரும் அவர் மனைவி,குழந்தைகள் இல்லாமல் கடுப்பில் இருந்தவர் இவன் என்றோ செய்த சின்ன தவறுக்கு இன்று காய்ச்சி எடுத்து விட்டார்.
உள்ளே கோபம் கனன்றாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் வெளியேறியவன் ,"இனிமேல் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது கிளப்பு டா வண்டியை" என்று கூறிக் கொண்டே தன் பையை எடுத்துக் கொண்டு காருக்கு சென்றவன் ,வேகமாக காரை வீடு நோக்கி விரட்டினான்.
வீட்டிற்கு வந்தவனுக்கு வீட்டின் வெறுமை முகத்தில் அரைய அப்படியே அயர்ந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டான்.
வீடு காலையில் எந்த நிலையில் விட்டு சென்றானோ அதே போல் அலங்கோலமாக இருந்தது.
வீட்டில் தான் வந்ததும் முகத்தில் வந்து நுழையும் காபி,பலகார வாசனை நாசியை வந்து தீண்டவில்லை.
தன் கார் அந்த வீதிக்குள் நுழைந்தாலே வாசலில் வந்து தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்கும் மகளின் கொஞ்சல் மொழிகள் கேட்கவில்லை.
உள்ளே நுழைந்ததும் தன்னை சுத்தப்படுத்த அனுப்பி விட்டு வாயிலிலே முகத்தில் புன்னகையும் கைகளில் காபியோடும் நிற்கும் தன் மனைவியை காணவில்லை.
தன் முகத்தை வைத்தே தன் சோர்வை கண்டுபிடித்து தன் தலையை மடியில் வைத்து ஆதரவாக தடவி கொடுக்கும் அன்னையின் விரல்களைக் காணவில்லை.
அவளுக்கென்று தனியாக பலகாரம் கொடுத்தாலும் தன்னுடன் பங்கு போட்டு வம்பிழுத்து சண்டை போடும் தங்கையின் சிணுங்கல் ஒலி கேட்கவில்லை.
துக்கம் தொண்டையை அடைத்தது..ஓவென்று கதற வேண்டும் போல் தோன்றியது..
அந்த இடத்தில் இருப்பதே மூச்சு முட்ட வேகமாக எழுந்து மொட்டை மாடிக்கு ஓடியவன்,
"யோவ் பிரம்மா எங்கயா இருக்க??? " என்று பைத்தியம் பிடித்தவனை போல் கத்தினான்.
அப்போது அதே புன்சிரிப்போடு அவன் முன் தோன்றியவர் ,"என்ன குழந்தாய்,பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருந்தது??" என வினவினார்.
"நரகத்தை விட கொடூரமா இருந்துச்சு..உன்ன யாருயா இப்படி விபரீதமா முடிவெடுக்க சொன்னா ஒழுங்கா பழைய உலகமா மாத்துயா..இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தா கூட பைத்தியம் பிடிச்சு செத்திருவேன்" என்று கத்தினான்.
இன்னும் புன்னகை குறையாமல் அவனை நோக்கியவர்,"இந்த மானிடர்கள் தான் பெண்கள் இல்லாத உலகத்தில் என்னை படைத்திருக்க கூடாதா என என்னை தினமும் கடிந்து கொண்டனர்..அதற்காகவே உங்களுக்கு பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என காட்டினேன்..இனிமேல் என்னை தொந்தரவு செய்ய மாட்டீர்கள் தானே" என வினவினார்.
"அய்யோ சத்தியமா அப்படி நினைக்க கூட மாட்டோம்..இப்ப தான் எனக்கு புரியுது..அவங்க கூடவே இருக்கப்போ அவங்க அருமை எனக்கு புரியலை..அவங்க இல்லாம நாங்க இல்லைன்னு நல்லா புரிய வச்சுட்ட ரொம்ப தேங்க்ஸ் பிரம்மா" என்று நெகிழ்ச்சியான குரலில் கூறியவனை பார்த்து அதே புன்னகையோடு அவ்விடத்தை விட்டு மறைந்தார்.
"பிரம்மா எங்க போன யோவ் வாய்யா எங்கயா போன" என கத்திக் கொண்டிருந்தவன் மூக்கை ஒரு பிஞ்சு விரல் பிடித்து ஆட்டியது.
அடித்துப் பிடித்து எழுந்தவன்,தன் மகள் தன் நெஞ்சத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டவன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் அவளை அணைத்து முத்த மழையை பொழிந்து கொண்டே ,"பாப்பு அப்பா கிட்ட வந்துட்டீங்களா என்ன விட்டு எங்கேயும் போய்ராத டா,இனிமேல் டெய்லி நான் வேலை பார்க்குறப்போ என் கிட்ட விளையாண்டா அப்பா அதை தொந்தரவா எடுத்து உங்களை திட்ட மாட்டேன்..அப்பாக்கு தலைவலினா ஓடி வந்து தலைல முத்தா வைச்சு சரி பண்ணுவீங்கள அதே மாதிரி பண்றீங்களா அப்பாக்கு தலையெல்லாம் வலிக்கிது டா பாப்பு "என ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தான்.
அவன் செய்கையை குழப்பத்தோடு பார்த்த அவன் மனையாள்,அவன் அருகில் வந்து அவனை உலுக்கினாள்,"என்னங்க என்னாச்சு உங்களுக்கு பாப்புவ விடுங்க மூச்சு முட்டப் போகுது அவளுக்கு" என இருவரையும் பிரித்தாள்.
தன் மனைவியை பார்த்தவன் அவளையும் கட்டிக் கொண்டு ,"சாரி டா செல்லம் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..எனக்காக உங்க வீட்ட விட்டு வந்து,எனக்காக சமைக்க கத்துகிட்டு,வேலைக்கும் போய் என்னையும் பாப்பாவையும் பார்த்துகிட்டு வீட்டையும் பார்த்துகிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டாலும் சிரிச்சுகிட்டே இருக்கியே பட்டு..உன்ன நான் புரிஞ்சுக்கவே இல்லை..சாரி டி ..இனிமேல் உன்னோட எல்லா வேலைலையும் நான் ஹெல்ப் பண்ணுவேன் கண்டிப்பா ..உன் கிட்ட கோப படவே மாட்டேன் ..ஐ லவ் யூ சோ மச் பொண்டாட்டி" என இறுக்கி கட்டி கொண்டான்.
'அய்யோ என்னாச்சு இவருக்கு தூங்கிட்டு தான இருந்தாரு இப்படி திடீர்னு ஏதேதோ புலம்புறாரு' என நினைத்தவள் என்னவென்று தெரியாத போதும் அவன் முதுகை வருடி கொடுத்து சமாதானப் படுத்தினாள்.
அதற்குள் இவனின் பிதற்றல் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த தன் அன்னையை கண்டவன் நேராக சென்று அவர் காலில் விழுந்து,"என்னை மன்னிச்சிரு மா ..நான் உனக்கு ஒரு நல்ல புள்ளையாவே இல்லை..உன்னோட பாசத்தை புரிஞ்சுக்கவே இல்லை மா..உன்ன எப்பபாரு வெட்டியாவே இருக்கன்னு கிண்டல் பண்ணிருக்கேன்..ஆனா இப்போ தான் புரியுது..நீ உண்மையாவே வெட்டியா இருந்தா இந்த வீடு வீடா இருக்காது...இந்த செங்கல் மண்ணை வீடா மாத்தியது நீ தான் அம்மா...என்ன மன்னிச்சிரு மா ..என்ன விட்டு போய்றாதமா " என்று புலம்பியவனை தூக்கி நிறுத்தியவர் ," என் செல்லக் கண்ணனுக்கு என்னாச்சு..கெட்ட கனவு எதும் கண்டியா இருடா கண்ணா அம்மா உனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்..இப்படி பொலம்பாத..அம்மா போய் என்னைக்காச்சும் பிள்ளை மேல கோச்சுப்பாங்களா..எதும் குழம்பாம போய் முகம் கழுவிட்டு வா" என பாசமாக கூறினார்.
"அம்மானா அம்மா தான்" என அவர் கன்னத்தில் இதழ் பதித்தவன்..அப்போது தான் தன்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த தங்கையையும், விடுமுறை தினமாதலால் பாப்பு குட்டியை பார்க்க வந்திருந்த தோழியையும் கண்டவன் முதலில் தங்கையிடம் சென்று அவள் காதைப் பிடித்து திருகியவன்,"ஹேய் வாலு இனிமேல் என் கிட்ட பேசாம எங்கயாச்சும் போன உன்ன கொன்றுவேன்" என மிரட்டினான்.
பின் தோழியிடம் சென்று ,"நீயும் என்னை கலாய்க்காம எங்க போன..ஆமா நீ கூட எப்போ பொண்ணா மாறுனா??" என்று கேட்டானே ஒரு கேள்வி,அவன் மண்டையிலே நங்கென்று அவள் கொட்டி ,"எருமை என்னை பார்த்தா உனக்கு பொண்ணா தெரியலையா??..நான் எங்க போனேன் என்ன உளர்ற??" என குழப்பத்தோடு வினவினாள்.
அவன் தங்கையோ 'இவன் என்ன லூசா ' எனபது போல் ஒரு பார்வை பார்த்தவள் " உனக்கு என்ன தூக்கத்துல பைத்தியம் பிடிச்சிருச்சா எதுக்கு இப்படி ஃபிலிம் காட்டிட்டு இருக்க " என கிண்டல் செய்தாள்.
அப்போது ஓரளவிற்கு தெளிந்திருந்தவன் ,'ஓ அப்போ அதெல்லாம் கனவா ..அப்பாடி என்ன ஒரு டெர்ரரான கனவு..அப்படி மட்டும் உண்மையிலே நடந்துச்சுனா நம்ம பொலப்பு நாறி போய்ருக்கும் நாறி!! நல்ல வேளை தப்பிச்சோம்..அய்யோ இந்த குட்டி பிசாசு வேற இப்படி பார்க்குதே ஏதாச்சும் சொல்லி சமாளி டா' என மூளை அறிவுருத்த,
"இன்னைக்கு மகளிர் தினம் இல்ல" என்று கேட்டவனை முறைத்தவள் ,"இல்லையே" என புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
"அதைத்தான் நானும் சொல்றேன்..இன்னைக்கு மகளிர் தினம் இல்லை..மகளிர் தினத்தன்னைக்கு தான் மகளிரை பாராட்டனும்னு இல்லை டெய்லி பாராட்டலாம்..அதைத்தான் நான் பண்னேன் எதுவும் லூசு மாதிரி உளராம போ போய் படிக்கிற வழியை பாரு " என அவள் மண்டையில் கொட்டினான்.
அவனை திட்டிக் கொண்டே நகரப்போனவளை தடுத்தவன் ,"நாமெல்லாம் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கலாமா" என்று கேட்டான்.
"அப்போ எனக்கு நைட் ரெண்டு குல்பி வாங்கி தர்றியா??" என ஆவலோடு தங்கை வினவ, தோழியும் ,"ஆமா ஆமா எனக்கும்..குரங்கு கூட லாம் செல்பி எடுக்க எங்களுக்கு கமிஷென் வேண்டும்" எனக்கூறி இருவரும் ஹைபை அடித்துக் கொள்ள,
அவனின் குட்டி மகளுக்கு என்ன புரிந்ததோ,"நானு நானு எனக்கு வேணு" என மூக்கை சுருக்கி வினவிய அழகில் மயங்கியவன் அவளை தூக்கி முத்தம் வைத்து ,"எல்லாருக்குமே என்னோட கார்ட்ல இருக்க காசை காலி பண்ணியாச்சும் வாங்கி தந்து தொலைக்கிறேன் வந்து நில்லுங்க" என சிரிப்போடு அவன் கூறினான்.
அனைவரும் புன்னகையோடு சம்மதிக்க ,அழகாக ஒரு செல்பி எடுத்தவன் அதை முகநூலில் பதிவிட்டான் "என் வாழ்வை முழுமை படுத்திய என் மனிதிகள் " என்கிற தலைப்போடு.
Diiiiiii arumai vera level ????????உன் கள்ளமில்லா சிரிப்பில் கல்லைக் கூட கரைத்து விடுகிறாய்
உன் பிஞ்சு விரல் தீண்டலிலே மனமெல்லாம் பஞ்சு போல் லேசாகிறது
உன் 'அப்பா' என்கிற வார்த்தை சிறகில்லாமல் என்னை விண்ணில் பறக்க செய்கிறது
உன் வரவால் என் வாழ்க்கையை வசந்தமாக்கிய தென்றலே
மகளாகிய என் சின்னத்தாயே
எங்கிருந்தோ எனக்கென வந்த தேவதையே
வெள்ளை காகிதமாய் இருந்த வாழ்க்கையை அழகிய ஓவியமாக்கினாய்
கோபம் கொண்டு நான் உன் மீது முட்களை வீசினேன்
காதல் கொண்டு முட்களை மலராக்கி என் மேல் தூவினாய்
உன் காதலுக்கு முன்னால் ஏழையாகிவிட்டேன் கண்மணியே
வாழ்க்கைத்துணையாய் வந்த தளிரே இன்றிலிருந்து இந்த அடியேன் உன் காதலுக்கு அடிமை
நான் இந்த பூவுலகில் ஜனிப்பதற்கு முன்பே என் மீது உன் ஒட்டு மொத்த பாசத்தையும் கொட்டினாய்
உன் உதிரத்தை பாலாக்கி என் பசி போக்கினாய்
துன்பம் என்று கலங்கிய போது நான் துவண்டு போய் விடாமல் மடி தாங்கினாய்
கருவறையில் பத்து மாதமும் மன அறையில் ஆயுள் காலமும் என்னை சுமக்கின்றாயே
உன் அன்பிற்கு ஈடாக நீ தந்த உயிரைக் கொடுத்தாலும் நிகராகாது தாயே
கருவறை முதல் கணிணி வரை அனைத்திலும் என்னுடன் பங்கு போடும் குட்டி இராட்சஷியே
என் கருப்பு தினங்களைக்கூட உன் பேச்சால் வர்ணஜாலமாக்கும் வண்ணத்துப்பூச்சியே
அருகில் இருந்தால் தொல்லை செய்கிறாய் ,விலகி சென்றால் கவலை கொள்கிறாய்
முரண்பாட்டின் முடிசூடா ராணியே நீயில்லாது எனக்கில்லை திராணியே
இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் தோள் குடுத்து
தோல்வி அடையும் போது தட்டிக் கொடுத்து
வெற்றி அடையும் போது மட்டும் வந்து ஒட்டிக் கொள்ளும்
சொந்தங்கள் போலில்லாமல் உன் நட்பால் நாள்தோறும் என்னை மலரச் செய்யும் பனிமலரே
நட்பின் இலக்கணத்தை உன்னிடத்தில் கற்று கொண்டேன்.
மகளாய்,அன்னையாய்,மனைவியாய்,தோழியாய்,சகோதரியாய்,இப்படி யாதுமாக மாறி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் அனைத்து இறைவிகளுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.