வணக்கம் தோழமைகளே,
நான் சில நாள்களாகவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இன்றுதான் அமைந்தது.
பெக்டெல் சோதனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
இது திரைப்படங்கள், கதைப்புத்தகங்கள் முதலியவற்றில் பெண்கள் எந்தளவிற்குப் பங்களிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படை சோதனையாக இன்று அமைந்துள்ளது.
இவ்வுலகின் பெரும்பான்மையான சமூகங்கள் ‘ஆணாதிக்க’ நிலையில் இருப்பதை நாம் அறிவோம். (’ஆணாதிக்கம்’ என்பதில் ஆண்களைப் போலவே பெண்களின் பங்கும் உள்ளது என்றே நான் கருதுகிறேன், அது வேறு கதை, அதை இன்னொரு நாள் விவாதிப்போம்!)
அதாவது, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கான முறையான வாய்ப்பும் பங்கும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை!
திரைப்படங்கள், கதைகளிலும் இதே நிலைதான்!
பெரும்பான்மையான கதைகள் ஆண்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. தமிழ்த் திரப்படங்களில் பெண்களை (கதாநாயகி) முதன்மையாகக் கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!
இக்குறையைச் சுட்டிக்காட்டும் வகையில் எழுந்ததுதான் இந்த பெக்டெல் சோதனை.
அலிசன் பெக்டெல் என்ற கேலிச்சித்திரக்காரர் (கார்ட்டூனிஸ்ட் ) ‘டைக்ஸ் டு வாட்ச் அவுட் பார்’ என்ற தான் நடத்திய ஒரு கேலிச்சித்திர வரிசையில் 1985-இல் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் (காண்க படம்).
அதில் இரண்டு பெண்கள் திரைப்படம் பார்க்கச் செல்ல விழைந்து எந்தப் படத்திற்குப் போகலாம் என்று சிந்திக்கின்றனர்.
அதில் ஒருத்தி சொல்கிறாள் ‘நான் சில நிபந்தனைகள் வைத்துள்ளேன், அவற்றில் தேறும் படங்களைத்தான் நான் பார்ப்பேன்’ என்று.
அவள் குறிப்பிடும் அந்த நிபந்தனைகளைத்தான் இன்று ‘பெக்டேல் சோதனை’ (Bechdel test) என்கிறோம்.
என்ன நிபந்தனைகள்?
1. திரைப்படத்தில் குறைந்தது இரண்டு பெண் கதாப்பாத்திரமாவது இருக்க வேண்டும்,
2. அந்த இருவரும் தமக்குள் உரையாட வேண்டும்,
3. அவ்வுரையாடல் ஒரு ஆணைப் பற்றியதாக இருக்கக் கூடாது!
இதுதான் அவளின் நிபந்தனைகள். (எந்தப் படமும் இதில் தேறவில்லை என அவர்கள் திரைப்படம் பார்க்காமலே வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். ‘நான் கடைசியாகப் பார்த்த படம் ‘ஏலியன்ஸ்’!’ என்கிறாள் அவள்!)
மேலே சொன்ன நிபந்தனைகள்தான் பெக்டெல் சோதனை. இது திரைப்படங்களுக்கு மட்டுமன்றிப் புனைகதைகளுக்கும் (fictions / novels) பொருந்தும் (நாடகங்கள், பாப் இசை என்று பல்வேறு துறைகளிலும் கூட இதைப் பொருத்திப் பார்க்கின்றனர்!)
சிலர் மேலே சொன்ன நிபந்தனைகளை இன்னும் கொஞ்சம் நீட்டிப்பர்:
1. இரண்டு பெண் கதாப்பாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
2. அவர்கள் உரையாடல் குறைந்தது 60 நொடியாவது (திரைப்படத்தில்) இருக்க வேண்டும்
இப்படி!
இதை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்:
1. திரைப்படங்கள், கதைகளில் அவ்வளவாக பெண் கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை
2. அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆண் கதாப்பாத்திரங்களின் துணைப்பாத்திரமாகவே வருகிறார்கள், கதையில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாலும் அவர்களின் பேச்சு ஒரு ஆணைப் பற்றியதாகவே இருக்கிறது!
(இந்தச் சோதனை பிரபலமடைந்த பின் ஆங்கிலத் திரைப்படங்களில் பெண்களுக்கான சரியான அங்கீகாரம் பல படங்களில் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான படங்கள் இச்சோதனையில் தேறுகின்றன என்று விக்கிப்பீடியா கட்டுரை சொல்கிறது!)
ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்வோம், இது ஒரு அடிப்படையான சோதனைதான். திரைப்படங்களில், கதைகளில் பெண்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட எழுந்த ஒரு கேலிச்சித்திரமே இது. இதில் தேறும் படங்களில் வேறு காட்சிகளில் பெண்களை மட்டமாகக் குறைவாகக் காட்டும் நிலை இருக்கலாம், அல்லது படமே குப்பையாக இருக்கலாம். சில சமயம், நல்ல படங்கள் இச்சோதனையில் தேறாமல் இருக்கலாம்! (அதற்கு அதன் கதையமைப்பு காரணமாக இருக்கும்!)
சரி, விஷயத்துக்கு வருவோம், பெண் எழுத்தாளர்களும் பெண் வாசகர்களும் அதிகம் இருக்கும் இத்தளத்தில் உள்ள கதைகளில் எத்தனை கதைகள் இந்தச் சோதனையில் தேறும் என்று பார்ப்போமா?
நீங்கள் படித்த கதைகளில் எவையெல்லாம் இச்சோதனையில் தேறின என்பதைக் கருத்தில் குறிப்பிடுங்கள்.
இயன்றால் அக்கதையில் வரும் பெண் கதாப்பாத்திரங்களையும், ஒரு ஆணைச் சாராமல் / ஆணுக்குத் துணையாக இல்லாமல் அவர்கள் செய்த / பேசிய பகுதிகளையும் குறிப்பிடுங்கள்.
நான் மீண்டும் நினைவூட்டுகிறேன், இது கதைகளில் பெண்களின் அங்கீகாரம் குறித்த ஒரு அடிப்பதைச் சோதனை, அவ்வளவுதான். இதில் தேறினால்தான் நல்ல கதை, தேறாததெல்லாம் மோசமான கதை, அல்லது ஆணாதிக்கத்தை ஆதரித்து வளர்க்கும் கதை என்று பொருள் அல்ல! கதைகளில் பெண்களுக்கான பங்களிப்பு சரியாக இருக்கிறதா என்பதற்கான ஒரு முதற்கட்ட சோதனை இது! அவ்வளவே!
ஆனால், ஒன்று நிச்சயம், இதில் கூட தேறாத திரைப்படங்கள் / கதைகளை அதிகம் நம் சமூகத்தில் இருக்கவிடுவதன் மூலம் நாம் நம்மையே அறியாமல் நமது இளந்தலைமுறைப் பெண்/ஆண்களிடம் ஒருவித ஆழ்மன ஆணாதிக்க ஆதரவு / ஏற்புச் சூழலை உருவாக்குகிறோம்!
விவாதிப்போம்... நன்றி
நான் சில நாள்களாகவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இன்றுதான் அமைந்தது.
பெக்டெல் சோதனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
இது திரைப்படங்கள், கதைப்புத்தகங்கள் முதலியவற்றில் பெண்கள் எந்தளவிற்குப் பங்களிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படை சோதனையாக இன்று அமைந்துள்ளது.
இவ்வுலகின் பெரும்பான்மையான சமூகங்கள் ‘ஆணாதிக்க’ நிலையில் இருப்பதை நாம் அறிவோம். (’ஆணாதிக்கம்’ என்பதில் ஆண்களைப் போலவே பெண்களின் பங்கும் உள்ளது என்றே நான் கருதுகிறேன், அது வேறு கதை, அதை இன்னொரு நாள் விவாதிப்போம்!)
அதாவது, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கான முறையான வாய்ப்பும் பங்கும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை!
திரைப்படங்கள், கதைகளிலும் இதே நிலைதான்!
பெரும்பான்மையான கதைகள் ஆண்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. தமிழ்த் திரப்படங்களில் பெண்களை (கதாநாயகி) முதன்மையாகக் கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!
இக்குறையைச் சுட்டிக்காட்டும் வகையில் எழுந்ததுதான் இந்த பெக்டெல் சோதனை.
அலிசன் பெக்டெல் என்ற கேலிச்சித்திரக்காரர் (கார்ட்டூனிஸ்ட் ) ‘டைக்ஸ் டு வாட்ச் அவுட் பார்’ என்ற தான் நடத்திய ஒரு கேலிச்சித்திர வரிசையில் 1985-இல் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் (காண்க படம்).
அதில் இரண்டு பெண்கள் திரைப்படம் பார்க்கச் செல்ல விழைந்து எந்தப் படத்திற்குப் போகலாம் என்று சிந்திக்கின்றனர்.
அதில் ஒருத்தி சொல்கிறாள் ‘நான் சில நிபந்தனைகள் வைத்துள்ளேன், அவற்றில் தேறும் படங்களைத்தான் நான் பார்ப்பேன்’ என்று.
அவள் குறிப்பிடும் அந்த நிபந்தனைகளைத்தான் இன்று ‘பெக்டேல் சோதனை’ (Bechdel test) என்கிறோம்.
என்ன நிபந்தனைகள்?
1. திரைப்படத்தில் குறைந்தது இரண்டு பெண் கதாப்பாத்திரமாவது இருக்க வேண்டும்,
2. அந்த இருவரும் தமக்குள் உரையாட வேண்டும்,
3. அவ்வுரையாடல் ஒரு ஆணைப் பற்றியதாக இருக்கக் கூடாது!
இதுதான் அவளின் நிபந்தனைகள். (எந்தப் படமும் இதில் தேறவில்லை என அவர்கள் திரைப்படம் பார்க்காமலே வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். ‘நான் கடைசியாகப் பார்த்த படம் ‘ஏலியன்ஸ்’!’ என்கிறாள் அவள்!)
மேலே சொன்ன நிபந்தனைகள்தான் பெக்டெல் சோதனை. இது திரைப்படங்களுக்கு மட்டுமன்றிப் புனைகதைகளுக்கும் (fictions / novels) பொருந்தும் (நாடகங்கள், பாப் இசை என்று பல்வேறு துறைகளிலும் கூட இதைப் பொருத்திப் பார்க்கின்றனர்!)
சிலர் மேலே சொன்ன நிபந்தனைகளை இன்னும் கொஞ்சம் நீட்டிப்பர்:
1. இரண்டு பெண் கதாப்பாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
2. அவர்கள் உரையாடல் குறைந்தது 60 நொடியாவது (திரைப்படத்தில்) இருக்க வேண்டும்
இப்படி!
இதை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்:
1. திரைப்படங்கள், கதைகளில் அவ்வளவாக பெண் கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை
2. அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆண் கதாப்பாத்திரங்களின் துணைப்பாத்திரமாகவே வருகிறார்கள், கதையில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாலும் அவர்களின் பேச்சு ஒரு ஆணைப் பற்றியதாகவே இருக்கிறது!
(இந்தச் சோதனை பிரபலமடைந்த பின் ஆங்கிலத் திரைப்படங்களில் பெண்களுக்கான சரியான அங்கீகாரம் பல படங்களில் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான படங்கள் இச்சோதனையில் தேறுகின்றன என்று விக்கிப்பீடியா கட்டுரை சொல்கிறது!)
ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்வோம், இது ஒரு அடிப்படையான சோதனைதான். திரைப்படங்களில், கதைகளில் பெண்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட எழுந்த ஒரு கேலிச்சித்திரமே இது. இதில் தேறும் படங்களில் வேறு காட்சிகளில் பெண்களை மட்டமாகக் குறைவாகக் காட்டும் நிலை இருக்கலாம், அல்லது படமே குப்பையாக இருக்கலாம். சில சமயம், நல்ல படங்கள் இச்சோதனையில் தேறாமல் இருக்கலாம்! (அதற்கு அதன் கதையமைப்பு காரணமாக இருக்கும்!)
சரி, விஷயத்துக்கு வருவோம், பெண் எழுத்தாளர்களும் பெண் வாசகர்களும் அதிகம் இருக்கும் இத்தளத்தில் உள்ள கதைகளில் எத்தனை கதைகள் இந்தச் சோதனையில் தேறும் என்று பார்ப்போமா?
நீங்கள் படித்த கதைகளில் எவையெல்லாம் இச்சோதனையில் தேறின என்பதைக் கருத்தில் குறிப்பிடுங்கள்.
இயன்றால் அக்கதையில் வரும் பெண் கதாப்பாத்திரங்களையும், ஒரு ஆணைச் சாராமல் / ஆணுக்குத் துணையாக இல்லாமல் அவர்கள் செய்த / பேசிய பகுதிகளையும் குறிப்பிடுங்கள்.
நான் மீண்டும் நினைவூட்டுகிறேன், இது கதைகளில் பெண்களின் அங்கீகாரம் குறித்த ஒரு அடிப்பதைச் சோதனை, அவ்வளவுதான். இதில் தேறினால்தான் நல்ல கதை, தேறாததெல்லாம் மோசமான கதை, அல்லது ஆணாதிக்கத்தை ஆதரித்து வளர்க்கும் கதை என்று பொருள் அல்ல! கதைகளில் பெண்களுக்கான பங்களிப்பு சரியாக இருக்கிறதா என்பதற்கான ஒரு முதற்கட்ட சோதனை இது! அவ்வளவே!
ஆனால், ஒன்று நிச்சயம், இதில் கூட தேறாத திரைப்படங்கள் / கதைகளை அதிகம் நம் சமூகத்தில் இருக்கவிடுவதன் மூலம் நாம் நம்மையே அறியாமல் நமது இளந்தலைமுறைப் பெண்/ஆண்களிடம் ஒருவித ஆழ்மன ஆணாதிக்க ஆதரவு / ஏற்புச் சூழலை உருவாக்குகிறோம்!
விவாதிப்போம்... நன்றி