Eswari kasirajan
முதலமைச்சர்
இருந்திருக்காங்க டியர், இல்லையென்றுச் சொல்லவில்லை, காலப்போக்கில் மாறியிருக்கிறது உண்மைதான். இப்போது சரிசமமாக மாற இன்னும் நேரகாலங்கள் எடுக்கும், கெட்டவைகள் சீக்கிரமாக பரவிடும் நல்லவைகள் வர காலங்கள் அதிகத் தேவைப்படுகிறது என்பது வருத்ததிற்குரியவை.இல்லை தோழி, நம் நாட்டில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். போரில் பங்கேற்றதாகட்டும், உளவு பார்க்கும் வேலை ஆகட்டும் வரலாற்றில் உள்ளது. ஆனால் எங்கு எப்படி மாறியது என்று தான் தெரியவில்லை.
இப்போது அதிகமாக பெண்களுக்கு சமமாக உரிமைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அதிகளவில் பேசுபவர்கள் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து யாரையும் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, ஏன்னென்றால் தன் தாய், சகோதிரி, மனைவி மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் அவர் கஷ்டபடும்போது தோன்றாதணர்வு, தன் பெண் கஷ்டப்படும்போதுதானே உயிர்த்துடிக்கும், இப்ோதுள்ள காலக் கட்டத்திலள்ளவர்கள் மாறிவருகிறார்கள் தான் அந்த மாற்றம் மெதுவாக இல்லாமல் வேகமாகவும் ஒழுக்கமாகவும்(இருபாலரும்) இருந்தால் நன்றாக இருக்கும்.
அதிகமாக பதிவு பண்ண ஆசைதான், டைப்ச் செய்ய சோம்பேரித்தனம் & நாம டைப் பண்ணனும் நினைக்கும் போது கீப் பேடு சதிப் பண்ணும் (mobile tamil kye pad pathi ungalukke theriyum nenaikkuren)