Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
K
ஆனால் நாம் படிக்கும் நாவல்கள் எத்தனை நாவல்கள் வித்தியாசப்படுகிறது என்று யோசித்து பார்ப்போம்.
அல்லி, மல்லி, ரோஜா மட்டுமே போதுமா? எல்லாமே வாசனை கொண்ட மலர்கள். வெறும் மலர் வகைகள். ஆனால் உலகம் பெரியது. நிறைய நிறைய புதுப்புது படைப்புகள் இருக்கின்றன.
பல நாவல்கள் கூட நீங்கள் சொன்ன மலர்கள் போல சில நாட்களில் வாடி விடுபவை உதிர்ந்து விடுபவையும் கூட.
நாம் எழுதும் கதைகள் பலகாலங்கள் கடந்து பேசப்பட வேண்டும். ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதுதான்.
சித்ரம்மா பட்டிமன்றத்தில் சொன்னதை நீங்கள் நினைவுப்படுத்திகொள்ள வேண்டும். (ஞானபீடம் விருது. )
ஒரு ஆணை சார்ந்த கதாநாயகிகளை காட்டி காட்டி நம் பெண்ணிய சமுதாயத்தை நாமே முடமாக்கி முதுகெலும்பு இல்லாமல் மாற்றி கொண்டே இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ( நிச்சயம் உங்கள் கதைகளில் வரும் பெண்கள் அப்படி இல்லை. நந்தினி கீர்த்தனா லவி என்று எல்லோருமே சுயசார்பான பெண்கள்)
நீங்களே அப்படி எழுதிவிட்டு மற்ற நாவலாசிரியர்களிடம் பொழுது போக்குகாகதான் நாவல்கள் என்று சொல்லலாமா?
மாற்றத்தை நாம் தொடங்கிவிட்டோம். அது தொலைக்காட்சிகள் சீரியல்களிலும் தொடரட்டும். ஒரு புது சமுதாயத்தை உருவாக்கும் சக்தி
எழுதுகோலுக்கும் நம் எழுத்துக்கும் உண்டு என்பதை நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை சில வாசகர்களிடம் பேசியது மூலமாக எனக்கு ஊர்ஜிதமுமானது.
இந்த பெக்டால் சோதனையில் கதைகளில் காதல் வேண்டாம் என்ற கண்டிஷன் இல்லை. வெறும் பெண் சார்ந்த கதையாக மட்டும் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் இல்லை.
இது ரொம்பவும் சாதாரணமான சோதனை. கதையில் முக்கியமாக இரண்டு பெண் கதாபாத்திரங்கள். அவர்கள் பேசும் போது ஆணை பற்றி இருக்க கூடாது. ஜேம்ஸ் பாண்ட் போல ஒரு பெண்ணை வீரதீரமாக காண்பிக்க சொல்லி எல்லாம் கண்டிஷன் இல்லையே
இதற்கு எதற்கு இவ்வளவு விளக்கம் மற்றும் கேள்விகள் அகிலா? இப்படி ஒரு காட்சி கூட அப்போது நம் நாவல்களில் இல்லையா?
அகிலா. நீங்கள் சொன்ன எதையுமே நான் மறுத்து பேச போவதில்லை.அன்பான தோழர், தோழிகளே!
தாங்கள் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்பிற்கு ஏதோ என் அறிவிற்கு எட்டிய ஒரு சில வரிகள்.
நான் முன்பு ஒரு சில வரிகள் எங்கோ படித்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் நினைவில்லை. அப்பொழுது, அவர்கள் விவாதித்துக் கொண்ட செய்தி என்னவென்றால்?
"நாவல் எழுதுபவர்கள் என்ன செய்கிறார்கள்? காதலைத் தானே வளர்க்கிறார்கள்?" என்ற கேலி ஒரு புறம் எழ, "காதல் இல்லாமல் இவர்களால் எழுத முடியுமா?" என்ற கேள்வியும் அத்தோடு எழுந்தது. அப்படி கேலி பேசியவர்களால் கதை, கவிதை போன்றவற்றை வளர்த்ததை போல் நாவல்களை வளர்க்க முடியவில்லை என்பதே நிஜம். உண்மை என்னவென்றால், காதல் இல்லாமல் கதைகள் எழுத முடியும். ஆனால், அவர்கள் சிறுகதைகளையோ, கவிதைகளையோ சிறப்பாக வடிக்க முடியுமே தவிர ஐந்நூறு பக்கங்களைக் கொண்ட நாவலை வடித்தால் அது சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமைவதில்லை.
அறிவை வளர்க்க, படம் பார்ப்பவர்களை விட, நாவல்களைப் படிப்பவர்களை விட, பொழுது போக்கிற்காகப் படம் பார்ப்பவர்களும், நாவல்கள் படிப்பவர்கள் அதிகம் என்பது பொதுவான கருத்து.
காதல் என்னும் அழகிய கவிதை அரங்கேறும் பொழுது, அங்கு ஆண், பெண் இருபாலினரின் உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
பெண் - பெண் உரையாடல்களுக்கு தாங்கள் கேட்டதிற்கு இதுவே என் விளக்கம்.
அதே நேரம் சிறுகதைகள்:
என் சிறுகதை உறவென்னும் ஊஞ்சலில் - அம்மா, பெண் பாசத்தைக் கூறி இருப்பேன். அடுத்த சிறுகதை கருப்பனில் - கதாநாயகிக்கும் - நாயிற்கும் உள்ள எசமானியை விசுவாசத்தையும், மது விலக்கைக் குறித்துக் கூறி இருப்பேன். சிறுகதைகளில் எனக்குக் காதல் தேவைப்படவில்லை. இங்கு ஆண், பெண் உரையாடல் எனக்குப் பெரிதாகத் தேவைப்படவில்லை.
இப்படியே நம்மால் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
ஆனால், பொழுது போக்கு அம்சமாக அமையும் நாவல்களுக்கு இவை சரிப்பட்டு வரா என்பதே என் தாழ்மையான கருத்து.
படங்கள்:
சினேகிதியே, மகளிர் மட்டும், முப்பத்து ஆறு வயதினிலே, போன்று பெண்களை மையமாகக் கொண்ட வெற்றிப் படங்கள் அமைந்தாலும், தொடர்ந்து இதைப் போல் படங்கள் மட்டுமே வந்தால் அப்படங்கள் வெற்றிப் படங்களாக அமையும் வாய்ப்பு குறைவே.
இது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் பொருந்தும்.
அது கதைகளாயினும், நடை முறையாயினும் சிறு செயலிலும் தொடர்ந்து வெற்றி பெற ஆண், பெண் இருவரும் சம உரிமையோடு ஒன்றாக நடந்தால் மட்டுமே முடியும். (கதாபாத்திரங்கள் உட்பட!)
இதை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட என் கதையே 50:50
அடுத்தாக ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம்?
காலப் போக்கில் சில இடங்களில் பெண்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாமே தவிர நம் சமுதாயம் பெண் ஆதிக்க சமுதாயம் என்றும் பெருமையாகக் கூறலாம்.
தாத்தா சொல்லிற்கு, பாட்டி தலையாட்டுவது போல் தெரிந்தாலும் பல குடும்பங்களின் பிடிமானம் பாட்டிமார்களின் கைகளில் உள்ளது என்பதே நிஜம். தந்தை சொல்லுக்குப் பயப்பட்டும் குழந்தைகளுக்குக் கூட, அந்த பயத்தை உண்டு செய்பவள் ஒரு தாயாகத்தான் இருக்கிறாள்.
பெண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தினாள் ருசிக்குமா? சில இடங்களில் ஆண்களும் அவர்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். ஆனால், அந்த ஆதிகத்திலும் ஒரு ருசி இருக்கும். ஒரு பலன் இருக்கும். அதை அந்த பெண்ணால் மட்டுமே ருசிக்க முடியும். ரசிக்க முடியும். அந்த ஆண் ஆதிக்கத்தை ஆட்டுவிப்பவளும் பல இடங்களிள் பெண்ணாகத்தான் இருப்பாள். அது வேறு கதை. ஆண் ஆதிக்கத்தைப் பக்குவமாகக் கையாள தெரிந்த பெண் வெற்றி பெறுகிறாள். பெண் ஆதிக்கத்தைப் புரிந்து கொண்டு கையாளும் ஆணும் வெற்றி பெறுகிறான்.
ஆணாதிக்க சமுதாயமாக மட்டுமே இந்த சமுதாயம் இருந்திருந்தால், இத்தனை IT பெண்கள் வந்திருக்க முடியாது. இத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகியிருக்க முடியாது. இத்தனை பெண் எழுத்தாளர்கள் உருவாகியிருக்க முடியாது. ஏன், அதை விட அதிமுக்கியமாக இதைப் பெண்கள் ஒன்று கூடி ஆண் ஆதிக்கத்தைக் குறை கூறி இருக்கவும் முடியாது.
ஆண் ஆதிக்கத்தால் பல தவறுகள் நடப்பது நிஜம். அதே பெண் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்கிறார்கள். தவறுகளும், சறுக்கல்களும் இரு பக்கமும் இருக்கின்றன. (இதைப் பற்றி மற்றொரு முறை விவாதிக்கலாம்.)
கதைகள்:
பெண்களைக் கவரக்கூடிய சீரியல், நாவல்கள் இவை அனைத்திலும் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ஆனால், அந்த பெண்கள் எப்படி வடிவமைக்கப் படுகிறார்கள் என்பதே கேள்வி?
1 . எப்படி அமைக்கப் பட வேண்டும்?
இப்படியா? பெண்கள் நிமிர்வாக, தானே அனைத்திலும் முன்னோடியாக இருப்பது போல்? அனைத்து பிரச்சனைகளையும் தனியாகச் சமாளிப்பவளாக? எந்த ஆணின் துணை இன்றி செயல்படுபவளாக?
ஒரு கதையில் அப்படி அமைக்க முடியும். ஆனால் தொடர்ந்து? நிச்சயமாக முடியாது.
ஒரு பெண் தந்தையின் வழிகாட்டுதலில் வளர்கிறாள். அண்ணனின் பாதுகாப்பில் நிம்மதி அடைகிறாள். ஏற்க மறுத்தாலும், கணவன் தன் சுமைகளைத் தாங்கும் பொழுது சந்தோஷமாகிறாள். அவளைத் தன்மானம் மிக்கவளாகக் காட்ட முடியும். சுயமரியாதை மிக்கவளாகப் படைக்க முடியும். அறிவாளியாகச் சித்தரிக்க முடியும். பொறுமையின் அடையாளமாகவும் காட்ட முடியும்.
ஆனால், ஒரு பெண்ணை ஒரு பொழுதும் தான்தோன்றித்தனமாகவோ, அவளால் எல்லாம் தன்னிச்சையாகச் செயல் பட முடியும் என்று காட்டி இந்த சமுதாயத்திற்கு ஒரு தவறான பாடத்தையோ? ஓர் முன் உதாரணத்தையோ எப்படி உருவாக்க முடியும்?
2 . ஆண்கள் - இவர்கள் எப்படி வடிவமைக்கப் பட வேண்டும்? இதைப் பற்றி கேள்விகள் இல்லை - ஆதலால் நானும் பதில் கூற வில்லை.
ஆனால், பொதுவாக இவர்கள் கதாபாத்திரங்களும் பெண்களைச் சார்ந்தே வடிவமைக்கப் பட்டிருக்கும்.
ஓர் வாசகியாக,
இவை அனைத்தையும் தாண்டி கதை என்பது எழுத்தாளரின் கற்பனை விதையில் மலரும் மலர். அது ரோஜாவாக, தாமரையாக, அல்லியாக, முல்லையாக, இப்படிப் பல மலர்களைப் போல் எந்த நிறத்திலும், எந்த மணத்திலும் இருக்கலாம். அந்த மலர் இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கலாம். ஆனால், எல்லா மலர்களை ரசிக்கும் என்னுள் வாசம் செய்து கொண்டிருக்கும் ரசிகை புத்துணர்ச்சியோடு எல்லாம் கதைகளுக்காகவும் காத்திருப்பாள்.
ஆனால் நாம் படிக்கும் நாவல்கள் எத்தனை நாவல்கள் வித்தியாசப்படுகிறது என்று யோசித்து பார்ப்போம்.
அல்லி, மல்லி, ரோஜா மட்டுமே போதுமா? எல்லாமே வாசனை கொண்ட மலர்கள். வெறும் மலர் வகைகள். ஆனால் உலகம் பெரியது. நிறைய நிறைய புதுப்புது படைப்புகள் இருக்கின்றன.
பல நாவல்கள் கூட நீங்கள் சொன்ன மலர்கள் போல சில நாட்களில் வாடி விடுபவை உதிர்ந்து விடுபவையும் கூட.
நாம் எழுதும் கதைகள் பலகாலங்கள் கடந்து பேசப்பட வேண்டும். ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதுதான்.
சித்ரம்மா பட்டிமன்றத்தில் சொன்னதை நீங்கள் நினைவுப்படுத்திகொள்ள வேண்டும். (ஞானபீடம் விருது. )
ஒரு ஆணை சார்ந்த கதாநாயகிகளை காட்டி காட்டி நம் பெண்ணிய சமுதாயத்தை நாமே முடமாக்கி முதுகெலும்பு இல்லாமல் மாற்றி கொண்டே இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ( நிச்சயம் உங்கள் கதைகளில் வரும் பெண்கள் அப்படி இல்லை. நந்தினி கீர்த்தனா லவி என்று எல்லோருமே சுயசார்பான பெண்கள்)
நீங்களே அப்படி எழுதிவிட்டு மற்ற நாவலாசிரியர்களிடம் பொழுது போக்குகாகதான் நாவல்கள் என்று சொல்லலாமா?
மாற்றத்தை நாம் தொடங்கிவிட்டோம். அது தொலைக்காட்சிகள் சீரியல்களிலும் தொடரட்டும். ஒரு புது சமுதாயத்தை உருவாக்கும் சக்தி
எழுதுகோலுக்கும் நம் எழுத்துக்கும் உண்டு என்பதை நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை சில வாசகர்களிடம் பேசியது மூலமாக எனக்கு ஊர்ஜிதமுமானது.
இந்த பெக்டால் சோதனையில் கதைகளில் காதல் வேண்டாம் என்ற கண்டிஷன் இல்லை. வெறும் பெண் சார்ந்த கதையாக மட்டும் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் இல்லை.
இது ரொம்பவும் சாதாரணமான சோதனை. கதையில் முக்கியமாக இரண்டு பெண் கதாபாத்திரங்கள். அவர்கள் பேசும் போது ஆணை பற்றி இருக்க கூடாது. ஜேம்ஸ் பாண்ட் போல ஒரு பெண்ணை வீரதீரமாக காண்பிக்க சொல்லி எல்லாம் கண்டிஷன் இல்லையே
இதற்கு எதற்கு இவ்வளவு விளக்கம் மற்றும் கேள்விகள் அகிலா? இப்படி ஒரு காட்சி கூட அப்போது நம் நாவல்களில் இல்லையா?