• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்௧லாம் அப்பவே அப்படி - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய்..ஹாய்.. எங்கடா கதை எழுதறேன்னு சொன்னாளே இன்னும் காணலயேன்னு தேடியிருக்க மாட்டீங்கதான்..ஆனாலும் நான் உண்மைய சொல்லித்தான் ஆகனும்...காலுல சக்கரத்த கட்டி விட்டுட்டாங்க...அதனால என்னால நிக்க முடியல ...நிக்க முடியாததால எழுத முடியல...இப்பதான் நானே வலுக்கட்டாயமா நின்னு இதை எழுதினேன்....சோ சின்ன புள்ளைய மன்னிச்சு...இதோ எபி


"நாங்கலாம் அப்பவே அப்படி"


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூரு "கெம்பே கவுடா" விமான நிலையம். பலவகையான மனிதர்களை தனக்குள் இருத்தி வைத்திருந்த அந்த பிரமாண்ட கட்டிடத்தில், அடிப்பகுதியில் ஆர்ப்பரித்தாலும் மேற்பகுதியில் தன்னை அமைதியாக காட்டிக்கொள்ளும் ஆழியை போல மனதுக்குள் பல எண்ணங்கள் படையெடுத்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தார் அஞ்சுகம் பாட்டி. பழுத்த பழம் என்பார்களே அதுபோல தோற்றம், வெள்ளிக்கம்பியாய் மினுமினுத்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, தங்க பிரேமிட்ட மூக்கு கண்ணாடி அதற்குள் இருவிழிகள் எவரையும் துல்லியமாக எடைபோட்டு விடும் தீட்சண்யத்தோடு. எளிமையான காஞ்சி பட்டுடுத்தி ஒரு மகாராணியை போல அமர்ந்திருந்தவரை பார்ப்பவர்கள் நின்று அவரிடம் ஒரு சிறு புன்னகையாவது பூத்து செல்வர்.


ஆம் அவர் மகாராணியாகதான் வாழ்ந்தார் சிறு கவலை கூட இல்லாமல் அவர் கணவர் குமாரபூபதி இருக்கும் வரை.


ஐந்தாண்டுகளுக்கு முன் மகன் பிரபாகர் மருமகள் காஞ்சனாவுடன் நெருங்கிய நண்பரின் இல்ல திருமணத்திற்க்கு சென்ற கணவரை எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் துணியில் சுற்றப்பட்டு பொட்டலமாகதான் கொண்டு வந்தனர். மகன் , மருமகள் நிலமையோ இன்னும் மோசம் சுரண்டிதான் கொண்டுவந்தனர்.


இந்த கோர சம்பவத்தை கேள்விபட்ட பின்னும் தடங்கலில்லாமல் துடித்து கொண்டிருக்கு தன் இதயம் கூட அவருக்கு பாரமாகதான் இருத்தது...கிட்டத்தட்ட மரத்து போன நிலை.இவையனைத்தும் தன் பேரனை காணும் வரை மட்டுமே.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில் தன் MBA மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்தவன் இந்த பேரிழப்பை கேட்டதும் விரைந்து வந்திருந்தான். குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருப்பவனாயிற்றே..அவனை கண்டதும்தான் தன் நிலை உணர்ந்து அவனுக்காக தான் செய்ய வேண்டிய கடமையை எண்ணி தன் துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டார்.


இதோ இப்பொழுது இந்த பயணம் கூட அவனுக்காகதான். அவனை நல்ல மனம் கொண்ட மனிதர்களிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


காரணம் இங்கிருக்கும் குள்ளநரிகூட்டம் பற்றி அவர் நன்கறிவார். பேரனின் மேல் நம்பிக்கையில்லாமல் இல்லை. எத்தனுக்கும் எத்தன் அவன், படிப்பை பாதியில் விட்டு வந்தவன் அதன் பிறகு " "ஏகேபி" நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றான், அதிலிருந்து இதுவரை ஏற்றம்.. ஏற்றம் ..ஏற்றம் மட்டுமே.


எதற்கும் அஞ்சாதவன்தான். ஆனால் நேர்நின்று தாக்கும் எதிரிகள் அல்லவே இவர்கள்... பாசத்தை கொண்டு பாழாக்க நினைக்கும் குள்ளநரி கூட்டம். இவற்றையெல்லாம் தன் மனதில் போட்டு அலட்டிக்கொண்டிருந்தவர் கண்களில் மெல்லிய கலக்கம் , சிறு தேடல் என நுழைவாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.


இன்னும் அரைமணி நேரத்தில் உள்ளே செல்ல அறிவிப்பு வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அட்டகாசமாய் உள்ளே நுழைந்தான் அவன். ஆறடி ஓரங்குல உயர ஆணழகன், புலியின் வேட்டைப் பார்வையை ஒத்த கூர்மையான விழிகள் தன் தேடலை தொடங்க, ஆழ்கடலின் நீல வண்ணத்தில் டீசர்ட் அணிந்திருந்தவன் தன் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வலது கையை நுழைத்தவாறு மாடல் போல அம்சமாய் இருந்தான். பரந்து விரிந்த "ஏகேபி" நிறுவனத்தின் வாரிசு "கௌதம் பிரபாகர்".


அந்த கோர விபத்திற்க்கு பிறகு எஞ்சியிருக்கும் தன் ஒரே உறவான பாட்டியின் மீது இன்னும் அதிக பாசம் அவனுக்கு.இந்த உலகில் அவன் பணிவது என்றால் அது அவர் ஒருத்தருக்கு மட்டுமே. மற்றபடி அவன் தாத்தாவை போல அனைவருக்கும் சிம்மசொப்பனம்.


இதோ இந்த பயணத்திற்க்கு ஒப்புக்கொண்டு வருவது கூட அவர் வருத்தப்படகூடாது என்ற ஒரே காரணம் தான். அவர் ஊருக்கு அழைத்த போது வரவே முடியாது என மறுத்திருந்தான்.


இன்று காலை பரபரப்பாக தன் வழக்கமான அலுவல் உடை அணிந்து கையில் விலையுயரந்த கைக்கடிகாரத்தை கட்டியவாறே மாடிப்படிகளை தன் வேக நடையுடன் கடந்து வந்துகொண்டிருந்த பேரனை பார்த்த அஞ்சுகம் பாட்டி அவனின் கம்பீரத்தை கண்டு எப்போதும் போல இம்முறையும் ரசித்து பார்த்திருந்தார்.


அவரின் பார்வையை உணர்ந்தவனாக மெல்லிய புன்னகையுடனே இறங்கி வந்தான். அவன் அருகில் வரவும் தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பி விட்டார். இதை அறிந்தவன் இன்னும் அதிகமாக புன்னகைத்தவாறே


" குட் மார்னிங் அஞ்சு டார்லிங்"


அவர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவர் தாடையை பற்றி திருப்பியவன்

"டார்லிங் சாப்டாச்சா"

என சிறு குழந்தையை கொஞ்சுவது போல பேச, அவன் கையை தட்டிவிட்டவர் எழுந்து தன் அறைக்கு செல்ல முயல, அவருக்கு முன் சென்று தடுத்தவாறு நின்றவன்


"டார்லிங் இது சரியில்ல, நீங்கதான் என்னை தனியா விட்டு ஊருக்கு போறீங்க.. நியாயமா பார்த்தா நான்தான் இப்படி கோவிச்சுக்கனும்"


என்று அவரை மாதிரியே முகத்தை உர்ரென்று வைக்க அதை பார்த்த அஞ்சுகம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அவன் கன்னத்தை பிடித்து இழுத்தவர் "படவா! உன்கிட்ட கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க முடியுதா?" என சலித்து கொண்டவரிடம்.


"ம்ம் .. இப்பதான் என்னோட டார்லிங் மாதிரி இருக்கீங்க. எதுக்கு இந்த கோபம் உங்க அண்ணன் வீட்டுக்கு போறீங்க.. அங்க விசேசத்துல கலந்துகிட்டு பத்து நாள்ள இங்க வரப்போறீங்க அப்பறம் என்ன? முகத்தை அண்டார்டிகா வரை நீட்டி வச்சிருக்கீங்க..."


அதத்தான் நானும் சொல்றேன் கண்ணா நீயும் என்கூட வாடா! இங்க தனியாதான இருப்ப, அங்க தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அம்மு, அரசு இவங்கலாம் இருக்காங்க அவங்களை பார்த்தால் உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.


"நான் அங்க வந்துட்டா இங்க பிஸ்னஸ யாரு பாத்துக்குவாங்க அஞ்சு, சுந்தரேசன் அங்கிள் பாவம் அவரால சமாளிக்க முடியாது.அதுவுமில்லாம நாளைக்கு மறுநாள் முக்கியமான பிஸ்னஸ் டீலிங் இருக்கு..அது மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா பலகோடி ருபாய் லாபம் வரும்...அப்பதான் வொர்க்கர்ஸ்க்கும் போனஸ் கொடுக்க முடியும். அதனால நீங்க மட்டும் போய்ட்டு வாங்க" என்று கூறியவன் ஆபீஸிற்க்கு கிளம்பி விட்டான்.


ஆபீஸிற்க்கு வந்துவிட்டானே ஒழிய அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை...பாட்டியின் சோகமான முகமே ஞாபகம் வந்தது...


தாத்தா இறந்த பின்பு தன் அண்ணன் வீட்டை தவிர எங்கும் சென்றதில்லை... அவருக்கு நேரம் ஒதுக்க தவறுகிறோமோ என்று எண்ணியவனின் மனதில் அவரது கலங்கிய முகமே தெரிய, தன் முடிவை மாற்றி தன் ஜி.எம் சுந்தரேசன் அங்கிளை அழைத்தவன் தான் பத்து நாட்கள் இங்கு இருக்க மாட்டேன் என்றும், கணிணி மூலம் தன் வேலைகளை பார்ப்பதாக கூறி மீதி அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்குமாறு கூறினான்.


தன் பாட்டி செல்லும் விமானத்திலேயே இரண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்தவன் ,
பாட்டிம்மாவிற்க்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிற்க்கு சென்றவன் அவசர அவசரமாக கிளம்பி வந்தான்.
Veryyy nice heroo bt knjam sogam ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top