Soundarya Krish
முதலமைச்சர்
நிலவு காதலியிடம்வான் மதியும் கதிரவனும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் தருணம்
மின்னிச் சிரித்தது போதுமென உறங்கச் செல்லும் நட்சத்திரக் கூட்டம்
மையிருட்டு மண்ணைவிட்டகலும் பொருட்டு கொக்கரிக்கும் சேவல்
தருக்களினூடே விடியலை வரவேற்க்கும் குயில்களின் கானம்
மெல்லிய பூங்காற்றாய் தேகம் சிலிர்க்கச் செய்யும் தென்றல் காற்று
ஓர் துளியில் அழகை ஒளித்து வைத்துவிட முடியுமா ? என வியக்க வைக்கும் புல்லின் பனித்துளி
பட படக்கும் சிறகுகளை விரித்து வானில் பறக்கும் புட்களின் இசை ஸ்வரங்கள்
தாயின் மடி சேரும் பிள்ளையாய் கரையினை தொட்டு தொட்டுச் செல்லும் அலைகள்
ஆழியான தன் மகளை தாயவள் இதழ் பதிக்கும் முன் தன்னவன் ஆதவன் முத்தமிட்டதை பார்த்த நிலவு மங்கை கோபம் கொண்டு மறைந்துவிட்டால்
சமாதானப்படுத்த எண்ணி ஆதர்ஷனமான தன் கதிர்களை கொண்டு அரவணைத்தான் ஆதர்ஷன் தன் மனையாளான வெண்ணிலவினை...
பூக்கள் அலர்ந்து பூவை என் மனதில் மட்டுமல்லாது புவியெங்கும் மணங்கமழச் செய்யும் ரம்மியமான விடியல் பொழுது....
ஒவ்வொரு நாளின் இனிய அழகிய தொடக்கம்....
இரவெல்லாம் தஞ்சமடைந்த
அவள் மன்னவன்...
தன்னவளை தன்னுள்
ஒளித்து பகலானன்...
அவளின் பாவலன்...
மறைத்தும் வெளிபட்டது..
பெண்ணவளின் நாணச்சிவப்பு...
அக்காவலன் மேனியில்...
Last edited: