சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி-- 9
நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,
" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு." என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.
ஆனால் நாச்சியார் அதை
கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.
"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா"
இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
கௌதம் "இது ரொம்ப முக்கியம் இப்ப" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.
மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.
ராகேஷ் "அது..எந்தங்கச்சியா கொக்கா"
"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! "
என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.
ஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.
கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. "நிவி யூ ஆர் கோயிங் டூ மச்"
நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.
நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, "வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க" என கீச்சுக்குரலில் கத்த
"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத" கௌதமுக்கு அத்தனை கோபம்.
அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!
நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.
"யார் இவ"
"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.
நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.
கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.
"சரி...யார் இவங்க"
"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.
"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
கௌதமிற்காக "சாரி" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.
"என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி" என்று கருவியவள்,
"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்." என்றவாறு மாடியேறப் போனவளை
"நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.
"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.
நாச்சியாரை பார்த்தவாறே "இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.
எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.
ராகேஷ் எழுந்தவன் "சரி பாட்டிமா நான் கெளம்பறேன்" என்க.
நாச்சியார் "ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க"
நிவியும் கேட்பாள்தான் "அங்க போய் தனியாதான இருக்கனும்"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.
"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா" என தயங்கியவாறு சொல்ல,
"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்" என்றாள்.
அதில் "நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது."
இப்போது கௌதம் கோபமாக "டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத"
அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.
" இல்ல பாஸ்.."
"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.
"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,
"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.
நிவி "ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். " என பொருமிக் கொண்டிருந்தாள்.
அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் "என்னோட ரூம் எங்கயிருக்கு" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.
"மேல"
"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க" என்று அவனிடம் கூறியவள்.
நிவியிடம் "இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.
ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.
நாங்கலாம் அப்பவே அப்படி-- 9
நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,
" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு." என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.
ஆனால் நாச்சியார் அதை
கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.
"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா"
இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
கௌதம் "இது ரொம்ப முக்கியம் இப்ப" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.
மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.
ராகேஷ் "அது..எந்தங்கச்சியா கொக்கா"
"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! "
என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.
ஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.
கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. "நிவி யூ ஆர் கோயிங் டூ மச்"
நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.
நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, "வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க" என கீச்சுக்குரலில் கத்த
"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத" கௌதமுக்கு அத்தனை கோபம்.
அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!
நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.
"யார் இவ"
"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.
நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.
கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.
"சரி...யார் இவங்க"
"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.
"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
கௌதமிற்காக "சாரி" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.
"என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி" என்று கருவியவள்,
"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்." என்றவாறு மாடியேறப் போனவளை
"நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.
"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.
நாச்சியாரை பார்த்தவாறே "இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.
எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.
ராகேஷ் எழுந்தவன் "சரி பாட்டிமா நான் கெளம்பறேன்" என்க.
நாச்சியார் "ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க"
நிவியும் கேட்பாள்தான் "அங்க போய் தனியாதான இருக்கனும்"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.
"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா" என தயங்கியவாறு சொல்ல,
"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்" என்றாள்.
அதில் "நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது."
இப்போது கௌதம் கோபமாக "டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத"
அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.
" இல்ல பாஸ்.."
"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.
"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,
"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.
நிவி "ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். " என பொருமிக் கொண்டிருந்தாள்.
அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் "என்னோட ரூம் எங்கயிருக்கு" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.
"மேல"
"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க" என்று அவனிடம் கூறியவள்.
நிவியிடம் "இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.
ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.
Last edited: