பார்வை - 8
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
பிள்ளை மொழிச் சொல்லை விட
ஒற்றைப் பனைக் கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன்... தொலைந்தேன்... என்று அவர்கள் காதலில் தொலைந்தே போயினர் பிரபாகரனும் மீனலோசினியும். நாட்கள் மிக இனிமையாக நகர இருவரும் அலைப்பேசியில் பேசியே தங்கள் காதல் பயிரை வளர்த்துக் கொண்டனர்.
பிரபா, மீனாவிடம் மட்டுமல்லாது குமரப்பன், லலிதா, முகில் என்று அனைவரிடமும் அவ்வப்பொழுது பேசி விடுவான். அதிலும் குறிப்பாகக் கோதையம்மாளிடம் நாள் தவறாது பேசிவிடுவான். தன்னுடையே அப்பத்தாளே மீண்டும் கிடைத்தது போல் அவ்வளவு சந்தோஷம் பிரபாகரனுக்கு. மீனாவே சில சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு நீண்டு கொண்டு இருந்தது அவர்களின் உரையாடலகள்.
"அம்மத்தா இன்னிக்கு சேவ கரெக்ட் டைமுக்கு கூவிருச்சுங்க்ளா" என்று மீனாவும்,
"எனக்கு கூவிருச்சு கண்ணு உனக்கு?" என்று கோதையும், இவ்வாறு இருவரும் அடிக்கடிக் கேட்டு ஹைபை கொடுத்துக் கொள்வார்கள்.
வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் மொட்டை மாடியே கதி என்று இருந்தான் பிரபாகரன். அவனுக்குத் தான் அங்கு வீட்டில் ஒழுங்காக சிக்னல் கிடைக்காதே. 'டவர் வைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா' என்று மூத்த மாமாவின் முணுமுணுப்பை வேறு அடிக்கடி கடக்க வேண்டியிருந்தது.
மூன்று மாப்பிள்ளைகளும் ஒருவாறு அவர்களது மனைவிகளால் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட்டு இருந்தார்கள் முதல் முறையாக. "இங்காருங்க என் தம்பி எங்க மூணு பேருக்காக இது வரைக்கும் எவ்வளவோ விசயத்தைப் பொறுத்துப் போயிருக்கான். பணத்தைப் பண்மென்டுப் பார்க்காம உங்களுக்காகத் தாராளமா செலவு பண்ணியிருக்கான்.
மொத மொறையா அவென் ஒரு விசயத்துல ஆர்வமா இருக்கான். அதை நல்லபடியா அவனுக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டியது கூடப் பொறந்தவுகளா எங்கக் கடமை, பொறுப்பு. எங்களோட புருஷனெங்குற முறையில உங்களுந்தேன் அந்தப் பொறுப்பு இருக்கு. அதால இந்த கண்ணாலத்தை எங்க அம்மாவுக்குத் துணையா முன்ன நின்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.
இதுல எதாவது உங்க மூணு பேரால சிக்கல் வந்ததா தெரிஞ்சுது, அப்புறம் நல்லாயிருக்காது பார்த்துக்கிடுங்க" என்று மூன்று தமக்கைகளும் தங்களது கணவன்மார்களுக்குத் தனித்தனியாக வேப்பிலை அடித்திருந்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது.
மாப்பிள்ளை மூவருக்குக் கூட இந்தத் திருமணத்தில் பெரிதாகக் குறை கூற ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொள்ளாச்சியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே அவர்களை வாயடைத்துப் போகச் செய்திருந்தது. அதனால் தற்சமயத்துக்கு தங்களது மனைவிகளின் பேச்சைக் கேட்டே நடப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பிரபா அளவுக்கு இல்லாவிடிலும் மீனாவும் அவ்வப்பொழுது பிரபாவின் தமக்கைகளிடமும் அவர்களின் கணவர்களிடம் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டுதான் இருந்தாள். பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் கூட சமயத்தில் நடந்தது. மீனாவுடைய பாசமான மற்றும் மரியாதையான பேச்சும் கூட இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் எனலாம்.
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக பெண் வீட்டினர் மதுரைக்கு வந்தார்கள். பிரபா எவ்வளவோ முயன்றும் மீனாவை வரவழைக்க முடியவில்லை. அதில் கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் பிரபாவுக்கு.
இந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்னும் ஒரு வாரத்தில் அவன் வேலைக்காக லண்டன் சென்றாக வேண்டும். அங்கிருந்து தான் இம்முறை அவனுடைய பணி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனாவை ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று அவன் கொண்ட பேராவலை சம்பிரதாயம் என்ற பெயரில் அடக்கி விட்டனர் இரு வீட்டாரும் இணைந்து.
கோதையம்மாள், குமரப்பன், லலிதா, முகில், இவர்களுடன் இணைந்து அவர்களின் மிகவும் நெருக்கமான உறவுகள் சில பேர் என்று ஒரு இருபது பேர் மதுரைக்கு வந்தார்கள். அனைவருக்குமே பிரபாவின் வீட்டையும் மனிதர்களையும் மிகவும் பிடித்திருந்தது.
அனைத்துமே யாருடைய தயவும் இல்லாமல் சுந்தரவடிவு மற்றும் பிரபாவின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி எனும் பொழுது அவர்களின் மகிழ்ச்சி இரு மடங்கானது. எந்தத் தயக்கமும் இன்றி அவர்களைத் தன்னுடைய உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார் சுந்தரவடிவு.
அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து கொங்கு நாட்டவருக்கு ஆச்சரியமே. "ஏனுங்க்கா மதுரைனாலே பரோட்டா தானுங்களே விசேசமே. அது உங்க கடையில இல்லீங்க்ளா?" ஆச்சரியமாகக் கேட்டார் உறவுமுறைப் பெண் ஒருவர்.
"அதெல்லாம் செய்யக் கூடாதென்டு எங்க அத்தை உத்தரவும்மா. அவுக இப்ப இல்லையென்டாலும் அவுக வார்த்தையை என்னால என்னிக்குமே மீற முடியாது தாயீ. சாப்பாட்டுக் கடை வைச்சிருக்கவுக தன் கடையில சாப்பிட வாரவுக வவுத்துக்கு ஒரு நாளுந் துரோகஞ் செய்யக் கூடாதென்டு அடிக்கடி சொல்லுவாக. அவுக யோசனைப்படி இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பமென்டு எல்லாமே வயித்துக்குக் கேடு விளைவிக்காத உணவு வகைதேன் நம்ம கடையில.
காலைலைக்கும் ரவைக்கும் மட்டுந்தானுங்களே. நம்ம கடையில ஃபேமசானதென்டா இட்லியும் மீன் குழம்புந்தேன்.
'சாப்புட வாரவுக வாய் வாழ்த்தலையென்டாலும் அவுக வவுறு கண்டிப்பா வாழ்த்துமென்டு' எங்க அத்த அடிக்கடி சொல்லுவாக. இதுல காசு வாரது குறைச்சதேன், ஆனாலும் இதுல கிடைக்குற மனத்திருப்தி... எங்களுக்கு அதுவே போதுமென்டு தோனிடுச்சும்மா" சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தார் சுந்தரவடிவு.
அந்த ஆத்மார்த்தமான புன்னகை எப்படிச் சாத்தியப்பட்டது என்பது அங்கிருந்த அனைவருக்குமே நன்கு புரிந்தது. அந்தப் புரிதல் நல்லதொரு அபிமானமாக வளரவும் செய்தது.
"ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பரோட்டோ போட்டுக்கிட்டு பரோட்டா மாஸ்டரா இருந்த என்னை இப்படித் தோசை மாஸ்டரா ஆக்கிட்டாங்கம்மா" சிரித்துக் கொண்டே புகார் படித்தார் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த நபர்.
"ம்க்கூம் அதுனாலதேன் எங்க மாஸ்டர் ஊத்துற தோசையெல்லாம் பரோட்டா சைசுலேயே வருது" என்று அவருக்குப் பதில் கொடுத்தான் பாண்டி. இவ்வாறுப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கப் போயினர். பெண் வீட்டினரும் திருப்தியுடன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிவிட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பினார்கள்.
குமரப்பனுக்குத் தன்னுடைய சொந்தக் காலில் உழைத்து முன்னேறித் தாயையும் தமக்கைகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும் மருமகனை நினைத்துப் பெருமையோ பெருமை. பிரபா தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் தெளிவாக அவரிடம் பேசியிருந்தான். அதிலும் அவருக்குப் பெருமைதான்.
கோதையம்மாளுக்கும் லலிதாவுக்கும் சுந்தரவடிவை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பெண்மணியை நம்பித் தாராளமாகத் தங்கள் பெண்ணைக் கொடுக்கலாம் என்று முடிவே செய்திருந்தார்கள்.
பூங்குளத்தில் கிளம்பியதிலிருந்து அனைத்தையும் தன் தமக்கைக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வேலையை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்தான் முகில். அவனுடைய பேச்சு முழுவதும் பிரபாவின் லண்டன் பயணத்தைப் பற்றியும், அங்கு சென்று அவன் ஏறப் போகும் கப்பல் பற்றியும் அது செல்லும் இடங்களைப் பற்றியுமே இருந்தது. அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியிருந்தான் பிரபா.
ஊருக்குத் திரும்பும் வழியில் கோதையம்மாளின் தம்பி முறை உறவுக்காரர் ஒருவர், "ஏனுங்க்கா நம்ம தகுதிக்கு ஏத்த எடம் போலத் தெரியலீங்களே" என்று ஒரு மாதிரியாக இழுக்க,
"எந்த விதத்துல தம்பி அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இப்போ நாம தோட்டம், தொறவு, காடு, கரை எல்லாங் கட்டி ஆளுறோமுன்னா இதெல்லாம் நமக்கு முன்னாடி இருந்தவங்க உருவாக்குனது தானே. அதை நாம பெருக்குற வேலையை மட்டும் தானே செய்யிறோம்.
பிரபா தங்கம் அப்படிக் கிடையாது. இப்ப வந்திருக்குற வளர்ச்சி அவங்க சொந்த உழைப்பு, முயற்சி. அதோட நல்ல குணத்துக்கும், உழைப்புக்கும் இன்னும் பெரிய எடத்துக்குப் போவோணும் அந்தத் தம்பி.
காசு என்ன கண்ணு பெரிய காசு. நம்ம கிட்ட இல்லாததா? மனுசனுக்குத் தேவை குணமும், உழைக்கோணுங்குற வேகமும் தான். இது ரெண்டுமே பிரபா தம்பிக்கிட்ட நெம்ப இருக்குது.
அதுவுமில்லாம நம்ம மீனாளுக்கும் பிரபா தம்பியை நெம்பப் பிடிச்சிருக்குது. இதை விட வேற என்ன கண்ணு வோணும்?" என்று ஒரே போடாகப் போட்டு அடக்கிவிட்டிருந்தார் கோதை.
********************
பிரபா மறுநாள் சென்னையிலிருந்து லண்டனுக்கு விமானம் மூலமாகச் செல்வதாக ஏற்பாடு. அதனால் வழக்கம் போல் தன்னுடைய பிரயாணத்துக்குத் தேவையானவற்றைப் பேக் செய்யும் வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான். இரண்டு நாட்களாகவே வேலை அதிகம். மீனாவிடம் எப்பொழுதும் போல் உரையாட முடியவில்லை. இன்று இரவு கண்டிப்பாக அழைப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்காகக் கொஞ்சம் விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதடா வேலை முடியும் என்று காத்திருந்துவிட்டு வேலைகளை முடித்தக் கையோடு அலைப்பேசியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான் பிரபா. அம்மா, அக்கா, பாண்டி யாருடைய கேலியும் அவனைச் சென்றடையவே இல்லை.
எப்பொழுதும் பிரபா அழைக்கும் பொழுது 'மாமா' என்று உற்சாகமாகப் பதில் வரும் இடத்தில் இன்று வெறும் 'ம்ம்ம்' மட்டுமே வந்தது.
"ஓய் சொக்குப்பொடி, ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தியாடா? எல்லா வேலையும் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா. இனி நாளைக்கு பூரா ஃப்ரீதான். உன்கிட்ட பேசுறது மட்டுந்தேன் நாளைக்கு என் வேலை. சரியாடா மினிக்குட்டி. இப்ப கோவம் போயிடுச்சா என் மினிக்குட்டிக்கு? மாமாகிட்ட பேசலாமே" என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பிரபா.
பிரபா இவ்வளவு பேசியதற்கும் பதிலாக வெறும் "ம்ம்ம்" மட்டும் தான் பதிலாக வந்ததுப் பெண்ணிடமிருந்து.
"என்னடா"
"ம்ம்ம்"
"எதாவது பேசுடா. என்னாச்சு என் சொக்குப்பொடிக்கு?"
"ம்ம்ம்"
"மாமா எதாவது உனக்குப் புடிக்காததை செஞ்சுட்டேனா? மாமா மேல கோவமா இருக்கியா?"
இப்பொழுது 'ம்ம்ம்' மாறி "ம்ஹூம்" வந்தது. ஏதோ ஒன்று சரியில்லாததுப் போல் தோன்ற, "மினிக்குட்டி அழறியாடா?" என்றுப் பதறிப் போனவனாக வினவினான் பிரபா. இந்தக் கேள்விக்குப் பதிலாக மௌனமே வந்தது பெண்ணிடமிருந்து.
"எதாவது சொல்லுடா. இப்படிப் பேசாமயே இருந்தா நான் என்ன நினைக்கிறது? நீ எதாவது சொன்னா தானே மாமாவுக்குத் தெரியும். பேசுடா" என்ற கெஞ்சலுக்குப் பிறகே மௌனம் துறந்தாள் மீனலோசினி.
"நீங்க எதுக்கு மாமா இப்ப வேலைக்குப் போறீங்க? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கலாமில்லிங்க்?" குரல் ஏகத்துக்கு பிசிறடித்தது.
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
பிள்ளை மொழிச் சொல்லை விட
ஒற்றைப் பனைக் கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன்... தொலைந்தேன்... என்று அவர்கள் காதலில் தொலைந்தே போயினர் பிரபாகரனும் மீனலோசினியும். நாட்கள் மிக இனிமையாக நகர இருவரும் அலைப்பேசியில் பேசியே தங்கள் காதல் பயிரை வளர்த்துக் கொண்டனர்.
பிரபா, மீனாவிடம் மட்டுமல்லாது குமரப்பன், லலிதா, முகில் என்று அனைவரிடமும் அவ்வப்பொழுது பேசி விடுவான். அதிலும் குறிப்பாகக் கோதையம்மாளிடம் நாள் தவறாது பேசிவிடுவான். தன்னுடையே அப்பத்தாளே மீண்டும் கிடைத்தது போல் அவ்வளவு சந்தோஷம் பிரபாகரனுக்கு. மீனாவே சில சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு நீண்டு கொண்டு இருந்தது அவர்களின் உரையாடலகள்.
"அம்மத்தா இன்னிக்கு சேவ கரெக்ட் டைமுக்கு கூவிருச்சுங்க்ளா" என்று மீனாவும்,
"எனக்கு கூவிருச்சு கண்ணு உனக்கு?" என்று கோதையும், இவ்வாறு இருவரும் அடிக்கடிக் கேட்டு ஹைபை கொடுத்துக் கொள்வார்கள்.
வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் மொட்டை மாடியே கதி என்று இருந்தான் பிரபாகரன். அவனுக்குத் தான் அங்கு வீட்டில் ஒழுங்காக சிக்னல் கிடைக்காதே. 'டவர் வைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா' என்று மூத்த மாமாவின் முணுமுணுப்பை வேறு அடிக்கடி கடக்க வேண்டியிருந்தது.
மூன்று மாப்பிள்ளைகளும் ஒருவாறு அவர்களது மனைவிகளால் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட்டு இருந்தார்கள் முதல் முறையாக. "இங்காருங்க என் தம்பி எங்க மூணு பேருக்காக இது வரைக்கும் எவ்வளவோ விசயத்தைப் பொறுத்துப் போயிருக்கான். பணத்தைப் பண்மென்டுப் பார்க்காம உங்களுக்காகத் தாராளமா செலவு பண்ணியிருக்கான்.
மொத மொறையா அவென் ஒரு விசயத்துல ஆர்வமா இருக்கான். அதை நல்லபடியா அவனுக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டியது கூடப் பொறந்தவுகளா எங்கக் கடமை, பொறுப்பு. எங்களோட புருஷனெங்குற முறையில உங்களுந்தேன் அந்தப் பொறுப்பு இருக்கு. அதால இந்த கண்ணாலத்தை எங்க அம்மாவுக்குத் துணையா முன்ன நின்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.
இதுல எதாவது உங்க மூணு பேரால சிக்கல் வந்ததா தெரிஞ்சுது, அப்புறம் நல்லாயிருக்காது பார்த்துக்கிடுங்க" என்று மூன்று தமக்கைகளும் தங்களது கணவன்மார்களுக்குத் தனித்தனியாக வேப்பிலை அடித்திருந்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது.
மாப்பிள்ளை மூவருக்குக் கூட இந்தத் திருமணத்தில் பெரிதாகக் குறை கூற ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொள்ளாச்சியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே அவர்களை வாயடைத்துப் போகச் செய்திருந்தது. அதனால் தற்சமயத்துக்கு தங்களது மனைவிகளின் பேச்சைக் கேட்டே நடப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பிரபா அளவுக்கு இல்லாவிடிலும் மீனாவும் அவ்வப்பொழுது பிரபாவின் தமக்கைகளிடமும் அவர்களின் கணவர்களிடம் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டுதான் இருந்தாள். பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் கூட சமயத்தில் நடந்தது. மீனாவுடைய பாசமான மற்றும் மரியாதையான பேச்சும் கூட இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் எனலாம்.
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக பெண் வீட்டினர் மதுரைக்கு வந்தார்கள். பிரபா எவ்வளவோ முயன்றும் மீனாவை வரவழைக்க முடியவில்லை. அதில் கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் பிரபாவுக்கு.
இந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்னும் ஒரு வாரத்தில் அவன் வேலைக்காக லண்டன் சென்றாக வேண்டும். அங்கிருந்து தான் இம்முறை அவனுடைய பணி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனாவை ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று அவன் கொண்ட பேராவலை சம்பிரதாயம் என்ற பெயரில் அடக்கி விட்டனர் இரு வீட்டாரும் இணைந்து.
கோதையம்மாள், குமரப்பன், லலிதா, முகில், இவர்களுடன் இணைந்து அவர்களின் மிகவும் நெருக்கமான உறவுகள் சில பேர் என்று ஒரு இருபது பேர் மதுரைக்கு வந்தார்கள். அனைவருக்குமே பிரபாவின் வீட்டையும் மனிதர்களையும் மிகவும் பிடித்திருந்தது.
அனைத்துமே யாருடைய தயவும் இல்லாமல் சுந்தரவடிவு மற்றும் பிரபாவின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி எனும் பொழுது அவர்களின் மகிழ்ச்சி இரு மடங்கானது. எந்தத் தயக்கமும் இன்றி அவர்களைத் தன்னுடைய உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார் சுந்தரவடிவு.
அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து கொங்கு நாட்டவருக்கு ஆச்சரியமே. "ஏனுங்க்கா மதுரைனாலே பரோட்டா தானுங்களே விசேசமே. அது உங்க கடையில இல்லீங்க்ளா?" ஆச்சரியமாகக் கேட்டார் உறவுமுறைப் பெண் ஒருவர்.
"அதெல்லாம் செய்யக் கூடாதென்டு எங்க அத்தை உத்தரவும்மா. அவுக இப்ப இல்லையென்டாலும் அவுக வார்த்தையை என்னால என்னிக்குமே மீற முடியாது தாயீ. சாப்பாட்டுக் கடை வைச்சிருக்கவுக தன் கடையில சாப்பிட வாரவுக வவுத்துக்கு ஒரு நாளுந் துரோகஞ் செய்யக் கூடாதென்டு அடிக்கடி சொல்லுவாக. அவுக யோசனைப்படி இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பமென்டு எல்லாமே வயித்துக்குக் கேடு விளைவிக்காத உணவு வகைதேன் நம்ம கடையில.
காலைலைக்கும் ரவைக்கும் மட்டுந்தானுங்களே. நம்ம கடையில ஃபேமசானதென்டா இட்லியும் மீன் குழம்புந்தேன்.
'சாப்புட வாரவுக வாய் வாழ்த்தலையென்டாலும் அவுக வவுறு கண்டிப்பா வாழ்த்துமென்டு' எங்க அத்த அடிக்கடி சொல்லுவாக. இதுல காசு வாரது குறைச்சதேன், ஆனாலும் இதுல கிடைக்குற மனத்திருப்தி... எங்களுக்கு அதுவே போதுமென்டு தோனிடுச்சும்மா" சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தார் சுந்தரவடிவு.
அந்த ஆத்மார்த்தமான புன்னகை எப்படிச் சாத்தியப்பட்டது என்பது அங்கிருந்த அனைவருக்குமே நன்கு புரிந்தது. அந்தப் புரிதல் நல்லதொரு அபிமானமாக வளரவும் செய்தது.
"ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பரோட்டோ போட்டுக்கிட்டு பரோட்டா மாஸ்டரா இருந்த என்னை இப்படித் தோசை மாஸ்டரா ஆக்கிட்டாங்கம்மா" சிரித்துக் கொண்டே புகார் படித்தார் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த நபர்.
"ம்க்கூம் அதுனாலதேன் எங்க மாஸ்டர் ஊத்துற தோசையெல்லாம் பரோட்டா சைசுலேயே வருது" என்று அவருக்குப் பதில் கொடுத்தான் பாண்டி. இவ்வாறுப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கப் போயினர். பெண் வீட்டினரும் திருப்தியுடன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிவிட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பினார்கள்.
குமரப்பனுக்குத் தன்னுடைய சொந்தக் காலில் உழைத்து முன்னேறித் தாயையும் தமக்கைகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும் மருமகனை நினைத்துப் பெருமையோ பெருமை. பிரபா தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் தெளிவாக அவரிடம் பேசியிருந்தான். அதிலும் அவருக்குப் பெருமைதான்.
கோதையம்மாளுக்கும் லலிதாவுக்கும் சுந்தரவடிவை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பெண்மணியை நம்பித் தாராளமாகத் தங்கள் பெண்ணைக் கொடுக்கலாம் என்று முடிவே செய்திருந்தார்கள்.
பூங்குளத்தில் கிளம்பியதிலிருந்து அனைத்தையும் தன் தமக்கைக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வேலையை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்தான் முகில். அவனுடைய பேச்சு முழுவதும் பிரபாவின் லண்டன் பயணத்தைப் பற்றியும், அங்கு சென்று அவன் ஏறப் போகும் கப்பல் பற்றியும் அது செல்லும் இடங்களைப் பற்றியுமே இருந்தது. அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியிருந்தான் பிரபா.
ஊருக்குத் திரும்பும் வழியில் கோதையம்மாளின் தம்பி முறை உறவுக்காரர் ஒருவர், "ஏனுங்க்கா நம்ம தகுதிக்கு ஏத்த எடம் போலத் தெரியலீங்களே" என்று ஒரு மாதிரியாக இழுக்க,
"எந்த விதத்துல தம்பி அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இப்போ நாம தோட்டம், தொறவு, காடு, கரை எல்லாங் கட்டி ஆளுறோமுன்னா இதெல்லாம் நமக்கு முன்னாடி இருந்தவங்க உருவாக்குனது தானே. அதை நாம பெருக்குற வேலையை மட்டும் தானே செய்யிறோம்.
பிரபா தங்கம் அப்படிக் கிடையாது. இப்ப வந்திருக்குற வளர்ச்சி அவங்க சொந்த உழைப்பு, முயற்சி. அதோட நல்ல குணத்துக்கும், உழைப்புக்கும் இன்னும் பெரிய எடத்துக்குப் போவோணும் அந்தத் தம்பி.
காசு என்ன கண்ணு பெரிய காசு. நம்ம கிட்ட இல்லாததா? மனுசனுக்குத் தேவை குணமும், உழைக்கோணுங்குற வேகமும் தான். இது ரெண்டுமே பிரபா தம்பிக்கிட்ட நெம்ப இருக்குது.
அதுவுமில்லாம நம்ம மீனாளுக்கும் பிரபா தம்பியை நெம்பப் பிடிச்சிருக்குது. இதை விட வேற என்ன கண்ணு வோணும்?" என்று ஒரே போடாகப் போட்டு அடக்கிவிட்டிருந்தார் கோதை.
********************
பிரபா மறுநாள் சென்னையிலிருந்து லண்டனுக்கு விமானம் மூலமாகச் செல்வதாக ஏற்பாடு. அதனால் வழக்கம் போல் தன்னுடைய பிரயாணத்துக்குத் தேவையானவற்றைப் பேக் செய்யும் வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான். இரண்டு நாட்களாகவே வேலை அதிகம். மீனாவிடம் எப்பொழுதும் போல் உரையாட முடியவில்லை. இன்று இரவு கண்டிப்பாக அழைப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்காகக் கொஞ்சம் விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதடா வேலை முடியும் என்று காத்திருந்துவிட்டு வேலைகளை முடித்தக் கையோடு அலைப்பேசியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான் பிரபா. அம்மா, அக்கா, பாண்டி யாருடைய கேலியும் அவனைச் சென்றடையவே இல்லை.
எப்பொழுதும் பிரபா அழைக்கும் பொழுது 'மாமா' என்று உற்சாகமாகப் பதில் வரும் இடத்தில் இன்று வெறும் 'ம்ம்ம்' மட்டுமே வந்தது.
"ஓய் சொக்குப்பொடி, ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தியாடா? எல்லா வேலையும் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா. இனி நாளைக்கு பூரா ஃப்ரீதான். உன்கிட்ட பேசுறது மட்டுந்தேன் நாளைக்கு என் வேலை. சரியாடா மினிக்குட்டி. இப்ப கோவம் போயிடுச்சா என் மினிக்குட்டிக்கு? மாமாகிட்ட பேசலாமே" என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பிரபா.
பிரபா இவ்வளவு பேசியதற்கும் பதிலாக வெறும் "ம்ம்ம்" மட்டும் தான் பதிலாக வந்ததுப் பெண்ணிடமிருந்து.
"என்னடா"
"ம்ம்ம்"
"எதாவது பேசுடா. என்னாச்சு என் சொக்குப்பொடிக்கு?"
"ம்ம்ம்"
"மாமா எதாவது உனக்குப் புடிக்காததை செஞ்சுட்டேனா? மாமா மேல கோவமா இருக்கியா?"
இப்பொழுது 'ம்ம்ம்' மாறி "ம்ஹூம்" வந்தது. ஏதோ ஒன்று சரியில்லாததுப் போல் தோன்ற, "மினிக்குட்டி அழறியாடா?" என்றுப் பதறிப் போனவனாக வினவினான் பிரபா. இந்தக் கேள்விக்குப் பதிலாக மௌனமே வந்தது பெண்ணிடமிருந்து.
"எதாவது சொல்லுடா. இப்படிப் பேசாமயே இருந்தா நான் என்ன நினைக்கிறது? நீ எதாவது சொன்னா தானே மாமாவுக்குத் தெரியும். பேசுடா" என்ற கெஞ்சலுக்குப் பிறகே மௌனம் துறந்தாள் மீனலோசினி.
"நீங்க எதுக்கு மாமா இப்ப வேலைக்குப் போறீங்க? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கலாமில்லிங்க்?" குரல் ஏகத்துக்கு பிசிறடித்தது.