ஹாய் இதோ வந்துட்டேன்!
ரொம்ப நாள் ஆச்சு என்கூட ஒரு பயணம் போய்,வாங்க இன்னைக்கு ஓர் அழகான கோவிலுக்குப் போகலாம் "வெக்காளியம்மன் கோவில்".
ஸ்தல வரலாறு என் கண் தோற்றம்:
"வெக்காளியம்மன்" இவளை நாங்கள் வேற்றுடைய காளியென்றும் அழைப்போம்,சோழர்கள் ஆண்ட நகரம்,மண் மாரி பொழிந்த நகரமான திருச்சிராப்பள்ளியில் உள்ள உறையூர் என்ற பகுதியின் எல்லையில் பெண் காவல் தெய்வமாக இருப்பவள் இந்த வெக்காளி தாய்.
உறையூர், சோழர்களின் ராஜயத்திற்கு உட்பட்ட காலத்தில் சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி "பத்தினி கோட்டம் " என்று கட்டி,அதில் பத்தினியான கண்ணகியை தினம் தோறும் வழி பட்டு வந்ததாகவும்,அதுவே நாள் அடைவில் வெக்காளியாக மருவியதாகவும் சொல்கின்றனர்.(சிலப்பதிகாரத்தில் இவை குறிப்பிட பட்டதாகச் செவி வழி ஒரு தீண்டல்).
சோழனின் தலை நகரமான உறையூரில் காவேரி நதிக்கரையின் தென் பகுதியில் உள்ளது அம்மனின் ஆலையம்,கணவன் ஒரு புறம்(திருஆனைக்காவல்) ,தமயன் ஒரு புறம்(ஸ்ரீரங்கம்) ஆச்சி செய்ய,தென் பகுதியில் தாயின் அரசாட்சி,இந்த கோவிலை சுற்றி நிறையக் கோவில்கள் உள்ளது,நாச்சியார் கோவில்,செல்லாயி அம்மன் கோவில்,காரயி அம்மன் கோவில்,குட்டி மலையில் ஒரு பிள்ளையார் கோவில் அதனுள் சோழர்கள் பயன் படுத்திய ஆய்தங்கள் உள்ளது (பலருக்கு தெரியாத ஒன்று).
இக்கோவிலின் வரலாறு என்று பார்த்தால் சாரமா என்னும் முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார்.
பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரை அலட்சியம் செய்தான்.
பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத்தாங்காமல், தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.
சிவன் சொத்துக் குல நாசம் என்பதற்கு ஏற்ப சிவனின் பார்வையில் அந்த இடமே மண் மாரி பொழிந்தது அணைத்து உயிர் இனங்களும் தங்களுது உயிரை விட,மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் போராடினர்,அடைக்கலம் தேடி அனைவரும் சென்று நின்ற இடம் வெக்காளி தாயின் கால் அடி,தன்னை நாடி வந்த பிள்ளைகளைத் தாங்கி நின்று சிவனிடம் முறையிட்டார்,அதன் பிறகே கோபம் தணிந்தது என்னப்பனுக்கு............ருத்திர மூர்த்தி அல்லவா அவர்......
அதன் பின் மக்கள் வீடு இல்லாமல் வெட்ட வெளியில் இருக்க,பிள்ளைகளைப் பின் பற்றித் தாயும் வெட்ட வெளியில் தான் இருந்தால்,என்று உங்களுக்கு வீடு கிடைக்கின்றதோ அன்று எனக்குக் கோபுரம் கட்ட வேண்டும் என்று வரலாறு கூறுகின்றது, இன்றும் வெக்காளி அம்மனுக்குக் கோபுரம் கிடையாது,இதுவே என் தாய்க்குத் தனிச் சிறப்பு,கடும் சித்திரை வெயிலில் என் தாய்க்கு வெட்டிவேர் கொண்டு பந்தல் அமைப்பர்,சித்திரை ஒன்றாம் தேதி தேர் ஏறும் திருவிழா நடக்கும் போது உக்கரமான தாயை குளிர்விக்கப் பால் குடம் எடுப்பது வழக்கம்..
சரிவாங்க இப்போ என் டைம்...........
வெள்ளி கிழமை மாலை ஆறு மணிக்கு அங்கே இருப்பேன்! என்னடா இவ கிழமை வரியா கோவிலுக்குப் போறான்னு சொல்ல கூடாது......................
உள்ள நுழைந்த உடன் உற்சவர் அம்பாளின் தரிசனம் அவரை அடுத்து தான் பிள்ளையார்,முருகன்,என் அப்பன் சிவன்,மதுரை வீரன்,மீண்டும் ஓர் உற்சவ அம்பாள்,அதன் பின் துர்க்கை,பொங்கு சனி,நடுவில் என் தாயின் இருப்பிடம்.
இந்த அம்பாளை பார்த்த எனக்குத் தோன்றியது இது தான்,பழுத்த சுமங்கலின்னு சொல்லுவாங்களா அது மாதிரி ஒரு வயசான அம்மா கம்பிரம இருந்த எப்புடி இருக்கும், சந்தன காப்பு இல்லாம பார்த்த கோபமா இருக்குற மாதிரியும்,சந்தன காப்போட பார்த்த சாந்தமா இருக்குற மாதிரியும் தெரியும்.
அப்பா.............அப்டி ஓர் அழகுங்க குண்டு கன்னம் இரண்டு மூக்கிலும் டால் அடிக்கும் மூக்குத்தி அதுவும் அந்த மஞ்சள் நூல் புடவையில் பார்த்தால் எனக்கு இந்தப் பெரிய கண்ணு போதாது இன்னும் இரண்டு கண்ணு எக்ஸ்ட்ரா வேண்டும்,தாழம்பூ குங்கும வசன என்ன சுண்டி இழுக்கும்,சுத்தி சுத்தி வந்து பார்ப்பேன்.........
(ஒரு மஞ்ச சீட்டுல வேண்டுதலை எழுதி சூலத்துல கட்டுன,அது அப்புடியே நடக்கும் சொல்லுவாங்க...........)
இது தா அது தானு வேண்டுறது எல்லாம் மறந்து போய்டும் அப்புடியே பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கும்,சுத்தி வந்தா நவக்கிரகம், இன்னும் ஒரு சுத்து சுத்தி வந்து அவளைப் பார்த்துட்டு வீட்டுக்கு போவேன்............
ரொம்ப நாள் ஆச்சு என்கூட ஒரு பயணம் போய்,வாங்க இன்னைக்கு ஓர் அழகான கோவிலுக்குப் போகலாம் "வெக்காளியம்மன் கோவில்".
ஸ்தல வரலாறு என் கண் தோற்றம்:
"வெக்காளியம்மன்" இவளை நாங்கள் வேற்றுடைய காளியென்றும் அழைப்போம்,சோழர்கள் ஆண்ட நகரம்,மண் மாரி பொழிந்த நகரமான திருச்சிராப்பள்ளியில் உள்ள உறையூர் என்ற பகுதியின் எல்லையில் பெண் காவல் தெய்வமாக இருப்பவள் இந்த வெக்காளி தாய்.
உறையூர், சோழர்களின் ராஜயத்திற்கு உட்பட்ட காலத்தில் சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி "பத்தினி கோட்டம் " என்று கட்டி,அதில் பத்தினியான கண்ணகியை தினம் தோறும் வழி பட்டு வந்ததாகவும்,அதுவே நாள் அடைவில் வெக்காளியாக மருவியதாகவும் சொல்கின்றனர்.(சிலப்பதிகாரத்தில் இவை குறிப்பிட பட்டதாகச் செவி வழி ஒரு தீண்டல்).
சோழனின் தலை நகரமான உறையூரில் காவேரி நதிக்கரையின் தென் பகுதியில் உள்ளது அம்மனின் ஆலையம்,கணவன் ஒரு புறம்(திருஆனைக்காவல்) ,தமயன் ஒரு புறம்(ஸ்ரீரங்கம்) ஆச்சி செய்ய,தென் பகுதியில் தாயின் அரசாட்சி,இந்த கோவிலை சுற்றி நிறையக் கோவில்கள் உள்ளது,நாச்சியார் கோவில்,செல்லாயி அம்மன் கோவில்,காரயி அம்மன் கோவில்,குட்டி மலையில் ஒரு பிள்ளையார் கோவில் அதனுள் சோழர்கள் பயன் படுத்திய ஆய்தங்கள் உள்ளது (பலருக்கு தெரியாத ஒன்று).
இக்கோவிலின் வரலாறு என்று பார்த்தால் சாரமா என்னும் முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார்.
பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரை அலட்சியம் செய்தான்.
பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத்தாங்காமல், தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.
சிவன் சொத்துக் குல நாசம் என்பதற்கு ஏற்ப சிவனின் பார்வையில் அந்த இடமே மண் மாரி பொழிந்தது அணைத்து உயிர் இனங்களும் தங்களுது உயிரை விட,மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் போராடினர்,அடைக்கலம் தேடி அனைவரும் சென்று நின்ற இடம் வெக்காளி தாயின் கால் அடி,தன்னை நாடி வந்த பிள்ளைகளைத் தாங்கி நின்று சிவனிடம் முறையிட்டார்,அதன் பிறகே கோபம் தணிந்தது என்னப்பனுக்கு............ருத்திர மூர்த்தி அல்லவா அவர்......
அதன் பின் மக்கள் வீடு இல்லாமல் வெட்ட வெளியில் இருக்க,பிள்ளைகளைப் பின் பற்றித் தாயும் வெட்ட வெளியில் தான் இருந்தால்,என்று உங்களுக்கு வீடு கிடைக்கின்றதோ அன்று எனக்குக் கோபுரம் கட்ட வேண்டும் என்று வரலாறு கூறுகின்றது, இன்றும் வெக்காளி அம்மனுக்குக் கோபுரம் கிடையாது,இதுவே என் தாய்க்குத் தனிச் சிறப்பு,கடும் சித்திரை வெயிலில் என் தாய்க்கு வெட்டிவேர் கொண்டு பந்தல் அமைப்பர்,சித்திரை ஒன்றாம் தேதி தேர் ஏறும் திருவிழா நடக்கும் போது உக்கரமான தாயை குளிர்விக்கப் பால் குடம் எடுப்பது வழக்கம்..
சரிவாங்க இப்போ என் டைம்...........
வெள்ளி கிழமை மாலை ஆறு மணிக்கு அங்கே இருப்பேன்! என்னடா இவ கிழமை வரியா கோவிலுக்குப் போறான்னு சொல்ல கூடாது......................
உள்ள நுழைந்த உடன் உற்சவர் அம்பாளின் தரிசனம் அவரை அடுத்து தான் பிள்ளையார்,முருகன்,என் அப்பன் சிவன்,மதுரை வீரன்,மீண்டும் ஓர் உற்சவ அம்பாள்,அதன் பின் துர்க்கை,பொங்கு சனி,நடுவில் என் தாயின் இருப்பிடம்.
இந்த அம்பாளை பார்த்த எனக்குத் தோன்றியது இது தான்,பழுத்த சுமங்கலின்னு சொல்லுவாங்களா அது மாதிரி ஒரு வயசான அம்மா கம்பிரம இருந்த எப்புடி இருக்கும், சந்தன காப்பு இல்லாம பார்த்த கோபமா இருக்குற மாதிரியும்,சந்தன காப்போட பார்த்த சாந்தமா இருக்குற மாதிரியும் தெரியும்.
அப்பா.............அப்டி ஓர் அழகுங்க குண்டு கன்னம் இரண்டு மூக்கிலும் டால் அடிக்கும் மூக்குத்தி அதுவும் அந்த மஞ்சள் நூல் புடவையில் பார்த்தால் எனக்கு இந்தப் பெரிய கண்ணு போதாது இன்னும் இரண்டு கண்ணு எக்ஸ்ட்ரா வேண்டும்,தாழம்பூ குங்கும வசன என்ன சுண்டி இழுக்கும்,சுத்தி சுத்தி வந்து பார்ப்பேன்.........
(ஒரு மஞ்ச சீட்டுல வேண்டுதலை எழுதி சூலத்துல கட்டுன,அது அப்புடியே நடக்கும் சொல்லுவாங்க...........)
இது தா அது தானு வேண்டுறது எல்லாம் மறந்து போய்டும் அப்புடியே பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கும்,சுத்தி வந்தா நவக்கிரகம், இன்னும் ஒரு சுத்து சுத்தி வந்து அவளைப் பார்த்துட்டு வீட்டுக்கு போவேன்............