பார்வை - 2
"என்ன மாப்புள எப்படி இருக்க?"
"பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?"
"ஐயா பிரபா என்னய்யா ஆளே இப்படி இளைச்சுப் போயிட்ட?"
இப்படி ஆள் மாற்றி ஆள் கேட்ட எந்தக் கேள்விக்குமே பிரபாவிடமிருந்து பதில் வரவில்லை. வீட்டைப் பார்த்த அதிர்விலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. தாயார், மூன்று தமக்கைகள், அவர்களின் கணவன்மார்கள் அந்த இடமே சொந்த பந்தங்களால் சூழப்பட்டிருந்தாலும் பிரபாவால் எப்பொழுதும் போல அவர்களோடு ஒன்ற முடியவில்லை.
சுற்றி வர நிறைய இடம் விட்டுப் பல வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நடுவில் வீடு இருக்க வேண்டும் என்பதே பிரபா மற்றும் அவன் அப்பத்தாவின் விருப்பமாகும். அதற்காகத்தான் வாங்கும் பொழுதே இரண்டு கிரவுண்ட் வருமளவுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுரடியில் இடம் வாங்கிப் போட்டான்.
கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் இதற்காகவே இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கியிருந்தான் பிரபா. மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி என்று அவன் வளர்க்கத் திட்டமிட்டிருந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே அது வீடாக இருக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான்.
மூன்று தமக்கைகளும் வரப் போக சற்றுப் பெரிய வீடாகவே ஒரு கிரவுண்டில் கட்டினாலும் எஞ்சியிருக்கும் இடம் தாராளமாக செடிகளுக்கும், மரங்களுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் போதும் என்றே நினைத்திருந்தான் பிரபா. ஆனால் இங்கு நடந்திருப்பதோ வேறாக இருந்தது.
அவனை வரவேற்றது ஒன்றல்ல மொத்தமாக நான்கு வீடுகள். பகுதிக்கு இரண்டாக இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வீடுகள் கார் பார்க்கிங் மற்றும் சகல வசதிகளோடு. நிலம் வாங்கிய புதிதில் சுற்றி ஃபென்சிங் போட்டுப் பாதுகாத்துத், தானும் அப்பத்தாவும் பார்த்துப் பார்த்து வைத்த மர வகைகளில் கால்பகுதி மட்டுமே மிஞ்சியிருந்தது.
"புண்ணியவான் வீட்டு வாசல்ல புங்க மரம் இருக்கணுமப்பு" என்று சொல்லியபடி அப்பத்தா வாசற்புரத்தில் நட்டு வைத்த நான்கு புங்கக்கன்றுகள் மட்டுமே ஆளுயர மரமாக வளர்ந்திருந்தன. இது தப்பியதற்குக் காரணம் தன் தாயார் சுந்தரவடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் பிரபா.
இப்படித் தன் நினைவுகளுடன் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரபாவை, "ஷாக்கைக் குறை, ஷாக்கை குறை இல்ல அதுக்கு வேற உன் மாமனுங்கத் தனி ஆவர்த்தனம் வாசிப்பானுங்க" என்று காதோரம் ஒலித்த பாண்டியின் கிசுகிசுப்பான குரல் நிஜத்திற்கு மீட்டு வந்தது.
"என்ன மாப்ளே அப்படியே அசந்து போய் நின்னுட்ட? என்னடா நாம ஒரு வீடு கட்டத்தானே காசு கொடுத்தோம், எப்படி மாமா நாலு வீடு கட்டியிருக்காங்கன்னு பார்க்குறியா?
உனக்கும் நல்லது கெட்டது சொல்ல எங்களை விட்டா யாரு இருக்கா மாப்ளே? அதான் நாங்க சகலைங்க மூணு பேருமா சேர்ந்து பேசி உனக்கும் அத்தைக்கும் ஒத்தாசையா இங்கனக்குள்ளவே இருந்துக்கலாமுன்னு முடிவு பண்ணோம்.
உங்கக்காங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கிருந்தாலும் உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது பாரு. அதான் நாங்களாவே பணம் பொரட்டிக் கட்டிக்கிட்டோம்" என்று ரொம்பவும் பெருந்தன்மையாகக் கூறினார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர்.
"நீ கொடுத்தக் காசுக்கெல்லாம் வரவு செலவுக் கணக்கு வழக்குப் பக்காவா வச்சிருக்கேன் பிரபா. நீ எப்பக் கேட்டாலும் உடனே கொடுத்திடுவேன்" என்று கேட்டால்தான் வரவு செலவு கணக்கு கைக்கு வரும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.
"அடடா இப்ப எதுக்குத் தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? பிரபா முதல்ல குளிச்சு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரவைக்கு எங்க வீட்டுலதானே எல்லாருக்கும் சாப்பாடு. அப்பப் பேசிக்கலாம்" என்று எதுவுமே நடக்காதது போல் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்லியது மூன்றாவது அக்கா சொர்ணத்தின் கணவர்.
இப்பொழுது எந்த வீட்டிற்குள் தான் செல்வது என்பதே புரியாமல் திகைத்து நின்ற பிரபாவை, "எஞ்சாமி, உப்புக் காத்து பட்டுப்பட்டு இப்படிக் கறுத்துப் போயிட்டியே ராசா" என்று சொல்லியவாறே பிரபாவின் கைப்பிடித்து அவனைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவடிவு.
"ஹ்ம்க்கும்... இல்லாட்டி மட்டும் உன் புள்ள அப்படியே அரவிந்த்சாமி கலரு" என்று கூறிக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் பாண்டி.
"நீ சொன்னாலும் சொல்லலையின்னாலும் என் மகன் ஆளும் சரி அவன் மனசும் சரி எப்போதுமே வெள்ளை தான்டா பாண்டி" என்று அவனுக்குப் பதிலளித்தார் சுந்தரவடிவு.
"நீ என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு சித்தி. உன் மருமகனுங்களைக் கண்டுட்டா மட்டும் அப்படியே வாயை ஜிப்புப் போட்டு மூடிறு."
"என்னடா பண்ணச் சொல்ற? பொட்டப் புள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கோமே" எனறு பெருமூச்சோடு கூறினார் சுந்தரவடிவு.
"இதைச் சொல்லிச் சொல்லியே எங்க வாயை அடைச்சிறு. நீயே கேளுடா பிரபா, இந்த வீட்டு விஷயத்துல இவைங்க அடிச்சக் கூத்து அஸ்திவாரம் போட்டதுக்குப் பொறவு தான் எங்களுக்கே தெரிஞ்சுது.
அப்பயாவது உன்கிட்ட உடனே சொல்லி இதை அப்பவே தடுத்து நிறுத்தலாமுன்னு சொன்னா இந்த சித்தி விடவே இல்ல. பத்தாததுக்கு என்னையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிடுச்சு" பல நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் பாண்டி.
"என் ராசா பல ஆயிரம் மைல் கடந்து எந்தக் கப்பல்ல எந்தக் கடல்ல நிக்கிறானோ? அவன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாமுன்னு நாந்தான்யா சொன்னேன். அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இதை உன்னால தடுத்து நிறுத்த முடியாதுன்னு தான்யா சொல்லலை. அக்காங்களுக்காகவாவது பார்க்கணுமில்ல ராசா" என்றார் சுந்தரவடிவு.
"ஒத்த கண்ணுல வெண்ணையும் மத்த கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற சித்தி நீ" என்று பட்டென்று கூறிவிட்டான் பாண்டி.
அதைக் கேட்ட மாத்திரத்தில் சுந்தரவடிவின் கண்களில் இருந்து கண்ணீர் கரையுடைக்கத் தொடங்கியது. “என்னடா பாண்டி நீயும் இவுக அப்பாத்தாளை மாதிரியே பேசுற? சரி நான் நல்ல அம்மாவா இல்லாமலேயே இருந்துட்டுப் போறேன். உனக்கென்டு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைச்சுப்புட்டா அவ வந்து என் மவனை நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேனே.
அதுவுமில்ல தள்ளிக்கிட்டே போகுது. உஞ்சோட்டுப் பசங்க எல்லாம் பொண்டாட்டி, புள்ள, குட்டின்னு இருக்கும் போது எஞ்சாமி மட்டும் இப்படி ஒத்தையில் நிக்கிறானே" என்று சுந்தரவடிவு அழத் தொடங்கிவிட்டார்.
"ம்மா ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுற்? உன்ன விட நல்ல அம்மா இந்த உலகத்துலேயே கிடையாதும்மா. நீ எம்புட்டு கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கினன்னு எனக்குத் தெரியாதாம்மா? நம்ம அக்காங்களுக்கு செய்றது என் கடமைம்மா. இதுக்கெல்லாம் நீ போட்டு மனசைக் குழப்பிக்காதே. இவன் கிடக்கான் கிறுக்குப் பய" என்று பாண்டியை முறைத்தவாறேத் தன் தாயை அணைத்துக் கொண்டு கூறினான் பிரபா.
"இங்காரு பிரபா, இந்தாட்டி என்ன ஆனாலுஞ்சரி பரிசம் போட்ட பிறவுதான் நீ கப்பலுக்குப் போற. அடுத்த ட்ரிப்பு வரும் போது கல்யாணத்தை முடிக்கிறோம். வயசும் முப்பதாகப் போவுதில்ல ராசா.
இந்தக் கப்பல் வேலைதானே இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் புடிக்குதில்ல. போனதாட்டி வந்தப்ப சொன்னியே அந்த கனடா நாட்டு வேலை, பேசாம அதுல சேர்ந்துடுய்யா" என்று முடிவாகக் கூறினார் சுந்தரவடிவு.
"ம்மா என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு அப்படியெல்லாம் போக முடியாதும்மா. பொறுத்தது பொறுத்துட்ட. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் மட்டும் பொறுத்துக்க. நான் கொஞ்சம் காசு ரெடி பண்ணிட்டு இந்த வேலையவே விட்டுடறேன். நிலம் வாங்கி நாம பழையபடி விவசாயம் பண்ணலாம்மா. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா" என்றான் பிரபா.
"யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். கப்பலு என்ஜினியரென்டு சொன்னாலே எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறான். இதுல விவசாயம் பார்க்கிறான்னு சொன்னோமென்டு வையி, சாதகத்தைக் கூட குடுக்க மாட்டாய்ங்க" சுந்தரவடிவு அங்கலாய்த்துக் கொள்ளவும் "தம்பி" என்று அழைத்தவாறே மூன்று அக்காமார்களும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
"இந்தா வந்தாச்சுல்ல முப்பெரும் தேவியர்களும்" என்றவாறே அவர்களை வரவேற்றான் பாண்டி.
"ஐயா பிரபா, அஸ்திவாரம் எல்லாம் போட்டப்புறம் அம்மாவுக்கு எப்ப விஷயம் தெரியுமோ அப்பத்தான்யா எங்களுக்கும் சொன்னாவ. இந்த ஒரு தாட்டி இந்தப் பாவிச் சிறுக்கியளை மன்னிச்சிறு சாமி" என்றார் மூத்த அக்கா தங்கம்.
"எக்கா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றவ? உங்களுக்குச் செய்யாம நான் யாருக்குக்கா செய்யப் போறேன்? இதுவும் என் கடமை தானேக்கா"
"இன்னொரு சென்மம் சேர்ந்து பொறப்போமா தெரியாது. ஆனா எங்களைப் பாரமா நினைக்காம பாசமா நினைக்குற பாரு, அதுக்காகவே இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் உன் கூடவே பொறக்கணும்டா தம்பி" கண்ணீருடன் கூறினார் இரண்டாவது அக்கா தனம்.
மூவரில் சற்றுக் கஷ்ட ஜீவனம் இவருக்குத்தான். கணவருக்கு எதாவது கட்டிட வேலை கான்டிராக்ட் கிடைக்கும் நாட்களில் சமாளித்து விடுவார். அது கிடைக்காத பொழுதோ வீட்டுச் செலவு, வாடகை, பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் என்று மிகவும் திணறிப் போய் விடுவார். அந்த சமயங்களில் அவருக்குக் கைகொடுத்து உதவுவது சுந்தர வடிவுதான்.
"என்ன மாப்புள எப்படி இருக்க?"
"பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?"
"ஐயா பிரபா என்னய்யா ஆளே இப்படி இளைச்சுப் போயிட்ட?"
இப்படி ஆள் மாற்றி ஆள் கேட்ட எந்தக் கேள்விக்குமே பிரபாவிடமிருந்து பதில் வரவில்லை. வீட்டைப் பார்த்த அதிர்விலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. தாயார், மூன்று தமக்கைகள், அவர்களின் கணவன்மார்கள் அந்த இடமே சொந்த பந்தங்களால் சூழப்பட்டிருந்தாலும் பிரபாவால் எப்பொழுதும் போல அவர்களோடு ஒன்ற முடியவில்லை.
சுற்றி வர நிறைய இடம் விட்டுப் பல வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நடுவில் வீடு இருக்க வேண்டும் என்பதே பிரபா மற்றும் அவன் அப்பத்தாவின் விருப்பமாகும். அதற்காகத்தான் வாங்கும் பொழுதே இரண்டு கிரவுண்ட் வருமளவுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுரடியில் இடம் வாங்கிப் போட்டான்.
கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் இதற்காகவே இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கியிருந்தான் பிரபா. மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி என்று அவன் வளர்க்கத் திட்டமிட்டிருந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே அது வீடாக இருக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான்.
மூன்று தமக்கைகளும் வரப் போக சற்றுப் பெரிய வீடாகவே ஒரு கிரவுண்டில் கட்டினாலும் எஞ்சியிருக்கும் இடம் தாராளமாக செடிகளுக்கும், மரங்களுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் போதும் என்றே நினைத்திருந்தான் பிரபா. ஆனால் இங்கு நடந்திருப்பதோ வேறாக இருந்தது.
அவனை வரவேற்றது ஒன்றல்ல மொத்தமாக நான்கு வீடுகள். பகுதிக்கு இரண்டாக இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வீடுகள் கார் பார்க்கிங் மற்றும் சகல வசதிகளோடு. நிலம் வாங்கிய புதிதில் சுற்றி ஃபென்சிங் போட்டுப் பாதுகாத்துத், தானும் அப்பத்தாவும் பார்த்துப் பார்த்து வைத்த மர வகைகளில் கால்பகுதி மட்டுமே மிஞ்சியிருந்தது.
"புண்ணியவான் வீட்டு வாசல்ல புங்க மரம் இருக்கணுமப்பு" என்று சொல்லியபடி அப்பத்தா வாசற்புரத்தில் நட்டு வைத்த நான்கு புங்கக்கன்றுகள் மட்டுமே ஆளுயர மரமாக வளர்ந்திருந்தன. இது தப்பியதற்குக் காரணம் தன் தாயார் சுந்தரவடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் பிரபா.
இப்படித் தன் நினைவுகளுடன் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரபாவை, "ஷாக்கைக் குறை, ஷாக்கை குறை இல்ல அதுக்கு வேற உன் மாமனுங்கத் தனி ஆவர்த்தனம் வாசிப்பானுங்க" என்று காதோரம் ஒலித்த பாண்டியின் கிசுகிசுப்பான குரல் நிஜத்திற்கு மீட்டு வந்தது.
"என்ன மாப்ளே அப்படியே அசந்து போய் நின்னுட்ட? என்னடா நாம ஒரு வீடு கட்டத்தானே காசு கொடுத்தோம், எப்படி மாமா நாலு வீடு கட்டியிருக்காங்கன்னு பார்க்குறியா?
உனக்கும் நல்லது கெட்டது சொல்ல எங்களை விட்டா யாரு இருக்கா மாப்ளே? அதான் நாங்க சகலைங்க மூணு பேருமா சேர்ந்து பேசி உனக்கும் அத்தைக்கும் ஒத்தாசையா இங்கனக்குள்ளவே இருந்துக்கலாமுன்னு முடிவு பண்ணோம்.
உங்கக்காங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கிருந்தாலும் உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது பாரு. அதான் நாங்களாவே பணம் பொரட்டிக் கட்டிக்கிட்டோம்" என்று ரொம்பவும் பெருந்தன்மையாகக் கூறினார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர்.
"நீ கொடுத்தக் காசுக்கெல்லாம் வரவு செலவுக் கணக்கு வழக்குப் பக்காவா வச்சிருக்கேன் பிரபா. நீ எப்பக் கேட்டாலும் உடனே கொடுத்திடுவேன்" என்று கேட்டால்தான் வரவு செலவு கணக்கு கைக்கு வரும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.
"அடடா இப்ப எதுக்குத் தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? பிரபா முதல்ல குளிச்சு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரவைக்கு எங்க வீட்டுலதானே எல்லாருக்கும் சாப்பாடு. அப்பப் பேசிக்கலாம்" என்று எதுவுமே நடக்காதது போல் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்லியது மூன்றாவது அக்கா சொர்ணத்தின் கணவர்.
இப்பொழுது எந்த வீட்டிற்குள் தான் செல்வது என்பதே புரியாமல் திகைத்து நின்ற பிரபாவை, "எஞ்சாமி, உப்புக் காத்து பட்டுப்பட்டு இப்படிக் கறுத்துப் போயிட்டியே ராசா" என்று சொல்லியவாறே பிரபாவின் கைப்பிடித்து அவனைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவடிவு.
"ஹ்ம்க்கும்... இல்லாட்டி மட்டும் உன் புள்ள அப்படியே அரவிந்த்சாமி கலரு" என்று கூறிக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் பாண்டி.
"நீ சொன்னாலும் சொல்லலையின்னாலும் என் மகன் ஆளும் சரி அவன் மனசும் சரி எப்போதுமே வெள்ளை தான்டா பாண்டி" என்று அவனுக்குப் பதிலளித்தார் சுந்தரவடிவு.
"நீ என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு சித்தி. உன் மருமகனுங்களைக் கண்டுட்டா மட்டும் அப்படியே வாயை ஜிப்புப் போட்டு மூடிறு."
"என்னடா பண்ணச் சொல்ற? பொட்டப் புள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கோமே" எனறு பெருமூச்சோடு கூறினார் சுந்தரவடிவு.
"இதைச் சொல்லிச் சொல்லியே எங்க வாயை அடைச்சிறு. நீயே கேளுடா பிரபா, இந்த வீட்டு விஷயத்துல இவைங்க அடிச்சக் கூத்து அஸ்திவாரம் போட்டதுக்குப் பொறவு தான் எங்களுக்கே தெரிஞ்சுது.
அப்பயாவது உன்கிட்ட உடனே சொல்லி இதை அப்பவே தடுத்து நிறுத்தலாமுன்னு சொன்னா இந்த சித்தி விடவே இல்ல. பத்தாததுக்கு என்னையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிடுச்சு" பல நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் பாண்டி.
"என் ராசா பல ஆயிரம் மைல் கடந்து எந்தக் கப்பல்ல எந்தக் கடல்ல நிக்கிறானோ? அவன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாமுன்னு நாந்தான்யா சொன்னேன். அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இதை உன்னால தடுத்து நிறுத்த முடியாதுன்னு தான்யா சொல்லலை. அக்காங்களுக்காகவாவது பார்க்கணுமில்ல ராசா" என்றார் சுந்தரவடிவு.
"ஒத்த கண்ணுல வெண்ணையும் மத்த கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற சித்தி நீ" என்று பட்டென்று கூறிவிட்டான் பாண்டி.
அதைக் கேட்ட மாத்திரத்தில் சுந்தரவடிவின் கண்களில் இருந்து கண்ணீர் கரையுடைக்கத் தொடங்கியது. “என்னடா பாண்டி நீயும் இவுக அப்பாத்தாளை மாதிரியே பேசுற? சரி நான் நல்ல அம்மாவா இல்லாமலேயே இருந்துட்டுப் போறேன். உனக்கென்டு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைச்சுப்புட்டா அவ வந்து என் மவனை நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேனே.
அதுவுமில்ல தள்ளிக்கிட்டே போகுது. உஞ்சோட்டுப் பசங்க எல்லாம் பொண்டாட்டி, புள்ள, குட்டின்னு இருக்கும் போது எஞ்சாமி மட்டும் இப்படி ஒத்தையில் நிக்கிறானே" என்று சுந்தரவடிவு அழத் தொடங்கிவிட்டார்.
"ம்மா ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுற்? உன்ன விட நல்ல அம்மா இந்த உலகத்துலேயே கிடையாதும்மா. நீ எம்புட்டு கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கினன்னு எனக்குத் தெரியாதாம்மா? நம்ம அக்காங்களுக்கு செய்றது என் கடமைம்மா. இதுக்கெல்லாம் நீ போட்டு மனசைக் குழப்பிக்காதே. இவன் கிடக்கான் கிறுக்குப் பய" என்று பாண்டியை முறைத்தவாறேத் தன் தாயை அணைத்துக் கொண்டு கூறினான் பிரபா.
"இங்காரு பிரபா, இந்தாட்டி என்ன ஆனாலுஞ்சரி பரிசம் போட்ட பிறவுதான் நீ கப்பலுக்குப் போற. அடுத்த ட்ரிப்பு வரும் போது கல்யாணத்தை முடிக்கிறோம். வயசும் முப்பதாகப் போவுதில்ல ராசா.
இந்தக் கப்பல் வேலைதானே இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் புடிக்குதில்ல. போனதாட்டி வந்தப்ப சொன்னியே அந்த கனடா நாட்டு வேலை, பேசாம அதுல சேர்ந்துடுய்யா" என்று முடிவாகக் கூறினார் சுந்தரவடிவு.
"ம்மா என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு அப்படியெல்லாம் போக முடியாதும்மா. பொறுத்தது பொறுத்துட்ட. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் மட்டும் பொறுத்துக்க. நான் கொஞ்சம் காசு ரெடி பண்ணிட்டு இந்த வேலையவே விட்டுடறேன். நிலம் வாங்கி நாம பழையபடி விவசாயம் பண்ணலாம்மா. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா" என்றான் பிரபா.
"யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். கப்பலு என்ஜினியரென்டு சொன்னாலே எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறான். இதுல விவசாயம் பார்க்கிறான்னு சொன்னோமென்டு வையி, சாதகத்தைக் கூட குடுக்க மாட்டாய்ங்க" சுந்தரவடிவு அங்கலாய்த்துக் கொள்ளவும் "தம்பி" என்று அழைத்தவாறே மூன்று அக்காமார்களும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
"இந்தா வந்தாச்சுல்ல முப்பெரும் தேவியர்களும்" என்றவாறே அவர்களை வரவேற்றான் பாண்டி.
"ஐயா பிரபா, அஸ்திவாரம் எல்லாம் போட்டப்புறம் அம்மாவுக்கு எப்ப விஷயம் தெரியுமோ அப்பத்தான்யா எங்களுக்கும் சொன்னாவ. இந்த ஒரு தாட்டி இந்தப் பாவிச் சிறுக்கியளை மன்னிச்சிறு சாமி" என்றார் மூத்த அக்கா தங்கம்.
"எக்கா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றவ? உங்களுக்குச் செய்யாம நான் யாருக்குக்கா செய்யப் போறேன்? இதுவும் என் கடமை தானேக்கா"
"இன்னொரு சென்மம் சேர்ந்து பொறப்போமா தெரியாது. ஆனா எங்களைப் பாரமா நினைக்காம பாசமா நினைக்குற பாரு, அதுக்காகவே இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் உன் கூடவே பொறக்கணும்டா தம்பி" கண்ணீருடன் கூறினார் இரண்டாவது அக்கா தனம்.
மூவரில் சற்றுக் கஷ்ட ஜீவனம் இவருக்குத்தான். கணவருக்கு எதாவது கட்டிட வேலை கான்டிராக்ட் கிடைக்கும் நாட்களில் சமாளித்து விடுவார். அது கிடைக்காத பொழுதோ வீட்டுச் செலவு, வாடகை, பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் என்று மிகவும் திணறிப் போய் விடுவார். அந்த சமயங்களில் அவருக்குக் கைகொடுத்து உதவுவது சுந்தர வடிவுதான்.
Last edited: