“வதனி.... இது நம்ம நந்தா....... பாத்து.... ரொம்ப நாளாச்சு.... எனக்கே உன்ன அடையாளம் தெரிலப்பா... அவளுக்கு எங்க தெரியப் போகுது...”
‘வதனியா...... அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணாயிட்டாளா...... ரகு மச்சான்... ரகு மச்சான்னு நம்ம பின்னாடி தெரிஞ்ச வாண்டா.... இது...... என் வயச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சோதிச்சிட்டாளே....’
“வாங்க....”, என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ரூமிற்குள் சென்றுவிட்டாள்.
அதன் பின் அவளது வயதையும், கல்வியையும் யோசித்து எட்ட நின்று பார்ப்பதுடன் சரி..... அவள் மேலுள்ள அவனது வருத்தம்...... அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் அவளுண்டு, அவள் வேலையுண்டு என்றிருப்பது மட்டுமே.
அவள் அவனை நிராகரிக்கவில்லை....., நினைவிலேயே கொள்ளவில்லை என்பதால் மட்டுமே அவளின்பால் அதிகமாக ஈர்க்கப்படுவதை உணர்ந்தவன், வேலையில் அவனை மறக்குமாறு பார்த்துக் கொண்டான்.
ஆனால் அந்த அபார்மெண்ட் வாண்டுகளுடன் நேரம் காலம் தெரியாமல் அவள் நேரம் செலவழிப்பதை பார்க்கும் போது, சற்றே பொறாமை தோன்றும். ஆனால், சில நேரம் அவனை மீறி சத்தம் போடுவான். கண்டு கொள்ளாமல் செல்பவளைப் பார்த்து, ‘இவ எதுக்கும் அசரவே மாட்டாள்’ , என எண்ணிக்கொள்வான்.
‘எவளுக்கோ நம்பர் வேணும்னு நிக்கிறா..... இவள .... ஒண்ணும் செய்ய முடியாது.....’ என அந்த இரு தினமும் அவளுடன் இருந்த நேரத்தினை பொக்கிஷமாக எண்ணியவனை ..... எண்ணாதவள்.
அவ கோர்ஸ் முடிஞ்ச பின்னாடி வீட்ல சொல்லுவோம் என எண்ணியவனுக்கு, தனது வயோதிகத்தினை காரணம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் கேட்ட அவனுடைய அப்பத்தா ராஜத்திடம் சொல்லலாம் என எண்ணினான்.
அதே நேரத்தில், அவனின் மற்றுமொரு அத்தையான தீபாஞ்சலியின் மகளும் வதனியும் ஆறு மாத வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருவரில் யாரை எடுத்தாலும் மற்றவருக்கு மனவருத்தம் உண்டாகும் என ராஜம் தனது மகனிடம் சொல்லும் போது ரகு உடன் இருந்ததால் அதற்கு மேல் அவன் அதை சொல்ல எண்ணவில்லை.
மேலும் வதனிக்கும் அவன் மேல் விருப்பம் இருப்பது போல தோன்றவில்லை , இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம் என பல காரணங்களால் வீட்டில் கூறும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறிவிட்டான்.
எதிர்பாரா வதனியுடனான அவனது திருமணம், அவனுக்கு கனவு போல இருந்தது. அவளின் சம்மதம் எப்படி கிடைத்தது என்பதும் அவனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
மலராத மொட்டினை, மனமெனும் செடியில் இருந்து பறிக்க எண்ணி....., பறித்தாலும் மீண்டும் வளரும் என விட்டு விட்டவன். மரணம் வரை மறக்க முடியாதவள் அவள் என்பதால் மறக்க நினைத்ததை மறந்துவிட்டான்.
ஆனால், அந்த மொட்டு மலர்ந்து மணம் வீசுமா ..... எனத் தெரியாத போதும், நீரூற்றி வளர்க்க, அவன் மனம் தீர்மானித்து விட்டது.
திருமணம் முடிந்து, குல தெய்வ வழிபாடு, பின்பு விருந்து என அடுத்தடுத்த நிகழ்வுகளில் நேரம் போக, மணமக்களைச் சுற்றி கூட்டம் இருந்த வண்ணம் இருந்தது. பெரியவர்கள் அனைவரும் அசீர்வாதம் செய்து திருநீறு பூசியதில் மாலையாகி விட்டது.
ராஜம் மணமக்களை தனது அறைக்குள் வருமாறு அழைக்க,
“ரகு...... உனக்குன்னு வதனி வந்துட்டா..... இனி ரெண்டு பேரும் ஒருத்தவங்கள மத்தவங்க புரிஞ்சுக்கங்க...... திடீர்னு முடிவானதால அவ மனசு மாறுற வர நீ பொறுமையா இருக்கணும்”
“சந்திரா.... நீ இன்னும் சின்ன புள்ள இல்ல..... அதுனால பாத்து பக்குவமா நடந்துக்க....”
“ரகு.... மூனா நாளு நல்லாருக்கு, அன்னைக்கு அவளுக்கு மாங்கல்யத்த.... செயின்ல மாத்தி போடுறோம்..... அவளுக்கு லீவு இல்ல..... அதனால அவ திருச்சி போயிருவா..... அவளுக்கு படிப்பு முடியற வர அங்கதான் இருக்கணும்.... அதனால.... உங்க தோது பாத்து..... நீ எங்க இருக்கலாம்னு முடிவு பண்ணு....”
“இன்னிக்குல இருந்து ரகு ரூமுக்குள்ள தங்கிக்கோ, அவன் ரூம்ல உன்னோட பொருளெல்லாம் வைக்கச் சொல்லிட்டேன்....சந்திரா”
சரியென்றவுடன் ஓய்வெடுக்குமாறு கூறி இருவரையும் அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார். அவளுடன் அறை வரை வந்தவன்,
“நீ ரெஸ்ட் எடு..... நான் வரேன்...”, என்றுவிட்டு வெளியில் சென்று விட்டான்.
வதனியின் மீதான நந்தனின் ஆர்வமான பார்வையை கண்ட ராஜத்திற்கு சந்தோஷம். ஆனால், ஒரு சந்தேகம் அவருக்கு....... இது புதிதாக வந்த ஆர்வமல்ல.... என்பது. அதையும் பேரனை அழைத்து நேரடியாகவே கேட்டார். முதலில் மறுத்தவன் பிறகு ஒத்துக்கொண்டான்.
தீபாவளி, பொங்கல் என விஷேசங்களுக்கு மட்டும் இங்கு வந்து செல்வாள் வதனி. ரகு வழக்கம்போல இருந்தாலும் இரண்டரை ஆண்டுகள் போனதே தவிர வதனியிடம் மாற்றங்களைக் காண முடியவில்லை.
ரகு, வதனியின் ஒட்டாத வாழ்வு நம்மால் தான் என எண்ணியதால் வந்த குற்ற உணர்வினால் ராஜம் மரணத்தை தழுவினார்.
தாயின் மரணம், ஹரிகிருஷ்ணனுக்கு இதய நோயைத் தந்தது. அவரால் வழக்கம்போல செயல்பட இயலவில்லை.
ரகு, அது வரை சென்னையில் இருந்தவன், தந்தையின் உடல் நலம் கருதி ஊருக்கு வந்துவிட்டான். அவனின் நம்பிக்கைக்கு உரியவர்களை வர்க்கிங் பார்ட்னராக நியமித்து விட்டு அவன் சுந்தரமுடையான் வந்து ஓராண்டாகி விட்டது.
இரண்டரை ஆண்டு கழித்து இங்கு வந்து இனி தங்குவதாகச் சொன்ன மனைவியைக் காண ஆவலாக வந்தவனை வரவேற்றது அவனது மாமியாரும், மாமனாரும் மட்டுமே.
அதன் பிறகே, அவளிடமிருந்து வந்தது குறுஞ்செய்தி.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுத்த எண்ணிற்கு இன்று தான் முதன் முதலாக மெசேஜ் செய்திருக்கிறாள், அவனின் மனைவி.
மதிய உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்றவன்....
“எப்போ வரேனு சொல்லு..... நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”, என மெசேஜ் செய்துவிட்டு...... நீண்ட நேரம்.... போனை பார்த்துக் கொண்டிருந்தவன்..... அவளிடமிருந்து ரிப்ளை வராததால்.....
“நீ தனியா வந்திருவனு தெரியும்..... இருந்தாலும் இனி அப்டிவிடறதா உத்தேசமில்லை”, என அனுப்பினான்.