சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ மூன்றாவது அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி
"தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க உள்ளாற வந்தா நான் பொல்லாதவேங்க"
என தலைவர் பாடல் காதை பிளக்க அலறியடித்து எழுந்தான் ராகேஷ். மணி எத்தனை என்று பார்க்க அது ஐந்து நாற்பத்தைந்தை காட்டியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டினாலும் போகமாட்டேன் என அது அடம்பிடிக்க வலுக்கட்டாயமாக தண்ணியில் அமுக்கி அதை விரட்டினான்.
"யாருடா அது இந்த வீட்ல இவ்ளோ சத்தமா பாட்டு கேக்கறது. அரசுவா இருக்குமோ? ச்சே..ச்சே இருக்காது..வேற?????
அந்த பொண்ணு .."டேய்..டேய் அறிவுகெட்டவனே அது அவ்ளோ அமைதியா இருந்துச்சு அந்த பாப்பா அப்படிலாம் பண்ண சான்ஸே இல்ல. "என மனசாட்சி கல்லை கொண்டு அடிக்க...அதுவும் சரிதான் யாரா இருப்பாங்க என்றவாறு தன் அறையை விட்டு வெளியே வர
இந்த சத்தம் தங்களை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல தாத்தா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, காமாட்சி, தெய்வானை இருவரும் சமையலறையில் இருந்தனர்.
சரி அவர்களிடம் விவரம் கேட்போம் என அங்கு சென்றான். "அம்மா...பாட்டி" என மாறிமாறி அழைக்க அவர்களுக்கு கேட்டதை போல தெரியவே இல்லை. அதுசரி இந்த சத்தத்துல எங்க கேக்க போகுது என நினைத்துக்கொண்டவன் தெய்வானையின் தோளை தொட அவரோ பயந்து விருக்கென்று அதிர்ந்து திரும்ப, அங்கு ராகேஷ் இருப்பதை பார்த்ததும் தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தவர்,
" வாப்பா எழுந்துட்டியா? காலைல என்ன சாப்பிடுவ பால், காபி, டீ என்ன வேணும் சொல்லு"
"எனக்கு...."
அவனை நிறுத்துமாறு சைகை செய்தவர் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துவிட்டு
"இப்ப சொல்லுப்பா"
அவரது செயலில் ஆ...வென வாயைப்பிளந்தவன்..
"ஏன்மா இப்படி?" என ஆச்சர்யம் விலகாமல் கேட்க....
"அதை ஏன்பா கேக்கற எல்லாம் நான் பெத்ததுக்காகதான்" அவரது கவலை அவருக்கு...
"யாருமா அரசா?"
"இல்லப்பா அவன் தங்கம் , கலகலப்பா இருப்பானே ஒழிய சூதுவாது இல்லாத புள்ள....நான் பெத்த பெருசுதான் இதுக்கு காரணம்"
"என்ன அவங்களா?" என ஆச்சர்ய மிகுதியில் கத்தியேவிட்டான்.
"அவகளேதான்"
"வெளிய தாத்தா".... என தடுமாறியவன் "அவர் ஒன்னுமே சொல்லமாட்டாரா?"
"அத அப்பறம் சொல்றேன் " என சைகை செய்தவர் மீண்டும் என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க, தனது கப்புடன் ஹாலிற்க்கு வந்தான்....
அங்கோ நடுஹாலில் அரசு தூங்கி வழிந்தவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றவன் "அரசு" என தோளில் கைவைக்க "ஐயோ அக்கா " என கத்தியவனை பார்த்து விருட்டென தானும் இரண்டடி பின்னால் சென்ற ராகேஷ்
"டேய் என்னடா காலங்காத்தால எல்லாரும் இப்படி பயங்காட்டுறீங்க" என அழாத குறையாக புலம்ப..
உடனே தன் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு "ஐயோ! நீங்களா சாரிண்ணா..சாரிண்ணா நான் அக்காவோன்னு நினைச்சேன்.
வாங்க வந்து உட்காருங்க "என தன் பக்கத்தில் இடம் காட்ட இவனோ" குடும்பமே இப்படிதான் சுத்தறாய்ங்களோ? "என எண்ணியவன் ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.
(உஷாராமாம்..ஆனா இவனுக்கு தெரியல சைத்தான் மேல இருந்து மட்டுமில்ல வீட்டுக்கு வெளில இருந்தும் வரும்னு) காபியை ஒரு மிடறு விழுங்கியவன்
"ஆஹா காபின்னா அது தெய்வாம்மா காபிதான் பேஷ்..பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு" என்றவாறே மெதுவாக உறிய தொடங்கினான்.
அப்போது திடீரென்று பாட்டு சத்தம் நிறுத்தப்பட "அண்ணா கவனம் அவங்க வருவாங்க" என அரசு எச்சரிக்கை செய்ய உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில் "ஹா..யாருக்கிட்ட நாங்க சைத்தானயே சைட்ல தூக்கி போடுவோம்...இதெல்லாம் ஜீஜுபி."
என கெத்தாக சொல்லியவனை ஒரு பாவப்பார்வை பார்த்தான் அரசு.
"இவன் ஏன் நம்மள இப்படி பாவமா பார்க்கறான்..நேத்தும் கூட இப்படிதான் பார்த்து வச்சான் என்னன்னு கேக்கனும்..ஆனா முதல்ல காபிய குடிப்போம்" என வாயில் வைக்க "தல" என திடீரென்று பல குரல்கள் கத்தும் சத்தம் வீட்டினுள் கேட்க குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே வெளியில் துப்பிவிட்டான்.
நல்லவேளை கப்பை கீழே போடவில்லை. இந்த வீட்டுல நிம்மதியா காபி கூட குடிக்க விடமாட்டிங்கறாங்களே என வெளிப்படையாகவே புலம்பியவன் இம்முறை யாரென பார்க்க அங்கே சைஸ் வாரியாக பத்து, எட்டு, ஆறு ,நான்கு வயதுகளில் நான்கு குட்டிகள் இருக்க...இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் மேலே உள்ள அறைக்கு ஓடினர்.
"இந்த அவதார் குட்டிங்க யாருடா?" என மனதில் நினைப்பதாய் வெளியே பேசிவிட்டான்.
அவன் வாயை அவசரமாக பொத்தியவன் அருகில் இருந்த அறைக்கு அவனை இழுத்துச் சென்றான்.
"டேய்..டேய் அரசு என்னடா பன்ற?"
"அட வாங்கண்ணா முதல் நாளே பூஜை வாங்க அவ்வளவு அவசரமா?" அறையினுள் இழுத்துச் சென்றவன் கதவை கொஞ்சமாக திறந்து வைத்தவாறே "இப்ப நடக்கறத வேடிக்கை மட்டும் பாருங்க" "இதென்னடா மந்திர குகை மாதிரியே இப்படி பயங்காட்டுறான்!!! சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு" என்று எண்ணியவாறு அவனும் எட்டிபார்த்திருக்க..
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். கண்களில் கலர் கலராய் சன் கிளாசுடன் அவர்களின் பின்னால் அழகு நாச்சியார் நிற கிளிப்பச்சை நிற பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், ரோஜா நிற தாவணி அணிந்து, தலைவாரி அடியில் குஞ்சம் வைத்து பின்னி தலை நிறைய குண்டுமல்லி பூ வைத்து, அஞ்சனம் பூசிய மைவிழிகளை மறைத்தவாறு கருப்பு நிற சன் கிளாஸ், பின்னலிட்ட ஜடையை முன்னால் விட்டு ஆட்டியவாறு நடந்து வர உள்ளிருந்து ராகேஷ் ஆவென பார்த்திருந்தான்.
நேற்று பார்த்த பெண்ணா இவள்..இன்றைய அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை போல.ஒய்யாரமாக நடந்து வந்தவள், ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் காலிட்டு அமர , மற்ற நால்வரும் அவளின் பின்னால். சுற்றி ஒருமுறை நோட்டம் விட்டவள் முகம் ஒரு கனம் சுருங்கி எதையோ யோசித்து பின் தெளிந்தது.
"அம்மா"
"ம்மா"
"மா"
"தாயே தெய்வா" என இடைவிடாது கத்திக்கொண்டிருக்க...
"என்னடி"
"தாயே குரல் மட்டும் வருது உன் திருமுகத்தை ஒருமுகமா காட்டம்மா"
"எனக்கு வேலை நிறைய இருக்கு என்னன்னு சொல்லு" குரல் காரமாகவே வர,
"உன் கையால காபி போட்டு கொடும்மா" "அப்படியே என்னோட தளபதிகளுக்கும் "
"என்னடா காபி ஓகே வா"
"ஓகே தல"
"அண்ணா இவனுங்க பேர் தெரியுமா?
" என்ன என்பதை போல ராகேஷ் பார்க்க.... அதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி விரைப்பா நிக்கறானே அவன் "நண்டு"
அடுத்து எப்படா காபி வரும்னு சமையலறையையே பார்க்கறானே அவன் "சிண்டு" சரியான தீனிக்கோழி.
அதுக்கடுத்து பச்ச மண்ணு மாதிரி பவ்யமா நிக்கறானே அவன் "சுண்டு" சரியான விவகாரம் புடிச்சவன் அவன்கிட்ட ஜாக்கிரதையாஇருக்கனும்,
அந்த கடைக்குட்டி "வண்டு" இப்பதான் இந்த "கொரில்லா கேங்ல " சேர்ந்திருக்கு.
நாங்கலாம் அப்பவே அப்படி
"தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க உள்ளாற வந்தா நான் பொல்லாதவேங்க"
என தலைவர் பாடல் காதை பிளக்க அலறியடித்து எழுந்தான் ராகேஷ். மணி எத்தனை என்று பார்க்க அது ஐந்து நாற்பத்தைந்தை காட்டியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டினாலும் போகமாட்டேன் என அது அடம்பிடிக்க வலுக்கட்டாயமாக தண்ணியில் அமுக்கி அதை விரட்டினான்.
"யாருடா அது இந்த வீட்ல இவ்ளோ சத்தமா பாட்டு கேக்கறது. அரசுவா இருக்குமோ? ச்சே..ச்சே இருக்காது..வேற?????
அந்த பொண்ணு .."டேய்..டேய் அறிவுகெட்டவனே அது அவ்ளோ அமைதியா இருந்துச்சு அந்த பாப்பா அப்படிலாம் பண்ண சான்ஸே இல்ல. "என மனசாட்சி கல்லை கொண்டு அடிக்க...அதுவும் சரிதான் யாரா இருப்பாங்க என்றவாறு தன் அறையை விட்டு வெளியே வர
இந்த சத்தம் தங்களை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல தாத்தா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, காமாட்சி, தெய்வானை இருவரும் சமையலறையில் இருந்தனர்.
சரி அவர்களிடம் விவரம் கேட்போம் என அங்கு சென்றான். "அம்மா...பாட்டி" என மாறிமாறி அழைக்க அவர்களுக்கு கேட்டதை போல தெரியவே இல்லை. அதுசரி இந்த சத்தத்துல எங்க கேக்க போகுது என நினைத்துக்கொண்டவன் தெய்வானையின் தோளை தொட அவரோ பயந்து விருக்கென்று அதிர்ந்து திரும்ப, அங்கு ராகேஷ் இருப்பதை பார்த்ததும் தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தவர்,
" வாப்பா எழுந்துட்டியா? காலைல என்ன சாப்பிடுவ பால், காபி, டீ என்ன வேணும் சொல்லு"
"எனக்கு...."
அவனை நிறுத்துமாறு சைகை செய்தவர் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துவிட்டு
"இப்ப சொல்லுப்பா"
அவரது செயலில் ஆ...வென வாயைப்பிளந்தவன்..
"ஏன்மா இப்படி?" என ஆச்சர்யம் விலகாமல் கேட்க....
"அதை ஏன்பா கேக்கற எல்லாம் நான் பெத்ததுக்காகதான்" அவரது கவலை அவருக்கு...
"யாருமா அரசா?"
"இல்லப்பா அவன் தங்கம் , கலகலப்பா இருப்பானே ஒழிய சூதுவாது இல்லாத புள்ள....நான் பெத்த பெருசுதான் இதுக்கு காரணம்"
"என்ன அவங்களா?" என ஆச்சர்ய மிகுதியில் கத்தியேவிட்டான்.
"அவகளேதான்"
"வெளிய தாத்தா".... என தடுமாறியவன் "அவர் ஒன்னுமே சொல்லமாட்டாரா?"
"அத அப்பறம் சொல்றேன் " என சைகை செய்தவர் மீண்டும் என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க, தனது கப்புடன் ஹாலிற்க்கு வந்தான்....
அங்கோ நடுஹாலில் அரசு தூங்கி வழிந்தவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றவன் "அரசு" என தோளில் கைவைக்க "ஐயோ அக்கா " என கத்தியவனை பார்த்து விருட்டென தானும் இரண்டடி பின்னால் சென்ற ராகேஷ்
"டேய் என்னடா காலங்காத்தால எல்லாரும் இப்படி பயங்காட்டுறீங்க" என அழாத குறையாக புலம்ப..
உடனே தன் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு "ஐயோ! நீங்களா சாரிண்ணா..சாரிண்ணா நான் அக்காவோன்னு நினைச்சேன்.
வாங்க வந்து உட்காருங்க "என தன் பக்கத்தில் இடம் காட்ட இவனோ" குடும்பமே இப்படிதான் சுத்தறாய்ங்களோ? "என எண்ணியவன் ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.
(உஷாராமாம்..ஆனா இவனுக்கு தெரியல சைத்தான் மேல இருந்து மட்டுமில்ல வீட்டுக்கு வெளில இருந்தும் வரும்னு) காபியை ஒரு மிடறு விழுங்கியவன்
"ஆஹா காபின்னா அது தெய்வாம்மா காபிதான் பேஷ்..பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு" என்றவாறே மெதுவாக உறிய தொடங்கினான்.
அப்போது திடீரென்று பாட்டு சத்தம் நிறுத்தப்பட "அண்ணா கவனம் அவங்க வருவாங்க" என அரசு எச்சரிக்கை செய்ய உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில் "ஹா..யாருக்கிட்ட நாங்க சைத்தானயே சைட்ல தூக்கி போடுவோம்...இதெல்லாம் ஜீஜுபி."
என கெத்தாக சொல்லியவனை ஒரு பாவப்பார்வை பார்த்தான் அரசு.
"இவன் ஏன் நம்மள இப்படி பாவமா பார்க்கறான்..நேத்தும் கூட இப்படிதான் பார்த்து வச்சான் என்னன்னு கேக்கனும்..ஆனா முதல்ல காபிய குடிப்போம்" என வாயில் வைக்க "தல" என திடீரென்று பல குரல்கள் கத்தும் சத்தம் வீட்டினுள் கேட்க குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே வெளியில் துப்பிவிட்டான்.
நல்லவேளை கப்பை கீழே போடவில்லை. இந்த வீட்டுல நிம்மதியா காபி கூட குடிக்க விடமாட்டிங்கறாங்களே என வெளிப்படையாகவே புலம்பியவன் இம்முறை யாரென பார்க்க அங்கே சைஸ் வாரியாக பத்து, எட்டு, ஆறு ,நான்கு வயதுகளில் நான்கு குட்டிகள் இருக்க...இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் மேலே உள்ள அறைக்கு ஓடினர்.
"இந்த அவதார் குட்டிங்க யாருடா?" என மனதில் நினைப்பதாய் வெளியே பேசிவிட்டான்.
அவன் வாயை அவசரமாக பொத்தியவன் அருகில் இருந்த அறைக்கு அவனை இழுத்துச் சென்றான்.
"டேய்..டேய் அரசு என்னடா பன்ற?"
"அட வாங்கண்ணா முதல் நாளே பூஜை வாங்க அவ்வளவு அவசரமா?" அறையினுள் இழுத்துச் சென்றவன் கதவை கொஞ்சமாக திறந்து வைத்தவாறே "இப்ப நடக்கறத வேடிக்கை மட்டும் பாருங்க" "இதென்னடா மந்திர குகை மாதிரியே இப்படி பயங்காட்டுறான்!!! சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு" என்று எண்ணியவாறு அவனும் எட்டிபார்த்திருக்க..
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். கண்களில் கலர் கலராய் சன் கிளாசுடன் அவர்களின் பின்னால் அழகு நாச்சியார் நிற கிளிப்பச்சை நிற பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், ரோஜா நிற தாவணி அணிந்து, தலைவாரி அடியில் குஞ்சம் வைத்து பின்னி தலை நிறைய குண்டுமல்லி பூ வைத்து, அஞ்சனம் பூசிய மைவிழிகளை மறைத்தவாறு கருப்பு நிற சன் கிளாஸ், பின்னலிட்ட ஜடையை முன்னால் விட்டு ஆட்டியவாறு நடந்து வர உள்ளிருந்து ராகேஷ் ஆவென பார்த்திருந்தான்.
நேற்று பார்த்த பெண்ணா இவள்..இன்றைய அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை போல.ஒய்யாரமாக நடந்து வந்தவள், ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் காலிட்டு அமர , மற்ற நால்வரும் அவளின் பின்னால். சுற்றி ஒருமுறை நோட்டம் விட்டவள் முகம் ஒரு கனம் சுருங்கி எதையோ யோசித்து பின் தெளிந்தது.
"அம்மா"
"ம்மா"
"மா"
"தாயே தெய்வா" என இடைவிடாது கத்திக்கொண்டிருக்க...
"என்னடி"
"தாயே குரல் மட்டும் வருது உன் திருமுகத்தை ஒருமுகமா காட்டம்மா"
"எனக்கு வேலை நிறைய இருக்கு என்னன்னு சொல்லு" குரல் காரமாகவே வர,
"உன் கையால காபி போட்டு கொடும்மா" "அப்படியே என்னோட தளபதிகளுக்கும் "
"என்னடா காபி ஓகே வா"
"ஓகே தல"
"அண்ணா இவனுங்க பேர் தெரியுமா?
" என்ன என்பதை போல ராகேஷ் பார்க்க.... அதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி விரைப்பா நிக்கறானே அவன் "நண்டு"
அடுத்து எப்படா காபி வரும்னு சமையலறையையே பார்க்கறானே அவன் "சிண்டு" சரியான தீனிக்கோழி.
அதுக்கடுத்து பச்ச மண்ணு மாதிரி பவ்யமா நிக்கறானே அவன் "சுண்டு" சரியான விவகாரம் புடிச்சவன் அவன்கிட்ட ஜாக்கிரதையாஇருக்கனும்,
அந்த கடைக்குட்டி "வண்டு" இப்பதான் இந்த "கொரில்லா கேங்ல " சேர்ந்திருக்கு.
Last edited: